Wednesday, April 08, 2015

அச்சமற்ற திருஷ்டத்யும்னன் ! - உத்யோக பர்வம் பகுதி 57ஆ

The fearless Dhrishtadyumna!! | Udyoga Parva - Section 57b | Mahabharata In Tamil

(சனத்சுஜாத பர்வத் தொடர்ச்சி - 17) {யானசந்தி பர்வம் - 11}

பதிவின் சுருக்கம் : துரியோதனனை நினைத்து திருதராஷ்டிரன் வருந்தியது; பாண்டவர்களின் பலம் அறிந்ததாலேயே பீஷ்மர் போரை விரும்பவில்லை என்று திருதராஷ்டிரன் சொன்னது; துரியோதனன் தனது தந்தை திருதராஷ்டிரனுக்கு உற்சாகமூட்டியது; யுதிஷ்டிரனைப் போருக்கு யார் தூண்டுவது எனத் திருதராஷ்டிரன் மீண்டும் சஞ்சயனிடம் கேட்டது; சஞ்சயன் திருஷ்டத்யும்னனைக் குறித்துச் சொன்னது; திருஷ்டத்யும்னன் யுதிஷ்டிரனிடம் பேசியது; யுதிஷ்டிரன் திருஷ்டத்யும்னனை மெச்சியது; கௌரவர்களை எச்சரிக்கும் வகையான சொற்களைத் திருஷ்டத்யும்னன் சஞ்சயனிடம் சொன்னது…

திருதராஷ்டிரன் சஞ்சயனிடம் சொன்னான், “ஐயோ, ஏமாற்றுகரப் பகடைக்கு அடிமையான எனது மூட மகன்கள் அனைவரும், யாருடன் போர்க்களத்தில் மோத வேண்டும் என்று விரும்பினார்களோ, அந்த வலிமைமிக்கப் பீமனால் ஏற்கனவே மாண்டுவிட்டார்கள். நெருப்பில் விழும் விட்டில் பூச்சிகளைப் போல, வேள்விக்காக மரணத்தால் {காலனால்} புனிதமாக்கப்பட்டவர்கள் போல {வேள்வி விலங்கைப் போல}, பூமியின் மன்னர்கள் அனைவருமே கூடக் காண்டீவத்தை நோக்கி விரைவார்கள். என்னால் காயமுற்ற அந்த ஒப்பற்ற வீரர்களால் {பாண்டவர்களால்} எனது படை ஏற்கனவே துரத்தப்பட்டு விட்டதாகவே நான் நினைக்கிறேன். உண்மையில், பாண்டுவின் மகன்களால் {பாண்டவர்களால்} மோதலில் உடைக்கப்பட்ட எனது வீரர்களின் தலைவர்களை யார் பின்தொடர்வார்கள்?



அவர்கள் {பாண்டவர்கள்} அனைவரும், வலிமை மிக்கத் தேர்வீரர்களாவர். பெரும் துணிவும், புகழ்மிக்கச் சாதனைகளும், பெரும் ஆற்றலும், எரியும் சூரியனுக்கு நிகரான சக்தி ஆகியவற்றைக் கொண்ட அவர்கள் {பாண்டவர்கள்} அனைவரும் போரில் வெற்றிவாகை சூடுபவர்களாவர். யுதிஷ்டிரனைத் தங்கள் தலைவனாகவும், மதுவைக் கொன்றவனை {மதுசூதனன்_கிருஷ்ணனைத்} தங்கள் பாதுகாவலனாகவும், வீரனான சவ்யசச்சின் {அர்ஜுனன்} மற்றும் விருகோதரனை {பீமனைத்} தங்கள் போர்வீரர்களாகவும், நகுலன், சகாதவேன், பிரஷதன் மகனான திருஷ்டத்யும்னன், சாத்யகி, துருபதன், தன் மகனுடன் கூடிய திருஷ்டகேது, உத்தமௌஜஸ், பாஞ்சாலர்களின் வெல்லப்பட முடியாத யுதாமன்யு, சிகண்டி, க்ஷத்திரதேவன், விராடனின் மகன் உத்தரன், காசயர்கள் {காசி நாட்டவர்}, சேதிக்கள், மத்ஸ்யர்கள், சிருஞ்சயர்கள், விராடனின் மகன் பப்ரு, பாஞ்சாலர்கள், பிரபத்திரகர்கள் ஆகியோரைத் தங்களுக்காகப் போரிடுபவர்களாகக் கொண்டவர்களிடம் இருந்து இந்திரனாலும் இந்தப் பூமியைப் பறிக்க முடியாது. போரில் அமைதியும் உறுதியும் கொண்ட அவ்வீரர்களால் மலைகளையும் பிளக்க முடியும். ஐயோ, தொண்டை கட்டுமளவுக்கு நான் கதறினாலும் கூட, என்னைப் புறக்கணித்து, ஓ சஞ்சயா, அனைத்து அறங்களையும் கொண்ட அந்தத் தெய்வீக ஆற்றல் படைத்தோரிடம் {பாண்டவர்களிடம்} எனது தீய மகன் {துரியோதனன்} போரிட விரும்புகிறானே.”

