Thursday, November 17, 2016

யுதிஷ்டிரனுக்கு ஆறுதலளித்த வியாசர்! - துரோண பர்வம் பகுதி – 183

Vyasa comforts Yudhishthira! | Drona-Parva-Section-183 | Mahabharata In Tamil

(கடோத்கசவத பர்வம் – 31)

பதிவின் சுருக்கம் : விதி, தங்கள் சொந்த மடமை மற்றும் கிருஷ்ணனின் கொள்கை ஆகியவையே கௌரவர்களின் தோல்விக்குக் காரணம் எனத் திருதராஷ்டிரன் சொல்வது; கடோத்கசனின் வீழ்ச்சியில் யுதிஷ்டிரனின் துயரம்; கர்ணனை எதிர்த்து கோபத்துடன் விரைந்த யுதிஷ்டிரன்; யுதிஷ்டிரனை அணுகி ஆறுதலளித்த வியாசர்...


திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! ஐயா {சஞ்சயா}, கர்ணன், சுபலனின் மகனான சகுனி ஆகியோரின் இந்தச் செயல்பாட்டையும், குறிப்பாக உனது செயல்பாட்டையும் கொள்கை விதிகளுக்கு முரணானதாக {அநீதியாக} நான் காண்கிறேன்.(1) உண்மையில் அந்த ஈட்டியானது {சக்தி ஆயுதமானது}, போரில் ஒருவனை எப்போதும் கொல்லும் என்பதையும், வாசவனை {இந்திரனைத்} தலைமையாகக் கொண்ட தேவர்களாலும் அது தாங்கிக்கொள்ளப் பட முடியாதது, அல்லது கலங்கடிக்கப்பட முடியாதது என்பதையும் நீங்கள் அறிந்திருந்தாலும்,(2) ஓ! சஞ்சயா, தேவகியின் மகனுடனோ {கிருஷ்ணனுடனோ}, பல்குனனுடனோ {அர்ஜுனனுடனோ} முன்பே கர்ணன் போரிட்ட போது, ஏன் அவன் {கர்ணன்} அஃதை ஏவவில்லை?” என்று கேட்டான் {திருதராஷ்டிரன்}.(3)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஒவ்வொரு நாளும் போரில் இருந்து நாங்கள் அனைவரும் திரும்பியதும், ஓ! ஏகாதிபதி, ஓ! குரு குலத்தில் முதன்மையானவரே {திருதராஷ்டிரரே}, இரவில் விவாதித்து, கர்ணனிடம், “ஓ! கர்ணா, நாளை காலையில், ஓ! கர்ணா, இந்த ஈட்டியானது கேசவன் {கிருஷ்ணன்} மீதோ, அர்ஜுனன் மீதோ ஏவப்பட வேண்டும்” என்று சொல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தோம் [1].(4,5) எனினும், காலை விடிந்ததும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, விதியின் காரணமாகக் கர்ணனும், பிற தேர்வீரர்களும் அந்தத் தீர்மானத்தை மறந்தனர்.(6) கைகளில் அந்த ஈட்டியைக் கொண்டிருந்தும், பார்த்தனையோ {அர்ஜுனனையோ}, தேவகியின் மகனான கிருஷ்ணனையோ கர்ணன் கொல்லவில்லை என்பதால் விதியே உயர்ந்தது என நான் நினைக்கிறேன்.(7) உண்மையில், விதியால் அவனது {கர்ணனின்} அறிவு பீடிக்கப்பட்டதாலேயே, வாசவனின் {இந்திரனின்} மரண ஈட்டியை {சக்தி ஆயுதத்தைத்} தன் கையில் கொண்டிருந்தாலும், தேவர்களின் மாயையில் மயங்கிய அவன் {கர்ணன்}, ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, தேவகியின் மகனான கிருஷ்ணனின் அழிவுக்காக அவன் {கிருஷ்ணன்} மீதோ, இந்திரனின் ஆற்றலைக் கொண்ட பார்த்தனின் மீதோ அதை வீசவில்லை” {என்றான் சஞ்சயன்}.(8,9)

[1] பத்தாம் நாள் இரவில் இருந்து பதிமூன்றாம் நாள் இரவு வரை, அதாவது தொடர்ச்சியாக நான்கு இரவுகள் இவ்வாறு ஆலோசித்து விவாதித்ததாகச் சஞ்சயன் இங்கே சொல்கிறான்.

