Thursday, May 21, 2015

காலவரின் பிடிவாதம்! - உத்யோக பர்வம் பகுதி 106

Galava's obstinacy! | Udyoga Parva - Section 106 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –35)

பதிவின் சுருக்கம் : நாரதர் துரியோதனனுக்குக் காலவர் மற்றும் விஸ்வாமித்ரரின் கதையைச் சொல்ல ஆரம்பித்தது; தவமியற்றிக் கொண்டிருந்த விஸ்வாமித்ரருக்கு பணிவிடை செய்த காலவர்; காலவரின் சேவையால் மகிழ்ந்த விஸ்வாமித்ரர், காலவரை சீடன் நிலையில் இருந்து விடுவித்தது; குருதட்சணை கொடுக்காமல் தான் போகக்கூடாது எனக் காலவர் பிடிவாதம் பிடிப்பது; விஸ்வாமித்ரர் கேட்ட குருதட்சணை...

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்} சொன்னான், "ஓயாமல் தீமைகளில் ஈடுபட்டு, பேராசையில் குருடாகி, தீய வழிகளுக்கு அடிமையாகி, தனக்குத் தானே அழிவைத் தீர்மானித்து, உறவினர்களின் இதயங்களில் துன்பத்தை எழுப்பி, நண்பர்களின் துயரங்களை மேம்படுத்தி, தனது நலன் விரும்பிகள் அனைவரையும் வேதனைப்படுத்தி, எதிரிகளின் மகிழ்ச்சியை அதிகரித்து, தவறான வழியில் நடந்து கொண்டிருந்த அவனை {துரியோதனனை}, அவனது நண்பர்கள் ஏன் தடுக்கவில்லை? அமைதியான ஆன்மாக் கொண்டவனும், (குரு குலத்தின்) பெரும் நண்பனுமான அந்தப் புனிதமானவனோ {கிருஷ்ணனோ}, பெரும்பாட்டனோ {பீஷ்மரோ}, பாசத்தினால் அவனிடம் {துரியோதனனிடம்} ஏன் ஏதும் கூறவில்லை?" என்று கேட்டான்.


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஆம். அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன்} பேசினான். எது நன்மையோ அதைப் பீஷ்மரும் பேசினார். நாரதரும் இன்னும் அதிகம் சொன்னார். இவர்கள் சொன்னது அனைத்தையும் கேட்பாயாக"

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "நாரதர் {துரியோதனனிடம்}, "நண்பர்களின் ஆலோசனைகளைக் கேட்கும் நபர்கள் அரிது. நல்ல ஆலோசனைகளைக் கொடுக்கக்கூடிய நண்பர்கள் கிடைப்பதும் அரிது. (ஆலோசனை தேவைப்படும்) நண்பன் இருக்கும் இடத்தில் (ஆலோசனை கொடுக்கக்கூடிய) நண்பன் இருப்பதில்லை. ஓ! குரு குல மகனே {துரியோதனா}, நண்பர்களின் வார்த்தைகள் கேட்கப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். பிடிவாதம் தவிர்க்கப்பட வேண்டும்; ஏனெனில், அது தீமைகள் நிறைந்ததாக இருக்கிறது. இது தொடர்பாக, பழங்காலத்தில், தனது பிடிவாதத்தால் அவமானத்தைச் சந்தித்த காலவரின் கதை மேற்கோளாகச் சொல்லப்படுகிறது.

பழங்காலத்தில், தவத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த விஸ்வாமித்ரரைச் சோதிப்பதற்காக, வசிஷ்ட முனிவரின் உருவத்தைத் தாங்கி தர்மனே {தர்ம தேவனான யமனே} அவரிடம் {விஸ்வாமித்திரரிடம்} நேரடியாக வந்தான். ஏழு முனிவர்களில் {சப்தரிஷிகளில்} ஒருவரின் {வசிஷ்டரின்} உருவத்தைத் தரித்த அவன் {தர்மன்}, ஓ! மன்னா {துரியோதனா}, போலியாக, தான் பசித்திருப்பது போலவும், உண்ண விரும்பி தான் வந்திருப்பது போலவும்  கௌசிகரின் {விஸ்வாமித்ரரின்} ஆசிரமத்தை அடைந்தான். இதன்காரணமாக, பரபரப்படைந்த விஸ்வாமித்ரர், {பரமான்னத்தின்} (அரிசியும் பாலும் கலந்து தயாரிக்கப்படும்) சருவைச் சமைக்க ஆரம்பித்தார்.