துரியோதனன் {திருதராஷ்டிரனிடம், “பாண்டவர்களும் நாங்களும் ஒரே குலத்தைச் சேர்ந்தவர்களே; அவர்களும் நாங்களும் ஒரே பூமியில் தான் நடக்கிறோம். பாண்டவர்களுக்கே வெற்றி கிட்டும் என்று நீர் தீர்மானிப்பது எப்படி? வலிமைமிக்க வில்லாளிகளான பீஷ்மர், துரோணர், கிருபர், வெல்லப்பட முடியாத கர்ணன், ஜெயத்ரதன், சோமதத்தன், அஸ்வத்தாமன் ஆகிய அனைவரும் பெரும் ஆற்றல் படைத்தவர்களாவர். தேவர்களோடு கூடிய இந்திரனே ஆனாலும் அவர்களை வீழ்த்த முடியாது. அப்படியிருக்கையில், ஓ! தந்தையே, பாண்டவர்களைக் குறித்து நீர் என்ன சொல்வீர்?

ஆயுதம் தாங்கி நிற்கும் இந்த உன்னதமான வீர மன்னர்கள் அனைவரும், ஓ! தந்தையே, எனக்காகப் பாண்டவர்களை எதிர்த்து நிற்க இயன்றவர்களே, அதே வேளையில் பாண்டவர்கள் எனது துருப்புகளைப் பார்க்கக்கூட இயன்றவர்களல்லர். பாண்டவர்களையும், அவர்களது மகன்களையும் போரில் சந்திக்கப் போதிய பலம் கொண்டவனாகவே நான் இருக்கிறேன். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, எனது நலனில் ஆவலுள்ள இந்தப் பூமியின் ஆட்சியாளர்கள் அனைவரும், இளம் மான்களை வலையில் பிடிப்பது போல, பாண்டவர்கள் அனைவரையும் நிச்சயம் பிடிப்பார்கள். நமது தேர்க்கூட்டங்கள் மற்றும் கணைகளின் கண்ணிகளின் விளைவாகப் பாஞ்சாலர்களும் பாண்டவர்களும் முற்றிலுமாக நிர்மூலமாக்கப்படுவார்கள் என்பதை நான் உமக்குச் சொல்கிறேன்” என்றான் {துரியோதனன்}.

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சஞ்சயா, இந்த எனது மகன் {துரியோதனன்} பைத்தியக்காரனைப் போலப் பேசுகிறான். நீதிமானான யுதிஷ்டிரனைப் போர்க்களத்தில் வீழ்த்த இயலாதவனாக இருக்கிறான். அந்த ஒப்பற்றவர்களுடன் {பாண்டவர்களுடன்} இந்தப் பீஷ்மர் போரை விரும்பவில்லை. ஆகையால், புகழ்வாய்ந்த, பலமிக்க, அறம்சார்ந்த, உயர்ஆன்ம பாண்டவர்கள் மற்றும் அவர்களின் மகன்களின் வலிமையை இவர் {இந்தப் பீஷ்மர்} உண்மையில் அறிந்திருக்கிறார். ஆனால், ஓ! சஞ்சயா, அவர்களது {பாண்டவர்களின்} நடவடிக்கைகளை எனக்கு மீண்டும் சொல். (ஹோம) நெருப்பைத் தெளிந்த நெய்யைக் கொண்டு தூண்டும் புரோகிதர்களைப் போல, அந்த ஒப்பற்ற, பெரும் வேகம் கொண்ட அந்த வலிமைமிக்க வில்லாளிகளை {பாண்டவர்களை} யார் தூண்டி விடுகிறார்கள் என்பதை எனக்குச் சொல்” என்றான் {திருதராஷ்டிரன்}.

அதற்குச் சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்}, “ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, திருஷ்டத்யும்னன் {யுதிஷ்டிரனிடம்}, “பாரதர்களில் சிறந்தவரே {யுதிஷ்டிரரே}, போரிடுவீராக. சிறு அச்சத்தையும் ஊக்கப்படுத்தாதீர். திருதராஷ்டிரர் மகனிடம் {துரியோதனனிடம்} உள்ள பூமியின் ஆட்சியாளர்கள் அனைவரும், வரப்போகும் கடும் மோதலில் ஆயுத மழைக்கு இலக்காவார்கள். உண்மையில், சிறு மீன்களை நீரில் பிடிக்கும் திமிங்கலம் போல, அங்கே தங்கள் உறவினர்களுடன் சேர்ந்து, சினத்துடன் கூடியிருக்கும் அந்த மன்னர்கள் அனைவருடனும் நான் ஒருவனே {தனியனாக} மோதுவேன். பெருகும் கடலைத் தடுக்கும் கரையைப் போல, பீஷ்மர், துரோணர், கிருபர், கர்ணன், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, சல்யன், சுயோதனன் {துரியோதனன்} ஆகிய அனைவரையும் நானே {ஒருவனாகவே} தடுப்பேன்” என்று பாண்டவர்களிடம் எப்போதும் போருக்காகத் தூண்டுகிறான் {திருஷ்டத்யும்னன்}.

