Tuesday, April 07, 2015

சிகண்டியின் பங்கு - பீஷ்மர்! - உத்யோக பர்வம் பகுதி 57அ

Sikhandin's share - Bhishma! | Udyoga Parva - Section 57a | Mahabharata In Tamil

(சனத்சுஜாத பர்வத் தொடர்ச்சி - 17) {யானசந்தி பர்வம் - 11}

பதிவின் சுருக்கம் : பாண்டவர்களிடம் சேர்ந்த ஏழு அக்ஷௌஹிணி படைகள் யார் மூலமாக வந்தன என்று சஞ்சயன் சொன்னது; பாண்டவர்கள் தரப்பில் ஒவ்வொருவரும் தங்களுக்கு இலக்காக யார் யாரைப் பிரித்துக் கொண்டார்கள் என்பதைச் சஞ்சயன் சொன்னது…

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்} சொன்னான், “ஓ! சஞ்சயா, பாசத்தால் அங்கே வந்தவர்களும், பாண்டவர்கள் சார்பாக என் மகனின் {துரியோதனனின்} படைகளுடன் போரிடப்போகிறர்வர்களுமான யாரையெல்லாம் நீ கண்டாய்?”

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்}, “அந்தகர்கள் மற்றும் விருஷ்ணிகளில் முதன்மையானவனான கிருஷ்ணனையும், சேகிதானனையும், யுயுதானன் என்று அழைக்கப்படும் சாத்யகி ஆகியோர் அங்கு வந்திருந்ததைக் கண்டேன். தங்கள் பலத்தில் செருக்கும், அகில உலகப் புகழும் கொண்ட {சேகிதானான் மற்றும் சாத்யகி ஆகிய} அவ்விரு தேர்வீரர்கள் ஒவ்வொருவரும் ஆளுக்கு ஓர் அக்ஷௌஹிணி துருப்புகளுடன் பாண்டவர்களை வந்தடைந்தனர்.

பாஞ்சாலர்களின் மன்னான துருபதன், திருஷ்டத்யும்னன் தலைமையிலான சத்யஜித் மற்றும் பிறரைக் கொண்ட தனது பத்து {10} மகன்களால் சூழப்பட்டு, சிகண்டியால் நன்கு பாதுகாக்கப்பட்டு, தனது படைவீரர்களுக்கு அனைத்து அடிப்படை பொருட்களையும் கொடுத்து, யுதிஷ்டிரனைக் கௌரவப்படுத்தும் வகையில் ஒரு முழு அக்ஷௌஹிணியுடன் அங்கே வந்திருக்கிறான்.

பூமியின் தலைவனான விராடன், ஓர் அக்ஷௌஹிணி துருப்புகள் சூழ, தனது மகன்களான சங்கன் மற்றும் உத்தரன் ஆகிய  இருவருடனும், மதிராக்ஷன் தலைமையிலான சூரியதத்தன் மற்றும் பிற வீரர்களுடனும்,  தன் தம்பிகள் மற்றும் மகன்களின் துணையுடனும், பிருதையின் {குந்தியின்} மகனை {யுதிஷ்டிரனை} வந்தடைந்திருக்கிறான்.

ஜராசந்தனின் மகனான மகத மன்னன் {ஜயத்சேனன் [சகாதேவன்]} மற்றும் சேதிகளின் மன்னன் திருஷ்டகேது ஆகியோர் ஆளுக்கு ஒவ்வொரு அக்ஷௌஹிணி துருப்புகளுடன் அங்கே வந்திருக்கின்றனர்.

ஊதா நிறக் கொடிகளுடன் கூடிய கேகயத்தின் ஐந்து சகோதரர்கள், ஓர் அக்ஷௌஹிணி துருப்புகள் சூழ, பாண்டவர்களை வந்தடைந்திருக்கிறார்கள். பாண்டவர்களுக்காகத் தார்தராஷ்டிர படைகளுடன் {திருதராஷ்டிர படைகளுடன்} மோதப்போகும் இந்த அளவு எண்ணிக்கையிலான படைகள் அங்கு கூடியிருப்பதை நான் கண்டேன்.

மனித, தெய்வீக, கந்தர்வ, அசுர வகைகளிலான போர் வியூகங்களை அறிந்தவனும், பெரும் தேர்வீரனுமான திருஷ்டத்யும்னன் அந்தப் படைகளுக்குத் தலைமை தாங்குகிறான்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சந்தனுவின் மகன் பீஷ்மர், சிகண்டியின் பங்காக {இலக்காக} நிர்ணயிப்பட்டிருக்கிறார்; தன் மத்ஸ்ய வீரர்கள் அனைவருடன் விராடன் சிகண்டியை ஆதரிப்பான் {பின்பலமாக இருப்பான்}.

