Wednesday, December 16, 2015

பகைவரைத் தடுத்த பீமன்! - பீஷ்ம பர்வம் பகுதி - 063

Bhima checked the hostile army! | Bhishma-Parva-Section-063 | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 21)

பதிவின் சுருக்கம் :  பீமனைக் கொல்ல முழுப் படையையும் ஏவிய துரியோதனன்; கடலென விரைந்த கௌரவப்படை; தன் கதாயுதத்தை மட்டுமே கொண்டு அந்தக் கௌரவப்படையைச் சிதறடித்த பீமன்; பீமனை எதிர்த்து விரைந்த பீஷ்மர்; பீஷ்மரைத் தாக்கிய சாத்யகி; சாத்யகியைத் தாக்கிய அலம்புசன்; சாத்யகியுடன் மோத விரும்பி அவனை நோக்கி விரைந்த பூரிஸ்ரவஸ்....

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "அந்த யானைப் படை நிர்மூலமாக்கப்பட்டபோது, உமது மகன் துரியோதனன், பீமசேனனைக் கொல்ல வீரர்களுக்கு உத்தரவிட்டு தனது முழுப் படையையும் ஏவினான். உமது மகனின் {துரியோதனனின்} கட்டளையின் பேரில் அந்த மொத்தப்படையும், கடும் முழக்கங்களிட்டுக் கொண்டிருந்த பீமசேனனை நோக்கி விரைந்தது.

தேவர்களே தாங்கிக் கொள்ளக் கடினமானதும், பரந்திருப்பதும், வரம்பற்றதுமான அந்தப் படை, முழு நிலவு {பௌர்ணமி}, புது நிலவு {அமாவாசை} ஆகிய நாட்களில், கடக்க முடியாததாக பொங்கி வரும் கடலைப் போல, தேர்கள், யானைகள், குதிரைகள் நிறைந்ததும், சங்கொலிகள் மற்றும் துந்துபி ஒலிகள் நிறைந்ததும், சொல்ல முடியாத எண்ணிக்கையிலான காலாட்படை வீரர்கள் மற்றும் தேர்வீரர்களைக் கொண்டதும், (எழுந்த) புழுதியால் மறைக்கப்பட்டதும், கலங்கடிக்கப்பட முடியாததுமான எதிரித் துருப்புகள், பீமசேனனை நோக்கி இப்படி வந்த போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவன் {பீமன்} பெருங்கடலைத் தடுக்கும் கரையைப் போல அந்தப் படையைப் தடுத்தான்.


அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பாண்டுவின் உயர் ஆன்ம மகன் பீமசேனன் செய்தவையும் நாங்கள் கண்டவையுமான அந்தச் செயல்கள் மிக அற்புதமானதாகவும், மனித சக்திக்கு அப்பாற்பட்டதாகவும் இருந்தன. குதிரைகள், தேர்கள், யானைகள் ஆகியவற்றுடன் தன்னை நோக்கி வந்த அந்த மன்னர்கள் அனைவரையும் தன் கதாயுதத்தைக் கொண்டே அச்சமற்ற வகையில் அவன் {பீமன்} தடுத்தான். தன் கதாயுதத்தைக் கொண்டு அந்தப் பெரும்படையைத் தடுத்தவனும், வலிமைமிக்க மனிதர்களில் முதன்மையானவனுமான பீமன், அந்தக் கடும்போரில் அசையாத மேரு மலையைப் போல நின்றான்.