அறம் சார்ந்த மன்னனான யுதிஷ்டிரன், அவனிடம் {திருஷ்டத்யும்னனிடம்}, “உனது ஆற்றலையும், உறுதியையுமே பாஞ்சாலர்களும், பாண்டவர்களும் முழுமையாக நம்பியிருக்கிறோம். போரிலிருந்து எங்களைப் பாதுகாப்பாக மீட்பாயாக. ஓ! வலிமைமிக்கக் கரங்கள் கொண்டவனே {திருஷ்டத்யும்னா}, க்ஷத்திரிய வகைக் கடமைகளில் நீ உறுதியாக இருக்கிறாய் என்பதை நான் அறிவேன். உண்மையில், கௌரவர்களிடம் தனியொருவனாகப் போரிட நீ தகுந்தவனே. போரிட விரும்பி, அவர்கள் {கௌரவர்கள்} நம் முன்னிலையில் நிற்கும்போது, ஓ! எதிரிகளை ஒடுக்குபவனே {திருஷ்டத்யும்னா}, நீ எதைச் செய்வாயோ, அஃது எங்களுக்கு நன்மையானதாகவே இருக்கும் என்பது நிச்சயம். படுதோல்வி அடைந்து, பாதுகாப்பு நாடி போரில் இருந்து தப்பியோடுபர்களுக்கும் நம்பிக்கை தரும் வகையில், தன் ஆற்றலை வெளிக்காட்டும் ஒரு வீரனை ஆயிரம் {விலை} கொடுத்தாவது {ஒருவன்} வாங்க வேண்டும் என்பதே சாத்திரமறிந்தோர் கருத்து. போர்க்களத்தில் அச்சத்தால் பீடிக்கப்பட்டவர்களை விடுவிப்பவன் நீ என்பதில் {யாருக்கும்} ஐயமில்லை. {அதாவது, நீ எங்களுக்கு மதிப்புமிக்கவன் என்பதில் ஐயமில்லை}” என்றான் {யுதிஷ்டிரன்}.

நீதிமானான குந்தியின் மகன் யுதிஷ்டிரன் இதைச் சொன்ன போது,  அச்சமற்ற வகையில் திருஷ்டத்யும்னன் {சஞ்சயனான} என்னிடம், “ஓ! சூதரே {சஞ்சயரே}, நீர் தாமதமில்லாமல் சென்று, துரியோதனனுக்காகப் போரிட வந்திருக்கும் அனைவரிடமும், பாஹ்லீகர்களோடு கூடிய பிரதீப குல குருக்களிடமும், சரத்வான் மகன் {கிருபர்}, கர்ணன், துரோணர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, ஜெயத்ரதன், துச்சாசனன், விகர்ணன், மன்னன் துரியோதனன் மற்றும் பீஷ்மர் ஆகியோரிடமும் “தேவர்களால் பாதுகாக்கப்படும் அர்ஜுனனால் நீங்கள் கொல்லப்பட வேண்டாம். அது நடப்பதற்குள், ஏதேனும் ஒரு நல்ல மனிதன் யுதிஷ்டிரரைத் அணுகி, மனிதரில் சிறந்தவரான அந்தப் பாண்டுவின் மகனிடம், {பாண்டவர்கள் ஒப்படைத்த} நாட்டை ஏற்றுக் கொள்ளும்படி தாமதமில்லாமல் வேண்டிக் கொள்ளட்டும். கலங்கடிக்கப்பட முடியா ஆற்றல் கொண்டவரான பாண்டுவின் மகன் சவ்யசச்சினைப் {அர்ஜுனரைப்} போன்ற வீரர் எவரும் இந்தப் பூமியில் இல்லை. காண்டீவத்தைக் கொண்டிருப்பவரின் {அர்ஜுனரின்} தெய்வீகத் தேர் தேவர்களாலேயே பாதுகாக்கப்படுகிறது. மனிதர்களால் அவர் {அர்ஜுனர்} வெல்லப்படத்தக்கவர் அல்ல. எனவே, போரிடத் துணியாதீர்” என்று சொல்லும்” என்ற இந்தச் சொற்களைப் {திருஷ்டத்யும்னன்} பேசினான்” என்றான் {சஞ்சயன்}.

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்