Thursday, December 25, 2014

பீஷ்மர் மயங்கினார்! - விராட பர்வம் பகுதி 63

Bhishma swooned away! | Virata Parva - Section 63 | Mahabharata In Tamil


(கோஹரணப் பர்வத் தொடர்ச்சி - 38)






பதிவின் சுருக்கம் : பீஷ்மருக்கும் அர்ஜுனனுக்கும் இடையில் நடைபெற்ற கடும் போர்; வானத்தில் இருந்து தேவர்கள் பூமாரி பொழிவது; இருவரும் கடுமையாகப் போரிடுவது; அர்ஜுனன் அடித்த கணைகளால் பீஷ்மர் மயங்குவது; தேரோட்டிகள் அவரைப் பாதுகாப்பாக அங்கிருந்து அழைத்துச் செல்வது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “குருக்களுக்கு மத்தியில் பெரும் அழிவு ஏற்பட்ட போது, சந்தனுவின் மகனும், பாரதர்களின் பாட்டனுமாகிய பீஷ்மர், அர்ஜுனனை நோக்கி விரைந்து, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்த தனது அற்புத வில்லையும், எதிரிகளின் முக்கிய அங்கங்களைத் துளைக்கவல்ல கூரிய முனை கொண்ட பல கணைகளையும் எடுத்து, அடித்து அவனைக் {அர்ஜுனனைக்} கடும் வேதனைக்குள்ளாக்கினார். அவரது {பீஷ்மரது} தலைக்கு மேலே வெண்குடை ஏந்தப்பட்டதன் விளைவாக அந்த மனிதர்களில் புலி {பீஷ்மர்}, சூரிய உதயத்தின் போது காணப்படும் அழகிய மலை போலத் தெரிந்தார்.


பிறகு அந்தக் கங்கையின் மகன் {பீஷ்மர்}, திருதராஷ்டிரன் மகன்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் தனது சங்கை ஒலித்துக் கொண்டு, தனது வலப்புறத்தில் சுழன்று பீபத்சுவை {அர்ஜுனனை} அடைந்து அவனது போக்கைத் தாமதப்படுத்தினார். எதிரி வீரர்களைக் கொல்லும் அவர் {பீஷ்மர்}, தன்னை நோக்கி குந்தியின் மகன் {அர்ஜுனன்} வருவதைக் கண்டு, மழை நிறைந்த மேகத்தை வரவேற்கும் மலை போல, மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் அவனை {அர்ஜுனனை} வரவேற்றார். பெரும் சக்தி கொண்ட பீஷ்மர், பார்த்தனின் {அர்ஜுனனின்} கொடிக்கம்பத்தை எட்டு {8} கணைகளால் துளைத்தார். பாண்டு மகனின் {அர்ஜுனனின்} கொடியை அடைந்த அக்கணைகள், அங்கே சுடர்விட்டுக் கொண்டிருந்த குரங்கையும், பதாகையின் மேல் இருந்த அந்த {மற்ற} உயிரினங்களையும் அடித்தன.

பிறகு, பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, கூரிய முனை கொண்ட வலிமைமிக்க ஓர் எறிவேலைக் கொண்டு பீஷ்மரின் குடையை வெட்டினான். அக்கணமே அது {அந்தக்குடை} தரையில் விழுந்தது. இலகுவான கரங்களைக் கொண்ட அந்தக் குந்தியின் மகன் {அர்ஜுனன்}, தனது எதிரியின் கொடிக்கம்பத்தையும், பிறகு அவரது {பீஷ்மரின்} குதிரைகளையும், பிறகு பீஷ்மரின் பக்கவாட்டுப் பகுதிகளைப் பாதுகாத்துக் கொண்டிருந்த  ஓட்டுனர்கள் இருவரையும் பல கணைகளால் அடித்தான். இதைத் தாங்கிக் கொள்ள முடியாத பீஷ்மர், அந்தப் பாண்டவனின் {அர்ஜுனனின்} பலத்தைக் குறித்து அறிந்திருந்தாலும், ஒரு வலிமைமிக்க தெய்வீகக் ஆயுதத்தால் தனஞ்சயனை {அர்ஜுனனை} மூடினார். அளவிடமுடியாத ஆன்மா கொண்ட பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, பீஷ்மரை நோக்கி ஒரு தெய்வீக ஆயுதத்தை அடித்து, பீஷ்மரிடம் இருந்து வந்த ஆயுதத்தை, அடர்த்தியான மேகத்திரளை வரவேற்கும் மலை போல ஏற்றுக் கொண்டான்.

