Wednesday, August 10, 2016

துரியோதனனின் ஆற்றல்! - துரோண பர்வம் பகுதி – 123

The prowess of Duryodhana! | Drona-Parva-Section-123 | Mahabharata In Tamil

(ஜயத்ரதவத பர்வம் – 39)

பதிவின் சுருக்கம் : கௌரவர்களைத் திக்குமுக்காடச் செய்த பாண்டவ வீரர்கள்; பாண்டவப் படைக்குள் ஊடுருவி, அப்படையைக் கலங்கடித்த துரியோதனன்; துரியோதனனின் வில்லை அறுத்த யுதிஷ்டிரன்; பாஞ்சாலர்களுடன் மோதிய துரோணர்; அர்ஜுனன் இருந்த இடத்தில் எழுந்த ஆரவாரம்...


திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "ஓ! சஞ்சயா, (அர்ஜுனனை நோக்கிச்) சாத்யகி சென்ற போது, அவனைக் கொல்வதற்கோ, தடுப்பதற்கோ என் படையில் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் எவரும் இல்லையா? கலங்கடிக்கப்பட இயலாத ஆற்றலையும், சக்ரனுக்கு {இந்திரனுக்கு} நிகரான ஆற்றலையும் கொண்ட அவன் {சாத்யகி}, தானவர்களுக்கு மத்தியில் பெரும் இந்திரனைப் போலத் தனியொருவனாகவே போரில் சாதனைகளை அடைந்துவிட்டான். அல்லது, ஒருவேளை சாத்யகி சென்ற பாதை வெறுமையாக இருந்ததா? ஐயோ, உண்மையான ஆற்றலைக் கொண்ட அவன் {சாத்யகி} தனி ஒருவனாகவே எண்ணற்ற தேர்களை நசுக்கிவிட்டானே! ஓ! சஞ்சயா, சிநியின் பேரன் {சாத்யகி}, போரில் தன்னோடு போராடிக் கொண்டிருந்த பரந்த படையின் ஊடாகத் தனியொருவனாக எப்படிக் கடந்து சென்றான் என்பதை எனக்குச் சொல்வாயாக" என்றான் {திருதராஷ்டிரன்}.


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தேர்கள், யானைகள், குதிரைகள், காலாட்படைவீரர்கள் ஆகியவற்றால் நிறைந்த உமது படையின் கடும் முயற்சிகளும் ஆரவாரமும் யுக முடிவில் காணப்படுவதற்கு ஒப்பாக இருந்தன. ஓ! கௌரவங்களை அளிப்பவரே {திருதராஷ்டிரரே}, கூடியிருந்த உமது படையானது (தினமும்) கூட்டமாகத் திரளும் போது, அந்த உமது படையைப் போன்று மற்றொரு கூட்டமானது பூமியில் இதற்கு முன் இருந்ததில்லை என்றே எனக்குத் தோன்றியது. அங்கே வந்த தேவர்களும், சாரணர்களும், "இந்தக் கூட்டம் இதன் வகையில் பூமியில் இறுதியானதாக இருக்கும்" என்றனர். உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஜெயத்ரதன் கொல்லப்பட்ட நாளில் துரோணரால் அமைக்கப்பட்டதைப் போல அதற்கு முன் அப்படியொரு வியூகம் அமைக்கப்பட்டதில்லை. போரில் ஒருவரையொருவர் எதிர்த்து விரைந்த போது, பெரும் கூட்டமாக இருந்த அந்தப் படைவீரர்களின் ஆரவாரமானது சூறாவளியால் கொந்தளித்த பெருங்கடலுக்கு ஒப்பானதாக இருந்தது. ஓ! மனிதர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, உமது படையிலும், பாண்டவர்களின் படையிலும் நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் மன்னர்கள் இருந்தனர். போரில் ஈடுபடும்போது கடும் செயல்களைச் செய்யும் அந்தக் கோபக்கார வீரர்களால் உண்டாக்கப்பட்ட ஒலியானது பிரமாண்டமானதாகவும், மயிர்ச்சிலிர்ப்பை ஏற்படுத்துவதாகவும் இருந்தது.

