Tuesday, March 10, 2015

நட்பின் ஆறு அறிகுறிகள்! - உத்யோக பர்வம் பகுதி 45

Six Indications of friendship! | Udyoga Parva - Section 45 | Mahabharata In Tamil

(சனத்சுஜாத பர்வத் தொடர்ச்சி - 5)
பதிவின் சுருக்கம் : வாழ்வையே அழிக்கத்தக்க கொடுந்தவறுகள் எவை? புலன்களில் தொலைந்து பாவச்செயல்களைப் புரியும் மனிதர்கள் எவர்? செல்வத்தை அடையும்போது பிறரை யார் மரியாதையாக நடத்த மாட்டார்கள்? பாவம் நிறைந்த வழக்கங்கள் கொண்டவர்களாகக் கருதப்படும்  தீய மனிதர்கள் யார்? முழு உலகத்தையும் ஆளும் திறன் பெற்றவன் யார்? அறிவுள்ள பிராமணர்களின் பண்புகள் எவை? மதத்தின் பதினெட்டுத் தவறுகள் எவை? நட்பின் ஆறு அறிகுறிகள் எவை? மறுமையின் அருள் நிறைந்த உலகங்களை வெல்லும் திறன் பெற்றது எது? வேள்விகள் செய்யப்படும் முறைகள் என்னென்ன? பிரம்மம் முழுமையாக யாரிடம் நிலைக்கிறது? யார் மரணத்திற்கு ஆட்படுவதில்லை? என்பன போன்றவற்றைச் சனத்சுஜாதர் திருதராஷ்டிரனுக்கு விளக்குவது...

சனத்சுஜாதர் {திருதராஷ்டிரனிடம்} சொன்னார், “கவலை, கோபம், பேராசை, காமம், அறியாமை, சோம்பேறித்தனம், கெடுநோக்கு, இறுமாப்பு, தொடர்ச்சியாக ஆதாயம் பெறும் ஆசை, பாசம், பொறாமை, தீய பேச்சு ஆகிய இந்தப் பனிரெண்டும்{12}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரா}, மனிதர்களின் வாழ்வையே அழிக்கத்தக்க கொடுந்தவறுகளாகும். இவை ஒவ்வொன்றும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரா}, மனித குலத்தைப் பீடிக்கச் சந்தர்ப்பம் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன. அவற்றின் பாதிப்புக்கு உள்ளான மனிதர்கள் தங்கள் புலன்களில் தொலைந்து பாவச் செயல்களைப் புரிகின்றனர்.

{செல்வத்தை அடையும்போது பிறரை யார் மரியாதையாக நடத்த மாட்டார்கள்?}


பேராசை கொண்டவன், மூர்க்கமானவன், கடுஞ்சொல் பேசுபவன், அதிகமாகப் பேசுபவன் {அதிகப்பிரசங்கி}, மனதில் கோபத்தை வைத்திருப்பவன், தற்பெருமை பேசுபவன் ஆகிய ஆறு {6} தீய மனநிலை கொண்ட மனிதர்கள் செல்வத்தை அடையும்போது பிறரை மரியாதையாக நடத்த மாட்டார்கள்.



{பாவம் நிறைந்த வழக்கங்கள் கொண்டவர்களாகக் கருதப்படும்  தீய மனிதர்கள் யார்?}


புலன் நிறைவே வாழ்வின் இறுதி எனக் கருதுபவன், ஆணவம் கொண்டவன், தானமளித்துவிட்டு அதைத் தற்பெருமையாகப் பேசுபவன், செலவு செய்யாதவன் {கஞ்சன்}, பலமற்ற மனதைக் கொண்டவன், தன்னைத் தானே புகழ்ந்து கொள்பவன், தனது மனைவியை வெறுப்பவன் ஆகிய இந்த ஏழு பேரும், பாவம் நிறைந்த வழக்கங்கள் கொண்ட தீய மனிதர்களாகக் கருதப்படுவார்கள்.

