Friday, May 22, 2015

காலவரின் புலம்பல்! - உத்யோக பர்வம் பகுதி 107

Galava's lament! | Udyoga Parva - Section 107 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –36)

பதிவின் சுருக்கம் : விஸ்வாமித்ரர் கேட்ட குருதட்சணையால் கவலையடைந்த காலவர் அழுது புலம்புவது; தனது நண்பனான காலவருக்கு உதவி செய்வதற்காகக் கருடன் அங்கே வந்தது; காலவருக்காக விஷ்ணுவிடம் பரிந்து பேசியதாகக் கருடன் சொல்வது...

நாரதர் {துரியோதனனிடம்} சொன்னார், "பெரும் புத்திக்கூர்மை கொண்ட விஸ்வாமித்ரரால் இப்படிச் சொல்லப்பட்ட காலவர், அமரவோ, படுக்கவோ, உண்ணவோ முடியாத அளவுக்குத் துயரால் நிறைந்தார். பதற்றம் மற்றும் வருத்தத்திற்கு இரையாகி, மனங்கசந்து புலம்பி, குற்றவுணர்வால் ஏற்பட்ட வருத்ததால் எரிச்சலடைந்த காலவர் நிறம் மங்கி எலும்புக்கூடாய் மெலிந்தார். கவலையால் அடிக்கபட்ட அவர், ஓ! சுயோதனா {துரியோதனா}, தனது புலம்பல்களில், "செல்வாக்கு மிக்க நண்பர்களை நான் எங்குக் காண்பேன்? செல்வத்தை எங்கே அடைவேன்? என்ன சேமிப்புகளை நான் கொண்டிருக்கிறேன்? சந்திர வெளுப்பில் எண்ணூறு {800} குதிரைகளை நான் எங்கே காண்பேன்? உண்பதில் என்ன மகிழ்ச்சியை நான் அடைவேன்? இன்பநுகர் பொருட்களில்தான் எனக்கு என்ன மகிழ்ச்சி கிடைக்கும்?


எனக்கு உயிரின் மேற் கொண்ட ஆசையும் போய்விட்டது. உயிரைக்கொண்டு எனக்குத் தேவை என்ன இருக்கிறது? பெருங்கடலின் அடுத்தக் கரைக்குச் சென்று, அல்லது பூமியில் நெடுந்தொலைவுக்குச் சென்று எனது உயிரைக் கைவிடுவேன். இந்த உயிரால் எனக்கு என்ன பயன்? ஏழையாய் இருந்து, கடும் முயற்சியற்று, வெற்றியடையாமல், வாழ்வின் அனைத்து நல்ல பொருட்களையும் இழந்து, கடனைச் சுமக்கும் ஒருவனுக்கு என்ன மகிழ்ச்சி இருக்க முடியும்? நட்பின் மூலம் நண்பனின் செல்வத்தை அனுபவித்து, அந்த நண்பனுக்குப் பதிலுதவி செய்ய முடியாதவனைப் பொறுத்தவரை, வாழ்வை விட மரணமே அவனுக்குச் சிறந்ததாகும்.

ஒரு செயலைச் செய்வதாக உறுதிகூறிய பின் அதைச் செய்யத் தவறும் ஒரு மனிதனின் அறச் செயல்கள் எல்லாம் அந்தப் பொய்மையின் விளைவால் பலன் இழக்கின்றன. பொய்மை எனும் கறை படிந்தவன், அழகு, பிள்ளைகள், பலம் மற்றும் செல்வாக்கு ஆகியவற்றை அடைய முடியாது. எனவே, அப்படிப்பட்ட ஒருவனால் எப்படி அருள்நிலையை அடைய முடியும்? நன்றிகெட்ட எந்த மனிதன்தான் புகழை ஈட்டியிருக்கிறான்? உண்மையில், அவனுக்கு இடம்தான் ஏது? மகிழ்ச்சிதான் ஏது?

ஒரு நன்றிகெட்ட மனிதனால் ஒருபோதும் மரியாதையையும், பாசத்தையும் பெற முடியாது. முக்தியும் எப்போதும் அவனுடையதாகாது. செல்வமற்ற ஒருவன், வாழக்கூட முடியாத இழிந்தவனாவான். அப்படிப்பட்ட இழிந்தவனால் தனது உறவினர்களையோ நண்பர்களையோ தாங்க முடியாது. தான் பெற்ற நன்மைகளுக்கான பதிலுதவியைச் செய்ய முடியாமல், அவன் அழிவைச் சந்திக்கிறான். என் நோக்கங்களை எனது ஆசானிடம் இருந்து அடைந்த பிறகும், அவர் கேட்பதை என்னால் கொடுக்க முடியாததால், பொய்மையின் கறை படிந்த, வளங்கள் அற்ற, நன்றிகெட்ட இழிந்தவனே நான்.

முடிந்தவரை முயற்சித்த பிறகு, நான் எனது உயிரை விடுவேன். இதற்கு முன்னர் நான் தேவர்களிடம்கூட எதையும் கேட்டதில்லை. வேள்வி செய்யும் இடத்தில் இதற்காக என்னைத் தேவர்கள் கௌரவிப்பார்கள். நானோ, மூவுலகங்களின் தெய்வீகத் தலைவனான விஷ்ணுவிடம், பாதுகாப்பினால் அருளப்பட்டிருக்கும் அனைவருக்கும் அடைக்கலமாக இருப்பவனான அந்தக் கிருஷ்ணனிடம் சென்று எனது பாதுகாப்பைக் கோரப்போகிறேன். அவனிடம் சென்று பணிந்து, துறவிகள் அனைவரிலும் உயர்ந்த நித்தியமானவனும், தேவர்கள் மற்றும் அசுரர்களின் இன்பங்கள் மற்றும் உடைமைகள் அனைத்துக்கும் காரணமானவனுமான கிருஷ்ணனைக் காண நான் விரும்புகிறேன்" என்றார் {காலவர்}.

காலவர் இப்படி அழுது புலம்பிக்கொண்டிருந்தபோது, அவரது {காலவரின்} நண்பனான வினதையின் மகன் கருடன் அங்கே தோன்றினான். அவருக்கு நன்மையைச் செய்ய விரும்பிய கருடன், அவரிடம் மகிழ்ச்சியாக, "நீ எனது அன்புக்குரிய நண்பனாவாய். செழிப்போடிருக்கையில், நண்பர்களின் விருப்பங்கள் நிறைவேறுவதில் கவனம் செலுத்த வேண்டியது ஒரு நண்பனின் கடமையாகும். ஓ! அந்தணா, நான் கொண்டிருக்கும் செழிப்பு வாசவனின் {இந்திரனின்} தம்பியான விஷ்ணுவுடையது. இதற்கு முன் நான் அவனிடம் {விஷ்ணுவிடம்} உனக்காகப் பரிந்து பேசினேன். அவன் எனது விருப்பங்களால் மகிழ்ந்தான். வா, இப்போதே நாம் இருவரும் சேர்ந்து செல்வோம். கடலின் அடுத்தக் கரைக்கோ, அல்லது பூமியில் கடைசி எல்லைக்கோ நான் உன்னை வசதியாகச் சுமந்து செல்வேன். ஓ! காலவா, தாமதிக்காதே வா" என்றான் {கருடன்}.


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்