அப்போது, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, பீமசேனன், திருஷ்டத்யும்னன், நகுலன், சகாதேவன், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் ஆகியோர், "வருவீராக, தாக்குவீராக, விரைவீராக. துணிச்சல்மிக்க மாதவனும் {சாத்யகியும்}, அர்ஜுனனும் பகைவரின் படைக்குள் நுழைந்து விட்டனர். ஜெயத்ரதனின் தேர் அருகே அவர்கள் எளிதில் செல்ல என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வீராக" என்று உரக்கக் கூச்சலிட்டனர். இதைச் சொல்லியே அவர்கள் படைவீரர்களைத் தூண்டினர். மேலும் அவர்கள், "சாத்யகியும், அர்ஜுனனும் கொல்லப்பட்டால், குருக்கள் தங்கள் நோக்கங்களை அடைவர், நாமோ வீழ்த்தப்படுவோம். எனவே அனைவரும் ஒன்று சேர்ந்து பெருங்கடலைப் போன்ற இந்த (எதிரிப்) படையைக் கடலைக் கலங்கடிக்கும் மூர்க்கமான காற்றைப் போல வேகமாகக் கலங்கடிப்பீராக" என்றனர்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பீமசேனன், பாஞ்சாலர்களின் இளவரசன் {திருஷ்டத்யும்னன்} ஆகியோரால் தூண்டப்பட்ட போர்வீரர்கள், தங்கள் உயிர்களைத் துச்சமாக மதித்துக் கௌரவர்களைத் திக்குமுக்காடச் செய்தனர். பெரும் சக்தியைக் கொண்ட அவர்கள் அனைவரும் போரில் மரணத்தை விரும்பி, ஆயுதங்களின் விளிம்பிலோ, முனையிலோ சொர்க்கத்தை எதிர்பார்த்துத் தங்கள் நண்பர்களுக்காகப் போரிடுவதில் தங்கள் உயிர்களைக் குறித்துக் கிஞ்சிற்றும் கருதிப்பார்க்கவில்லை.

அதேபோல, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது போர்வீரர்களும் பெரும் புகழை விரும்பியும், போரில் உன்னதத் தீர்மானத்தைக் கொண்டும், போரிடும் உறுதியுடன் களத்தில் நின்றனர். கடுமையானதும், பயங்கரமானதுமான அந்தப் போரில் சாத்யகி அனைத்துப் போராளிகளையும் வென்று அர்ஜுனனை நோக்கிச் சென்றான். போர்வீரர்களின் கவசங்களில் பிரதிபலித்த சூரியனின் கதிர்களால் போராளிகள் தங்கள் விழிகளை அவற்றில் இருந்து விலக்காமல் இருந்தனர்.

துரியோதனனும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} போரில் கடுமையாகப் போராடிக் கொண்டிருந்த உயர் ஆன்ம பாண்டவர்களின் வலிமைமிக்கப் படைக்குள் ஊடுருவினான். ஒரு பக்கத்தில் அவனையும் {துரியோதனனையும்}, மறுபக்கத்தில் பிறரையும் கொண்டு அவர்களுக்கிடையில் நடந்த அந்த மோதல் மிகக் கடுமையானதாக இருந்தது. அந்நிகழ்வின் போது நேர்ந்த பேரழிவு பெரியதாக இருந்தது" {என்றான் சஞ்சயன்}.