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “விதியாலும், உங்கள் சொந்த புத்தியாலும், கேசவனாலும் {கிருஷ்ணனாலும்} நீங்கள் அழிவை அடைந்தீர்கள். துரும்பைப் போன்று முக்கியத்துவமற்ற கடோத்கசனைக் கொல்லச் செய்து வாசவனின் {இந்திரனின்} ஈட்டியைத் தொலைத்துவிட்டீர்கள்.(10) இந்தப் பெரும் விவேகமற்ற செயலின் மூலமாக, பிற மன்னர்களைப் போலவே கர்ணனும், என் மகன்களும் ஏற்கனவே யமனின் வசிப்பிடத்திற்குள் நுழைந்துவிட்டார்கள்.(11) ஹிடிம்பை மகனின் {கடோத்கசனின்} வீழ்ச்சிக்குப் பிறகு, குருக்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையில் மீண்டும் எவ்வாறு போர் நடைபெற்றது என்பதை எனக்கு இப்போது சொல்வாயாக.(12) துரோணரை எதிர்த்து விரைந்தவர்களும், தாக்குவதில் நல்ல திறன் பெற்றவர்களுமான சிருஞ்சயர்களும், பாஞ்சாலர்களும் போரிடுவதற்காக எவ்வாறு அணிவகுத்தனர்?(13) 

பூரிஸ்ரவஸ் மற்றும் தன் உயிரையே துச்சமாக மதித்த ஜெயத்ரதன் ஆகியோரின் கொலையால் கோபத்தால் தூண்டப்பட்டு, கொட்டாவி விடும் புலியைப் போன்றோ, வாயை அகல விரித்திருந்த காலனுக்கோ ஒப்பாக அவர்களை எதிர்த்து, அவர்களது படைக்குள் ஊடுருவிய துரோணரின் தாக்குதலை, பாண்டுக்களும், சிருஞ்சயர்களும் எவ்வாறு தாக்குப் பிடித்தனர்?(14,15) ஓ! ஐயா {சஞ்சயா}, துரோணரைப் பாதுகாத்தவர்களான துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, கர்ணன், கிருபர் மற்றும் துரியோதனன் தலைமையிலான பிறர் ஆகியோர் என்ன செய்தனர்?(16) ஓ! சஞ்சயா, பரத்வாஜரின் மகனை {துரோணரைக்} கொல்ல வேண்டிய தனஞ்சயன் {அர்ஜுனன்} மற்றும் விருகோதரன் {பீமன்} ஆகியோரின் கணைகளை எனது போர்வீரர்கள் அந்தப் போரில் எவ்வாறு மறைத்தனர்?(17) தங்கள் தரப்பு இழப்பைத் தாங்கிக் கொள்ள முடியாதவர்களான சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} மரணத்தால் கோபமடைந்தவர்களும், கடோத்கசனின் மரணத்தால் கோபமடைந்தவர்களுமான ஒவ்வொருவரும் அந்த இரவுப்போரை எவ்வாறு போரிட்டனர்?” என்று கேட்டான் {திருதராஷ்டிரன்}.(18)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த இரவில் ராட்சசன் கடோத்கசன் கர்ணனால் கொல்லப்பட்டதும், மகிழ்ச்சியால் நிறைந்த உமது துருப்பினர் அனைவரும் உரக்க முழங்கினர்.(19) இரவின் அந்த இருட்டு வேளையில் அவர்கள், பாண்டவத் துருப்புகள் மீது மூர்க்கமாகப் பாய்ந்து அவர்களைக் கொல்லத் தொடங்கினர். இவை யாவற்றையும் கண்ட மன்னன் யுதிஷ்டிரன் பெரிதும் உற்சாகத்தை இழந்தான்.(20)