அச்சம் நிறைந்ததும், கடுமையானதும், பயங்கரமானதுமான அந்த மோதலில், அவனது சகோதரர்கள், மகன்கள், பிருஷத குலத்தின் திருஷ்டத்யும்னன், திரௌபதியின் மகன்கள், அபிமன்யு, வீழ்த்தப்பட முடியாதவனான சிகண்டி ஆகிய வலிமைமிக்க வீரர்கள் அச்சந்தரும் அவ்வேளையிலும் அவனை {பீமனைக்} கைவிடவில்லை. கூர்மையானதும், உருக்கினால் செய்யப்பட்டதும், கனமானதுமான பெரும் கதாயுதத்தைக் கையில் எடுத்த அவன் {பீமன்}, தண்டாயுதத்தைக் கையில் கொண்ட அந்தகனைப் போல உமது வீரர்கள் நோக்கி விரைந்தான். தேர்க்கூட்டங்களையும், குதிரைவீரர்களின் கூட்டங்களையும் பூமியில் நசுக்கியபடி, யுக முடிவின் நெருப்பு போலப் பீமன் களத்தில் திரிந்து கொண்டிருந்தான்.

எல்லையில்லா ஆற்றல் கொண்ட அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, தனது தொடைகளின் வேகத்தால் தேர்க்கூட்டங்களை நசுக்கியபடியும், போரில் உமது வீரர்களைக் கொன்றபடியும், யுக முடிவின் அந்தகனைப் போல அங்கே திரிந்து கொண்டிருந்தான். காட்டு மரங்களை நடுக்கும் ஒரு யானைப் போல, அவன் {பீமன்} உமது துருப்புகளை மிக எளிதாகக் கலங்கடிக்கத் தொடங்கினான்.

காற்றானது தன் சக்தியால் மரங்களை நசுக்குவதைப் போலத் தேர்வீரர்களைத் தங்கள் தேரில் இருந்தும், குதிரைகளின் முதுகில் இருந்த வீரர்களை அவற்றிலிருந்தும் இழுத்துப் போட்டு, தரையில் இருந்து போரிடும் காலாட் படை வீரர்களைத் தன் கதாயுதத்தைக் கொண்டும் அவர்கள் அனைவரையும் கொன்றான். யானைகளையும், குதிரைகளையும் கொன்ற அவனது {பீமனின்} கதாயுதம், கொழுப்பாலும், மஜ்ஜையாலும், சதையாலும், இரத்தத்தாலும் பூசப்பட்டுக் காண மிகப் பயங்கரமாக இருந்தது. கொல்லப்பட்ட மனித உடல்கள், சிதறிக் கிடக்கும் குதிரைப்படை என அந்தப் போர்க்களம் யமனின் வசிப்பிடத்தைப் போன்று தெரிந்தது.

பயங்கரமானதும், படுகொலை செய்வதுமான பீமசேனனின் கதாயுதம், கோபத்துடன் உயிரினங்களை அழிக்கும் ருத்திரனின் {சிவனின்} பிநாகம் போன்றும், காலனின் {யமனின்} கடுங்கோலைப் போன்றும், இந்திரனின் வஜ்ராயுதம் போன்ற பிரகாசத்துடனும் இருந்தது. உண்மையில், சுற்றிலும் அனைவரையும் கொன்று கொண்டிருந்த குந்தியின் உயர்ஆன்ம மகனுடைய {பீமனுடைய} கதாயுதம், அண்ட அழிவின் போது அந்தகனிடம் உள்ள தண்டாயுதம் போன்றே கடும்பிரகாசம் கொண்டதாக இருந்தது.

இப்படித் தொடர்ந்து அந்தப் பெரும்படையை முறியடித்துக் கொண்டு, காலனைப் போன்றே முன்னேறி வந்த அவனை {பீமனைக்} கண்ட வீரர்கள் அனைவரும் உற்சாகத்தை இழந்தனர். கதாயுதத்தை உயர்த்திய படி அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்} எங்கெல்லாம் பார்த்தானோ, அங்கெல்லாம் அவனது பார்வையின் விளைவால் மட்டுமே, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, துருப்புகள் அனைத்தும் உருகி ஓடுவதாகத் தெரிந்தது.

