Sunday, March 22, 2015

ஏகலவ்யன் இறந்தான்! - உத்யோக பர்வம் பகுதி 48ஈ

Ekalavya lay dead! | Udyoga Parva - Section 48d | Mahabharata In Tamil

(சனத்சுஜாத பர்வத் தொடர்ச்சி - 8) {யானசந்தி பர்வம் - 2}
பதிவின் சுருக்கம் : கிருஷ்ணனை வெல்ல விரும்புவன், அடைய முடியாததை விரும்புகிறான் என்று அர்ஜுனன் சொல்வது; மேலும், கிருஷ்ணன் ருக்மினியைக் கடத்தியது, சுதர்சனனை விடுவித்தது, பாண்டிய மன்னனைக் கொன்றது, கலிங்கர்களைக் கொன்றது,  வாராணசி நகரத்தை எரித்தது, ஏகலவ்யனைக் கொன்றது, கம்சனைக் கொன்றது, சால்வனை வென்றது, அசுரர்களான நரகன் மற்றும் முரனைக் கொன்றது, அதன்காரணமாகத் தேவர்களிடம் கிருஷ்ணன் பெற்ற வரம் ஆகியவற்றையும் சொல்லி, அப்படிப்பட்ட கிருஷ்ணனை துரியோதனன் சிறையிலடைக்க நினைக்கிறான் என்றும், தனக்கும் கிருஷ்ணனுக்கும் இடையில் பிளவை உண்டாக்கப் பார்க்கிறான் என்றும், அஃது எவ்வளவு தூரம் துரியோதனனால் ஆகும் என்பதைப் போரில் அவன் காண்பான் என்றும் அர்ஜுனன் சஞ்சயனிடம் சொன்னது...

{அர்ஜுனன் தொடர்ந்தான்}, “பெரும் சக்தியுடையவனும், வீரர்களில் முதன்மையானவனும் வசுதேவரின் மகனுமான கிருஷ்ணனைப் போரில் வெல்ல விரும்புபவன், தன் இரு கரங்களின் உதவியை மட்டுமே கொண்டு, அளவிலா நீரைக் கொண்டிருக்கும் பரந்து விரிந்த பெரும் சமுத்திரத்தைக் கடக்க விரும்புபவன் ஆவான். உயர்ந்திருக்கும் கைலாச மலையைத் தன் உள்ளங்கையால் அடித்துப் பிளந்துவிட விரும்புபவன், தனது கைகளில் இருக்கும் நகங்கள் தேய்ந்து போனாலும், அந்த மலைக்குச் சிறு பாதிப்பையும் அவனால் ஏற்படுத்த இயலாது.

போரில் வாசுதேவனை வெல்ல விரும்புபவன், எரியும் தழலை தன் இரு கைகளால் அணைப்பவனாக, சூரியனையும் சந்திரனையும் தடுப்பவனாக, தேவர்களின் அமிர்தத்தைத் தன் வலிமையால் கவர்பவனாக இருக்க வேண்டும்.

ஒரே தேரில் சென்று, போரில் தன் பலத்தை மட்டுமே பிரதானமாகக் கொண்டு, போஜ இனத்தின் அரச வீரர்களை {மன்னர்களை} வெட்டி வீழ்த்தி, பெரும் புகழ்பெற்ற ருக்மிணியைக் கடத்தித் தனது மனைவியாக்கி, பிறகு அவள் மூலமாக உயர் ஆன்ம பிரத்யும்னனைப் பெற்றவனே அந்த வாசுதேவன் {கிருஷ்ணன்}.

காந்தார நாட்டை விரைந்து அழித்து, நக்னஜித்தின் மகன்கள் அனைவரையும் வென்று, அடைத்து வைக்கப்பட்டிருந்த மன்னன் சுதர்சனனை, {தன்} பெரும் சக்தியை வெளிப்படுத்தி, விடுவித்தவனே இந்தத் தேவர்களுக்குப் பிடித்தமானவன் {கிருஷ்ணன்}.

தன் மார்பால் மன்னன் பாண்டியன் [1] மார்பை மோதி அவனை {பாண்டியனைக்} கொன்றவனும், கலிங்கர்களை [2] வீழ்த்தியவனும் இவனே {கிருஷ்ணனே}. பிறரால் வீழ்த்தப்பட முடியாதவனான இவனாலேயே வாராணசி நகரம் {காசி} எரிக்கப்பட்டுப் பல வருடங்கள் மன்னனில்லாமல் இருந்தது.


