Thursday, December 17, 2015

கடோத்கசன் பகதத்தன் மோதல்! - பீஷ்ம பர்வம் பகுதி - 064ஆ

The encounter between Ghatotkacha and Bhagadatta! | Bhishma Parva - Section 064b | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 22)

பதிவின் சுருக்கம் : பீமனை மயக்கமடையச் செய்த பகதத்தன்; கோபமடைந்த கடோத்கசன் பகதத்தனைத் தாக்கியது; கடோத்கசன் மீது கொண்ட அச்சத்தால் கௌரவர்கள் நான்காம் நாள் போரான அன்றைய போரை நிறுத்தியது....

{சஞ்சயன் திருதராஷ்டிரனிடம்  தொடர்ந்தான்}, "மேலும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மதங்கொண்ட யானையின் மீதிருந்த பகதத்தன், பீமசேனன் எங்கே இருந்தானோ அந்த இடத்திற்குத் திடீரென விரைந்தான். அங்கே நடந்த மோதலில், அவன் {பகதத்தன்}, சூரியனை மறைக்கும் மேகங்களைப் போல, சாணைக்கல்லில் கூர்த்தீட்டப்பட்ட தனது கணைகளைக் கொண்டு பீமனை மறைத்து கண்ணிற்குப் புலப்படாதவனாக்கினான்.


எனினும், தங்கள் கரங்களின் ஆற்றலையே நம்பியிருந்த (பாண்டவப் படையின்) அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களால் (பகதத்தனின் கணைமாரியால்) பீமன் மறைக்கப்பட்டதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எனவே, அனைத்துப் புறங்களிலும் பகதத்தனைச் சூழ்ந்து கொண்ட அவர்கள் {பாண்டவப் படையினர்}, அவன் {பகதத்தன்}  மீது கணைமாரியைப் பொழிந்தனர். மேலும் அவர்கள் அவனது {பகதத்தனின்} யானையின் மீதும் கணைமாரியைப் பொழிந்தனர்.

பிராக்ஜோதிஷதர்கள் ஆட்சியாளனின் {பகதத்தனின்} யானை, வலிமைமிக்கத் தேர்வீரர்களால் பொழியப்பட்ட, பல்வேறு வகைகளிலான கடுங்கணைகளின் காரணமாக, உடல் முழுவதும் இரத்தஞ்சொட்டி, சூரியக் கதிர்களால் கோர்க்கப்பட்ட மேகத்திரள்களைப் போல அந்தப் போர்க்களத்தைப் பார்ப்பதற்கு அழகாக்கியது. பகதத்தனால் தூண்டப்பட்டதும், மதநீர் பெருக்கும் தன்மை கொண்டதும், அந்தகனைப் போன்றதுமான அந்த யானை, தன் முந்தைய வேகத்தைவிட இரண்டு மடங்கு வேகத்தில் ஓடி, தனது நடையால் பூமியையே நடுங்கச் செய்தது. அவ்விலங்கின் கொடூர முகத்தைக் கண்ட வலிமைமிக்கத் தேர்வீரர்களான அவர்கள் அனைவரும் அதைத் தடுக்கமுடியாததாகக் கருதி உற்சாகமிழக்கத் தொடங்கினர்.

பிறகு, கோபத்தில் தூண்டப்பட்டவனும், மன்னர்களில் புலியுமான மன்னன் பகதத்தன், நேரான தனது கணையொன்றால் பீமசேனனை நடுமார்பில் அடித்தான். மன்னனுடைய {பகதத்தனுடைய} அந்தக் கணையால் ஆழமாகத் துளைக்கப்பட்ட பெரும் வில்லாளியும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான அவன் {பீமன்}, மயக்கத்தின் விளைவாகத் தன் உறுப்புகளின் உணர்வுகளை இழந்து, தனது கொடிமரத்தைப் பிடித்தபடி தனது தேரில் அமர்ந்தான். அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் அச்சமடைந்ததையும், பீமசேனன் மயக்கமடைந்ததை கண்டவனும், பெரும் ஆற்றலைக் கொண்டவனுமான பகதத்தன் உரக்க முழக்கமிட்டான்.

அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பீமனை அந்த நிலையில் கண்டவனும், பயங்கரமானவனுமான ராட்சசன் கடோத்கசன், கோபத்தால் தூண்டப்பட்டு, அப்போதைக்கப்போது காட்சியில் இருந்து மறைந்தான். பயங்கர மாயையை உண்டாக்கி, மருண்டவர்களின் அச்சத்தை அதிகரித்துக் கொடும் வடிவத்தை ஏற்று ஒரு கணத்தில் மீண்டும் அவன் {கடோத்கஜன்} தோன்றினான். தன் மாய சக்திகளால் உண்டாக்கப்பட்ட ஐராவதத்தில் தானே பயணித்து, இன்னும் பிற திக்கஜங்களான அஞ்சனம், வாமனம், நல்லொளி பொருந்திய மகாபத்மம் ஆகியவற்றில் பிறரும் தன்னைப் பின்தொடரச் செய்தான். ராட்சசர்களால் செலுத்தப்பட்டவையும், பெரும் வடிவத்திலானவையுமான அந்த வலிமைமிக்க மூன்று யானைகளும் மும்மதங்களையும் பெருக்கியபடி, பெரும் வேகத்துடனும், ஆற்றலுடனும் இருந்தன.