பெரும் பலமிக்க மத்ர மன்னன் {சல்யன்}, பாண்டுவின் மூத்த மகனுடைய {யுதிஷ்டிரனின்} பங்காக நிர்ணயிப்பட்டிருக்கிறார். எனினும், இவர்கள் இருவரும் சரியான {சமமான} இணையல்ல என்பது சிலரது கருத்தாக இருக்கிறது.

துரியோதனனும், அவனது தொண்ணூற்றொன்பது சகோதரர்களும், மேலும், கிழக்கு மற்றும் தெற்கின் ஆட்சியாளர்களும் பீமசேனனின் பங்காகக் நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றனர்.

விகர்த்தனன் மகன் கர்ணன், சிந்துக்களின் மன்னன் ஜெயத்ரதன் ஆகியோர் அர்ஜுனனின் பங்காக நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றனர். மேலும், இந்தப் பூமியில் வெல்லப்பட முடியாத வீரர்களையும், தங்கள் பலத்தில் செருக்குடையோரையும், அர்ஜுனன் தனது பங்காக ஏற்றுக் கொண்டான்.

வலிமைமிக்க வில்லாளிகளான கேகயத்தின் ஐந்து அரச சகோதரர்கள் [1], (திருதராஷ்டிரர் பக்கத்தில் உள்ள) கேகய வீரர்களைத் தங்கள் எதிரிகளாக ஏற்று, போரில் தங்கள் பலத்தைக் காட்டப் போகிறார்கள். அவர்களது பங்கில், மாளவர்கள், சால்வகர்கள் மற்றும் திரிகார்த்தப் படையைச் சேர்ந்தவர்களும், வெற்றி அல்லது மரணம் என்று உறுதியேற்றிருப்பவர்களுமான இரு புகழ்பெற்ற {சம்சப்தகர்கள் என்ற} வீரர்களும் அவர்களது {இலக்காக நிர்ணயிக்கப்பட்ட} பங்கில் இருக்கிறார்கள்.


[1] விந்தன், அனுவிந்தன் ஆகியோரால் கேகயத்தில் இருந்து துரத்தப்பட்டவர்கள் இவர்கள்.

துரியோதனனின் மகன்கள், துச்சாசனன், மன்னன் பிருகத்பலன் ஆகியோர் சுபத்திரை மகனின் {அபிமன்யுவின்} பங்காகக் நிர்ணயிக்கப்பட்டனர்.

ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, தங்க, சித்திர வேலைப்பாடுகள் நிறைந்த கொடிகளுடைய தேரைக் கொண்டவர்களும், பெரும் வில்லாளிகளுமான திரௌபதியின் மகன்கள், திருஷ்டத்யும்னன் தலைமையில் துரோணருக்கு எதிராக முன்னேறுவார்கள்.

சேகிதானன் தனது தேரில் இருந்து கொண்டு சோமதத்தனுடன் தனிப் போரில் மோத விரும்புகிறான். அதே வேளையில் சாத்யகி, போஜர்கள் தலைவனான கிருதவர்மனுக்கு எதிராகப் போரிட ஆவலுடன் இருக்கிறான்.

போர்க்களத்தில் பயங்கரக் கர்ஜனை புரியும் மாத்ரியின் வீரமகனான சகாதேவன், உமது மைத்துனனான சுபலனின் மகனைத் {சகுனியைத்} தனது பங்காகக் கொள்ளத் தீர்மானித்திருக்கிறான்.

மத்ராவதியின் {மாத்ரியின்} மகனான நகுலன், வஞ்சகம் நிறைந்த உலூகனையும், சாரஸ்வதர்கள் [2] என்ற பழங்குடியினரையும் தனது பங்காகக் கொள்ளத் தீர்மானித்திருக்கிறான்.
[2] சரஸ்வதி ஆற்றங்கரையில் இருந்த மன்னர்கள்.

ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, போரிடப்போகிறவர்களான பூமியில் உள்ள பிற மன்னர்கள் அனைவரையும், ஒவ்வொருவராகப் பெயரைச் சொல்லி, {அவர்களைத்} தங்கள் ஒவ்வொருவருக்குமான பங்காகப் பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்}, பிரித்துக் கொண்டார்கள். இப்படியே பாண்டவப் படை பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது. இப்போது, உமது மகன்களுடன் கூடிய நீர் எது சிறந்தது என்று கருதுவீரோ, அதைத் தாமதமின்றிச் செய்வீராக” என்றான் {சஞ்சயன்}.



மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்