Monday, February 06, 2017

சகுனி மற்றும் உலூகனின் வெற்றி! - கர்ண பர்வம் பகுதி – 25

The Victory of Shakuni and Uluka! | Karna-Parva-Section-25 | Mahabharata In Tamil


பதிவின் சுருக்கம் : யுயுத்சுவுக்கும் உலூகனுக்கும் இடையில் நடந்த மோதல்; யுயுத்சுவை வென்ற உலூகன்; சுருதகர்மனுக்கும், நகுலனின் மகனான சதானீகனுக்கும் இடையில் நடந்த மோதல்; சகுனிக்கும் பீமனின் மகனான சுதசோமனுக்கும் இடையில் நடந்த மோதல்; சகுனியின் ஆற்றல்; வாளின் ஆற்றலை வெளிப்படுத்திய சுதசோமன்; தரையில் நின்று போரிட்ட சுதசோமனை வியந்த தேவர்கள்; சுதசோமனின் வாளை வெட்டிய சகுனி; அர்ஜுனன் மகனான சுருதகீர்த்தியின் தேரில் ஏறிக்கொண்ட சுதசோமன்...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “உமது மகனின் {துரியோதனனின்} பரந்த படையை முறியடித்துக் கொண்டிருந்த யுயுத்சுவை எதிர்த்து, “நில், நில்” என்று சொன்னபடியே உலூகன் வேகமாகச் சென்றான்.(1) அப்போது யுயுத்சு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, (இந்திரனே} வஜ்ர்த்தால் ஒரு மலையைத் தாக்குவதைப் போல, பெரும் சக்தியுடன் சிறகு படைத்த கூர்முனைக் கணையொன்றால் உலூகனைத் தாக்கினான்.(2) இதனால் சினத்தில் நிறைந்த உலூகன், அந்தப் போரில் உமது மகனின் {யுயுத்சுவின்}[1] வில்லைக் கத்தித்தலை கணையொன்றால் {க்ஷுரப்ரத்தால்} வெட்டி, முள்பதித்த கணையொன்றால் {கர்ணியால்} உமது மகனையும் {யுயுத்சுவையும்} தாக்கினான்.(3) உடைந்த அந்த வில்லை வீசியெறிந்த யுயுத்சு, கோபத்தால் கண்கள் சிவந்து, பெரும் வேகத்தைக் கொண்ட மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டான்.(4) ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, பிறகு அந்த இளவரசன், அறுபது கணைகளால் உலூகனைத் துளைத்தான். அடுத்ததாக உலூகனின் சாரதியைத் துளைத்த யுயுத்சு, மீண்டும் உலூகனையும் தாகினான்.(5)


[1] திருதராஷ்டிரனுக்கு ஒரு வைசியப் பெண்மணியிடம் மகனாகப் பிறந்தவனாவான். இவன் திருதராஷ்டிரனின் 100 மகன்கள் பட்டியலில் இடம்பெறுபவன் அல்லன். பாண்டவர்கள் இறுதி நெடும்பயணத்தை மேற்கொண்ட போது பரீக்ஷித்தை இந்த யுயுத்சுவின் பாதுகாப்பின் கீழேயே விட்டுச் சென்றனர்.

அப்போது சினத்தால் நிறைந்த உலூகன், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட இருபது கணைகளால் யுயுத்சுவைத் துளைத்து, பிறகு தங்கத்தால் ஆன அவனது {யுயுத்சுவின்} கொடிமரத்தையும் வெட்டினான்.(6) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உயர்ந்ததும், அழகானதும், தங்கத்தாலானதுமான அந்தக் கொடிமரம் (உலூகனால்) வெட்டப்பட்டு, யுயுத்சுவின் தேருக்கு முன்பாகக் கீழே விழுந்தது.(7) தன் கொடிமரம் வெட்டப்பட்டதைக் கண்ட யுயுத்சு, கோபத்தால் தன் உணர்வுகளை இழந்து, ஐந்து கணைகளால் உலூகனின் நடுமார்பைத் துளைத்தான்.(8) பிறகு அந்தப் போரில் உலூகன், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, ஓ! பாரதர்களிற்சிறந்தவரே, எண்ணெயில் நனைக்கப்பட்ட அகன்ற தலைக் கணை {பல்லம்} ஒன்றால் தன் எதிராளியுடைய சாரதியின் தலையை அறுத்தான்.(9) அடுத்ததாக யுயுத்சுவின் நான்கு குதிரைகளையும் கொன்ற அவன் {உலூகன்}, ஐந்து கணைகளால் அவனையும் {யுயுத்சுவையும்} தாக்கினான். பலமிக்க உலூகனால் ஆழமாகத் தாக்கப்பட்ட யுயுத்சு, மற்றொரு தேரில் ஏறினான்.(10) அவனை {யுயுத்சுவைப்} போரில் வென்ற உலாகன், பாஞ்சாலர்கள் மற்றும் சிருஞ்சயர்களை நோக்கி வேகமாக முன்னேறி, கூரிய கணைகளால் அவர்களைக் கொல்லத் தொடங்கினான்.(11)

