Friday, January 02, 2015

பலராமனைக் கண்டித்த சாத்யகி! - உத்யோக பர்வம் பகுதி 3

Satyaki condemned Balarama! | Udyoga Parva - Section 3 | Mahabharata In Tamil



(சேனோத்யோக பர்வத் தொடர்ச்சி - 3)

பதிவின் சுருக்கம் : சாத்யகி பலராமனின் சொற்களைக் கண்டிப்பது; கௌரவர்கள் செய்த தீமையை எடுத்துரைப்பது; பாண்டவர்கள் உரிமையை மீட்க வேண்டும் என்று சொன்னது; பிச்சையெடுப்பதை விடப் போரே மேலானது என்று சொல்வது...

சாத்யகி {பலராமனிடம்} சொன்னான், “ஒரு மனிதனின் இதயம் எப்படி இருக்கிறதோ, அப்படியே அவன் பேசுகிறான்! நீர் உமது இதயத்தின் இயல்புக்கு ஏற்பக் கடுமையாகப் பேசுகிறீர். வீரர்களும் இருக்கிறார்கள், அதே போலக் கோழைகளும் இருக்கிறார்கள். நன்கு வரையறை செய்யப்பட்ட இந்த {வீரன் மற்றும் கோழை என} இரு பிரிவுகளில் மனிதர்களைப் பிரித்துவிடலாம். இரு கிளைகள் கொண்ட ஒரு பெரிய மரத்தில் ஒரு கிளை பழங்கள் தாங்குவதாகவும், மற்றது தாங்காமலும் இருப்பது போல, ஒரே குல வழியைக் கொண்டவர்களில் மனோதிடமற்றவர்களும் பெரும் {மனோ} பலம் வாய்ந்தவர்களும் பிறக்கிறார்கள். ஓ! கொடியில் கலப்பை சின்னத்தைத் தாங்கிக் கொள்பவரே {பலராமரே}, நீர் பேசிய இச்சொற்களை நான் கண்டிக்கவில்லை. ஆனால், ஓ! மதுவின் மகனே {பலராமரே}, உமது சொற்களைக் கேட்டுக் கொண்டிருப்பவர்களையே கண்டித்து ஆறுதலடைகிறேன்.


உண்மையில், அறம்சார்ந்த மன்னரான யுதிஷ்டிரர் மீது சிறு பழியைக்கூட ஒருவன் வெட்கமில்லாமல் இணைத்தாலும், சபையின் நடுவே பேசுவதற்கு அவனை எப்படி அனுமதிக்கலாம்? பகடையாட்டத்தில் புத்திசாலித்தனம் மிக்க நபர்கள், விளையாட்டில் பயிற்சிபெறாத பரந்த மனப்பான்மை கொண்ட யுதிஷ்டிரரை சவாலுக்கழைத்தனர். அவர்கள் மீது நம்பிக்கை வைத்ததால் இவர் {யுதிஷ்டிரர்} தோற்றார். அப்படிப்பட்ட மனிதர்கள், அறம் கொண்டு, விளையாட்டை {நேர்மையாக} வென்றார்கள் என்று சொல்ல முடியுமா? யுதிஷ்டிரர் இந்த வீட்டில் தனது தம்பிகளுடன் யுதிஷ்டிரர் {பகடை} விளையாடிக் கொண்டிருக்கையில், அவர்கள் {கௌரவர்கள்} வந்து வென்றிருந்தால் அவர்கள் நேர்மையாக வென்றார்கள் எனலாம். ஆனால் அவர்கள், போர்ச் சாதியின் {க்ஷத்திரியர்களின்} விதிகளைப் பின்பற்றி, மனசாட்சிக்குக் கட்டுப்பட்ட யுதிஷ்டிரரைச் சவாலுக்கு அழைத்தனர். அவர்களது தந்திரமும் வென்றது. அவர்களது இந்த நடத்தைகளில் என்ன நேர்மை இருக்கிறது? விளையாட்டு, பந்தயம் எனச்சொல்லி, பெரும் நிபந்தனைகளை ஏற்று, வாக்குறுதி தந்த கானக வாசத்தில் இருந்து விடுபட்டதால், தனது மூதாதையரின் அரியணைப் பெற உரிமை கொண்ட இந்த யுதிஷ்டிரர் இங்கே தன்னை எப்படித் தாழ்த்திக் கொள்ள முடியும்? {எதிரிகள் முன்பு எப்படிப் பணிந்து போக முடியும்?}