{முழு உலகத்தையும் ஆளும் திறன் பெற்றவன் யார்?}


நீதி, உண்மை, தவம், தற்கட்டுபாடு, மனநிறைவு, பணிவு, துறவு, பிறரிடம் அன்பு செலுத்தல், தானம், சாத்திரம் அறிதல், பொறுமை, மன்னிக்கும் மனநிலை ஆகிய பனிரெண்டும் பிராமணர்களின் நடைமுறைகளாகும். இந்தப் பனிரெண்டில் இருந்தும் வீழாதவன் இந்த முழு உலகத்தையும் ஆளும் திறன் பெறுவான். இவற்றில் மூன்றோ, இரண்டோ, அல்லது ஒன்றே ஒன்றோ கூடக் கொண்டிருந்தாலும் அவன், பிறரை விலக்கியபடி, எதையும் தனதாகக் கருதமாட்டான். [1]

[1] பற்றற்றவனாக இருப்பான்


{அறிவுள்ள பிராமணர்களின் பண்புகள் எவை?}


தற்கட்டுப்பாடு, துறவு, அறிவு ஆகிய இவற்றிலேயே முக்தி {விடுதலை [அ] மோட்சம்} வசிக்கிறது. இவையே, பிரம்மமே அடையத்தக்கதில் உயந்தது என்று கருதும் அறிவுள்ள அந்தணர்களின் பண்புகள்.

{மதத்தின் பதினெட்டுத் தவறுகள் எவை?}


உண்மையோ பொய்யோ, {அது எதுவாக இருந்தாலும்} பிறரைப் பழித்துப் பேசுதல் அந்தணனுக்கு மெச்சத்தகுந்ததல்ல. அதைச் செய்பவர்கள் நரகத்தையே தங்கள் வசிப்பிடமாகக் கொண்டிருப்பார்கள். மதம் [2] பதினெட்டு தவறுகளைக் கொண்டது. அதை இதுவரை நான் விவரிக்கவில்லை. பிறரிடம் பகைமை கொள்ளுதல், அறச்செயல்களின் வழிகளில் தடையேற்படுத்தல், இகழ்ச்சி, பேச்சில் பொய்மை, காமம், கோபம், சார்ந்திருத்தல், பிறரைப் பழித்துப் பேசுதல், பிறரின் குறை அறிந்து உரைத்தல், செல்வத்தை விரயமாக்கல், சச்சரவு, செருக்கு, வாழும் உயிரினங்களுக்குச் செய்யப்படும் கொடுமை, கெடுநோக்கு, அறியாமை, மதிக்கத்தக்கோரிடம் குறை காணுதல், நன்று தீதில் அறிவை இழத்தல், எப்போதும் பிறருக்குத் தீங்கிழைக்க முனைதல் ஆகியவையே அவை {அந்தப் பதினெட்டுத் தவறுகள் மேற்கண்டவையே}. எனவே, அறிவுள்ள மனிதன் ஒருவன், மதத்திற்கு  [2] ஆட்படக்கூடாது. மதத்தைத் துணைக்கழைப்பது கண்டிக்கத்தக்கது.

[2] இங்கே மதம் என்பதற்கு வெறி என்று பொருள் கொள்ள வேண்டும்.

{நட்பின் ஆறு அறிகுறிகள் எவை?}


நட்பு ஆறு அறிகுறிகளைக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
1. முதன்மையானது, நண்பர்களின் செழிப்பில் இனிமை கொள்வது,
2. இரண்டாவது, அவர்களின் வறுமையில் வருந்துவது. 
3. {மூன்றாவது}, தனது அன்புக்குரிய ஒன்றை ஒருவன் தன்னிடம் கேட்டால், உண்மையான நண்பன் ஒருவன் அதையும் கொடுத்துவிடுவான்.
4. நான்காவதாக, நெறிசார்ந்த மனநிலைகொண்ட உண்மையான நண்பன் ஒருவன், தனது செழிப்பையோ, தனது அன்புக்குரிய மகன்களையோ, ஏன் தனது சொந்த மனைவியைக் கேட்டாலும் கொடுத்துவிடுவான்.
5. ஐந்தாவதாக, ஒரு நண்பன், தன்னிடம் உள்ள அனைத்தையும் கொடுத்த தனது நண்பனின் வீட்டில் வசிக்கக்கூடாது. ஆனால் தானே ஈட்டியதைக் கொண்டு இன்பமடைய வேண்டும்.
6. ஆறாவதாக, (தனது நண்பனுக்காக}, ஒரு நண்பன் தனது சொந்த நன்மையைத் தியாகம் செய்வதை நிறுத்த மாட்டான்.