பார்த்தனுக்கும் {அர்ஜுனனுக்கும்}, பீஷ்மருக்கும் இடையில் நடைபெற்ற அந்த மோதல் கடுமையாக இருந்தது. படைகளுடன் இருந்த மற்ற கௌரவ வீரர்கள் வெறும் பார்வையாளர்களாகவே அங்கே இருந்தனர். பீஷ்மருக்கும், பாண்டுவின் மகனுக்கும் {அர்ஜுனனுக்கும்} இடையிலான அம்மோதலில், கணைகளை எதிர்த்து அடித்த மற்ற கணைகள், மழைக்காலத்தின் விட்டில்பூச்சிகளைப் போலக் காற்றில் ஒளிர்ந்தன. ஓ! மன்னா {ஜனமேஜயா}, பார்த்தன் {அர்ஜுனன்}, வலது மற்றும் இடது ஆகிய தனது இரண்டு கைகளாலும் மாற்றி மாற்றிக் கணைகளை அடித்துக் கொண்டிருந்ததன் விளைவாக வளைந்திருந்த காண்டீவம், தொடர் நெருப்பு வளையம் போலக் காட்சியளித்தது. பிறகு, கனமழையால், மலையின் மார்பை மறைக்கும் மேகம் போல, நூற்றுக்கணக்கான கூரிய கணைகளால் பீஷ்மரை அந்தக் குந்தியின் மகன் {அர்ஜுனன்} மறைத்தான்.

ஆர்ப்பரிக்கும் கடலைத் தாங்கிக் கொள்ளும் கரையைப் போல, அந்தக் கணை மழையைத் தனது கணைகளால் கலங்கடித்த பீஷ்மர், பதிலுக்கு அந்தப் பாண்டுவின் மகனை {அர்ஜுனனைத்} தனது கணைகளால் மறைத்தார். அந்தப் போரில் ஆயிரம் துண்டுகளாக வெட்டப்பட்ட வீரர்கள், பல்குனனின் {அர்ஜுனனின்} தேருக்கு அருகே வேகமாகச் சரிந்து விழுந்தனர். பிறகு, பாண்டு மகனின் {அர்ஜுனனின்} தேரில் இருந்து, தங்க இறகுகள் கொண்ட கணை மழை வானத்தில் இருந்து வெட்டுக்கிளிகள் பறந்து வருவது போலப் பொழிந்தன. அவனால் {அர்ஜுனனால்} அப்படி அடிக்கப்பட்டவற்றை, மீண்டும் பீஷ்மர், தனது கூரிய கணைகளால் தடுத்தார். இதற்குக் கௌரவர்கள், “அற்புதம்! அற்புதம்!! அர்ஜுனனுடன் போரிடுவதில், பீஷ்மர் மிகக் கடுமையான சாதனையைச் சாதித்திருக்கிறார். பலமிக்கவனும், இளமைநிறம்பியவனும், இலகுவான திறமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும் ஆவான் தனஞ்சயன் {அர்ஜுனன்}. தேவகியின் மகன் கிருஷ்ணன், ஆசான்களில் முதன்மையானவரான பரத்வாஜரின் வலிமைமிக்க மகன் {துரோணர்}, சந்தனுவின் மகன் பீஷ்மர் ஆகியோரைத் தவிர வேறு யாரால் பார்த்தனின் {அர்ஜுனனின்} வேகத்தைப் போர்க்களத்தில் தாங்கிக் கொள்ள முடியும்?” என்று ஆச்சரியப்பட்டனர்.