பிறகு, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {திருதராஷ்டிரரே}, அந்த வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பாண்டு மகன் {யுதிஷ்டிரன்}, பீமசேனனிடம், “ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {பீமா}, தார்தராஷ்டிரப் படையைத் தடுப்பாயாக.(21) ஹிடிம்பை மகன் {கடோத்கசன்} கொல்லப்பட்டதன் விளைவால், பெரும் மயக்கம் என்னை ஆட்கொள்கிறது” என்றான் {யுதிஷ்டிரன்}. இப்படி அவன் {யுதிஷ்டிரன்}, பீமசேனனிடம் ஆணையிட்டுவிட்டுத் தன் தேரில் அமர்ந்தான்.(22) கண்ணீர் நிறைந்த முகத்துடன் மீண்டும் மீண்டும் பெருமூச்சுவிட்ட அந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, கர்ணனின் ஆற்றலைக் கண்டு பெரிதும் உற்சாகத்தை இழந்தான்.(23)

இந்த அளவுக்குப் பீடிக்கப்பட்ட அவனை {யுதிஷ்டிரனைக்} கண்ட கிருஷ்ணன் இந்த வார்த்தைகளை {அவனிடம்} சொன்னான்: “ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரரே}, இத்தகு துயரம் உமதாக வேண்டாம். ஓ! பாரதர்களின் தலைவரே {யுதிஷ்டிரரே}, சாதாரணமானவனைப் போல இப்படி நீர் உற்சாகத்தை இழப்பது உமக்குத் தகாது. ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, எழுவீராக, போரிடுவீராக. ஓ! தலைவா {யுதிஷ்டிரரே}, கனமான சுமையைச்  சுமப்பீராக {பெரும் பொறுப்பை ஏற்பீராக}.(24,25) உற்சாகமற்ற நிலை உம்மை மூழ்கடித்தால், நமது வெற்றி உறுதியற்றதாகவிடும்” என்றான் {கிருஷ்ணன்}.

கிருஷ்ணனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட தர்மனின் மகன் யுதிஷ்டிரன்,(26) தன் கரங்களால் தன் கண்களைத் துடைத்துக் கொண்டு கிருஷ்ணனிடம், “ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {கிருஷ்ணா}, கடமையின் சிறந்த பாதையை நான் அறியாதவனல்ல.(27) பிறர் கரங்களில் பெற்ற சேவைகளை {உதவிகளை} மறந்தவன், பிராமணனைக் கொன்றதால் ஏற்படும் கொடும் விளைவுகளை அடைவான். நாங்கள் காடுகளில் வாழ்ந்து கொண்டிருந்த போது, ஹிடிம்பையின் உயர் ஆன்ம மகன் {கடோத்கசன்} வெறும் குழைந்தையே எனினும்,(28) ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, அவன் எங்களுக்குப் பல சேவைகளைச் செய்தான். வெண்குதிரைகளைக் கொண்ட பார்த்தன் {அர்ஜுனன்}, ஆயுதங்களை அடைவதற்காகச் சென்றுவிட்டான் என்பதை அறிந்த(29) அந்தப் பெரும் வில்லாளி (கடோத்கசன்), ஓ! கிருஷ்ணா, காம்யகத்திலிருந்த என்னிடம் வந்தான். தனஞ்சயன் {அர்ஜுனன்} திரும்பி வரும் வரை அவன் {கடோத்கசன்} எங்களோடே வசித்தான்.(30)

அடைவதற்கரிய காடுகளுக்குச் சென்ற போது, களைத்துப் போயிருந்த பாஞ்சால இளவரசியை {திரௌபதியை} தன் முதுகில் அவனே {கடோத்கசனே} சுமந்து வந்தான்.(31) ஓ! தலைவா {கிருஷ்ணா}, அவன் அடைந்த சாதனைகள், அவன் போர்முறைகள் அனைத்திலும் திறம்பெற்றவன் என்பதைக் காட்டுகின்றன. உண்மையில், அந்த உயர் ஆன்மா கொண்டவன் {கடோத்கசன்}, என் நன்மைக்காகவே பல கடினமான சாதனைகளை அடைந்தான்.(32) ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, சகாதேவனிடம் நான் இயல்பாகக் கொண்டுள்ளதைப் போன்று, இரு மடங்கு பாசத்தை நான் ராட்சசர்களின் இளவரசனான கடோத்கசன் மீது கொண்டிருந்தேன்.(33) அந்த வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவன் என்னிடம் அர்ப்பணிப்புடன் இருந்தான். நான் அவனது அன்புக்குரியவனாக இருந்தேன். அவனும் எனக்கு அன்புக்குரியவனாக இருந்தான். ஓ! விருஷ்ணி குலத்தோனே {கிருஷ்ணா}, இதற்காகவே துயரால் எரிந்து நான் இப்படி உற்சாகத்தை இழந்திருக்கிறேன்.(34)

