Friday, December 18, 2015

திருதராஷ்டிரனின் கேள்வி! - பீஷ்ம பர்வம் பகுதி - 065அ

The questions of Dhritarashtra! | Bhishma-Parva-Section-065a | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 23)

பதிவின் சுருக்கம் : தொடர்ந்து பாண்டவர்கள் வெல்வதற்கும், தன் மகன்கள் தோற்பதற்கும் உண்மையான காரணம் என்ன என்று திருதராஷ்டிரன் சஞ்சயனைக் கேட்பது; காரணங்களைச் சொல்லும் சஞ்சயன்; அதே கேள்வியைப் பீஷ்மரிடம் கேட்கும் துரியோதனன்; பீஷ்மரின் அறிவுரை....

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "தேவர்களும் அடைய முடியாதவையான பாண்டு மகன்களின் இந்த அருஞ்செயல்களைக் கேட்டு, ஓ! சஞ்சயா, எனது இதயம் அச்சத்தாலும், வியப்பாலும் நிறைகிறது. அனைத்து வகையிலும் என் மகன்கள் பட்ட அவமானத்தைக் கேட்டு, அவற்றைத் தொடர்ந்து வரப்போகும் விளைவைக் குறித்த கவலை எனக்கு அதிகமாகிறது. விதுரன் உதிர்த்த வார்த்தைகள் என் இதயத்தை எரிக்கிறது என்பதில் ஐயமில்லை. ஓ! சஞ்சயா, நடந்தது அனைத்தும் விதியால் நடந்ததாகவே தெரிகிறது.


பாண்டவப் படையின் போராளிகள், பீஷ்மரைத் தலைமையாகக் கொண்டவர்களும், சிறப்பானவர்களும், அனைத்து ஆயுதங்களையும் அறிந்தவர்களுமான வீரர்களுடன் {கௌரவப் படையுடன்} மோதி அவர்ளைத் தாக்குகின்றார்களே. ஓ! மகனே {சஞ்சயா}, உயர் ஆன்மா கொண்டவர்களான பாண்டுவின் வலிமைமிக்க மகன்களால் என்ன ஆன்ம நோன்புகள் நோற்கப்பட்டன? என்ன வரத்தை அவர்கள் அடைந்தார்கள்? அல்லது, எந்த அறிவியலை அறிந்ததன் விளைவாக அவர்கள் ஆகாயத்தில் இருக்கும் நட்சத்திரங்களைப் போல் அழிவடையால் இருக்கின்றனர்? பாண்டவர்களால் எனது படை தொடர்ந்து படுகொலை செய்யப்படுவதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மிகக் கடுமையான தெய்வீகத் தண்டனை என் மீது மட்டுமே விழுகிறதே.

பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்} கொல்லப்படாதவர்களாகவும், எனது மகன்கள் {கௌரவர்கள்} கொல்லத்தக்கவர்களாகவும் இருப்பது ஏன் என்பது குறித்த உண்மைகள் அனைத்தையும் எனக்கு முழுமையாகச் சொல்வாயாக. இந்தத் துயரின் (துயரக்கடலின்) மறுகரையை நான் காணவில்லை. ஆழமான பரந்த கடலைத் தன் இரு கரங்களை மட்டுமே கொண்டு கடக்க விரும்பும் மனிதனைப் போல நான் இருக்கிறேன்.

என் மகன்களைப் பேரிடர் ஒன்று பீடித்திருக்கிறது என்று நிச்சயமாக நான் நினைக்கிறேன். என் மகன்கள் அனைவரையும் பீமன் கொல்வான் என்பதில் ஐயமில்லை. போரில் என் மகன்களைக் காக்கக்கூடிய ஒரு வீரனை என்னால் காண இயலவில்லை. ஓ! சஞ்சயா, இந்தப் போரில் என் மகன்கள் இறக்கப்போவது உறுதி. எனவே, ஓ! சூதா {சஞ்சயா}, உன்னைக் கேட்கும் எனக்கு, அனைத்தின் உண்மைக் காரணங்களையும் சொல்வதே உனக்குத் தகும்.

தனது துருப்புகள் புறம்காட்டி ஓடுவதைக் கண்டு துரியோதனன் என்ன செய்தான்? முதிர்ந்த பீஷ்மர், துரோணர், கிருபர், சுபலனின் மகன் {சகுனி}, ஜெயத்ரதன், வலிமைமிக்க வில்லாளியான துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, பெரும் பலம் கொண்ட விகர்ணன் ஆகியோர் என்ன செய்தனர்? ஓ! பெரும் அறிவைக் கொண்டவனே {சஞ்சயா}, போரில் எனது மகன்கள் புறமுதுக்கிட்ட போது, அந்த உயர் ஆன்ம வீரர்கள் என்ன தீர்மானித்தனர்?" என்று கேட்டான் {திருதராஷ்டிரன்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கவனமாகக் கேளும். கேட்ட பிறகு, அவற்றை உமது இதயத்தில் நிலைநிறுத்திக் கொள்ளும். (இஃது) எந்த மந்திரத்தின் விளைவும் இல்லை. எவ்வகை மாயையின் விளைவும் இல்லை. பாண்டுவின் மகன்கள் புதிதாக எந்தப் பயங்கரத்தையும் {அச்சத்தையும்} ஏற்படுத்தவில்லை. அவர்கள் வலிமையுடன் இருக்கிறார்கள்; இந்தப் போரில் அவர்கள் நியாயமான வழிகளிலேயே போரிடுகின்றனர்.