ஆயுதங்களை ஆயுதங்களால் தடுத்த, அந்த இரு வலிமைமிக்கப் பாரதக் குலத்தின் காளைகளும், விளையாட்டாகப் போரிட்டபடி அனைத்து உயிர்களின் கண்களையும் கவர்ந்தனர். அந்த ஒப்பற்ற வீரர்கள், பிரஜாபதி, இந்திரன், அக்னி, கடும் ருத்திரன் {சிவன்}, குபேரன், வருணன், யமன், வாயு ஆகியோர்களிடம் பெற்ற ஆயுதங்களைப் பயன்படுத்தியபடியே களத்தில் உலவிக் கொண்டிருந்தனர். அந்த வீரர்களின் மோதலைக் கண்ணுற்ற அனைவரும் பெரிதும் ஆச்சரியப்பட்டனர். அவர்கள் அனைவரும், “நீண்ட கரங்கள் கொண்ட பார்த்தா {அர்ஜுனா} நன்று செய்தாய்!”, “பீஷ்மரே நன்று செய்தீர்!”, “உண்மையில் பீஷ்மருக்கும் பார்த்தனுக்கும் இடையில் நடைபெறும் இம்மோதலில் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் மனிதர்களுக்கு மத்தியில் அரிதானவையாகும்” என்றனர்.”

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இப்படியே அனைத்து ஆயுதங்களையும் அறிந்த அந்த வீரர்களுக்கிடையிலான மோதல் நடந்து கொண்டிருந்தது. தெய்வீக ஆயுதங்களின் மோதல் நின்றதும், கணைகளின் தாக்குதல் தொடர்ந்தது. எதிராளியை {பீஷ்மரை} அணுகிய ஜிஷ்ணு {அர்ஜுனன்}, தனது கூரிய கணையால் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்த பீஷ்மரின் வில்லை வெட்டினான். எனினும், வலிய கரங்கள் கொண்டவரும், பெரும் தேர்வீரருமான பீஷ்மர், கண் இமைப்பதற்குள் மற்றொரு வில்லை எடுத்து அதற்கு நாண் பொருத்தினார். மிகுந்த கோபமடைந்த அவர் {பீஷ்மர்}, தனஞ்சயன் {அர்ஜுனன்} மீது கணைமழையைப் பொழிந்தார்.

பெரும் சக்தி கொண்ட அர்ஜுனனும், பீஷ்மர் மீது கூரிய கணைகளைப் மழையெனப் பொழிந்தான். பீஷ்மரும் மேகங்கள் போன்ற கணைகளைப் பாண்டு மகனின் {அர்ஜுனன்} மீது அடித்தார். ஓ! மன்னா {ஜனமேஜயா}, தெய்வீக ஆயுதங்களை அறிந்து, கூரிய கணைகளை அடிப்பதில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அந்த இருவரிடமும், யாராலும் எந்த வித்தியாசத்தையும் பார்க்க முடியவில்லை. கிரீடம் தரித்த வலிமைமிக்கத் தேர்வீரனான குந்தியின் மகனும் {அர்ஜுனனும்}, சந்தனுவின் வீரமிக்க மகனும் {பீஷ்மரும்} தங்கள் கணைகளால் பத்து  {10} திசைகளையும் தெளிவற்றதாக்கினர்.

மேகம் போன்ற கணைகளால் அந்தப் பாண்டவன் {அர்ஜுனன்} பீஷ்மரை மூடினான்; பீஷ்மரும் அந்தப் பாண்டவனை {அர்ஜுனனை} மூடினார். ஓ மன்னா {ஜனமேஜயா}, மனிதர்களின் உலகில் நடைபெற்ற அற்புதப் போராக அஃது இருந்தது. பீஷ்மரின் தேரைப் பாதுகாத்துக் கொண்டிருந்த வீரர்கள், பாண்டுவின் மகனால் {அர்ஜுனனால்} கொல்லப்பட்டு, அந்தக் குந்தி மகனுடைய {அர்ஜுனனுடைய} தேரின் அருகிலேயே தரையில் விழுந்தனர். காண்டீவத்தில் இருந்து அடிக்கப்பட்ட ஸ்வேதவாகனனின் {அர்ஜுனனின்} இறகு படைத்த கணைகள், அனைத்துப் புறங்களிலும் பாய்ந்து எதிரிகளை மொத்தமாகப் படுகொலை செய்தன. அவனது தேரில் இருந்து வெளிப்பட்ட, இறகுகள் படைத்த சுடர்மிகும் கணைகளைக் காண வானத்தில் செல்லும் அன்னப்பறவைகளின் வரிசையைப் போலத் தெரிந்தன.

