Wednesday, December 16, 2015

திருதராஷ்டிரன் மகன்கள் எட்டு பேரைக் கொன்ற பீமன்! - பீஷ்ம பர்வம் பகுதி - 064அ

Bhima killed eight sons of Dhritarashtra! | Bhishma-Parva-Section-064 | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 22)

பதிவின் சுருக்கம் : சாத்யகிக்கும், பூரிஸ்ரவசுக்கும் இடையில் நடந்த மோதல்; துரியோதனன்  தலைமையிலான திருதராஷ்டிர மகன்களுடன் பீமன் செய்த போர்; திருதராஷ்டிரன் மகன்கள் எண்மரைக் கொன்ற பீமன்; பீஷ்மரின்  கட்டளை ....

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெருங்கோபத்தால் தூண்டப்பட்ட பூரிஸ்ரவஸ், பெரும் யானையை அங்குசத்தால் துளைக்கும் யானைப்பாகனைப் போல, சாத்யகியை ஒன்பது கணைகளால் துளைத்தான். அளவிலா ஆன்மா கொண்டவனான சாத்யகியும், அனைத்துத் துருப்புகளின் பார்வையிலேயே, அந்தக் கௌரவ வீரனை {பூரிஸ்ரவசை} ஒன்பது கணைகளால் துளைத்தான். அப்போது, மன்னன் துரியோதனன், இப்படிப் போராடிக் கொண்டிருந்த சோமதத்தன் மகனைச் {பூரிஸ்ரவசைத்} தனது தம்பிகளுடன் சேர்ந்து சூழ்ந்து கொண்டான். அதே போலப் பெரும் சக்தி வாய்ந்த பாண்டவர்களும், விரைந்து சாத்யகியைச் சூழ்ந்து கொண்டு தங்கள் நிலைகளை அவனைச் {சாத்யகியைச்} சுற்றி அமைத்துக் கொண்டனர்.


கோபம் தூண்டப்பட்டவனும், உயர்த்திய கதாயுதத்துடன் கூடியவனுமான பீமசேனன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, துரியோதனன் தலைமையிலான உமது மகன்கள் அனைவருடனும் மோதினான். பல்லாயிரம் தேர்களுடையவனும், கோபமும், பொறாமையும் கொண்டவனுமான உமது மகன் நந்தகன், கல்லில் கூர்தீட்டப்பட்டுக் கூர் முனைகளைக் கொண்டிருந்தவையும், கங்கப் பறவையின் {கழுகின்} இறகுகளைச் சிறகுகளாகக் கொண்டவையுமான {ஆறு} கணைகளால் பெரும் பலம் வாய்ந்த பீமசேனனைத் தாக்கினான்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பிறகு, அந்தப் போரில் சினம் தூண்டப்பட்ட துரியோதனன்,  ஒன்பது {9} கணைகளால் பீமசேனனை மார்பில் அடித்தான். அப்போது, வலிய கரங்களையும், பெரும் பலத்தையும் கொண்டவனான பீமன் தனது அற்புதத் தேரில் ஏறி (தனது தேரோட்டியான) விசோகனிடம், "துணிவுமிக்கவர்களும், வலிமையானவர்களும், பெரும் தேர் வீரர்களுமான அந்தத் திருதராஷ்டிர மகன்கள் அனைவரும் என் மீது பெருங்கோபம் கொண்டு, என்னைப் போரில் கொல்ல விரும்புகின்றனர். இவர்கள் அனைவரையும் நான் உன் பார்வைக்கு எதிராகவே கொல்வேன் என்பதில் ஐயமில்லை. எனவே, ஓ! தேரோட்டி {விசோகா}, என் குதிரைகளைக் கவனத்துடன் வழிநடத்துவாயாக" என்றான். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, இதைச் சொன்ன அந்தப் பிருதையின் மகன் {குந்தியின் மகன் பீமன்}, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கூர்முனைக் கணைகளால் உமது மகனைத் {துரியோதனனைத்} துளைத்தான்.

மேலும் அவன் {பீமன்}, மூன்று கணைகளால் நந்தகனை நடு மார்பில் துளைத்தான். அப்போது ஆறு கணைகளால் வலிமைமிக்கப் பீமனைத் துளைத்த துரியோதனன், வேறு மூன்று கூரிய கணைகளால் விசோகனைத் துளைத்தான். மேலும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரியோதனன் நகைத்துக் கொண்டே வேறு மூன்று கூரிய கணைகளால் {பல்லங்களால்} பீமனின் பிரகாசமிக்க வில்லை அதன் கைப்பிடியருகே வெட்டினான்.

