Saturday, May 09, 2015

கிருஷ்ணனின் புறப்பாடு! - உத்யோக பர்வம் பகுதி 83அ

Krishna set out! | Udyoga Parva - Section 83a | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –12)

பதிவின் சுருக்கம் : துரியோதனனுக்கு அறிவுரை கூறி சமாதானத்தை எட்டும்படி கிருஷ்ணனிடம் அர்ஜுனன் சொன்னது; கிருஷ்ணன் அதை ஆமோதித்தது; காலையில் எழுந்து சாத்யகியையும் உடன் அழைத்துக் கொண்டு கிருஷ்ணன் புறப்பட்டது; கிருஷ்ணன் கொண்டிருந்த ஆயுதங்கள், தேர், தேரில் பூட்டப்பட்ட குதிரைகள், அந்தத்தேரில் இருந்தவை ஆகியவற்றின் வர்ணனைகள், கிருஷ்ணன் புறப்பட்ட போது ஏற்பட்ட நல்ல சகுனங்கள் ஆகியவற்றை வைசம்பாயனர் சொன்னது...

அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்} சொன்னான், "ஓ! கேசவா {கிருஷ்ணா}, நீ இப்போது அனைத்து குருக்களுக்கும் {கௌரவர்களுக்கும்} சிறந்த நண்பனாக இருக்கிறாய். இரு தரப்பிடமும் உறவுமுறை கொண்ட நீ, இருவருக்கும் அன்பிற்குரிய நண்பனாகவே இருக்கிறாய். பாண்டவர்களுக்கும் திருதராஷ்டிரர் மகன்களுக்கும் இடையில் சமாதானத்தைக் கொண்டு வருவதே உனக்குத் தகும். ஓ! கேசவா {கிருஷ்ணா}, நீ திறமையானவன், எனவே, சமரசத்தைக் கொண்டு வருவதே உனக்குத் தகும். ஓ! தாமரைக் கண் கொண்டவனே {கிருஷ்ணா}, இங்கிருந்து சமாதானத்துக்காகச் சென்று, ஓ! எதிரிகளைக் கொல்பவனே, எப்போதும் கோபத்துடன் இருக்கும் எங்கள் சகோதரன் சுயோதனனிடம் {துரியோதனனிடம்}, உண்மையில் என்ன சொல்ல வேண்டுமோ அதைச் சொல். அறம் பொருள் ஆகியவை நிறைந்ததும், மங்கலகரமானதும், நன்மை விளைவிக்கக்கூடியதுமான உனது ஆலோசனைகளை மூடனான துரியோதனன் ஏற்கவில்லையெனில், அவன் விதிக்குப் பலியாகப் போகிறவன் ஆவான்" என்றான் {அர்ஜுனன்}.


அதற்கு அந்தப் புனிதமானவன், "நீதிக்கு இசைவானதையும், நமக்கும், குருக்களுக்கும் நன்மையானதையும் சாதிக்க விரும்பியே நான் மன்னன் திருதராஷ்டிரரிடம் செல்கிறேன்" என்றான் {கிருஷ்ணன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "இரவு கடந்து, ஒளிரும் சூரியன் கிழக்கில் உதித்தான். மைத்திரம் என்ற நேரம் {முகூர்த்தம்} நடந்து கொண்டிருந்தது. சூரியனின் கதிர்கள் இன்னும் மென்மையாகவே இருந்தன. அந்த மாதமானது (கௌமுத கார்த்திகை = கார்த்திகை மாதம்} ரேவதி நட்சத்திரத்தின் கீழ் இருந்தது. {கார்த்திகை மாதத்தின் ரேவதி நட்சத்திர நாளில் கிருஷ்ணன் புறப்பட்டான்}. இலையுதிர் காலம் விடுபட்ட பனிக்காலமாகவும் அஃது இருந்தது. பூமியில் சுற்றிலும் அபரிமிதமான பயிர்கள் நிறைந்திருந்தன {விளைந்திருந்தன}. அத்தகு நேரத்தில் தான், வலிமைமிக்க மனிதர்களில் முதன்மையானவனும், அருமையான உடல்நிலையைக் கொண்டவனுமான ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, (தெய்வீக) முனிவர்களின் துதிகளைக் கேட்கும் வாசவனைப் {இந்திரனைப்} போல, மங்கலகரமானதும், புனித ஒலியுடையதுமான அந்தணர்களின் இனிமையான வார்த்தைகளைக் கேட்டு, காலையில் வழக்கமாகச் செய்யும் செயல்களையும் சடங்குகளையும் செய்து, குளித்துத் தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு, தைலங்களாலும், ஆபரணங்களாலும் தன்னை அலங்கரித்துக் கொண்டு சூரியன் அக்னி ஆகிய இருவரையும் வழிபட்டான்.