அந்த அற்புத உணவைத் தயாரிக்கக் கவனம் எடுத்துக் கொண்டதன் விளைவாக, அவரால் தனது விருந்தினருக்குச் {வசிஷ்டரின் உருவத்தில் வந்திருந்த தர்மனுக்குச்} சரியான முறையில் பணிவிடை செய்ய முடியவில்லை. அந்த விருந்தினர் {தர்மன்}, மற்ற தவசிகளால் கொடுக்கப்பட்ட உணவை உண்ட பிறகே, விஸ்வாமித்ரர், தான் சமைத்த ஆவி பறக்கும் உணவுடன் அவனை {தர்மனை} அணுகினார். அந்தப் புனிதமானவனோ {தர்மனோ} "நான் ஏற்கனவே உண்டுவிட்டேன். இங்கேயே காத்திரு" என்றான். இப்படிச் சொன்ன அந்தப் புனிதமானவன் தான் வந்த வழியே சென்றுவிட்டான்.

இதனால், ஓ! மன்னா {துரியோதனா}, ஒப்பற்றவரான அந்த விஸ்வாமித்ரர் அங்கேயே காத்திருந்தார். அந்த உணவைத் தனது தலையில் வைத்து, தன் கரங்களால் அதைத் தாங்கிப் பிடித்தவாறே, காற்றை மட்டுமே உண்டு வந்த அந்தக் கடும் நோன்பு கொண்ட தவசி {விஸ்வாமித்ரர்}, கட்டையைப் போலத் தனது ஆசிரமத்திலேயே நின்றார். அப்படி அவர் {விஸ்வாமித்திரர்} அங்கே நின்று கொண்டிருந்தபோது, மரியாதை, பெரும் மதிப்பு, பாசம் மற்றும் இனியன செய்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட காலவர் என்ற பெயருடைய தவசி, அவருக்கு {விஸ்வாமித்ரருக்குப்} பணிவிடை செய்ய ஆரம்பித்தார்.

இப்படியே நூறு {100} வருடம் கடந்ததும், மீண்டும் வசிஷ்டரின் உருவை ஏற்ற தர்மன், உண்ணும் விருப்பத்துடன் கௌசிகரிடம் {விஸ்வாமித்ரரிடம்} வந்தான். அவ்வளவு நாளும் காற்றை மட்டுமே உண்டு, தலையில் உணவுடன் நின்று கொண்டிருந்தவரும், பெரும் ஞானம் கொண்டப் பெரும் முனிவருமான விஸ்வாமித்ரரைக் கண்ட தர்மன், இன்னும் சூடாகவும், புதியதாகவும் இருந்த அந்த உணவை ஏற்றான். அந்த உணவை உண்ட அந்தத் தேவன் {தர்மன் - விஸ்வாமித்திரரிடம்}, "ஓ! மறுபிறப்பாள முனிவரே {O regenerate rishi}, நான் மனநிறைவு கொண்டேன்" என்று சொல்லிச் சென்றுவிட்டான். தர்மனின் அந்த வார்த்தைகளால், க்ஷத்திரியத் தன்மையை விட்டு நீங்கி, அந்தண நிலையை அடைந்ததன் காரணமாக விஸ்வாமித்ரர் மகிழ்ச்சியில் நிறைந்தார். [1]