யுதிஷ்டிரர் பிறர் உடைமைகளை இச்சித்திருந்தால் கூட, பிச்சையெடுப்பது அவருக்குத் {யுதிஷ்டிரருக்குத்} தகாது! பாண்டவர்கள் தங்கள் கண்டறியப்படக்கூடாத வாழ்வை {அஞ்ஞாதவாசத்தை} நிறைவு செய்திருந்தாலும், அவர்கள் கண்டறியப்பட்டார்கள் என்று சொல்பவர்களை, அரியணை பறிக்கும் நோக்கம் இல்லா நேர்மையாளர்களாக எப்படிச் சொல்ல முடியும்? பீஷ்மர் மற்றும் பரந்த மனப்பான்மை கொண்ட துரோணர் ஆகியோர் வேண்டிக் கொண்ட பின்னும், பிறப்பினடிப்படையில் பாண்டவர்களுக்குச் சொந்தமான அரியணையைத் திருப்பித்தர அவர்கள் {கௌரவர்கள்} சம்மதிக்கவில்லை. கூர்மையான அம்புகளின் வாயிலாகவே நான் அவர்களுக்குப் புத்தி புகட்டுவேன். வலிய கரப் பலத்துடன் போரிடும் நான், அவர்களைக் {கௌரவர்களைக்} குந்தியின் ஒப்பற்ற மகனின் {யுதிஷ்டிரரின்} பாதத்தில் விழச் செய்வேன்.

எனினும், அவர்கள் விவேகியான யுதிஷ்டிரரின் பாதம் பணியவில்லையெனில், பின்னர், அவர்களும், அவர்களது கூட்டத்தாரும் யமனுலகே செல்ல வேண்டும். யுயுதானன் {சாத்யகியான நான்}, சீற்றம் கொண்டு, போரிடத் தீர்மானித்தால், இடியின் வேகத்தைத் தாங்க முடியாத மலைகளைப் போல, எனது வேகத்தைத் தாங்க முடியாதவர்களாக அவர்கள் இருப்பார்கள். போரில் அர்ஜுனனிடம் யாரால் நிலைக்க முடியும்? மரணத்தைக் கையாளும் யமனின் புத்திசாலித்தனம் கொண்டவர்களும், தங்களது விற்களை உறுதியாகப் பிடிப்பவர்களுமான இந்த இரட்டையர்கள் {நகுல, சகாதேவர்கள்} முன்னால் தனது உயிரை மதிக்கும் எவன் வரமுடியும்? துருபதனின் மகனான திருஷ்டத்யும்னனையோ, திரௌபதியின் பெயருக்கு காந்தியைக் கொடுத்து, வீரத்தில் தங்கள் தந்தையருக்குப் {பாண்டவர்களுக்குப்} போட்டியாகவும், {பாண்டவர்களுக்கு} எல்லாவகையிலும் இணையாகவும், போர்ப்பெருமையில் நிறைந்திருக்கும் பாண்டவர்களின் ஐந்து மகன்களையோ, தேவர்களாலேயே தாங்கிக்கொள்ள முடியாதவனும், பெரும் வில்லைக் கொண்டவனுமான சுபத்திரையின் மகனையோ {அபிமன்யுவையோ}, யமனுக்கோ, இடிக்கோ, நெருப்புக்கோ ஒப்பான கதன், பிரத்யும்னன், சாம்பன் ஆகியோரையோ யாரால் அணுக முடியும்?

திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்}, சகுனி மற்றும் கர்ணன் ஆகியோரைப் போரில் கொன்று, இந்தப் பாண்டவரை {யுதிஷ்டிரரை}, நாம் அரியணையில் அமர்த்த வேண்டும். நம்மைக் கொல்ல முனையும் அவர்களைக் கொல்வதில் எந்தப் பாவமும் இல்லை. ஆனால், எதிரிகளிடம் பிச்சை எடுப்பது என்பது அநீதியும், இழிவும் ஆகும். யுதிஷ்டிரர் இதயப்பூர்வமாக விரும்பும் காரியத்தைச் செய்து, அவருக்கு {யுதிஷ்டிரருக்கு} ஊக்கமளிக்கும்படி நான் உங்களைக் {உங்கள் அனைவரையும்} கேட்டுக் கொள்கிறேன். பதவியில் இருந்து விலகும் திருதராஷ்டிரரின் நாட்டைப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரர்} அடையட்டும். இன்றே யுதிஷ்டிரர் தனது நாட்டைத் திரும்பப் பெற வேண்டும், அல்லது என்னால் கொல்லப்பட்ட நமது எதிரிகள் பூமியில் கிடக்க வேண்டும்!” என்றான் {சாத்யகி}.
இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Audio பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்