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "அந்தப் பாண்டவப் படை இப்படிப் போருக்குச் சென்ற போது, அதற்குள் ஊடுருவிய துரியோதனன் பெரும் துயரில் நிறுத்தப்பட்டிருக்க வேண்டும். ஓ! சூதா, அவன் {துரியோதனன்} களத்தில் புறமுதுகிடவில்லை என நான் நம்புகிறேன். பயங்கரப் போரில் தனி ஒருவனுக்கும் பலருக்கும் இடையில் நடந்த அம்மோதல், அதிலும் அந்தத் தனி ஒருவன் {துரியோதனன்} மன்னன் எனும்போது அஃது {அம்மோதல்} ஒவ்வாதது எனவே எனக்குத் தோன்றுகிறது. அதையும்தவிர, பெரும் ஆடம்பரத்திலும், செல்வத்திலும், உடைமைகளிலும் வளர்க்கப்பட்ட துரியோதனன் மனிதர்களின் மன்னனுமாவான். தனியொருவனாகப் பலருடன் மோதிய அவன் {துரியோதனன்} போரிடுவதில் இருந்து புறமுதுகிடவில்லை என்றே நான் நம்புகிறேன்" என்றான் {திருதராஷ்டிரன்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தனி ஒருவனுக்கும், பலருக்கும் இடையில் நடந்த அம்மோதலில், உமது மகன் {துரியோதனன்} செய்த அற்புதமான போரை நான் உரைக்கையில் நீர் கேட்பீராக. உண்மையில், ஒரு யானையால் தடாகத்தில் உள்ள தாமரைக்கூட்டங்கள் கலங்கடிக்கப்படுவதைப் போல அந்தப் போரில் துரியோதனனால் பாண்டவப்படை கலங்கடிக்கப்பட்டது. அந்தப் படை உமது மகனால் {துரியோதனனால்} இப்படிக் கலங்கடிக்கப்படவதைக் கண்ட பாஞ்சாலர்கள், பீமசேனனின் தலைமையில் அங்கே விரைந்தனர்.

துரியோதனன், பத்து கணைகளால் பீமசேனனையும், மூன்றால் {மும்மூன்றால்} இரட்டையர்கள் {நகுலன் மற்றும் சகாதேவன் ஆகிய} ஒவ்வொருவரையும், ஏழால் மன்னன் யுதிஷ்டிரனையும் துளைத்தான். மேலும் அவன் விராடனையும், துருபதனையும் ஆறு கணைகளாலும், சிகண்டியை நூறாலும் துளைத்தான். திருஷ்டத்யும்னனை இருபது கணைகளால் துளைத்த அவன் {துரியோதனன்}, திரௌபதியின் மகன்கள் ஐவரில் ஒவ்வொருவரையும் மூன்று {மும்மூன்று} கணைகளால் தாக்கினான். அவன் {துரியோதனன்}, உயிரினங்களைக் கோபத்தில் கொல்லும் யமனைப் போலவே அந்தப் போரில் யானைகள் மற்றும் தேர்வீரர்கள் உள்ளடங்கிய, நூற்றுக்கணக்கான பிற போராளிகளைத் தன் கடுங்கணைகளால் வெட்டினான். பண்பட்ட பயிற்சியால் ஏற்பட்ட தன் திறனின் விளைவாகவும், தன் ஆயுதங்களின் பலத்தாலும் அவன் {துரியோதனன்} தனது எதிரிகளைத் தாக்கி வீழ்த்துவதில் ஈடுபட்டிருக்கையில், குறிபார்க்கும்போதோ, தன் கணைகளைத் தொடுக்கும்போதோ இடையறாமல் தன் வில்லை வட்டமாக வளைத்துக் கொண்டிருக்கும் நிலையிலேயே அவன் {துரியோதனன்} தெரிந்தான். உண்மையில் அவன் {துரியோதனன்} தன் எதிரிகளைக் கொல்வதில் ஈடுபட்டிருக்கையில், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கைப்பிடியைக் கொண்ட அவனது உறுதிமிக்க வில்லானது, எப்போதும் வட்டமாக வளைக்கப்பட்ட நிலையிலேயே மக்களால் காணப்பட்டது.