அப்போது, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {திருதராஷ்டிரரே}, பகதத்தனையும், அவனது யானையையும் கொல்ல விரும்பி கடோத்கஜன் அந்தப் போரில் தன் யானையைத் தூண்டினான். அப்போது, பெரும் பலம் மிக்க ராட்சர்களால் தூண்டப்பட்டவையும், உக்கிரமானவையும், நான்கு தந்தங்களைக் கொண்டவையுமான அந்த யானைகள், பகதத்தனின் யானை மீது அனைத்துப் புறங்களில் இருந்தும் பாய்ந்து, தங்கள் தந்தங்களால் அதைப் {பகதத்தனின் யானையைத்} துன்புறுத்தின. இப்படி அந்த யானைகளால் துன்புறுத்தப்பட்ட பகதத்தனின் யானை (ஏற்கனவே) அம்புகளால் அடிபட்டதாலும், பெரும் வலியை உணர்ந்து இந்திரனின் இடிக்கு ஒப்பாக உரக்கப் பிளிறியது.

முழக்கமிடும் அந்த யானையின் பயங்கரமான உரத்தக் கதறல்களைக் கேட்டுத் துரோணர், சுயோதனன் {துரியோதனன்} மற்றும் மன்னர்கள் அனைவரிடமும் பீஷ்மர், "வலிமைமிக்க வில்லாளியான பகதத்தன், கொடிய ஆன்மா கொண்ட ஹிடிம்பையின் மகனிடம் {கடோத்கசனிடம்} போரிட்டு, பெரும் துயரில் விழுந்திருக்கிறான். அந்த ராட்சசன் {கடோத்கசன்} பெரும் வடிவத்தைக் கொண்டவன். அந்த மன்னனும் {பகதத்தனும்} பெரும் கோபம் கொண்டவன். இவர்கள் இருவரும் போரிட்டால், ஒருவரை ஒருவர் கொன்று விடுவார்கள் என்பது நிச்சயம். மகிழ்ச்சி நிறைந்த பாண்டவர்களின் உரத்த ஒலிகள் கேட்கப்பட்டன. (மன்னன் பகதத்தனுடைய) யானையின் பயங்கரமான துயரக் கதறலும் கேட்டது.

நீங்கள் அருளப்பட்டிருப்பீராக. மன்னனை {பகதத்தனை} மீட்க நாம் அனைவரும் அங்கே செல்வோமாக. ஏனெனில் இப்போரில் அவன் {பகதத்தன்} பாதுகாக்கப்படாவிட்டால், விரைவில் அவன் தன் உயிரை விட்டுவிடுவான். பெரும் சக்தி கொண்ட வீரர்களே, நான் சொல்வது போல இப்போது நீங்கள் கேளுங்கள். பாவமற்றவர்களே, தாமதிக்காதீர்கள். கடுமையான அந்த மோதல் மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும் வகையில் உக்கிரமடைகிறது. பெரும் வீரம்படைத்தவனும், உயர் பிறப்பைக் கொண்டவனுமான அந்தப் படைத்தளபதி {பகதத்தன்} நமக்கு அர்ப்பணிப்புடன் இருப்பவனாவான். மங்காப் புகழ் கொண்ட வீரர்களே, நம்மால் அவன் {பகதத்தன்} பாதுகாக்கப்பட வேண்டியவனாவான்" என்றார் {பீஷ்மர்}.

பீஷ்மரின் இவ்வார்த்தைகளைக் கேட்டவர்களும், பரத்வாஜமகனின் {துரோணரின்} தலைமையிலானவர்களுமான மன்னர்கள் அனைவரும் பகதத்தனை மீட்க விரும்பி, அந்தப் பிராக்ஜோதிஷர்கள் ஆட்சியாளன் {பகதத்தன்} இருக்கும் இடத்திற்குப் பெரும் வேகத்துடன் சென்றனர். எதிரி முன்னேறுவதைக் கண்டவர்களும், யுதிஷ்டிரனின் தலைமையிலானவர்களுமான பாஞ்சாலர்களும், பாண்டவர்கள் அவர்களைப் பின் தொடர்ந்து சென்றார்கள். பெரும் ஆற்றல் கொண்ட அந்த ராட்சசர்களின் இளவரசன் {கடோத்கசன்}, முன்னேறி வரும் (எதிரியின்) அந்தப் படைப்பிரிவைக் கண்டு, இடியைப் போன்று ஆழமாக உரக்க கர்ஜித்தான்.