ஓ! விருஷ்ணி குலத்தோனே {கிருஷ்ணா}, நம் துருப்புகள் கௌரவர்களால் பீடிக்கப்பட்டு முறியடிக்கப்படுவதைப் பார்ப்பாயாக. வலிமைமிக்கத் தேர்வீரர்களான துரோணரும், கர்ணனும் போரில் ஊக்கத்தோடு போரிடுவதைப் பார்ப்பாயாக.(35) மதங்கொண்ட இரு யானைகளால் பரந்த புதர்க்காடு நசுக்கப்படுவதைப் போல இந்த நள்ளிரவில் பாண்டவப்படை நசுக்கப்படுவதைப் பார்ப்பாயாக.(36)

ஓ! மாதவா {கிருஷ்ணா}, பீமசேனனுடைய கரங்களில் வலிமையையும், பார்த்தன் {அர்ஜுனன்} கொண்டிருக்கும் பல்வேறு வகைகளிலான ஆயுதங்களையும் அலட்சியம் செய்தபடியே கௌரவர்கள் தங்கள் ஆற்றலை வெளிப்படுத்துகின்றனர் {அல்லவா?}.(37) அதோ, போரில் அந்த ராட்சசனை {கடோத்கசனைக்} கொன்றுவிட்டு, துரோணர், கர்ணன் மற்றும் மன்னன் துரியோதனன் ஆகியோர் உரக்க முழங்குகின்றனர்.(38) ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, நாங்களும், நீயும் உயிரோடிருக்கும்போதே, சூதன் மகனோடு {கர்ணனோடு} போரிட்ட ஹிடிம்பையின் மகன் {கடோத்கசன்} கொல்லப்பட்டான்.(39) சவ்யசச்சின் {அர்ஜுனன்} பார்த்துக் கொண்டிருக்கம்போதே, நமக்கு மத்தியில் பெரும் அழிவை ஏற்படுத்தி, பெரும்பலம் மிக்கப் பீமசேனன் மகனான ராட்சசன் கடோத்கசனைக் கர்ணன் கொன்றுவிட்டான்.(40)

தீய தார்தராஷ்டிரர்களால் அபிமன்யு கொல்லப்பட்ட போது, ஓ! கிருஷ்ணா, வலிமைமிக்கத் தேர்வீரனான சவ்யசச்சின் {அர்ஜுனன்} போர்க்களத்தில் இருக்கவில்லை.(41) நாங்கள் அனைவரும் சிந்துக்களின் சிறப்புமிக்க ஆட்சியாளனால் {ஜெயத்ரதனால்} தடுக்கப்பட்டிருந்தோம். தன் மகனுடன் (அஸ்வத்தாமனுடன்) கூடிய துரோணரே, அந்தச் செயலுக்குக் காரணமாக அமைந்தார்.(42) ஆசானே {துரோணரே} கர்ணனிடம் அபிமன்யுவைக் கொல்வதற்கான வழிமுறைகளைச் சொன்னார். அபிமன்யு வாளுடன் போராடிக் கொண்டிருந்த போது, ஆசானே அந்த ஆயுதத்தை வெட்டினார்.(43) {அபிமன்யு} அத்தகு பரிதாப நிலையில் வீழ்ந்திருந்த போது, கிருதவர்மன், (அந்தப் பிள்ளையின்) குதிரைகளையும், இரண்டு பார்ஷினி சாரதிகளையும் மிகக் கொடூரமாகக் கொன்றான்.(44) அதன்பிறகே பெரும் வில்லாளிகளான பிறர் சுபத்திரையின் மகனைக் {அபிமன்யுவைக்} கொன்றனர். ஓ! கிருஷ்ணா, சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} சிறு குற்றத்திற்காகக் காண்டீவதாரியால் {அர்ஜுனனால்} கொல்லப்பட்டான்.

