Tuesday, August 09, 2016

துச்சாசனனைக் கொல்லாமல் விட்ட சாத்யகி! - துரோண பர்வம் பகுதி – 122

Satyaki slew not Duhsasana! | Drona-Parva-Section-122 | Mahabharata In Tamil

(ஜயத்ரதவத பர்வம் – 38)

பதிவின் சுருக்கம் : சாத்யகியை எதிர்த்துச் சென்ற துச்சாசனன்; சாத்யகிக்கும் துச்சாசனுக்கும் இடையில் ஏற்பட்ட கடும்போர்; திரிகர்த்தர்களைச் சாத்யகிக்கு எதிராகத் தூண்டிய துரியோதனன்; பீமசேனனின் சபதத்தை நினைவுகூர்ந்து துச்சாசனனைக் கொல்லாமல் விட்ட சாத்யகி...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "அதேவேளையில் துச்சாசனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மழைத்தாரைகளைப் பொழியும் பெரும் மேகத்தைப் போல ஆயிரக்கணக்கான கணைகளை இறைத்தபடி சிநியின் பேரனை {சாத்யகியை} எதிர்த்து விரைந்தான். அறுபது கணைகளாலும், பிறகு பதினாறு கணைகளாலும் சாத்யகியைத் துளைத்த அவன் {துச்சாசனன்}, போரில் மைநாக மலையைப் போல அசையாமல் நின்ற அந்த வீரனை {சாத்யகியை} நடுங்கச் செய்வதில் தவறினான். பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த பெரும் தேர்க்கூட்டங்களின் துணையுடன் சென்ற அந்தப் பாரதக் குலத்தின் முதன்மையானவன் {துச்சாசனன்}, எண்ணற்ற கணைகளை ஏவியபடி மேகங்களைப் போன்ற ஆழ்ந்த முழக்கங்களால் திசைகளின் அனைத்துப் புள்ளிகளையும் நிறைத்தான்.


போரிட வரும் அந்தக் கௌரவனை {துச்சாசனனைக்} கண்டவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான சாத்யகி, அவனை {துச்சாசனனை} நோக்கி விரைந்து, தன் கணைகளால் அவனை மறைத்தான். துச்சாசனனுக்கு முன்னணியில் இருந்தோர் அனைவரும் இப்படி அந்தக் கணை மழையால் மறைக்கப்பட்டு உமது மகன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அச்சத்தால் தப்பி ஓடினர். அவர்கள் ஓடிய பிறகு, ஓ! ஏகாதிபதி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது மகன் துச்சாசனன், போரில் அச்சமற்று நீடித்தபடியே கணைகளால் சாத்யகியைப் பீடிக்கத் தொடங்கினான். அந்தப் போரில் துச்சாசனன், நான்கு கணைகளால் சாத்யகியின் நான்கு குதிரைகளையும், மூன்றால் அவனது தேரோட்டியையும், ஒரு நூறு கணைகளால் சாத்யகியையும் துளைத்து முழக்கம் செய்தான்.

அப்போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சினத்தால் தூண்டப்பட்ட மாதவன் {சாத்யகி}, தன் நேரான கணைகளின் மூலமாகத் துச்சாசனனின் தேரையும், சாரதியையும், கொடிமரத்தையும், துச்சாசனனையும் விரைவாகக் கண்ணுக்குப் புலப்படாதபடி செய்தான். உண்மையில் சாத்யகி, துணிச்சல்மிக்கத் துச்சாசனனை கணைகளாலேயே மறைத்துவிட்டான். ஒரு சிலந்தியானது தன் இழைகளின் மூலம் ஒரு கொசுவைத், தான் அடையும் தொலைவிற்குள் சிக்கச் செய்வதைப் போலவே அந்த எதிரிகளை வெல்பவனும் {சாத்யகியும்} தன் கணைகளால் துச்சாசனனை வேகமாக மறைத்தான்.