மனிதர்களில் காளையான அந்தப் பீமன், அம்மோதலில், வில்தரித்த உமது மகனின் {துரியோதனனின்} கூரிய கணைகளால் தனது தேரோட்டியான விசோகன் பீடிக்கப்பட்டதைக் கண்டு, தாங்கிக் கொள்ள முடியாமல், கோபத்தால் தூண்டப்பட்டு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உமது மகனின் அழிவுக்காக மற்றொரு அற்புத வில்லை எடுத்தான். பெரும் கோபத்தால் தூண்டப்பட்ட அவன் {பீமன்} அற்புதச் சிறகுகளைப் படைத்த க்ஷுரப்ரம் {குதிரை லாடம் போன்ற தலை கொண்ட அம்பு} ஒன்றை எடுத்தான். அதைக் கொண்டு மன்னனின் {துரியோதனனின்} அற்புத வில்லை அறுத்தான் பீமன்.

பிறகு, அதிகபட்ச கோபத்தால் தூண்டப்பட்ட உமது மகன் {துரியோதனன்}, அந்த முறிந்த வில்லை ஒரு புறமாக வீசி, மற்றொரு கடினமான வில்லை விரைவாக எடுத்தான். மரணக் கோலைப் {காலமிருத்யுவைப்} போலச் சுடர்விட்ட அந்தப் பயங்கரக் கணையைக் குறிபார்த்த அந்தக் குரு மன்னன் {துரியோதனன்}, கோபத்தால் தூண்டப்பட்டு, பீமசேனனை நடு மார்பில் அடித்தான். அதனால் ஆழமாகத் துளைக்கப்பட்டு, பெரும் வலியை உணர்ந்த அவன் {பீமன்}, தனது தேரின் தட்டில் அமர்ந்தான். அப்படித் தனது தேர்த்தட்டில் அமர்ந்த அவன் {பீமன்} அப்படியே மயக்கமடைந்தான்.

அபிமன்யுவின் தலைமையில் இருந்த ஒப்பற்றவர்களும், பாண்டவப் படையின் வலிமைமிக்கத் தேர்வீரர்களும் பீமன் இப்படித் துன்புறுவதைக் கண்டு, அதைத் தாங்கிக் கொள்ள முடியாதவர்களானார்கள். பெரும் உறுதி கொண்ட அந்த வீரர்கள், உமது மகன் {துரியோதனன்} முடியின் மீது கடும் கணைகளை மழையாகப் பொழிந்தனர். அப்போது, தனது சுயநினைவை அடைந்தவனான வலிமைமிக்கப் பீமசேனன் முதலில் மூன்று [1] கணைகளாலும், பிறகு ஐந்து கணைகளாலும் துரியோதனனைத் துளைத்தான். மீண்டும், வலிமைமிக்க வில்லாளியான அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, தங்கச்சிறகுகளைக் கொண்ட இருபத்தைந்து {25} கணைகளால் சல்லியனைத் துளைத்தான். இப்படித் துளைக்கப்பட்ட சல்லியன் களத்திற்கு வெளியே கொண்டு செல்லப்பட்டான்.

[1] pierced Duryodhana at first with those shafts and then with five. என்று கங்குலி சொல்கிறார். இங்கு those என்று சொல்லி இருப்பது three என்று இருக்க வேண்டும். பிற பதிப்புகளில் மூன்றும், ஐந்தும் என்றே சொல்லப்பட்டுள்ளது. அதனால் நாமும் அதை அச்சுப்பிழையையாகக் கருதி மூன்று என்றே ஏற்கிறோம்.