[1] விஸ்வாமித்ரர் அந்தண நிலைக்கு உயர்ந்த கதை தனிச்சிறப்புடையதாகும். (குசிகனின் மகனான) க்ஷத்திரிய மன்னன் விஸ்வாமித்ரர், அந்தண முனிவரான வசிஷ்டரிடம் சர்ச்சையில் ஈடுபட்டு, ஒரு கசந்த அனுபவத்தைப் பெற்றார். அந்தண சக்தியின் முன்பு ஆயுதங்களின் அறிவியலால் தாங்கப்பட்ட க்ஷத்திரிய சக்தியும் பலமும் பலனளிக்கவில்லை. தனது தவசக்திகளால் வசிஷ்டர் ஆயிரமாயிரம் துருப்புகளை உண்டாக்கி அந்த க்ஷத்திரிய மன்னனை {விஸ்வாமித்ரரை} வீழ்த்தினார். இப்படிக் கலங்கடிக்கப்பட்ட விஸ்வாமித்ரர், இமயத்திற்குச் சென்று சிவனைத் துதித்தார். அந்தப் பெருந்தேவன் {சிவன்} அங்கே தோன்றினான். விஸ்வாமித்ரர் அவனிடம் {சிவனிடம்} ஆயுதங்களின் முழு அறிவியலில் தனக்குத் திறனேற்பட வேண்டும் என இரந்து கேட்டார். விஸ்வாமித்ரரின் வேண்டுதலுக்கு அந்தத் தேவன் {சிவன்} செவிசாய்த்தான். பிறகு திரும்பி வந்த விஸ்வாமித்ரர், வசிஷ்டரிடம் மோத முயன்றார். ஆனால் வசிஷ்டரோ, தனது தண்டத்தை மட்டுமே கொண்டு விஸ்வாமித்ரரின் கடும் ஆயுதங்கள் அனைத்தையும், ஏன் தெய்வீக ஆயுதங்களைக் கூடக் கலங்கடித்தார். இதனால் தனக்கு ஏற்பட்ட அவமானம் மற்றும் ஏமாற்றத்தால், விஸ்வாமித்ரர் அந்தணராவதில் தனது இதயத்தை நிலைக்க வைத்தார். தனது நாட்டைத் துறந்து, தனது ராணியுடன் காட்டுக்குள் சென்று கடும் தவங்களை இயற்றினார். பத்தாயிரம் {10000} வருடங்கள் கடந்ததும், படைப்பாளனான பிரம்மா அவர் முன் தோன்றி, அவரை அரசமுனி {ராஜரிஷி} என்று அழைதார். இதனால் மனமுடைந்த அவர், மேலும் கடுமையான தவங்களை அர்ப்பணிப்புடன் செய்தார். இறுதியாக, (மேலே குறிப்பிட்ட நிகழ்ச்சியில்) தர்மனின் உத்தரவால் அந்தப் பெரும் க்ஷத்திரிய மன்னன் {விஸ்வாமித்ரர்} அந்தணரானார். இந்து சாத்திரங்களில், தாழ்ந்த வகையைச் சார்ந்த ஒரு மனிதன் கடுந்தவங்களால் அந்தணனாவதாகச் சொல்லப்படும் ஒரே நிகழ்வு இதுவே என்கிறார் கங்குலி.

தனது சீடனான தவசி காலவரின் சேவைகள் மற்றும் அர்ப்பணிப்பால் மகிழ்ந்த விஸ்வாமித்ரர், அவரிடம் {காலவரிடம்}, "ஓ! காலவா, நான் உனக்கு விடைகொடுக்கிறேன். நீ விரும்பிய இடத்திற்குச் செல்" என்றார். இப்படித் தனது ஆசானால் கட்டளையிடப்பட்ட காலவர், மிகவும் மகிழ்ந்து, பெரும் பிரகாசம் கொண்ட விஸ்வாமித்ரரிடம் இனிமையான குரலில், "ஆசானாக இருந்த உமது சேவைக்கு நான் இறுதிக்கொடையாக {தக்ஷிணையாக} என்ன கொடுக்க வேண்டும்? ஓ! மதிப்பை அளிப்பவரே {விஸ்வாமித்ரரே}, இந்த இறுதிக் கொடையின் {தக்ஷிணையின்} விளைவாலேயே ஒரு வேள்விகள் வெற்றியடையும். இது போன்று கொடையளிப்பவன் முக்தியை அடைகிறான். உண்மையில், இந்தக் கொடைகளே (ஒருவன் சொர்க்கத்தில் அனுபவிக்கும்) கனிகளாகும் {பலன்களாகும்}. அமைதி குடிகொண்டவனாக அவன் கருதப்படுவான். எனவே, நான் எனது ஆசானுக்கு என்ன கொண்டு வரவேண்டும்? ஓ, அதைச் சொல்லும்" என்று கேட்டார்.

தனது சேவைகளின் மூலமாகக் காலவர் ஏற்கனவே தன்னை வென்றுவிட்டதாக அறிந்த ஒப்பற்ற விஸ்வாமித்ரர் {காலவரிடம்}, "போ, போ" என மீண்டும் மீண்டும் சொன்னார். ஆனால், விஸ்வாமித்ரரால் தொடர்ச்சியாகச் சொல்லப்பட்டும், காலவர் மீண்டும் அவரிடம், "நான் என்ன கொடுக்கட்டும்" என்று கேட்டார். காலவர் தரப்பில் இருக்கும் பிடிவாதத்தைக் கண்ட விஸ்வாமித்ரர் சற்றே கோபமடைந்து, இறுதியில், "எண்ணூறு {800} குதிரைகளை எனக்குக் கொடு. அவை ஒவ்வொன்றும் சந்திரனின் கதிர்களைப் போல வெண்மையாக இருக்க வேண்டும். மேலும் அவை ஒவ்வொன்றிலும் ஒரு காது கருப்பு நிறத்தில் இருக்க வேண்டும். ஓ! காலவா, தாமதிக்காதே, போ" என்றார் {விஸ்வாமித்திரர்}.


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்