அப்போது, மன்னன் துரியோதனன், இப்படிக் கணைகளால் மறைக்கப்பட்ட துச்சாசனனைக் கண்டு, யுயுதானனின் {சாத்யகியின்} தேரை நோக்கித் திரிகர்த்தர்களின் படை ஒன்றைத் தூண்டினான். கடுஞ்செயல் புரிபவர்களும், போரில் சாதித்தவர்களும், எண்ணிக்கையில் மூவாயிரமாக இருந்தவர்களுமான அந்தத் திரிகர்த்த தேர்வீரர்கள் யுயுதானனை நோக்கிச் சென்றனர். போரிட உறுதியாகத் தீர்மானித்தவர்களும், புறமுதுகிடுவதில்லை என்று உறுதியேற்றவர்களுமான அவர்கள் அனைவரும் பெரும் தேர்க்கூட்டங்களுடன் யுயுதானனைச் சூழ்ந்து கொண்டனர். எனினும், யுயுதானன், தன்னை நோக்கிப் போரிட வந்த அந்தப் படையின் முன்னணியில் இருந்தவர்களும், தன் மீது கணைமாரிகளை ஏவியவர்களுமான ஐநூறு முதன்மையான வீரர்களைத் தாக்கி வீழ்த்தினான். சிநிக்களில் முதன்மையானவனின் {சாத்யகியின்} கணைகளால் விரைவாகக் கொல்லப்பட்ட அவர்கள் {திரிகர்த்தர்கள்}, சூறாவளியால் வேருடன் சாய்க்கப்பட்டு மலையுச்சியில் இருந்து விழும் நெடிய மரங்களைப் போலக் கீழே விழுந்தனர்.

ஓ! ஏகாதிபதி, சிநியின் பேரனுடைய {சாத்யகியின்} கணைகளால் சிதைக்கப்பட்ட யானைகளாலும், வீழ்ந்த கொடிமரங்களாலும், கிழிக்கப்பட்டு, குதறப்பட்டு, குருதியில் புரண்டு கொண்டிருந்தவையும், தங்க இழைகளால் அலங்கரிக்கப்பட்டவையுமான குதிரைகளாலும் விரவிக் கிடந்த அந்தப் போர்க்களமானது, ஓ! மன்னா, மலர்ந்திருக்கும் கின்சுகங்களால் {பலாச மரங்களால்} நிறைந்திருக்கும் ஒரு சமவெளியைப் போல அழகாகத் தெரிந்தது. இப்படி யுயுதானனால் {சாத்யகியால்} கொல்லப்பட்ட உமது போர்வீரர்கள், சேற்றில் {புதைகுழியில்} மூழ்கும் யானைகளைப் போல ஒரு பாதுகாவலனை அறியத் தவறின. பிறகு அவர்களில் அனைவரும், பறவைகளின் இளவரசன் {கருடன்} மீது கொண்ட அச்சத்தால் பொந்துகளை நோக்கித் திரும்பும் பெரும்பாம்புகளைப் போலத் துரோணரின் தேர் இருந்த இடத்தை நோக்கித் திரும்பினர். கடும் விஷமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பான தன் கணைகளால் அந்த ஐநூறு {500} துணிச்சல்மிக்க வீரர்களைக் கொன்ற பிறகு, அந்த வீரன் {சாத்யகி}, தனஞ்சயன் {அர்ஜுனன்} இருந்த இடத்தை நோக்கி மெதுவாகச் சென்றான்.

அந்த மனிதர்களில் முதன்மையானவன் {சாத்யகி} இப்படிச் சென்ற போது, உமது மகன் துச்சாசனன் ஒன்பது நேரான கணைகளால் அவனை {சாத்யகியை} வேகமாகத் துளைத்தான். பிறகு அந்த வலிமைமிக்க வில்லாளி (யுயுதானன்) கழுகின் இறகையும், தங்கச் சிறகுகளையும், கொண்ட ஐந்து நேரான கூரிய கணைகளால் துச்சாசனனைப் பதிலுக்குத் துளைத்தான். அப்போது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, துச்சாசனன் சிரித்துக் கொண்டே மூன்று கணைகளாலும், மீண்டும் ஐந்து கணைகளாலும் சாத்யகியைத் துளைத்தான். ஐந்து கணைகளால் உமது மகனைத் {துச்சாசனனைத்} தாக்கிய அந்தச் சிநியின் பேரன் {சாத்யகி}, அவனது வில்லையும் வெட்டிவிட்டு அர்ஜுனனை நோக்கிச் சிரித்துக் கொண்டே சென்றான். பிறகு, கோபத்தால் தூண்டப்பட்ட துச்சாசனன், அப்படிச் சென்று கொண்டிருந்த அந்த விருஷ்ணி வீரனை {சாத்யகியைக்} கொல்ல விரும்பி, முழுக்க இரும்பாலான ஓர் ஈட்டியை அவன் மீது வீசினான். எனினும் சாத்யகி, கங்க இறகுகளைக் கொண்ட தன் கணைகளால் உமது மகனின் {துச்சாசனனின்} அந்தக் கடும் ஈட்டியை வெட்டினான்.

ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே {திருதராஷ்டிரரே}, பிறகு மற்றொரு வில்லை எடுத்த உமது மகன் {துச்சாசனன்}, சில கணைகளால் சாத்யகியைத் துளைத்து விட்டு உரத்த முழக்கம் செய்தான். அப்போது கோபத்தால் தூண்டப்பட்ட சாத்யகி, அந்தப் போரில் உமது மகனை மலைக்கச்செய்து, நெருப்பின் தழல்களுக்கு ஒப்பான சில கணைகளால் அவனது {துச்சாசனனின்} நடு மார்பைத் துளைத்தான். மேலும் முழுக்க இரும்பாலானவையும், கூர்முனை கொண்டவையுமான எட்டு கணைகளால் துச்சாசனனைத் துளைத்தான். எனினும் துச்சாசனன், பதிலுக்கு இருபது கணைகளால் சாத்யகியைத் துளைத்தான்.

அப்போது, உயர்ந்த அருளைக் கொண்ட சாத்யகி, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மூன்று நேரான கணைகளால் துச்சானனின் நடுமார்பை {மீண்டும்} துளைத்தான். பிறகு அந்த வலிமைமிக்கத் தேர்வீரனான யுயுதானன் சில நேரான கணைகளால் துச்சாசனனின் குதிரைகளைக் கொன்றான்; கோபத்தால் தூண்டப்பட்ட அவன் {சாத்யகி} மேலும் சில நேரான கணைகால் பின்னவனின் {துச்சாசனனின்} தேரோட்டியையும் கொன்றான். பிறகு அவன் {சாத்யகி} ஒரு பல்லத்தைக் கொண்டு உமது மகனின் வில்லை வெட்டி, ஐந்து கணைகளைக் கொண்டு தோலாலான அவனது {துச்சாசனனின்} கையுறைகளையும் அறுத்தான். உயர்ந்த ஆயுதங்களை அறிந்தவனான சாத்யகி, இரு பல்லங்களைக் கொண்டு துச்சாசனனின் கொடிமரத்தையும், அவனது தேரில் உள்ள மரத்தாலான சுழல்தண்டுகளையும் {ரதசக்திகளையும்} வெட்டினான். பிறகு அவன் எண்ணற்ற கூரிய கணைகளால் உமது மகனின்  {துச்சாசனனின்}பார்ஷினி தேரோட்டிகள் இருவரையும் கொன்றான்.

அப்போது, வில்லற்று, தேரற்று, குதிரைகளற்று, சாரதிகளற்று இருந்த பின்னவன் {துச்சாசனன்}, திரிகர்த்தப் போர்வீரர்களின் தலைவனால் அவனது தேரில் ஏற்றிக் கொள்ளப்பட்டான். பிறகு, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட வீரனான அந்தச் சிநியின் பேரன் {சாத்யகி}, ஒருக்கணம் அவனைப் {துச்சாசனனைப்} பின்தொடர்ந்து சென்று, பின்னர்ப் பீமசேனனின் வார்த்தைகளை நினைவுகூர்ந்து அவனைக் {துச்சாசனனைக்} கொல்லாமல் நின்றான். உண்மையில், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, போரில் உமது மகன்கள் அனைவரையும் அழிப்பதாகச் சபைக்கு மத்தியில் பீமசேனன் உறுதியேற்றிருந்தான். பிறகு, ஓ! தலைவரே {திருதராஷ்டிரரே}, இப்படித் துச்சாசனனை வென்ற சாத்யகி, ஓ! மன்னா, தனக்கு முன்பே தனஞ்சயன் {அர்ஜுனன்} சென்ற பாதையின் வழியே விரைவாகச் சென்றான்" {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்