ஓ! யாதவர்களில் முதன்மையானவனே {கிருஷ்ணா}, அச்செயல் {ஜெயத்ரதனின் கொலை} எனக்குப் பெருமகிழ்ச்சியை அளிக்கவில்லை. எதிரிகளைக் கொல்வது நியாயமென்றால், அது பாண்டவர்களால் அடையப்பட வேண்டுமென்றால்,(46) இதற்கு {அதாவது ஜெயத்ரதனைக் கொல்வதற்கு} முன்பாகத் துரோணரும், கர்ணனும் கொல்லப்பட்டிருக்க வேண்டும். இதையே நான் நினைக்கிறேன். நம் துன்பங்களுக்கு அவ்விருவரே ஆணிவேராக இருக்கின்றனர்.(47) போரில் அவ்விருவரையும் (தன் கூட்டாளிகளாக) அடைந்த சுயோதனன் {துரியோதனன்}, நம்பிக்கையை அடைந்தான் {தைரியமடைந்தான்}. உண்மையில், துரோணரோ, தன்னைப் பின்தொடர்பவர்களுடன் கூடிய சூதன் மகனோ {கர்ணனோ}(48) கொல்லப்பட வேண்டிய போது, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்}, இவ்விவகாரத்தில் மிகத் தொலைவான தொடர்பைக் கொண்ட {அதாவது நெருங்கிய தொடர்பற்றச்} சிந்து மன்னனை {ஜெயத்ரதனைக்} கொன்றான். சூதன் மகனை {கர்ணனை} நிச்சயம் நான் தண்டிக்க வேண்டும்.(49) எனவே, ஓ! வீரா {கிருஷ்ணா}, சூதன் மகனை {கர்ணனைக்} கொல்ல இப்போது நான் போரிடப் போகிறேன். வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பீமசேனன் இப்போது துரோணரின் படைப்பிரிவுடன் போரிட்டுக் கொண்டிருக்கிறான்” என்று மறுமொழி கூறினான் {யுதிஷ்டிரன்}.(50)

கிருஷ்ணனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்ன யுதிஷ்டிரன், கர்ணனை எதிர்த்து வேகமாகச் சென்று, உறுதிமிக்கத் தன் வில்லை வளைத்து, தன் சங்கைக் கடுமையாக முழக்கினான்.(51) பிறகு, ஆயிரம் தேர்கள், முன்னூறு யானைகள், ஐயாயிரம் குதிரைகள் ஆகியவற்றுடன் கூடிய பாஞ்சால மற்றும் பிரபத்ரகப் படையொன்றால் சூழப்பட்ட சிகண்டி, அம்மன்னனை {யுதிஷ்டிரனைப்} பின்தொடர்ந்து சென்றான். யுதிஷ்டிரனின் தலைமையிலான கவசம் பூண்ட பாஞ்சாலர்களும், பாண்டவர்களும், தங்கள் பேரிகைகளையும், சங்குகளையும் முழக்கினர். அந்த நேரத்தில் வலிய கரங்களைக் கொண்ட வாசுதேவன் {கிருஷ்ணன்}, தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்},(52-54) “அதோ யுதிஷ்டிரர், கோபத்தால் நிறைந்து, சூதன் மகனை {கர்ணனைக்} கொல்ல விரும்பி, பெரும் வேகத்தோடு செல்கிறார். இதில் நீ அவரை {யுதிஷ்டிரரைச்} சார்ந்திருப்பது முறையாகாது” என்றான்.(55) இதைச் சொன்ன ரிஷிகேசன் {கிருஷ்ணன்}, குதிரைகளை வேகமாகத் தூண்டினான். உண்மையில் ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} மன்னனை {யுதிஷ்டிரனைத்} தொடர்ந்து சென்ற போது அவன் {யுதிஷ்டிரன்} மிகத்தொலைவை அடைந்திருந்தான்.(56)

