Monday, May 11, 2015

விதுரனின் அறிவுரை! - உத்யோக பர்வம் பகுதி 87

The advice of Vidura! | Udyoga Parva - Section 87 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –16)

பதிவின் சுருக்கம் : திருதராஷ்டிரனின் நற்பண்புகளை எடுத்துரைத்த விதுரன், தற்போதைய அவனது செயல்பாடுகளுக்காக அவனைக் கடிந்து கொண்டது; கிருஷ்ணனுக்குக் கொடுக்க நினைப்பதெல்லாம் திருதராஷ்டிரனின் அறநோக்கமோ, கிருஷ்ணன் விரும்பியதைக் கொடுப்பதோ அல்ல என்றும், பாண்டவர்களுக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுக்கத் திருதராஷ்டிரன் விரும்பவில்லை என்பதே வெளிப்படை என்றும் விதுரன் சொல்வது; கிருஷ்ணன் சமாதான நோக்கத்துக்கு வருவதால், அவனது அறிவுரைப்படி நடப்பதே நல்ல விருந்தோம்பல் என்று விதுரன் திருதராஷ்டிரனை இடித்துரைப்பது...

விதுரன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! ஏகாதிபதி, ஓ! மனிதர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, மூவுலகத்தாலும் நீர் மதிக்கப்படுகிறீர். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, நீர் அனைவராலும் விரும்பப்பட்டு மதிக்கப்படுகிறீர். முதிர்ந்தவரான நீர் இந்த வயதில் சொல்வது எதுவும் சாத்திர விதிகளுக்கும், நன்கு செலுத்தப்பட்ட அறிவின் முடிவுக்கும் முரணாக இருக்க இயலாது. ஏனெனில் உமது மனம் எப்போதும் அமைதியாகவே இருக்கிறது. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கல்லில் உள்ள எழுத்துகள், சூரியனின் ஒளி, பெருங்கடலின் அலை ஆகியவை போல உம்முள் அறம் நிரந்தரமாகவே வசிக்கிறது.


ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உமது எண்ணிலடங்கா அறங்களின் விளைவாக அனைவரும் மதிக்கப்பட்டு, மகிழ்ச்சியூட்டப்படுகிறார்கள். எனவே, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே} நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் கூடிய நீர் உமது அறங்களைத் தக்கவைத்துக் கொள்ள முயல்வீராக. உமக்கு அன்பான உறவினர்கள், நண்பர்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் உமது மகன்களின் மொத்த அழிவுக்கு மூடத்தனத்தால் நீரே காரணமாகாதீர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, விருந்தினனாக வரும் கேசவனுக்கு {கிருஷ்ணனுக்கு} நீர் அதிகமாகவே கொடுக்க விரும்புகிறீர். எனினும், கேசவன் {கிருஷ்ணன்} இதைவிட எல்லாம் இன்னும் இன்னும் அதிகமாகப் பெறத் தகுந்தவன், ஏன் மொத்த உலகத்தையுமே கூடப் பெறத் தகுந்தவனே.

உண்மையாக எனது ஆத்மாவின் {உயிரின்} மேல் ஆணையாக நான் சொல்கிறேன், இவை யாவையும், அறநோக்கத்தாலோ, அவனுக்கு {கிருஷ்ணனுக்கு} ஏற்புடையதைச் செய்யும் நோக்கத்தாலோ நீர் கிருஷ்ணனுக்குக் கொடுக்கவில்லை. ஓ! பெரும் செல்வத்தைக் கொடுப்பவரே {திருதராஷ்டிரரே}, இவை யாவும் மோசடி, பொய் மற்றும் நேர்மையற்ற {உமது} தன்மையையே காட்டுகிறது. ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, வெளிப்புறச் செயல்களால் {மறைக்கப்பட்ட} உமது கமுக்கமான {இரகசிய} காரியங்களை நான் அறிவேன்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த ஐந்து பாண்டவர்களும் ஐந்து கிராமங்களை மட்டுமே விரும்புகின்றனர். எனினும், நீர் அவற்றைக்கூட அவர்களுக்குக் கொடுக்க விரும்பவில்லை. ஆகவே, நீர் {அவர்களுடனான} சமாதானத்துக்கு உடன்பட விரும்பவில்லை. வலிய கரங்களைக் கொண்ட அந்த விருஷ்ணி குலத்து வீரனை {கிருஷ்ணனை}, உமது செல்வத்தைக் கொண்டு உமதாக்க முயல்கிறீர்; ஆனால் அடியிலோ, இதன் மூலம் பாண்டவர்களிடம் இருந்து கேசவனை {கிருஷ்ணனை} நீர் பிரிக்க முயல்கிறீர்.

எனினும், செல்வத்தாலோ, கவனிப்பாலோ, வழிபாட்டாலோ தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்} இருந்து கிருஷ்ணனை உம்மால் பிரிக்க இயலாது என நான் உமக்குச் சொல்கிறேன். கிருஷ்ணனின் பெருமையை நான் அறிவேன்; அர்ஜுனனிடம் அவன் {கிருஷ்ணன்} கொண்டிருக்கும் உறுதியான அர்ப்பணிப்பை நான் அறிவேன்; கேசவனின் {கிருஷ்ணனின்} உயிரான தனஞ்சயனை {அர்ஜுனனை} கிருஷ்ணனால் விட முடியாது என்பதையும் நான் அறிவேன். நீர்ப்பாத்திரத்தால் தனது காலைக் கழுவுவதைத் தவிர, (வழக்கமான} நலன் விசாரிப்புகளைத் தவிர, ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} வேறு எந்த விருந்தோம்பலையும் ஏற்கவோ, வேறு பொருளின் மீது தனது கண்களை நிலைக்க வைக்கவோ {செலுத்தவோ} மாட்டன்.

எனினும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அனைத்து மரியாதைகளுக்கும் தகுதி வாய்ந்த அந்த ஒப்பற்றவனுக்கு {கிருஷ்ணனுக்கு} மிகவும் ஏற்புடைய விருந்தோம்பலைக் கொடுப்பீராக. ஏனெனில், ஜனார்த்தனனுக்கு {கிருஷ்ணனுக்கு} கொடுக்கக்கூடாத எந்த மரியாதையும் கிடையாது.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இருதரப்புக்கும் நன்மை விளைவிக்கும் நோக்கத்துடன் அவன் {கிருஷ்ணன்} குருக்களிடம் வருகிறான். அவன் எதிர்பார்க்கும் அந்த நோக்கத்துக்கு உகந்தவற்றை அந்தக் கேசவனுக்குக் {கிருஷ்ணனுக்குக்} கொடுப்பீராக. துரியோதனனை ஒருபுறத்திலும், பாண்டவர்களை மறுபுறத்திலும் கொண்டு உங்களுக்குள் சமாதானத்தை நிறுவவே கேசவன் {கிருஷ்ணன்} விரும்புகிறான். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அவனது ஆலோசனைகளைப் பின்பற்றுவீராக. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நீர் அவர்களுக்குத் தந்தையும்; பாண்டவர்கள் உமக்கு மகன்களுமாவர். நீர் முதிர்ந்தவர், அவர்களோ வயதால் உமக்குச் சிறுபிள்ளைகளே. பிள்ளைகளின் மனநிலையில் இருந்து உம்மை மதிக்கும் அவர்களிடம் தந்தையாக நடந்து கொள்ளும்" என்றான் {விதுரன்}.


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்