Wednesday, December 21, 2016

துரோண பர்வச் சுவடுகளைத் தேடி!



“ஒரே கருவில் பிறந்தோர் உறவைவிட, நல்லோருடன் நல்லோர் கொள்ளும் தோழமையே மேன்மையானது என்று விவேகிகளின் சொல்கின்றனர்”
- கர்ணனிடம் பீஷ்மர், துரோண பர்வம் பகுதி 4

துரோண வதத்தை மொழிபெயர்த்த போது, நான் நன்கறிந்த ஒரு மனிதரை இழந்தது போன்ற உணர்வை துரோணாச்சாரியரின் மறைவு எனக்குத் தந்தது. கதைகள், வரலாறுகள், புராணங்கள் ஆகியவற்றைப் படிக்கும்போது, அவற்றில் வரும் கதாப்பாத்திரங்களோடு ஒன்றி, அவர்களை நம்மில் ஒருவராக எண்ணுவது மானுட மனத்தின் இயல்பே. அவ்வகையில் துரோணர், மகாபாரதக் கால இளவரசர்களுக்கு மட்டுமல்ல; காலங்கள் நெடுகத் தோன்றிய மொத்த பாரத மனங்களுக்கும் ஆசானே என்றால் அது மிகையல்ல. துரோணரின் வதம் முடிந்த சில நாட்களுக்குள் நேர்ந்த திரு.சோ ராமசாமி அவர்களின் மறைவும், ஓர் ஆசானை இழந்த வலியையே தந்தது. கிசாரி மோகன் கங்குலியின் ஆங்கில மகாபாரதத்தைப் படிக்கத்தூண்டியது, திரு.சோ ராமசாமி அவர்கள் எழுதிய “மஹாபாரதம் பேசுகிறது” புத்தகமே. அதனுடன் ஒன்றிப்போனவனாக இருப்பினும், இவ்வளவு நாளும் அவரோடு பேச வேண்டும் என்று கூட நான் நினைத்ததில்லை. நல்லோனாகி, மேற்கண்ட பீஷ்மரின் சொற்களை இனியாவது என் வாழ்நாளில் பின்பற்ற வேண்டும் என்று நினைக்கிறேன்.


இந்த ஞாயிறன்று துரோண பர்வம் பகுதி 203-ஐ மொழிபெயர்த்துக் கொண்டிருந்தபோது நண்பர் திரு.ஜெயவேலன் அவர்கள் வந்தார். மொழிபெயர்ப்பதை நிறுத்திவிட்டுக் கொஞ்ச நேரம் அவரோடு பேசிக் கொண்டிருந்தேன். ரூ.2000/- தாள்கள் சிலவற்றை எடுத்தார். “நாடெல்லாம் பணப்பற்றாக்குறைனு சொல்றாங்க. கஷ்டப்பட்டு எடுத்திருப்பீங்களே” என்று கேட்டேன். “ரெண்டு வாரத்துக்கு முன்ன இருந்தே ஒவ்வொரு நாளும் ஏடிஎம்க்குப் போய் 2000, 2000மா எடுத்தேன்” என்றார். “நேரடியா பேங்குக்கே போனா மொத்தமா எடுக்க முடியாதா?” என்று கேட்டேன். “எடுக்கலாமா இருக்கும். இருந்தாலும் யாருங்க அவ்வளவு பெரிய கியூவுல நிப்பாங்க?” என்றார். “ஏடிஎம்லையும் பெரிய கியூதானே நிக்குது?” என்று கேட்டேன். “அந்தக் கியூவுக்கு இந்தக் கியூ எவ்வளவோ பரவாயில்லைங்க” என்று சொல்லிக் கொண்டே ரூ.20,400/-ஐ என்னிடம் கொடுத்தார். துரோண பர்வத்தின் தொடக்கத்தில் பீஷ்மர், “ஆறுகளுக்குப் பெருங்கடலும், ஒளிக்கோள்களுக்குச் சூரியனும், உண்மைக்கு நேர்மையானவர்களும், விதைகளுக்கு வளமான நிலமும், அனைத்து உயிரினங்களுக்கு மேகங்களும் இருப்பது போலவே உன் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் நீ இருப்பாயாக” என்று கர்ணனிடம் சொல்வதாக இருக்கிறது. அந்த வாக்கியத்திற்குச் சாலப் பொருந்துபவர் நண்பர் திரு.ஜெயவேலன் அவர்கள் என்றால் அது மிகையல்ல. இன்று {21.12.2016} அவருடைய பிறந்தநாள். வாழ்த்துகள் நண்பரே.