அந்த நேரத்தில் துயரில் பீடிக்கப்பட்டிருந்த மனத்தைக் கொண்டிருந்தவனும், நெருப்பால் எரிக்கப்பட்டது போலத் தெரிந்தவனும், சூதன் மகனை {கர்ணனைக்} கொல்ல விரும்பி வேகமாக விரைந்தவனுமான தர்மனின் மகனான யுதிஷ்டிரனைக் கண்டு, அவனை {யுதிஷ்டிரனை} அணுகிய வியாசர் அவனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னார்.(57) வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, “போரில் கர்ணனுடன் மோதியிருப்பினும் பல்குனன் {அர்ஜுனன்} இன்னும் வாழ்வது நற்பேறாலேயே. உண்மையில் கர்ணன், சவ்யசச்சினை {அர்ஜுனனைக்} கொல்லும் விருப்பத்திலேயே தன் ஈட்டியை {சக்தி ஆயுதத்தை}வைத்திருந்தான்.(58) ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, ஜிஷ்ணு {அர்ஜுனன்} கர்ணனுடன் தனிப்போரில் ஈடுபடாதது நற்பேறாலேயே. அந்நிலையில் ஒருவரையொருவர் அறைகூவி அழைக்கும் அவர்கள் தங்கள் தெய்வீக ஆயுதங்களை அனைத்து பக்கங்களிலும் ஏவி இருப்பார்கள்.(59) சூதன் மகனுடைய {கர்ணனுடைய} ஆயுதங்களை அர்ஜுனன் அழித்திருப்பான். பின்னவனால் {அர்ஜுனனால்} பீடிக்கப்படும் முன்னவன் {கர்ணன்}, ஓ! யுதிஷ்டிரா, அந்தப் போரில் நிச்சயம் இந்திரனின் ஈட்டியை வீசியிருப்பான்.(60) ஓ! பாரதக் குலத்தில் முதன்மையானவனே, (இது நடந்திருந்தால்) உனது துயரம் இன்னும் பெரிதாக இருந்திருக்கும். ஓ! கௌரவங்களை அளிப்பவனே {யுதிஷ்டிரா}, சூதன் மகனால் {கர்ணனால்} போரில் அந்த ராட்சசன் {கடோத்கசன்} கொல்லப்பட்டது நற்பேறாலேயே.(61) உண்மையில், வாசவனின் {இந்திரனின்} ஈட்டியைக் கருவியாக மட்டுமே கொண்டு காலனே கடோத்கசனைக் கொன்றான். ஓ! ஐயா {யுதிஷ்டிரா}, போரில் அந்த ராட்சசன் {கடோத்கசன்} உனது நன்மைக்காகவே கொல்லப்பபட்டான்.(62)

ஓ! பாரதக் குலத்தில் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, கோபவசப்படாதே, உன் இதயத்தைத் துயரில் நிலைநிறுத்தாதே. ஓ! யுதிஷ்டிரா, இதுவே இவ்வுலகின் உயிரினங்கள் அனைத்திற்குமான முடிவாகும்.(63) ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, உன் தம்பிகளுடனும், (உனது படையின்) சிறப்புமிக்க மன்னர்கள் அனைவருடனும் சேர்ந்து கௌரவர்களுடன் போரிடுவாயாக.(64)

இன்றிலிருந்து ஐந்தாம் நாளில் பூமி உனதாகும். ஓ! மனிதர்களில் புலியே, எப்போதும் அறம் குறித்தே {நல்லதையே} நினைப்பாயாக.(65) ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, மகிழ்ச்சியான இதயத்துடன் (அனைத்து உயிரினங்களிடமும்) அன்பு, தவம், ஈகை, பொறுமை மற்றும் உண்மை ஆகியவற்றைப் பயில்வாயாக. நீதி {அறம், தர்மம்} எங்கிருக்குமோ, அங்கே தான் வெற்றியிருக்கும்” என்றார் {வியாசர்}. பாண்டுவின் மகனிடம் {யுதிஷ்டிரனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்ன வியாசர், அப்போதே அங்கேயே மறைந்து போனார்” {என்றான் சஞ்சயன்}.(66)

கடோத்கசவத பர்வம் முற்றும்

-------------------------------------------------------------------------------------------
துரோணபர்வம் பகுதி- 183ல் உள்ள சுலோகங்கள் : 66

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்