[1] கவாடபுரத்துப் பாண்டியன் என்று வேறு பதிப்பில் இருக்கிறது.
[2] கலிங்கர்களையும் தந்தவக்தரனையும் கொன்றான் என்று வேறு பதிப்பில் இருக்கிறது.

நிஷாதர்களின் மன்னனான ஏகலவ்யன் [3], எப்போதும் இவனுக்குப் {கிருஷ்ணனுக்குப்} போர் அறைகூவல் விடுவதையே வழக்கமாகக் கொண்டிருந்தான்; ஆனால், மலைமீது மூர்க்கமாக அடித்து வீசப்பட்ட அசுரன் ஜம்பன் {ஜம்பாசுரன்} போல, {அந்த ஏகலவ்யன்} கிருஷ்ணனால் வெட்டுண்டு இறந்து கிடக்கிறான்.
[3] ஆதிபர்வம் பகுதி 134ல் ஏகலவ்யன் முதலில் தோன்றுகிறான், பின்பு, சபாபர்வம் பகுதி 24ல் ஜராசந்தன் கொல்லப்படுவது விரிவாகச் சொல்லப்படுகிறது. ஜராசந்தனின் மரணத்திற்குப் பிறகு யுதிஷ்டிரன் செய்த ராஜசூய வேள்வி சபா பர்வம் பகுதி 43ல் வருகிறது. அங்குக் கூடியிருந்த அவையில் ஏகலவ்யன் இருந்ததாகக் குறிப்பு ஒன்று வருகிறது. அதன் பிறகு சபா பர்வம் பகுதி 52ல் ராஜசூய வேள்வி செய்து முடித்த யுதிஷ்டிரனுக்கு ஏகலவ்யன் காலணிகளைப் பரிசளித்ததாக ஒரு குறிப்பு வருகிறது. அதற்குப் பிறகு உத்யோக பர்வத்தின் இந்தப் பகுதி 48ல் தான், ஏகலவ்யன் கிருஷ்ணனால் கொல்லப்பட்டதாக ஒரு குறிப்பு வருகிறது.

தனக்கு அடுத்தபடியாகப் பலதேவனைக் {பலராமனைக்} கொண்டவனும் {having Baladeva for his second}, விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்கள் மத்தியில், சபையில் அமர்ந்திருந்த உக்கிரசேனனின் தீய மகனைக் (கம்சனைக்) கொன்று, {அந்த} நாட்டை உக்கிரசேனனிடமே கொடுத்தவனும் இந்தக் கிருஷ்ணனே.

தான் கொண்ட மாய சக்திகளின் விளைவால் அச்சமற்றவனாகி வானத்தில் நிலைத்திருந்த {வானத்தில் இருந்து போர் செய்த} சௌபத்தின் தலைவனான மன்னன் சால்வனிடம் போரிட்டவன் இந்தக் கிருஷ்ணனே; (சௌபத்தின் தலைவனால் {சால்வனால்}) வீசப்பட்ட கடுமையான சதாக்னியை, சௌபத்தின் வாயிலில் நின்று தனது கரங்களில் பிடித்தவன் இவனே {இந்தக் கிருஷ்ணனே}. இவனுடைய {கிருஷ்ணனுடைய} வலிமையை எந்த மனிதனால் தாங்கிக் கொள்ள முடியும்?

வல்லமைமிக்கதும், அணுக முடியாததும், தாங்க முடியாததுமான பிராக்ஜோதிஷம் என்ற நகரத்தை அசுரர்கள் கொண்டிருந்தனர். அதிதியிடம் தான் அபகரித்து வந்த காதணிகளை {ரத்னகுண்டலங்களை}. பூமியின் {பூமாதேவியின்} வலிமைமிக்க மகனான நரகன் {நரகாசுரன்}, அங்கேதான் {பிராக்ஜோதிஷத்தில்தான்} வைத்திருந்தான்.

சக்ரனின் {இந்திரனின்} தலைமையில் கூடியிருந்த மரணத்திற்கு அஞ்சாத தேவர்களே கூட அவனை {நரகாசுரனை} வெல்ல இயலாதவர்களாகவே இருந்தார்கள். கேசவனின் {கிருஷ்ணனின்} ஆற்றல், வலிமை, {இவன் கொண்டிருந்த} தடுக்க முடியாத ஆயுதம் ஆகியவற்றைக் கண்டும், இவனது {கிருஷ்ணனின்} பிறப்பின் நோக்கத்தை அறிந்தும், அசுரர்களை அழிக்கும் பணியில் இவனை {கிருஷ்ணனை} தேவர்கள் அமர்த்தினார்கள்.

