Saturday, December 19, 2015

பிரம்மன் சொன்ன நாராயணத் துதி! - பீஷ்ம பர்வம் பகுதி - 065ஆ

The song of Brahma on Narayana! | Bhishma-Parva-Section-065b | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 23)

பதிவின் சுருக்கம் : பழங்காலத்தில் கந்தமாதன மலைகளில் நடந்த கதையொன்றை பீஷ்மர் துரியோதனனுக்குச் சொல்வது; தேவர்களும், முனிவர்களும், பிரம்மனும் கந்தமாதனத்தில் கூடியிருக்கையில் அவர்களுக்கு நாராயணன் காட்சியளித்தது; பிரம்மன் சொன்ன நாராயணத் துதி; பூமியில் பிறப்பெடுக்குமாறு பிரம்மன் நாராயணனை வேண்டுவது...

{பீஷ்மர் துரியோதனிடம் தொடர்ந்தார்}, "பழங்காலத்தில், கந்தமாதன மலைகளில், தேவர்களும், முனிவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, பெரும்பாட்டனுக்காக {பிரம்மனுக்காக} மரியாதையுடன் காத்திருந்தனர் {பணிவிடை செய்தனர்}. அவர்களுக்கு மத்தியில் சுகமாக வீற்றிருந்த அனைத்துயிர்களின் தலைவன் {பிரம்மன்}, சுடர்மிகும் பிரகாசத்துடன் ஆகாயத்தில் நின்றிருந்த ஓர் அற்புதமான தேரை {விமானத்தைக்} கண்டான். தியானத்தால் (அது குறித்த அனைத்தையும்) உறுதி செய்து கொண்ட பிரம்மன், ஒடுங்கிய இதயத்துடனும், கூப்பிய கரங்களுடனும், மகிழ்ச்சிகரமான ஆன்மாவுடனும், அந்த உயர்ந்த தெய்வத்திற்குத் {நாராயணனுக்குத்} தனது வணக்கங்களைச் செய்தான். (இப்படி அந்த வடிவத்தை) ஆகாயத்தில் கண்ட முனிவர்கள் மற்றும் தேவர்கள் ஆகிய அனைவரும், அந்த அற்புதங்களின் அற்புதம் மீது நிலைத்த கண்களுடனும், கூப்பிய கரங்களுடன் எழுந்து நின்றனர்.


பிரம்மத்தை அறிந்த அனைவரிலும் முதன்மையானவனும், அண்டத்தின் படைப்பாளனும், உயர்ந்த அறத்தை அறிந்தவனுமான பிரம்மன், அவனை {நாராயணனை} முறையாக வழிபட்டு, {பின்வரும்} இந்த உயர்வான வார்த்தைகளைச் சொன்னான். அவன் {பிரம்மன்}, "ஏற்றிருக்கும் அண்ட வடிவத்தினால் மகிமையானவன் {விஸ்வாவசு} நீயே, அண்டத்தின் தலைவன் {விஸ்வேதேவன்} நீயே. ஓ! முழு அண்டத்தையும் காப்பவனே {விஷ்வக்சேனா}, ஓ! அண்டத்தையே உனது செயலாகக் கொண்டவனே {சமஸ்தகர்மஸ்வரூபியே}, ஓ! ஆன்மாவைக் கட்டுக்குள் கொண்டவனே {ஜிதேந்திரனே}, அண்டத்தின் தலைமை உரிமையாளன் {விஸ்வேஸ்வரன்} நீயே. வாசுதேவன் நீயே. எனவே, உயர்ந்த தெய்வீகத்திற்கும், யோகத்திற்கும் ஆன்மாவான {தேவனும், யோகஸ்வரூபியுமான} உன்னை நான் சரணடைந்தேன்.

பத்மநாத சுவாமி (திருவனந்தபுரம் கோயில்)
அண்டத்தின் தலைமை தெய்வமான உனக்கு வெற்றி {ஜெயம்}. உலகங்களின் நன்மையில் எப்போதும் ஈடுபடும் உனக்கு வெற்றி. யோகத்தின் தலைவனான {யோகீஸ்வரனான} உனக்கு வெற்றி. அனைத்து சக்திகளும் வாய்ந்தவனான உனக்கு வெற்றி. யோகத்திற்கும் முன்பும் பின்பும் ஆனவனான {யோகஸ்வரூபனான} உனக்கு வெற்றி. நாபியில் கமலம் உதித்தவனே {பத்மநாபா}, அகன்ற கண்களை உடையவனே, அண்டத்தின் தலைவர்களுக்கெல்லாம் தலைவனான {பரமேஸ்வரனான} உனக்கு வெற்றி.