உயர்ந்த புகழை விரும்பும் அந்தப் பிருதையின் {குந்தியின்} மகன்கள் {பாண்டவர்கள்}, தங்கள் வாழ்வைத் தாங்கிக் கொள்வதையும் {உயிர்வாழ்வதற்குத் தேவையான செயல்களையும்} சேர்த்து, அனைத்துச் செயல்களையும் அறநெறிகளுக்கு ஏற்ற வழியிலேயே செய்கின்றனர். அனைத்து வகையான செழிப்பையும், பெரும் பலத்தையும் கொண்டிருக்கும் அவர்கள், நேர்மையில் தங்கள் கண்களை வைத்துக் கொண்டே, போரில் இருந்து விலகாமல் இருக்கிறார்கள்.

எங்கே நேர்மை இருக்கிறதோ, அங்கேதான் வெற்றி இருக்கிறது. இதனாலேயே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் பிருதையின் மகன்கள் {பாண்டவர்கள்} போரில் கொல்லப்பட முடியாதவர்களாகவும், எப்போதும் வெற்றிகரமாகவும் இருக்கிறார்கள்.

தீய ஆன்மா கொண்ட உமது மகன்களோ, பாவங்களுக்கு அடிமையாக {தீய எண்ணங்களுடன்} இருக்கிறார்கள். கொடுமையான, இழிந்த செயல்களையே அவர்கள் செய்கிறார்கள். இதனாலேயே அவர்கள் போரில் பலவீனப்படுகிறார்கள். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வெறுக்கத்தக்க மனிதர்களைப் போல, உமது மகன்கள் பல கொடுமைகளையும், வஞ்சகச் செயல்களையும் பாண்டுவின் மகன்களுக்கு {பாண்டவர்களுக்குச்} செய்தார்கள்.

எனினும், ஓ! பாண்டுவின் அண்ணனே {திருதராஷ்டிரரே}, உமது மகன்களின் குற்றங்கள் அனைத்தையும் அலட்சியம் செய்த பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்}, அச்செயல்களை எப்போதும் {உலகத்தின் கண்ணிலிருந்து} மறைத்தே வந்தனர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது மகன்களோ எண்ணற்ற நேரங்களில் பாண்டவர்களை அவமதித்தனர்.

அந்தப் பாவ வழியின் தொடர்ச்சியாக, இப்போது, நஞ்சைப் போன்ற கொடூரக் கனியை [1] {பலனை} அவர்கள் {கௌரவர்கள்} அறுவடை செய்யட்டும். உமது நலன்விரும்பிகள் ஆலோசனை கூறியும், விழிப்படையாத நீரும், உமது மகன்கள் மற்றும் சொந்தங்களுடன் கூடி அந்தக் கனியை புசிக்க வேண்டும்.

[1] மூலத்தில் இங்கே குறிப்பிடப்படுவது "சுரைக்காய் இனத்தைச் சேர்ந்த 'Kimpaca' கிம்பகம் என்ற கனி ஆகும்" என இங்கே விளக்குகிறார் கங்குலி.

விதுரர், பீஷ்மர், உயர் ஆன்ம துரோணர் ஆகியோராலும், என்னாலும் தொடர்ந்து தடுக்கப்பட்டும், நீர் புரிந்து கொள்ளவில்லை. பரிந்துரைக்கப்படும் மருந்தை மறுக்கும் நோயாளியைப் போல, ஏற்றுக் கொள்ளத்தக்கதும், உமது நன்மைக்கானதுமான எங்கள் வார்த்தைகளை நீர் மறுத்தீர். உமது மகன்களின் கருத்துக்களை ஏற்ற நீர், பாண்டவர்கள் ஏற்கனவே வீழ்த்தப்பட்டுவிட்டதாகவே கருதினீர்.