காளையின் வாலைத் தொட்டு, அந்தணர்களை மரியாதையுடன் வணங்கி, புனித நெருப்பை வலம் வந்து, பார்வையில் பட்ட (வழக்கமான) மங்கலப் பொருட்களில் தனது கண்களைச் செலுத்தி, யுதிஷ்டிரனின் வார்த்தையை நினைத்துப் பார்த்த ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, தன் அருகே அமர்ந்திருந்த சினியின் பேரனான சாத்யகியிடம், "எனது தேர் தயார் செய்யப்படட்டும், எனது சங்கும், கதாயுதத்துடன் கூடிய எனது சக்கரமும், அம்பறாத்தூணிகளும், கணைகளும், தாக்குதலுக்கும், தற்காப்புக்கும் பயன்படும் அனைத்து வகையான ஆயுதங்களும் அதில் {அந்தத் தேரில்} இருக்கட்டும். ஏனெனில், துரியோதனன், கர்ணன் மற்றும் சுபலனின் மகன் {சகுனி} ஆகியோர் தீய ஆன்மா கொண்டவர்களாவர். ஒருவன் வலிமைமிக்கவனாகவே இருந்தாலும், பலத்தில் சிறிய எதிரிகளைக் கூட அவன் அலட்சியப்படுத்தக்கூடாது" என்றான் {கிருஷ்ணன்}.

சக்கரம் மற்றும் காதாயுதத்தைத் தாங்குபவனான கேசவனின் {கிருஷ்ணனின்} விருப்பங்களைப் புரிந்து கொண்ட அவனது பணியாட்கள் {தேருக்கு முன் செல்லும் பரிஜனங்கள்}, அவனது தேரைப் பூட்டச் செய்தனர்.

அண்ட அழிவு நேரத்தில் வெளிப்படும் நெருப்பின் பிரகாசம் கொண்ட அந்தத் தேர் அதே நெருப்பைப் போன்ற வேகமும் கொண்டதாக இருந்தது. அதன் இரண்டு சக்கரங்களும் பிரகாசத்தில் சூரியனையும் சந்திரனையும் ஒத்திருந்தன. பிறை மற்றும் முழு நிலவுகள், மீன்கள், விலங்குகள், பறவைகள் ஆகியவற்றின் ஒப்பனைகளைத் தன்னில் கொண்டு, பல்வேறு வகை மலர்கள், முத்துகள் மற்றும் பல்வேறு வகையான ரத்தினங்களாலான மாலைகளால் அது {அந்தத் தேர்} சுற்றிலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. உதயச் சூரியனின் பிரகாசத்தைக் கொண்டிருந்த அது {தேர்}, பெரியதாகவும் அழகாகவும் இருந்தது. பலவண்ண ரத்தினங்களையும் தங்கத்தையும் கொண்டிருந்த அஃது, அழகிய கொடிகளுடன் கூடிய அற்புதமான கொடிக் கம்பங்களைக் கொண்டிருந்தது. தேவையான அனைத்துப் பொருட்களும் நன்கு வழங்கப்பட்டு, எதிரிகளால் தடுக்க இயலாத வகையில் இருந்த அது, புலித் தோல்களால் மூடப்பட்டிருந்தது. ஒவ்வொரு எதிரியின் புகழையும் கவரவல்லதும், யாதவர்களின் மகிழ்ச்சியை அதிகரிக்கவல்லதுமாக அது {அந்தத் தேர்} இருந்தது. சைப்யம், சுக்ரீவம், மேகபுஷ்பம், வலாஹகம் என்ற பெயர்களைக் கொண்ட அற்புத குதிரைகளை நன்கு குளிப்பாட்டி, அழகிய சேணங்களை அவற்றுக்கு உடுத்தி அந்தத் தேரில் பூட்டினர்.