ஓ! கடந்த காலம், நிகழ்காலம், வருங்காலம் ஆகியவற்றின் தலைவா, மென்பண்பின் வடிவமான {embodiment of gentleness} உனக்கு வெற்றி. சூரியர்களின் சூரியனே, ஓ! சொல்லப்படாத பண்புகளின் கொள்ளிடமே, அனைத்திற்கும் புகலிடமாக இருப்பவனான உனக்கு வெற்றி. நாராயணன் நீயே, புரிந்து கொள்ளப்பட முடியாதவன் நீயே, சாரங்கம் என்றழைக்கப்படும் வில்லைத் தரிப்பவனான உனக்கு வெற்றி. ஓ! அண்டத்தை உருவமாகக் கொண்டவனே, ஓ! எப்போதும் நலத்துடன் இருப்பவனே {பிறவிப்பிணியற்றவனே}, அனைத்துப் பண்புகளையும் கொண்டவனான உனக்கு வெற்றி. ஓ! அண்டத்தின் தலைவா {விஸ்வேஸ்வரா}, ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, உலகங்களின் நன்மைக்காக எப்போதும் தயாராக இருப்பவனான உனக்கு வெற்றி. ஓ! பெரும்பாம்பே {ஆதிசேஷஸ்வரூபனே}, ஓ! பெரும் பன்றியே {வராகனே}, ஓ! காரணமுதல்வனே, ஓ! பழுப்புச் சடை கொண்டவனே {ஹரிகேசனே}, எல்லாம் வல்லவனான {விபுவான} உனக்கு வெற்றி.

ஓ! மஞ்சளாடை கொண்டவனே {பீதாம்பரதாரியே}, ஓ! திசைகள் மற்றும் துணை திசைகளின் தலைவா, ஓ! அண்டத்தையே வசிப்பிடமாகக் கொண்டவனே, ஓ! சிதைவற்றவனே, ஓ! தோற்றம் கொண்டவனே, ஓ! தோற்றம் இல்லாதவனே, ஓ! அளவிலா இடம் {அமிதமானஸ்தானங்களைக்} கொண்டவனே, ஓ! புலன்கள் அனைத்தையும் கட்டுக்குள் கொண்டவனே, ஓ! எப்போதும் நன்மையையே அடைபவனே, ஓ! அளவிடப்பட முடியாதவனே, தன்னியல்பைத் தானொருவனே அறிந்தவனே, ஆழமானவனான உனக்கு வெற்றி. ஓ! விருப்பங்கள் அனைத்தையும் தருபவனே, ஓ! முடிவற்றவனே, ஓ! பிரம்மமாக அறியப்படுபவனே, ஓ! நித்தியமானவனே, ஓ! உயிரினங்கள் அனைத்தையும் படைத்தவனே, ஓ! எப்போதும் வெற்றியாளனாய் இருப்பவனே, ஓ! அறிவை வெளிப்படுத்தும் செயல்களையே எப்போதும் செய்பவனே {பேரறிவாளனே}, ஓ! அறநெறி அறிந்தவனே, ஓ! வெற்றியைத் தருபவனே, ஓ! புதிரே உருவமானவனே, ஓ! யோகமனைத்தின் ஆன்மாவாக இருப்பவனே {சர்வயோகேஸ்வரூபனே}, ஓ! இருப்பில் எழுந்த அனைத்தின் காரணமானவனே {வியக்தம அவதாரமே}, ஓ! உயிரினங்கள் அனைத்தின் தன்னறிவானவனே, ஓ! உலகங்களின் தலைவா, உயிரினங்கள் அனைத்தையும் படைத்தவனான உனக்கு வெற்றி.