அவனது {கடோத்கஜனின்} முழக்கத்தைக் கேட்டும், போரிடும் யானைகளையும் கண்டும், சந்தனுவின் மகனான பீஷ்மர், மீண்டும் பரத்வாஜரின் மகனிடம் {துரோணரிடம்}, "அந்தத் தீய ஆன்மா கொண்ட ஹிடிம்பையின் மகனிடம் {கடோத்கசனிடம்} போரிட (இன்று) நான் விரும்பவில்லை. பெரும் பலமும் சக்தியும் கொண்ட அவன் {கடோத்கசன்}, தற்போது நன்கு ஆதரிக்கப்பட்டிருக்கிறான். வஜ்ரதாங்கியாலும் {இந்திரனாலும்} கூட இப்போது அவனை {கடோத்கசனை} வீழ்த்த முடியாது. இலக்கின் துல்லியத்திலும், தாக்குவதிலும் அவன் சிறந்தவன். நம்மைப் பொறுத்தவரை, (இன்று) நமது விலங்குகள் களைப்படைந்திருக்கின்றன. பாஞ்சாலர்கள் மற்றும் பாண்டவர்களால் நாமும் பெரிதும் சிதைவடைந்திருக்கிறோம். வெற்றிப் பெற்றிருக்கும் பாண்டவர்களுடன் புதிய மோதலை நான் விரும்பவில்லை. எனவே, இன்றைக்கு நமது படையைத் திரும்ப அழைப்பது அறிவிக்கப்படட்டும். நாளை நாம் எதிரியுடன் போரிடலாம்" என்றார் {பீஷ்மர்}.

பாட்டனின் {பீஷ்மரின்} வார்த்தைகளைக் கேட்டவர்களும், கடோத்கசன் மீது கொண்ட அச்சத்தால் பீடிக்கப்பட்டவர்களுமான கௌரவர்கள், இரவின் தொடக்கத்தை ஒரு போலிக் காரணமாகக் கொண்டு, பாட்டன் {பீஷ்மர்} சொன்னதை மகிழ்ச்சியுடன் செய்தனர்.

கௌரவர்கள் பின்வாங்கியதும், வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட பாண்டவர்கள், சங்குகள் மற்றும் குழல்களின் இசையுடன் கலந்து சிங்க முழக்கங்களிட்டனர். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, இப்படியே குருக்கள் மற்றும் கடோத்கசனைத் தலைமையாகக் கொண்ட பாண்டவர்களுக்கும் இடையிலான அந்த நாளின் {4ஆம் நாளின்} போர் நடந்தது.

பாண்டவர்களால் வீழ்த்தப்பட்ட கௌரவர்கள் நாணிக் குறுகி, இரவு வந்ததும் தங்கள் கூடங்களுக்குச் சென்றனர். வலிமைமிக்கத் தேர்வீரர்களான பாண்டுவின் மகன்கள், கணைகளால் சிதைந்த தங்கள் உடல்களுடன், போரின் விளைவால் நிறைந்து {மகிழ்ந்து}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பீமசேனன் மற்றும் கடோத்கசனைத் தங்கள் தலைமையில் கொண்டு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தங்கள் கொட்டகையை நோக்கிச் சென்றனர். மகிழ்ச்சியால் நிறைந்த அவர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த வீரர்களை {பீமனையும், கடோத்கசனையும்} கொண்டாடினார்கள். தூரிய இசையுடன் கலந்து பல்வேறு விதமான முழக்கங்களை இட்டனர். அந்த உயர் ஆன்ம வீரர்களின் முழக்கம் பூமியையே நடுங்கச் செய்து, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, உமது மகன்களின் இதயங்களையும் கலங்கடித்தது. இரவு வந்ததும், இப்படி எதிரிகளைத் தண்டிப்பவர்களான அவர்கள் தங்கள் பாசறைகளை நோக்கிச் சென்றனர்.

தன் சகோதரர்களின் மரணத்தால் உற்சாகமிழந்த மன்னன் துரியோதனன், துயர் மற்றும் கண்ணீரையும் மேலிட்ட சிந்தனையில் சில மணிநேரத்தைக் கழித்தான். பிறகு, (படை அறிவியலின்) விதிகளின் படி தன் பாசறைக்கு வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் செய்த அவன் {துரியோதனன்}, தன் தம்பிகளின் {தம்பிகளின் மரணத்தின்} நிமித்தமான சோகத்தினால் பீடிக்கப்பட்டும், துயரால் எரிக்கப்பட்டும், தியானத்தில் {ஆலோசனையில்} பல மணி நேரத்தைக் கழிக்கத் தொடங்கினான்" {என்றான் சஞ்சயன்}.

நான்காம் நாள் போர் முற்றிற்று 
 

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்