பிறகு, சேனாபதி, சுஷேணன், ஜலசந்தன் [2], சுலோசனன், உக்ரன், பீமரதன், பீமன், வீரபாகு, அலோலுபன், துர்முகன், துஷ்ப்ரதர்ஷன், விவித்சு, விகடன், சமன் என்கிற உமது பதினான்கு {14} மகன்கள் அந்தப் போரில் பீமசேனனுடன் மோதினார்கள். கண்கள் சிவக்க ஒன்று சேர்ந்து பீமசேனனுக்கு எதிராக விரைந்த அவர்கள் எண்ணற்ற கணைகளைப் பொழிந்து, அவனை {பீமனை} ஆழமாகத் துளைத்தனர். அப்போது, பலம்வாய்ந்த கரங்களைக் கொண்டவனும், வீரனுமான வலிமைமிக்கப் பீமசேனன், உமது மகன்களைக் கண்டு, சிறு விலங்குகளுக்கு மத்தியில் உள்ள ஓநாயைப் போல [3] கடைவாயை நக்கிக் கொண்டு, கருடனைப் போல அவர்கள் மீது மூர்க்கமாக விழுந்தான்.

[2] இங்கு கொல்லப்படுவது, திருதராஷ்டிரன் மகனும், துரியோதனனின் தம்பியுமான ஜலசந்தன் ஆவான். இனி வரும் பகுதிகளில் குறிப்பிடப்படும் ஜலசந்தன் வேறொருவனாவான். அவன் {மற்றொரு ஜலசந்தன்} துரோண பர்வம் பகுதி 114ல் சாத்யகியால் கொல்லப்படுகிறான். அவன் பூரு குலத்தவன் என்றும் குரு வீரன் என்றும் துரோணபர்வம், கர்ண பர்வம் மற்றும் சல்லிய பர்வங்களில் நினைவுகூரப்படுகிறான்.

[3] இதே இடத்தில் வேறொரு பதிப்பில் பசுக்களுக்கு மத்தியில் செந்நாய்ப் பாய்வது போல என்ற உவமை சொல்லப்படுகிறது.

பிறகு, அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, க்ஷுரப்ரம் {குதிரை லாடம் போன்ற தலை கொண்ட கணை} ஒன்றினால் சேனாதிபதியின் தலையைக் கொய்தான்.

பிறகு, மகிழ்ச்சி நிறைந்த ஆன்மாவுடன் இருந்த அந்த வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட வீரன் {பீமன்}, சிரித்துக் கொண்டே மூன்று கணைகளால் ஜலசந்தனைத் துளைத்து அவனை {ஜலசந்தனை} யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பி வைத்தான்.

அடுத்ததாகச் சுஷேணனை அடித்த அவன் {பீமன்}, அவனை {சுஷேணனைக்} காலனின் {மிருத்யுவின்} முன்னிலைக்கு அனுப்பி வைத்தான்.

பிறகு, நிலவைப் போன்று அழகானதும், தலைப்பாகையுடன் கூடியதும், காதுகுண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டதுமான உக்கிரனின் தலையை ஒரு பல்லத்தினால் பூமியில் விழச் செய்தான்.

மேலும் அந்தப்போரில் பாண்டுவின் மகன் பீமன், எழுபது {70} கணைகளால், குதிரைகளோடும், கொடிமரத்தோடும், தேரோட்டியோடும் கூடிய வீரபாகுவைப் அடுத்த உலகத்திற்கு அனுப்பிவைத்தான்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சிரித்தபடியே இருந்த பீமசேனன், உமது மகன்களான பீமன் மற்றும் பீமரதன் ஆகிய இரு சகோதரர்களும் யமனின் வசிப்பிடத்தை அடையும்படி செய்தான்.

பிறகு அந்தப் பெரும்போரில், துருப்புகள் அனைத்தும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஒரு க்ஷுரப்ரத்தால் சுலோசனனையும் மரணவாசலுக்கு அனுப்பி வைத்தான்.

ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, எஞ்சி இருந்த உமது மகன்கள் அனைவரும் அந்த ஒப்பற்ற வீரனால் {பீமனால்} தாக்கப்படும்போது, அந்தப் பீமசேனனின் ஆற்றலைக் கண்டும், அவன் {பீமன்} மீது கொண்ட அச்சத்தால் பீடிக்கப்பட்டும் போர்க்களத்தை விட்டு ஓடினார்கள்.

பிறகு, நோக்கிய சந்தனுவின் மகன் (பீஷ்மர்), (தனது படையின்) பெரும் தேர்வீரர்கள் அனைவரிடமும், "போரில் கோபத்தால் தூண்டப்பட்டவனும், கடுமையான வில்லாளியுமான அந்தப் பீமன், திருதராஷ்டிரனின் வலிமைமிக்க மகன்களையும், ஒன்றுசேர்ந்திருக்கும் வீரர்களான பிற தேர்வீரர்களையும் அவர்கள் என்ன ஆயுத அறிவைப் பெற்றிருந்தாலும், என்ன வீரத்தைக் கொண்டிருந்தாலும் கொல்கிறான். எனவே, நீங்கள் அனைவரும் அவனை {பீமனைப்} பிடிப்பீர்களாக" என்றார்.