பயங்கரச் செயல்புரியும் விருகோதரன் {பீமன்}, இப்படி {தங்கள்} படையை முறியடிப்பதையும், இவ்வளவு பெரிய படையைக் கொண்டும் அவன் {பீமன்} வீழ்த்தப்பட முடியாதவனாக இருப்பதையும், அகல விரித்த வாயைக் கொண்டு பகையணியை விழுங்கும் அந்தகனைப் போல படையை அழிப்பதையும் கண்ட பீஷ்மர், சூரியப் பிரகாசம் கொண்ட தனது தேரில், மேகங்களைப் போல உரத்த சடசடப்பொலியைக் கிளப்பிக் கொண்டு, மழை நிறைந்த ஆவிக் கூடாரம் {மேகம்} போல (வானத்தை மறைத்தபடி) கணைமாரியைப் பொழிந்து கொண்டு அவனை {பீமனை} நோக்கி விரைந்து வந்தார்.

வாயை அகல விரித்த அந்தகனைப் போலத் தன்னை நோக்கி விரைந்து வரும் பீஷ்மரைக் கண்டவனும், வலிய கரங்களைக் கொண்டவனுமான பீமசேனன், கோபம் தூண்டப்பட்டு அவரை {பீஷ்மரை} நோக்கி விரைந்தான். அந்த நேரத்தில், சிநி குலத்து வீரர்களில் முதன்மையானவனும், இலக்கில் துல்லியம் கொண்டவனுமான சாத்யகி, (வரும் வழியெங்கும்) தனது உறுதியான வில்லால் எதிரிகளைக் கொன்றபடியும், உமது மகனின் {துரியோதனனின்} படையை நடுங்கச் செய்தபடியும் பாட்டன் {பீஷ்மர்} மீது விழுந்தான். அழகிய சிறகுகள் படைத்த தன் கூரிய கணைகளைச் சிதறடித்தப்படி, தனது வெள்ளி நிறக் குதிரைகளோடு இப்படி முன்னேறும் அந்த வீரனை {சாத்யகியை} உமது வீரர்களால் தடுக்க இயலவில்லை.

அந்நேரத்தில் ராட்சசன் அலம்புசன் மட்டுமே அவனை {சாத்யகியைப்} பத்து கணைகளால் துளைத்தான். ஆனால் பதிலுக்கு அலம்புசனை நான்கு கணைகளால் துளைத்த சிநியின் பேரன் {சாத்யகி}, தொடர்ந்து தனது தேரில் முன்னேறிச் சென்றான். இப்படித் தன் எதிரிகளுக்கு மத்தியில் முன்னேறி விரைந்து செல்லும் அந்த விருஷ்ணி குல வீரனைக் {சாத்யகியைக்} கண்ட குரு வீரர்களில் முதன்மையானோர் அவனை {சாத்யகியைத்} தடுக்க முயன்றனர். அந்தப் போரில் தொடர்ந்து உரக்க முழக்கமிட்ட உமது வீரர்கள், மலையின் சாரலில் வெள்ளமாகப் பொழியும் மேகங்களின் திரள்களைப் போல அவன் {சாத்யகி} மீது தங்கள் கணைமாரியைப் பொழிந்தனர். எனினும், நன்கு பிரகாசிக்கும் நாளின் மதிய வேளை சூரியனைப் போல இருந்த அந்த வீரனின் {சாத்யகியின்} முன்னேற்றத்தைத் தடுக்க முடியாதவர்களாகவே அவர்கள் இருந்தார்கள்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் படையில் சோமதத்தன் மகனைத் {பூரிஸ்ரவசைத்} தவிர வேறு ஒருவனும் உற்சாகத்துடன் இல்லை. தன் தரப்பின் தேர்வீரர்கள் துரத்தப்படுவதைக் கண்ட சோமதத்தனின் மகனான பூரிஸ்ரவஸ், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கடும் வேகம் கொண்ட தனது வில்லை எடுத்துக் கொண்டு சாத்யகியுடன் போரிடும் விருப்பத்தால் அவனை {சாத்யகியை} எதிர்த்து விரைந்தான்" {என்றான் சஞ்சயன்}.



ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்