வெற்றியை உறுதி செய்யும் தெய்வீகப் பண்புகள் அனைத்தையும் தன்னிடம் கொண்ட வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, மிகக் கடினமான இந்தப் பணியைத் தானே மேற்கொள்ள ஏற்றுக் கொண்டான். நிர்மோசனம் என்ற நகரத்தில் இந்த வீரன் {கிருஷ்ணன்}, ஆறாயிரம் {6000} அசுரர்களைக் கொன்று, எண்ணிலா கூர்முனைக் கணைகளைத் துண்டுகளாக அறுத்துப் போட்டு, முரனையும், ராட்சசர்கள் கூட்டத்தையும் கொன்று, அந்த நகரத்திற்குள் {நிர்மோசனத்திற்குள்} நுழைந்தான்.

அங்கேதான் {நிர்மோசனத்தில்தான்} வலிமைமிக்க நரகனுக்கும் {நரகாசுரனுக்கும்}, அளவிலா சக்தி கொண்ட விஷ்ணுவுக்கும் இடையில் அந்த மோதல் நிகழ்ந்தது. காற்றால் வேரோடு சாய்க்கப்பட்ட கோங்கு மரம் போல, கிருஷ்ணனால் கொல்லப்பட்ட நரகன் அங்கே உயிரற்றுக் கிடக்கிறான். அழகாலும், சாகாப்புகழாலும் அலங்கரிக்கப்பட்டவனும் ஒப்பற்ற ஆற்றல் கொண்டவனும் கற்றவனுமான கிருஷ்ணன், முரனையும், பூமியின் {பூமாதேவியின்} மகனான நரகனையும் கொன்று, ரத்தினங்களால் ஆன அந்தக் காதணிகளையும் மீட்டுத் திரும்பி வந்தான்.

அந்தப் போரில், இவன் {கிருஷ்ணன்} செய்த பயங்கரச் சாதனைகளைச் சாட்சியாகக் கண்ட தேவர்கள் {கிருஷ்ணனிடம்}, “போரில் உனக்கு எப்போதும் களைப்பேற்படாது, ஆகாயமோ, நீரோ உனது வழியைத் தடை செய்யாது {ஆகாயத்திலும், நீரிலும் செல்லும் சக்தி உனக்குக் கிடைக்கும்}. ஆயுதங்கள் உன் உடலைத் துளைக்காது” என்று இவனுக்கு {கிருஷ்ணனுக்கு} அருளினர். இவை அனைத்தினாலும், கிருஷ்ணன், தனக்குப் போதுமான வெகுமதி கிடைத்ததாகக் கருதினான்.

அளவிலாத பெரும் வலிமையைக் கொண்ட வாசுதேவனிடம் {கிருஷ்ணனிடம்} அறங்கள் அனைத்தும் {குண நிறைவுகள் அனைத்தும்} இருக்கின்றன. அளவற்ற சக்தி வாய்ந்தவனும், தாங்கிக் கொள்ள முடியாதவனுமான இந்த விஷ்ணுவை {கிருஷ்ணனை}, இன்னும் கூடத் திருதராஷ்டிரரின் மகன் {துரியோதனன்} வெல்லவே விரும்புகிறான். அதனாலேயே அந்த இழிந்தவன் {துரியோதனன்}, அடிக்கடி இவனைச் சிறையிலடைக்க [4] எண்ணுகிறான். எனினும், இவை யாவற்றையும் கிருஷ்ணன் எங்களுக்காகப் பொறுத்து வருகிறான் {மன்னித்து வருகிறான்}. அந்த இழிந்தவன் {துரியோதனன்}, கிருஷ்ணனுக்கும் எனக்கும் இடையில் திடீர்ப் பிளவை உண்டாக்கவும் முயன்று வருகிறான். எனினும், பாண்டவர்களிடம் கிருஷ்ணன் கொண்ட பாசத்தை அகற்ற, தான் எவ்வளவு தூரம் திறன்பெற்றவன் என்பதைப் போர்க்களத்தில் அவன் {துரியோதனன்} காண்பான்.
[4] இந்த இடத்தில் துரியோதனன் கிருஷ்ணனைக் கட்ட முயன்று வருகிறான் என்று ஒரு பதிப்பிலும், எப்போதும் கிருஷ்ணனை எதிர்த்து வாதாடி வருகிறான் என்று மற்றொரு பதிப்பிலும் வருகிறது.

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்