அப்போது மன்னன் யுதிஷ்டிரன், உமது மகன் {துரியோதனன்} போரில் போராடிக் கொண்டிருந்தபோது, ஓ! குரு குலத்தவரே {திருதராஷ்டிரரே}, பின்னவனின் வில்லை இரு பல்லங்களால் அறுத்தான். மேலும் யுதிஷ்டிரன் சிறப்பானவையும், முதன்மையானவையுமான பத்து கணைகளால் அவனையும் {துரியோதனனையும்} ஆழத் துளைத்தான். எனினும் அந்தக் கணைகள் துரியோதனனின் கவசங்களைத் [1] தொட்டதும் விரைவில் துண்டுகளாக நொறுங்கின. பிறகு, விருத்திரனைக் கொன்ற சக்ரனைப் பழங்காலத்தில் தேவர்களும், பெரும் முனிவர்களும் சூழ்ந்து கொண்டதைப் போல மகிழ்ச்சியால் நிறைந்த பார்த்தர்கள் யுதிஷ்டிரனைச் சூழ்ந்து கொண்டனர்.

[1] அது துரோணரால் பூட்டப்பட்ட கவசமாகும். பார்க்க: துரியோதனனுக்குக் கவசம் பூட்டிய துரோணர்

பிறகு, உமது வீர மகன் {துரியோதனன்} மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, பாண்டுவின் மகனான மன்னன் யுதிஷ்டிரனிடம், "நில், நிற்பாயாக" என்று சொல்லி அவனை {யுதிஷ்டிரனை} எதிர்த்து விரைந்தான். பெரும்போரில் இப்படி முன்னேறும் உமது மகனை {துரியோதனனைக்} கண்ட பாஞ்சாலர்கள், மகிழ்ச்சியாக, வெற்றியில் நம்பிக்கையுடன் அவனை வரவேற்க முன்னேறினர். அப்போது (குரு) மன்னனை {துரியோதனனைக்} காக்க விரும்பிய துரோணர், விரைந்து வருபவர்களான பாஞ்சாலர்களைச் சூறாவளியால் விரட்டப்படும் மழைநிறைந்த மேகத் திரள்களை ஏற்கும் ஒரு மலையைப் போல வரவேற்றார்.

பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பாண்டவர்களுக்கும், உமது வீரர்களுக்கும் இடையில் அங்கே நிகழ்ந்த போரானது, ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, மிகக் கடுமையானதாகவும், மயிர்ச்சிலிர்ப்பை ஏற்படுத்துவதாகவும் இருந்தது. (யுக முடிவில் ஏற்படும்) ருத்ரனின் விளையாட்டுக்கு ஒப்பாக அனைத்து உயிரினங்களுக்கும் அங்கே ஏற்பட்ட பேரழிவு பயங்கரமானதாக இருந்தது. அப்போது, தனஞ்சயன் {அர்ஜுனன்} இருந்த இடத்தில் பெரும் ஆரவாராம் ஒன்று எழுந்தது. அவ்வாரவாரமானது, ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, பிற ஒலிகளுக்கெல்லாம் மேலாக எழுந்து மயிர்ச்சிலிர்ப்பை உண்டாக்கியது. இப்படியே, ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, அர்ஜுனனுக்கும், உமது வில்லாளிகளுக்கும் இடையிலான போர் நடந்தது. இப்படியே உமது படைக்கு மத்தியில் சாத்யகிக்கும், உம்மவர்களுக்கும் இடையிலான போரும் நடந்தது. மேலும் இப்படியே துரோணருக்கும், அவரது எதிரிகளுக்கும் இடையிலான போரும் வியூகத்தின் வாயிலில் தொடர்ந்தது. உண்மையில், ஓ! பூமியின் தலைவரே {திருதராஷ்டிரரே}, அர்ஜுனன், துரோணர், வலிமைமிக்கத் தேர்வீரனான சாத்யகி ஆகியோர் அனைவரும் கோபத்தால் தூண்டப்பட்டிருந்த போது இப்படியே அந்தப் பேரழிவும் பூமியில் தொடர்ந்தது" {என்றான் சஞ்சயன்}. 


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்