ஓ! தன்னையே தோற்றமாகக் கொண்டவனே, ஓ! உயர்ந்த அருளைக் கொண்டவனே {மகாபாக்யனே}, ஓ! அனைத்தையும் அழிப்பவனே, ஓ! மன எண்ணங்கள் அனைத்தையும் ஊக்குவிப்பவனே, பிரம்மத்தை அறிந்தவர் அனைவரிலும் அன்பானவனான உனக்கு வெற்றி. ஓ! படைப்பிலும், அழிப்பிலும் ஓய்வில்லாதவனே, ஓ! விருப்பங்களை அனைத்தையும் கட்டுப்படுத்துபவனே, ஓ! உச்சமான தலைவா {பரமேஸ்வரா}, ஓ! அமுதத்தின் காரணனே {மோட்சகாரணனே}, ஓ! அனைத்தும் கொண்டவனே {முக்தாத்மஸ்வரூபனே}, ஓ! யுகத் தொடக்கத்தில் முதலில் தோன்றுபவனே, ஓ! வெற்றியைக் கொடுப்பவனே, ஓ! அனைத்து உயிர்களின் தலைவனுடைய {பிரம்மனின்} தெய்வீகத் தலைவனே, ஓ! நாபியில் கமலம் உதித்திருப்பவனே {பத்மநாபரே}, ஓ! பெரும் பலம்வாய்ந்தவனே, ஓ! தன்னிலே எழுந்தவனே {சத்ஸ்வரூபனே}, ஓ! பழங்கால நிலையைக் கொண்ட பெரும்பூதங்களாக {பஞ்ச பூதங்களாக} இருப்பவனே, ஓ! (அறச்} சடங்குகள் அனைத்தின் ஆன்மாவே, அனைத்தையும் கொடுப்பவனான உனக்கு வெற்றி.

பூமாதேவி உன் இரண்டு பாதங்களைப் பிரதிபலிக்கிறாள், திசைகள் மற்றும் துணை திசைகள் உனது கரங்களையும், ஆகாயம் உனது தலையையும் பிரதிபலிக்கின்றன. உன் வடிவமாக நான் இருக்கிறேன். தேவர்கள் உனது உறுப்புகள் {உடல்}, சூரியனும், சந்திரனும் உன்னிரு கண்கள். ஆன்மத் தவங்களும், அறத்தில் பிறந்த உண்மையும், (அறச்) சடங்குகளும் உனது பலம். நெருப்பே {அக்னியே} உனது சக்தி, காற்றே உனது மூச்சு, உன் வேர்வையில் இருந்து உதித்ததே நீர். அசுவினி இரட்டையர்கள் உனது காதுகள், சரஸ்வதி தேவி உனது நாக்கு. வேதங்களே உனது அறிவு, இந்த அண்டமே உன்னில்தான் நிலைநிற்கிறது.

ஓ! யோகம் மற்றும் யோகியரின் தலைவா, உனது எல்லை, அளவு, சக்தி, ஆற்றல், பலம், தோற்றம் ஆகியவற்றை நாம் அறியோம். ஓ! தெய்வமே, ஓ! விஷ்ணுவே, உன்னிடம் அர்ப்பணிப்பில் நிறைந்து, உன்னையே நம்பி நோன்புகள் மற்றும் தவங்களால் {நியமங்களால்} எப்போதும் உன்னையே உயர்ந்த தலைவனாகவும், தேவர்களின் தேவனாகவும் வணங்குகிறோம்.

முனிவர்கள், தேவர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், ராட்சசர்கள், பன்னகர்கள், பிசாசங்கள், மனிதர்கள், விலங்குகள், பறவைகள், ஊர்வன ஆகிய இவை அனைத்தும் என்னால் படைக்கப்பட்டது உனது கருணையே. ஓ! நாபியில் கமலம் உதித்தவனே {பத்மநாபா}, ஓ! அகன்ற பெரிய கண்களை உடையவனே, ஓ! கிருஷ்ணா, ஓ! துன்பங்கள் அனைத்தையும் விலக்குபவனே, உயிரினங்கள் அனைத்தின் புகலிடம் நீயே, அவற்றின் வழிகாட்டியும் நீயே, அண்டத்தைத் தன் வாயாகக் கொண்டவன் நீயே, ஓ! தேவர்களின் தலைவா {தேவேசனே}, தேவர்கள் எப்போதும் மகிழ்வுடன் இருப்பது உனது கருணையே. பயங்கரங்களில் இருந்து பூமி எப்போதும் விடுபட்டிருப்பது உனது கருணையே.