ஆதிபர்வத்தின் முதல் பகுதியான அனுக்ரமானிகா உபபர்வத்தில், மகாபாரதம் மரமென்றால், துரோண பர்வம் அதன் இலைகளைப் போன்றது என்று சொல்லப்பட்டுள்ளது. ஐந்து நாள் போரை எவ்வளவு விரிவாக எடுத்துச் சொல்கிறது இந்தப் பர்வம் என்பது பிரம்மிப்பையே ஏற்படுத்துகிறது. போர்க்களத்தின் ஒவ்வொரு பகுதியிலும் நடந்த தனிப்போர்களையும், ஒவ்வொரு போராளியின் உணர்வுகளையும் நுணுக்கமாகச் சொல்கிறது. ஒரு முறை மொழிபெயர்த்துக் கொண்டிருந்தபோது, “அப்பாடா, கடைசில கொன்னுட்டீங்களா?” என்ற குரல் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பினேன். அருகில் இருந்து அப்படி ஆச்சரியமடைந்தது என் மனைவி லட்சுமி என்பதை அறிந்து, “ஏன்? என்னாச்சு?” என்றேன். “ஜெயத்ரதனக் கொல்லப்போறேன்னு சொல்லிக் கிளம்புன அர்ஜுனன், போறான், போறான் போயிகிட்டே இருக்கானேன்னு நினைச்சேன். கடைசியா கொன்னிட்டீங்களே?” என்றாள். அவ்வளவு விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது ஜெயத்ரதவத பர்வம். அதுபோலவே துரோண பர்வம் முழுமையும்.

துரோண பர்வத்தில் 170 பகுதிகளும், 8,909 சுலோகங்களும் உள்ளன என்றும் ஆதிபர்வத்தின் சங்கிரக உபபர்வத்தில் சொல்லப்பட்டுள்ளது. நமது மொழிபெயர்ப்பில் இந்தப் பர்வம் 204 பகுதிகளைக் கொண்டிருக்கிறது, சுலோகங்களை இன்னும் எண்ணவில்லை. கிசாரி மோகன் கங்குலியின் பதிப்பிலும், மன்மதநாததத்தரின் பதிப்பிலும் அவ்வாறே இருக்கின்றன. துரோண பர்வத்தின் பகுதி 131ல் இருந்து, ஒவ்வொரு பகுதியிலும் சுலோக எண்கள் குறிக்கப்படுகின்றன. Sacred Texts வலைத்தளத்தில் உள்ள கங்குலியில் பதிப்பை மொழிபெயர்த்துக் கொண்டிருந்த எனக்கு, ஒரு வலைத்தளத்தில் கங்குலியின் புத்தகமே பிடிஎப் கோப்பாகக் கிடைத்தது. இரண்டாம் பதிப்பான அப்புத்தகத்தில் சுலோக எண்கள் குறிக்கப்பட்டிருந்தன. சுலோக எண்களுடன் இருப்பது, பிற்காலத்தில் மூலத்துடன் ஒப்பு நோக்க ஏதுவாக இருக்கும் என்பதற்காக, அப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளபடியே சுலோக எண்களைக் குறித்து வருகிறேன். துரோண பர்வம் முழுமைக்கும் சுலோக எண்களைப் பின்னர்க் குறிக்க வேண்டும்.