ஓ! பாரதர்களின் தலைவா {திருதராஷ்டிரரே}, நீர் கேட்டபடியே, பாண்டவர்களின் வெற்றிக்கான உண்மையான காரணத்தை மேலும் கேளும். ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {திருதராஷ்டிரரே}, நான் கேள்விப்பட்டதை உமக்குச் சொல்கிறேன். இதே கேள்வியைத்தான் பாட்டனிடம் {பீஷ்மரிடம்} துரியோதனனும் கேட்டான். வலிமைமிக்கத் தேர்வீரர்களான தனது தம்பிகள் போரில் வீழ்த்தப்பட்டதால், ஓ! கௌரவரே {திருதராஷ்டிரரே}, துயரில் இதயம் மயங்கிய உமது மகன் துரியோதனன், பெரும் அறிவுபடைத்த பாட்டனிடம் {பீஷ்மரிடம்}, இரவில் பணிவுடன் சென்று, அவரிடம் இதே கேள்வியைக் கேட்டான். ஓ! ஏகாதிபதியே {திருதராஷ்டிரரே}, அவை அனைத்தையும் என்னிடம் கேட்பீராக.

துரியோதனன் {பீஷ்மரிடம்}, "துரோணர், {பீஷ்மராகிய} நீர், சல்லியன், கிருபர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, ஹிருதிகனின் மகனான கிருதவர்மன், காம்போஜர்களின் ஆட்சியாளனான சுதக்ஷிணன், பூரிஸ்ரவஸ், விகர்ணன், பெரும் ஆற்றல் படைத்த பகதத்தன் ஆகியோர் அனைவரும் வலிமைமிக்கத் தேர்வீரர்களாகக் {மகாரதர்களாகக்} கருதப்படுகிறீர்கள். மேலும் இவர்கள் அனைவரும் உயர்ந்த பிறப்பைக் கொண்டவர்களும், போரில் தங்கள் உயிர்களை விடத் தயாராக இருப்பவர்களுமாவர். (ஒன்று சேர்ந்திருக்கும்) மூன்று உலகங்களுக்கும் இணையானவர்கள் இவர்கள் என்பது எனது கருத்து. பாண்டவப் படையின் (ஒன்றிணைந்த) வீரர்கள் அனைவராலும் உங்கள் ஆற்றலைத் தாங்க முடியாது. என் மனத்தில் ஒரு சந்தேகம் உதிக்கிறது. கேட்கும் எனக்கு அதை விளக்குவீராக. யாரால் இந்தப் பாண்டவர்கள் நம்மைத் தொடர்ந்து வீழ்த்துகிறார்கள்?" என்று கேட்டான் {துரியோதனன்}.

பீஷ்மர் {துரியோதனனிடம்}, "ஓ! மன்னா, ஓ! குரு குலத்தோனே {துரியோதனா}, நான் சொல்லும் வார்த்தைகள் அனைத்தையும் கேட்பாயாக. இந்த விளைவுதான் அடிக்கடி என்னால் உனக்குச் சொல்லப்பட்டது. ஆனால், நான் சொன்னதை நீ கேட்கவில்லை. ஓ! பாரதர்களில் சிறந்தவனே {துரியோதனா}, பாண்டவர்களிடம் சமாதானம் ஏற்படட்டும். ஓ! தலைவா {துரியோதனா}, உனக்கும், இந்த உலகத்துக்கும் இது நன்மையைப் பயக்கும் என்று நான் கருதுகிறேன். உனது நலன்விரும்பிகள் அனைவரையும் மனம் நிறையச் செய்யும்படியும், உனது சொந்தங்களுக்கு மகிழ்வூட்டும்படியும், ஓ! மன்னா {துரியோதனா}, உன் சகோதரர்களுடன் சேர்ந்து இந்தப் பூமியை அனுபவித்து மகிழ்ச்சியாக இருப்பாயாக. இதுகுறித்து என் தொண்டை வற்ற இதற்கு முன் நான் கதறினாலும், ஓ! ஐயா {துரியோதனா}, நீ எனக்குச் செவிமடுக்கவில்லை. பாண்டுவின் மகன்களை நீ எப்போதும் அவமதித்தே வந்திருக்கிறாய். அவற்றின் விளைவுகள் தான் இப்போது உன்னை அடைகின்றன.

ஓ! மன்னா {துரியோதனா}, சாதனைகளால் களைப்படையாதவர்களாகவும், கொல்லப்பட முடியாதவர்களாகவும் ஏன் பாண்டவர்கள் இருக்கிறார்கள் என்பதற்கான காரணத்தை, ஓ! தலைவா {துரியோதனா}, நான் சொல்லும்போதே கேட்பயாக. சாரங்கபாணியால் {கிருஷ்ணனால்} காக்கப்படும் பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்} அனைவரையும் வீழ்த்த வல்லவர்களோ, வீழ்த்துபவர்களோ இவ்வுலகில் யாரும் இல்லை, {இதற்கு முன்} இருந்ததுமில்லை, {இனிமேல்} இருக்கவும் முடியாது. ஓ! அறநெறிகளை அறிந்தவனே {துரியோதனா}, ஆன்மாவைக் கட்டுக்குள் கொண்ட முனிவர்களால் சொல்லப்பட்ட பழமையான வரலாற்றை உள்ளபடியே கேட்பாயாக" {என்றார் பீஷ்மர்}.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்