எனவே, ஓ! பெரிய கண்களைக் கொண்டவனே, யது குலத்தில் நீ பிறப்பாயாக. அறத்தை நிலைநாட்டவும், திதியின் மகன்களைக் {தைத்தியர்களைக்} கொல்லவும், அண்டத்தைத் தாங்கிப் பிடிக்கவும், ஓ! தலைவா, நான் சொன்னதைச் செய்வாயாக. ஓ! வாசுதேவா, உனது இந்த உயர்ந்த புதிர்கள் {பரமரகசியங்கள்}, ஓ! தலைவா, உனது அருளாலேயே என்னால் பாடப்பட்டன. உன்னில் இருந்து நீயே சங்கர்ஷணனைப் {பலராமனைப்} படைத்த பிறகு, ஓ! கிருஷ்ணா, உனக்கு நீயே பிரத்யும்னனாகப் பிறந்தாய். பிரத்யும்னனிலிருந்து நித்தியமான விஷ்ணுவாக அறியப்படும் அநிருத்தனைப் படைத்தாய். அந்த அநிருத்தனே அண்டத்தைத் தாங்குபவனான பிரம்மனாக என்னைப் படைத்தான். வாசுதேவனின் சாரத்தால் படைக்கப்பட்டவன் நான், எனவே, நீயே என்னைப் படைத்தவனாவாய். உன்னையே பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு, ஓ! தலைவா, மனிதர்களுக்கு மத்தியில் பிறப்பாயாக.

உலகங்கள் அனைத்தின் மகிழ்ச்சிக்காக அசுரர்களைக் கொன்று, அறத்தை நிறுவி, புகழை வென்று, மீண்டும் நீ யோகத்தை அடைவாயாக. உன்னிடம் அர்ப்பணிப்பு கொண்டவர்களும், பூமியில் உள்ள மறுபிறப்பாள முனிவர்களும், தேவர்களும், உனக்குச் சொந்தமான பெயர்களால் அற்புதனான உன்னைப் பாடுகிறார்கள். ஓ! அற்புதக் கரங்களைக் கொண்டவனே, அனைத்து வகை உயிரினங்களும், வரங்களை அளிப்பவனான உன்னையே புகலிடமாகக் கொண்டு, உன்னிலேயே வசிக்கின்றன. உலகங்களின் பாலமானவனாகவும், முதல், இடை, கடை ஆகியவை அற்றவனாகவும், அளவிலா யோகம்படைத்தவனாகவும்  மறுபிறப்பாளர்கள் உன்னைப் பாடுகின்றனர்" என்றான் {பிரம்மன்}" {என்றார் பீஷ்மர்}.

இந்தப் பகுதியில் வரும் கதைக்குள் கதையாக மகாபாரதம் இன்று வரை: நாராயணனிடம் பிரம்மன் [1] பேசியதை பீஷ்மர் துரியோதனனிடம் சொல்வது [2]; பீஷ்மர் துரியோதனனிடம் பேசியதைச் சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் சொல்வது [3]; சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் சொன்னதை வியாசர் கணேசருக்குச் சொல்லி, அதைக் கணேசர் எழுதுவது [4]; வியாசர் மீண்டும் அதையே தன் சீடர்களுக்குச் சொல்வது [5]; வியாசரின் சீடரான வைசம்பாயனர் பாம்புவேள்வியில் ஜனமேஜயனுக்குச் சொல்வது [6]; பாம்பு வேள்வியில் கேட்டவற்றைச் சூதரான சௌதி, நைமிசாரண்யத்தில் சௌனகர் முதலான அந்தணர்களுக்குச் சொல்வது [7]; {இதற்கெல்லாம் பிறகு பெயர் சொல்லப்படாத யாரோ ஒருவர் அதை ஏட்டில் வடித்து நமக்கெல்லாம் மேற்கண்ட சம்பவத்தைக் கொடுத்திருப்பது [8]}.

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்