துரோண பர்வத்தின் இடையில் பீமனிடமும், சாத்யகியிடமும் கர்ணன் பலமுறை பின்வாங்குவதைப் படித்துவிட்டு, அதைக் கண்டித்துச் சிலர் மின்னஞ்சல்களை அனுப்பினர்; சிலர் முகநூல் பின்னூட்டங்களில் அதைத் தெரிவித்தனர். கர்ணன்தான் பெரிய வீரன் என்றும், அர்ஜுனன் கோழை என்றும் பொருள்படும்படியாக அவற்றின் சாரம் இருந்தது. எனக்கு ஆச்சரியமாக இருந்தது என்னவென்றால், அவர்களில் சிலர் மகாபாரதமே பொய் என்று சொல்லிக் கொண்டிருந்ததுதான். அந்த அளவில் கர்ணன் பாராட்டுக்குரியவனே. பெரும்பாடு என்னவென்றால், இருப்பதைத் தான் நான் மொழிபெயர்க்கிறேன் என்பதை அவர்களுக்கு எடுத்துரைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது. அடுத்து வரப் போவது கர்ண பர்வம். கர்ணனின் சிறப்புகள் பலவற்றைச் அதில் சொல்லியிருந்தாலும், சில இடங்களில் கர்ணன் பின்வாங்கும் சம்பவங்களும் இருக்கின்றன. விமர்சனங்களும் வரத்தான் போகின்றன. எனினும், அப்படி விமர்சிப்பவர்களும் கூட, இந்த மொழிபெயர்ப்பின் உண்மைத்தன்மையை நிச்சயம் உணர்வார்கள் என்று நம்புகிறேன்.

ஆதிபர்வம் இன்னும் பிழைதிருத்தம் முடியவில்லை. அதனால் அச்சுக்கு இன்னும் செல்லவில்லை. ஆடியோ கோப்புகளைப் பொறுத்தவரை திருமதி.தேவகி ஜெயவேலன் அவர்களின் பணிச்சுமையின் காரணமாக அது சற்றுத் தொய்வடைந்திருக்கிறது. துரோண பர்வத்தின் முழுப் பகுதிகளையும் நண்பர் திரு.செல்வராஜ் ஜெகன் அவர்கள் தொகுத்து அனுப்பி வைத்திருக்கிறார். இன்னும் கொஞ்ச நாட்களில் அதைப் பிடிஎப் ஆக்கி பதிவிறக்கத்திற்குக் கொடுக்க வேண்டும். முழு மஹாபாரதம் 7 பர்வங்களையும் சேர்த்து இதுவரை 1228 பகுதிகள் நிறைவடைந்திருக்கின்றன. எஞ்சியவை இன்னும் 887 பகுதிகள். அதில் பெரிய பர்வங்களாகச் சாந்தி பர்வம் 345 பகுதிகளும், அனுசாசன பர்வம் 145 பகுதிகளும் இருக்கின்றன.

அடுத்து வரப் போகும் கர்ண பர்வம் 96 பகுதிகளைக் கொண்டது. விரைவில் மொழிபெயர்க்கத் தொடங்க வேண்டும். டிசம்பர் மாதம் 24 & 25ம் தேதி கோவையில் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பில் நடைபெறும், 2016ஆம் ஆண்டின் விஷ்ணுபுரம் விருது விழாவுக்குச் செல்லப் போகிறேன். அங்குச் சென்று திரும்பியதும் தொடங்கலாம் என்று இருக்கிறேன். அனைத்தும் பரமன் சித்தம்.

அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்
21.12.2016

பின்குறிப்பு: கர்ண பர்வம் மொழிபெயர்ப்பு அனுமன் ஜெயந்தியான இன்று தொடங்கப்படுகிறது.
28.12.2016




மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்