Tuesday, May 12, 2015

"கிருஷ்ணனைச் சிறைபிடிப்பேன்!" என்ற துரியோதனன் - உத்யோக பர்வம் பகுதி 88

"I will imprison Krishna!" said Duryodhana | Udyoga Parva - Section 88 | Mahabharata In Tamil

(பகவத்யாந பர்வம் –17)

பதிவின் சுருக்கம் : கிருஷ்ணனைக் குறித்து விதுரன் சொன்னது உண்மையே, இருப்பினும் அச்சத்தால் செய்கிறோம் என்று அவன் நினைக்கக்கூடும் என்பதால் கிருஷ்ணனுக்கு எதுவும் கொடுக்கக்கூடாது என்று துரியோதனன் சொன்னது; கிருஷ்ணனை அவமதிக்கக்கூடாதென்றும், பாண்டவர்களுடன் சமாதானம் செய்து கொள்வதே சிறந்தது என்றும் பீஷ்மர் சொல்வது; கிருஷ்ணனை சிறையில் அடைத்து, பாண்டவர்களைப் பணிய வைக்கப் போவதாகத் துரியோதனன் சொன்னது; இதற்காகத் துரியோதனனை நிந்தித்த பீஷ்மர், கோபத்தில் அவையை விட்டு எழுந்து சென்றது...

துரியோதனன் {திருதராஷ்டிரனிடம்}சொன்னான், "உண்மையில் கிருஷ்ணனைக் குறித்து விதுரர் சொன்னது அனைத்தும் உண்மையாகவே சொல்லப்பட்டிருக்கிறது; ஏனெனில் ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} பாண்டவர்களிடம் பெரும் அர்ப்பணிப்பு கொண்டவனாகவும், அவர்களிடம் இருந்து பிரிக்கப்பட முடியாதவனாகவும் இருக்கிறான். ஓ! மன்னர்களில் முதன்மையானவரே {திருதராஷ்டிரரே}, ஜனார்த்தனனுக்கு {கிருஷ்ணனுக்கு} அளிக்கப்பட வேண்டும் என்று முன்மொழியப்பட்ட பல்வேறு வகையான செல்வங்களில் ஒன்றையும் அவனுக்குக் கொடுக்கக்கூடாது. நிச்சயமாக, கேசவன் {கிருஷ்ணன்} நமது வழிபாட்டுக்குத் தகுந்தவனே, ஆனால் காலமும் இடமும் அதற்கு எதிராக இருக்கின்றன. ஏனெனில், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அவன் {கிருஷ்ணன்} நமது வழிபாட்டைப் பெற்றால், அவன் {கிருஷ்ணன்} மீது கொண்ட அச்சத்தின் காரணமாக நாம் அவனை வழிபடுகிறோம் என்று நினைக்க வாய்ப்பிருக்கிறது.


ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அறிவார்ந்த ஒரு க்ஷத்திரியன் தனக்கு அவமானத்தைத் தரக்கூடிய ஒரு காரியத்தைச் செய்யக்கூடாது, என்பதே எனது உறுதியான நம்பிக்கை. மூவுலகங்களிலும் உள்ள மிகுந்த மரியாதைக்குரிய வழிபாட்டுக்கும் தகுந்தவனே நீண்ட கண் கொண்ட கிருஷ்ணன் என்பதை நான் நன்கறிவேன். எனவே, ஓ! ஒப்பற்ற மன்னா {திருதராஷ்டிரரே}, இப்போது நாம் அவனுக்கு எதையும் கொடுப்பதற்கு எந்த இடமும் இல்லை. ஏனெனில் போர் என்பது தீர்மானிக்கப்பட்ட பிறகு, அது விருந்தோம்பலால் தள்ளிப்போகக்கூடாது" என்றான் {துரியோதனன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "அவனது {துரியோதனனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட குருக்களின் பாட்டன் {பீஷ்மர்}, விசித்திரவீரியனின் அரச மகனிடம் {திருதராஷ்டிரனிடம்}, "வழிபடப்பட்டாலோ, வழிபடப்படாவிட்டலோ ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} கோபமடைய மாட்டான். எனினும், யாரும் அவனை அவமதிக்க முடியாது. ஏனெனில, கேசவன் அலட்சியப்படுத்தத்தக்கவன் அல்ல. ஓ! வலிமைவாய்ந்தவனே {திருதராஷ்டிரா}, அவன் {கிருஷ்ணன்} என்ன செய்ய நோக்குகிறானோ, அதை, எவராலும், தனது அதிகாரம் அனைத்தினாலும், எந்த வகையிலும் தடுக்க முடியாது. வலிய கரங்களைக் கொண்ட கிருஷ்ணன் சொல்வதைத் தயங்காமல் செய்வாயாக. வாசுதேவனை {கிருஷ்ணனை} வழியாகக் கொண்டு பாண்டவர்களிடம் சமாதானம் கொள்வாயாக. உண்மையில், அறம் சார்ந்த ஆன்மா கொண்ட ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, அறம் மற்றும் பொருளுக்கு உகந்ததையே சொல்வான். எனவே, உனது நண்பர்கள் அனைவருடனும் கூடிய நீ, அவனுக்கு {கிருஷ்ணனுக்கு} ஏற்புடையதை மட்டும் சொல்வதே உனக்குத் தகும்" என்றார் {பீஷ்மர்}.