இப்படிச் சொல்லப்பட்ட திருதராஷ்டிரப் படையின் துருப்புகள் அனைத்தும், கோபத்தால் தூண்டப்பட்டு, பெரும் வலிமைமிக்கப் பீமசேனனை நோக்கி விரைந்தன" {என்றான் சஞ்சயன்}.
_________________________________________________________________________________
துரியோதனாதிபதிகள் 100 பேரின் பெயர் பட்டியல்:

http://mahabharatham.arasan.info/2013/06/Mahabharatha-Adiparva-Section117.html


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "ஓ! மன்னா {ஜனமேஜயா}, பிறப்பின் வரிசையில் அவர்களது பெயர்கள்,
{1} துரியோதனன், {2} யுயுத்சு, {3} துட்சாசனன், {4}துட்சகன், {5} துட்சலன், {6} ஜலசந்தன், {7} சமன், {8} சகன், {9} விந்தன், {10} அனுவிந்தன், {11} துர்த்தர்ஷன், {12} சுபாகு, {13} துஷ்பிரதர்ஷனன், {14} துர்மர்ஷனன், {15} துர்முகன், {16} துஷ்கர்ணன், {17} கர்ணன் {குந்தியின் மகனல்ல}, {18} விவிம்சதி, {19} விகர்ணன், {20} சலன், {21} சத்வன், {22} சுலோச்சனன், {23}  சித்ரன், {24} உபசித்ரன், {25} சித்ராக்ஷன், {26} சாருசித்திரன், {27} சரசனன், {28} துர்மதன், {29} துர்விகஹன், {30} விவித்சு, {31} விகாடனானன், {32} ஊர்ணனாபன், {33} சுநாபன், {34} நந்தகன், {35} உபநந்தகன், {36} சித்ரபாணன், {37} சித்திரவர்மன், {38} சுவர்மன், {39} துர்விமோசனன், {40} அயோவாகு, {41} மஹாபாகு, {42} சித்திராங்கன், {43} சித்திரகுண்டாலன், {44} பீமவேகன், {45} பீமவளன், {46} பாலகி, {47} பாலவர்தனன், {48} உக்கிராயுதன், {49} பீமன் {குந்தியின் பீமன் அல்ல}, {50} கர்ணன் (2), {51} கனகயன், {52} திரிதாயுதன், {53} திரிதவர்மன், {54} திரிதாக்ஷத்ரன், {55} சோமகீத்ரி, {56} அனுதரன், {57} திரிதசந்தன், {58} ஜராசந்தன், {59} சத்யசந்தன், {60} சதன், {61} சுவகன், {62} உக்ரசிரவஸ், {63} உக்ரசேனன், {64} சேனானி, {65} துஷ்பாராஜெயா, {66} அபராஜிதன், {67} குண்டசாயின், {68} விசாலாக்ஷன், {69} துரதரன், {70} திரிதஹஸ்தன், {71} சுஹஸ்தன், {72} வாதவேகன், {73} சுவரசன், {74} அதியகேது, {75} வாவஷின், {76} நாகதத்தன், {77} அக்ரயாயின், {78} கவாசின், {79} கிராதனன், {80} குந்தன், {81} குந்தாதரன், {82} தனுர்தரன், வீரர்களான {83} உக்கிரன், {84} பீமரதன், {85} வீரபாகு, {86} அலோலூபன், {87} அபயன், {88} ரௌத்திரகர்மன், {89} திரிதரதன், {90} அனதிரிஷ்யா, {91} குந்தபேதின், {92} விரவி, {93} திரிகலோசன பிரமாதா, {94} பிரமாதி, {95} பலம் வாய்ந்த தீர்க்கரோமன், {96} தீர்க்கவாகு, {97} மஹாவாகு, {98} வியுதோரு, {99} கனகத்வஜன், {100} குந்தாசி, {101} விரஜசன் - See more at: http://mahabharatham.arasan.info/2013/06/Mahabharatha-Adiparva-Section117.html


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்