கிருஷ்ணனின் மதிப்பை மேலும் உயர்த்தும்படி, இறகு கொண்ட பிறவிகளுக்குத் {பறவைகளுக்குத்} தலைவனான கருடன் அங்கே வந்து, பயங்கரச் சடசடப்பொலியை எழுப்பும் அந்தத் தேரின் கொடிக்கம்பத்தில் அமர்ந்தான்.

மேருவின் சிகரம் போன்று உயர்ந்ததும், பேரிகைக் கொண்ட மேகங்களைப் போன்ற ஆழ்ந்த உரத்த சடசடப்பொலியை எழுப்பக்கூடியதும், இயக்குபவரின் விருப்பத்திற்கேற்ப செல்லும் தெய்வீகத் தேரை ஒத்திருப்பதுமான அந்தத் தேரில் சௌரி {கிருஷ்ணன்} ஏறினான். சாத்யகியையும் அதில் உடன் ஏற்றிக் கொண்ட அந்த மனிதர்களில் சிறந்தவன் {கிருஷ்ணன்}, தனது தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலியால் பூமியையும் வானத்தையும் நிறைத்தபடி கிளம்பினான்.

வானம் மேகமற்று இருந்தது, மங்கலகரமான காற்று சுற்றிலும் வீசத் தொடங்கியது, தூசியில் இருந்து விடுபெற்ற சுற்றுச்சூழல் தூய்மையானது. உண்மையில், வாசுதேவன் {கிருஷ்ணன்} அப்படிக் கிளம்பிய போது, மங்கலகரமான விலங்குகளும், பறவைகளும் வலமாகச் சுற்றி அவனைப் {கிருஷ்ணனைப்} பின்தொடர்ந்து சென்றன. கொக்குகள், மயில்கள், அன்னஙகள் ஆகியன நல்ல சகுனங்களைக் கொண்ட ஒலிகளை வெளியிட்டபடியே அந்த மதுவைக் கொன்றவனைத் {மதுசூதனனைத்} தொடர்ந்து சென்றன. மந்திரங்களின் துணையோடு கூடிய ஹோம நீர்க்காணிக்கைகளால் ஊட்டப்பட்ட நெருப்பே கூட, புகையில் இருந்து விடுபட்டு உற்சாகமாகச் சுடர்விட்டு எரிந்து, தனது தழல்களை வலப்புறமாக வெளியிட்டது.

வசிஷ்டர், வாமதேவர், பூரித்யும்னர், கயர், கிரதர், சுக்கிரர், குசிகர், பிருகு மற்றும் பிற பிரம்ம முனிவர்களும் தெய்வீக முனிவர்களும் {நாரதர், வால்மீகர், மருத்தர்} ஒன்றிணைந்து, யாதவர்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்குபவனும், வாசவனுக்கு {இந்திரனுக்கு} இளைய தம்பியுமான கிருஷ்ணனின் வலப்புறமாக நின்றனர். இப்படி அந்த முனிவர்களாலும், ஒப்பற்ற பிற முனிவர்களாலும், புனிதமானவர்களாலும் வழிபடப்பட்ட கிருஷ்ணன், குருக்களின் வசிப்பிடம் நோக்கிக் கிளம்பினான்" என்றார் {வைசம்பாயனர்}.


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்