{மறுமையின் அருள் நிறைந்த உலகங்களை வெல்லும் திறன் பெற்றது எது?}


செல்வம் கொண்ட ஒரு மனிதன் {man of wealth} ஒருவன், அந்த நல்ல குணங்களை அடைய முயன்றால், ஈகையாளனாகவும், நெறிசார்ந்தவனாகவும் மாறி, தனது ஐந்து புலன்களை அதனதன் நோக்கங்களில் {நுகர் பொருட்களில்} இருந்து காத்துக் கொள்வான். புலன்களின் அத்தகு கட்டுப்பாடே தவமாகும். அஃது அலகில் உயரும் போது, (வெற்றிக்கு வழிவகுக்கும் அறிவைப் போல அல்லாமல், இங்கே) மறுமையில் அருள் நிறைந்த உலகங்களை வெல்லும் திறன் பெற்றதாக அது {புலன்களைக் கட்டுப்படுத்தும் தவம்} இருக்கும்.

பொறுமையில் இருந்து வீழ்ந்தவர்கள் (அதனால், அறிவை அடைய திறனற்றவர்கள்), தாங்கள் உபசரிக்கும் நோக்கத்தின் {பயனில் ஆசை கொண்டதன்} விளைவாக, இதன் பிறகு அமையும் உயர்ந்த உலகங்களின் அருளை அடைவதற்கு இதே போன்ற தவத்தை அடைவார்கள்.

{வேள்விகள் செய்யப்படும் முறைகள் என்னென்ன?}


எதில் வேள்விகள் செழிப்படையுமோ, அந்த உண்மையை(பிரம்மத்தை) பற்றும் தனது திறனின் விளைவாக, ஒரு யோகி தன் மனதிலேயே வேள்விகளைச் செய்யும் திறன் பெற்றவனாகிறான். மற்றுமொருவன் வேள்விகளைச் சொற்களால் {ஜெபம்} செய்கிறான். வேறொருவன் வேலையால் {கர்மத்தால்} அதைச் செய்கிறான்.


{பிரம்மம் முழுமையாக யாரிடம் நிலைக்கிறது?}


பண்புகள் உள்ளடங்கிய பிரம்மத்தை அறிந்தவனிடம் உண்மை (பிரம்மம்) வசிக்கிறது. பண்புகளற்ற பிரம்மத்தை அறிந்தவனிடம் மேலும் முழுமையாக அது {பிரம்மம்) வசிக்கிறது.

இப்போது என்னிடம் இருந்து வேறு விஷயங்களைக் கேள். கொண்டாடப்படும் இந்த உயர்ந்த தத்துவம் (சீடர்களுக்கு) கற்பிக்கப்பட வேண்டும். மற்ற அமைப்புகள் அனைத்தும் சொற்களின் கதம்பம் மட்டுமே.

{யார் மரணத்திற்கு ஆட்படுவதில்லை?}


இவை (அண்டம்) முழுமையும் யோக தத்துவத்திலேயே நிறுவப்பட்டுள்ளது. இவற்றை {யோக தத்துவத்தினை} அறிந்தவர்கள் மரணத்திற்கு ஆட்படுவதில்லை. ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, என்னதான் ஒருவன் வேலையால் {கர்மாவால்} நன்கு நிறைவு பெற்றிருந்தாலும், அவனால் உண்மையை (பிரம்மத்தை) அடைய முடியாது.

அறிவற்ற மனிதன், ஹோம காணிக்கைகளைச் செலுத்தினாலும், அல்லது வேள்விகளைச் செய்தாலும், ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, வேலையால் {கர்மத்தால்} அவன் அழியா நிலையை {முக்தியை} அடையவே முடியாது. அதே போல, இறுதியில் அவன் பேரின்பத்தையும் அனுபவிப்பதில்லை.

தனிமையில், வெளிப்புலன்கள் அனைத்தையும் அடக்கி, ஒருவன் பிரம்மத்தை நாட வேண்டும். வேலையைக் கைவிட்டு, ஒருவன் மனதால் முயற்சிக்கக்கூடாது [3]. (இப்படி ஈடுபட்டிருக்கும்போது) ஒருவன் புகழில் இன்பத்தையும், பழியில் கோபத்தையும் அடைவதைத் தவிர்க்க வேண்டும்.

[3] ஒருவனாக இருந்து மௌனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும், மனதினாலும் சலிக்கக்கூடாது.

ஓ! க்ஷத்திரியா {திருதராஷ்டிரா}, வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள அடுத்தடுத்த படிநிலைகளின் படி அந்த வழியில் தன்னைச் செலுத்துபவன் இங்கேயே கூடப் பிரம்மத்தை அடைந்துவிடுவான். ஓ! கற்றவனே {திருதராஷ்டிரா}, இவற்றையே நான் உனக்குச் சொல்கிறேன்.

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்