துரியோதனன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா {பிதாமஹரே, பீஷ்மரே}, நான் எந்த வகையிலும், இந்த எனது பெருகும் செழிப்பைப் {செழிப்பு நிறைந்த நாட்டைப்} பாண்டவர்களுடன் பகிர்ந்து கொண்டு வாழ முடியாது. உண்மையில், நான் இப்போது எட்டியிருக்கும் இந்தத் தீர்மானம் பெரியதாகும். அதைக் கேளும். பாண்டவர்களுக்குப் புகலிடமாய் இருக்கும் ஜனார்த்தனனை {கிருஷ்ணனை} நான் சிறை பிடிப்பேன். நாளை காலை அவன் {கிருஷ்ணன்} இங்கே வருவான்; அவன் {கிருஷ்ணன்} இங்கு அடைபட்டிருக்கும்போது, விருஷ்ணிகளும், பாண்டவர்களும், ஏன் இந்த முழு உலகமும் எனக்கு அடிபணியும். ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} நமது நோக்கத்தை யூகிக்க முடியாதபடி அதை நிறைவேற்றவும், அதன் காரணமாக நமக்கு எந்த ஆபத்தும் நேராமல் இருக்கவும் உள்ள வழிமுறைகள் என்ன என்பதை எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்" என்றான் {துரியோதனன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "கிருஷ்ணனைச் சிறைபிடிக்கப் போவதாக, தனது மகன் {துரியோதனன்} சொன்ன அச்சம் தரும் வார்த்தைகளைக் கேட்ட திருதராஷ்டிரன், தனது ஆலோசகர்களுடன் சேர்ந்து மிகவும் துன்புற்று ஆழமாகக் காயமடைந்தான். பிறகு மன்னன் திருதராஷ்டிரன் துரியோதனனிடம், "ஓ! மனிதர்களில் ஆள்பவனே {துரியோதனா}, மீண்டும் இதை ஒருபோதும் சொல்லாதே. இது பழங்கால வழக்கமல்ல. ரிஷிகேசன் {கிருஷ்ணன்} இங்கே தூதனாக வருகிறான். அஃது ஒருபுறமிருக்க, அவன் {கிருஷ்ணன்} நமது உறவினனும், நமது அன்புக்குரியவனும் ஆவான். அவன் நமக்கு எந்தத் தவறையும் செய்யவில்லை; பிறகு எப்படி அவன் சிறையிலடைக்கப்படத் தகுந்தவனாவான்?" என்றான் {திருதராஷ்டிரன்}.

பீஷ்மர் {திருதராஷ்டிரனிடம்}, "ஓ! திருதராஷ்டிரா, இந்த உனது தீய மகனுக்கான {துரியோதனனுக்கான} காலம் வந்துவிட்டது. தனது நலன் விரும்பிகளால் வேண்டப்பட்டாலும், நன்மையையல்லாமல் அவன் தீமையையே தேர்ந்தெடுக்கிறான். தன் நலன் விரும்பிகளின் வார்த்தைகளைக் கேட்காமல், முள் நிறைந்த பாதையில் நடந்து பாவச் சூழலைக் கொண்ட இந்த இழிந்த தீயவனையே {துரியோதனனையே} நீயும் தொடர்ந்து பின்பற்றிச் செல்கிறாய். கறைபடியா செயல்களைக் கொண்ட கிருஷ்ணனின் தொடர்பு ஏற்படும்போது {கிருஷ்ணனை துரியோதனன் சந்திக்கும்போது}, தனது ஆலோசகர்களுடன் கூடிய இந்த உனது மிகத் தீய மகன் {துரியோதனன்}, அந்தக் கணத்திலேயே அழிக்கப்படுவான். அறம் அனைத்தையும் கைவிட்டிருக்கும் இழிந்தவனும், தீயவனுமான இந்தப் பாவம் நிறைந்தவனின் {துரியோதனனின்} வார்த்தைகளைக் கேட்கத் துணிய மாட்டேன்" என்றார் {பீஷ்மர்}.

கலங்கடிக்கப்படமுடியா ஆற்றல் கொண்டவரும், பாரதக் குலத்தின் முதிர்ந்த தலைவருமான அந்தப் பீஷ்மர், இதைச் சொல்லிவிட்டு, கோபத்தால் தூண்டப்பட்டு, எழுந்து, அந்த இடத்தைவிட்டு அகன்றார்" என்றார் {வைசம்பாயனர்}.



மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்