ஆகாயத்தில் இருந்த இந்திரனுடன் கூடிய தேவர்கள், அற்புதமான வில்லாளியான அர்ஜுனனால் பெருஞ்சக்தியுடன் அடிக்கப்பட்ட மற்றொரு தெய்வீக ஆயுதத்தை ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர். பெரும் அழகுபடைத்த அற்புத ஆயுதமான வலிமைமிக்கக் காண்டீவத்தைக் கண்ணுற்ற {கந்தர்வனான} சித்திரசேனன், தேவர்கள் தலைவனிடம் {இந்திரனிடம்}, “பார்த்தனால் {அர்ஜுனனால்} அடிக்கப்படும் கணைகள் வானத்தில் ஒரே நேர்கோட்டில் செல்வதைப் பாரும். இந்தத் தெய்வீக ஆயுதத்தைப் {காண்டீவத்தைப்} பயன்படுத்துவதில் ஜிஷ்ணுவின் {அர்ஜுனனின்} கைத்திறம் அற்புதமாக இருக்கிறது. மனிதர்களுக்கு மத்தியில் இஃது இல்லாததால், இது மனிதர்கள் பயன்படுத்தத்தக்க ஆயுதமன்று. பழங்காலத்தில் இருந்து பயன்பட்டு வரும் வலிமைமிக்க அந்த ஆயுதங்கள் எவ்வளவு அற்புதமாக இருக்கின்றன? கணைகளை எடுப்பதற்கும், வில்லில் பொருத்துவதற்கும், காண்டீவத்தை வளைத்து அடிப்பதற்குமான இடைவெளியே காணப்படவில்லையே.  நாளின் மத்திய வேளை சூரியனைப் போலச் சுடர்விட்டுக் கொண்டிருக்கும் அந்தப் பாண்டுவின் மகனைக் {அர்ஜுனனைக்} காணும் சக்தி கூட அந்தப் படை வீரர்களுக்கு இல்லையே. அதே போல, கங்கையின் மகனான பீஷ்மரையும் யாராலும் பார்க்க முடியவில்லை. இருவரும் புகழ்பெற்ற சாதனையாளர்களே. இருவரும் கடும் பராக்கிரமம் மிக்கவர்களே, வீரத்தில் அவ்விருவரும் இணையாகவே இருக்கின்றனர். இவர்கள் இருவரையுமே போர்க்களத்தில் வீழ்த்த முடியாது” என்றான் {கந்தர்வனான சித்திரசேனன்}.

பார்த்தனுக்கும் {அர்ஜுனனுக்கும்}, பீஷ்மருக்கும் இடையில் நடந்த அந்த மோதலைக் குறித்து அந்தக் கந்தர்வனால் இப்படிச் சொல்லப்பட்ட தேவர்கள் தலைவன் {இந்திரன்}, ஓ! பாரதா {ஜனமேஜயா}, அவர்கள் இருவர் மீதும் தெய்வீகப் பூமாரியைப் பொழிந்து, அவர்களுக்குத் தனது மரியாதையைச் செலுத்தினான். அதேவேளையில், சந்தனுவின் மகனான பீஷ்மர், இருகைகளாலும் தன்னைத் துளைத்துக் கொண்டிருந்த அர்ஜுனனை, இடதுபுறமாகத் தாக்கினார். இதைக் கண்ட பீபத்சு {அர்ஜுனன்}, உரக்கச் சிரித்தபடி, கழுகு இறகுகள் படைத்த கூரிய கணையொன்றால், சூரியப் பிரகாசமிக்கப் பீஷ்மரின் வில்லை வெட்டினான்.

பிறகு, என்னதான் பின்னவர் {பீஷ்மர்} தனது பராக்கிரமம் அனைத்தையும் செலுத்திப் போராடிக் கொண்டிருந்தாலும், குந்தியின் மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, பத்து கணைகளால் பீஷ்மரின் மார்பைத் துளைத்தான். கடும் வலியால் வேதனையுற்ற வலிமைமிக்கக் கரங்கள் கொண்டவரும், போரில் வெல்லப்பட முடியாதவருமான கங்கையின் மகன் {பீஷ்மர்}, தனது தேரின் கம்பத்தில் சாய்ந்தபடி அப்படியே நீண்ட நேரம் நின்றார். மயக்கத்தில் இருக்கும் வீரர்களைப் பாதுகாக்கும் முறையை அறிந்தவர்களான குதிரைத்தேரோட்டிகள், அவர் {பீஷ்மர்} சுயநினைவை இழந்ததைக் கண்டு, அவரைப் பாதுகாப்பாக {அங்கிருந்து} அழைத்துச் சென்றனர்.
இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்