அப்போது உமது மகன் சுருதகர்மன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, {நகுலனின் மகனான} சதானீகனைக் கண்கள் இமைப்பதற்காகும் அரைப்பொழுதிற்குள் அச்சமற்ற வகையில் குதிரைகளற்றவனாகவும், சாரதியற்றவனாகவும், தேரற்றவனாகவும் ஆக்கினான்.(12) எனினும், ஓ! ஐயா, வலிமைமிக்கத் தேர்வீரனான சதானீகன், குதிரைகளற்ற தன் தேரில் நின்றபடியே சினத்தால் நிறைந்து உமது மகனின் {சுருதகர்மனின்} மீது ஒரு கதாயுதத்தை வீசினான்.(13) அந்தக் கதாயுதமானது, உமது மகனின் தேரை அதன் குதிரைகள் மற்றும் சாரதியுடன் துண்டுகளாகக் குறைத்து, பெரும் வேகத்துடன் பூமியில் விழுந்து, அதைத் துளைத்துச் சென்றது.(14) பிறகு, குருக்களின் புகழை அதிகரிப்பவர்களும், தங்கள் தேர்களை இழந்தவர்களும், மோதலில் இருந்து விலகியவர்களுமான அவ்விரு வீரர்களும், ஒருவரையொருவர் வெறித்துப் பார்த்துக் கொண்டனர்.(15) அப்போது அச்சத்துக்கு ஆட்பட்ட உமது மகன் விவிம்சுவின் தேரில் ஏறிக் கொண்டான், அதே வேளையில், சதானீகனோ, {யுதிஷ்டிரனின் மகனானப்} பிரதிவிந்தியனின் தேரில் ஏறிக் கொண்டான்.(16)

சினத்தால் நிறைந்த சகுனி, {பீமசேனனின் மகனான} சுதசோமனைக் கூரிய கணைகள் பலவற்றால் துளைத்தாலும், நீர்த்தாரையானது ஒரு மலையின் மீது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்த தவறியதைப் போலப் பின்னவனை {சுதசோமனை} நடுங்கச் செய்வதில் தவறினான்.(17) தன் தந்தையின் {பீமனின்} பெரும் எதிரியைக் கண்ட சுதசோமன், ஓ! பாரதரே, பல்லாயிரம் கணைகாளல் அந்தச் சகுனியை மறைத்தான்.(18) எனினும், துல்லிய இலக்கைக் கொண்ட போர்வீரனும், போர்முறைகள் அனைத்தையும் அறிந்தவனுமான அந்தச் சகுனி, போரிடும் விருப்பத்தால் இயக்கப்பட்டு, சிறகுகள் படைத்த தன் கணைகளால் அந்தக் கணைகள் அனைத்தையும் விரைவாக வெட்டினான்.(19) போரில் தன் கணைகளால் அந்தக் கணைகளைத் தடுத்த சகுனி, சினத்தால் நிறைந்து மூன்று கணைகளால் சுதசோமனைத் தாக்கினான்.(20) அப்போது உமது மைத்துனன் {சகுனி}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தன் எதிராளியின் குதிரைகள், கொடிமரம் மற்றும் சாரதியைத் தன் கணைகளால் நுண்ணியத் துண்டுகளாக வெட்டியதால் பார்வையாளர்கள் உரத்த கூச்சலிட்டனர்.(21) குதிரைகளையும், தேரையும் இழந்தவனும், கொடிமரம் வெட்டப்பட்டவனுமான அந்தப் பெரும் வில்லாளி (சுதசோமன்), ஒரு நல்ல வில்லை எடுத்துக் கொண்டு தன் தேரில் இருந்து கீழே குதித்துப் பூமியில் நின்றான்.(22) தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையும், பெரும் எண்ணிக்கையிலானவையுமான கணைகளை ஏவி அந்தப் போரில் உமது மைத்துனனின் {சகுனியின்} தேரை மறைத்தான்.(23) எனினும் அந்தச் சுபலனின் மகன் {சகுனி}, வெட்டுக்கிளிகளின் கூட்டத்துக்கு ஒப்பான அந்தக் கணைமாரி தன் தேரை நோக்கி வருவதைக் கண்டும் நடுங்காதிருந்தான். மறுபுறம், அந்தச் சிறப்புமிக்கப் போர்வீரன் தன் கணைகளால் அக்கணைகள் அனைத்தையும் நொறுக்கினான்.(24)

தன் தேரில் இருந்த சகுனியுடன், காலாளாக நின்று போராடும் சுதசோமனின் நம்புதற்கரிய அருஞ்சலைக் கண்டவர்களான அங்கே இருந்த போர்வீரர்களும், ஆகாயத்தில் இருந்த சித்தர்களும் மிகவும் மகிழ்ந்தனர்.(25) அப்போது சகுனி, பெரும் வேகத்தைக் கொண்டவையும், கூரியவையும், முற்றிலும் நேரானவையுமான எண்ணற்ற அகன்ற தலை கணைகளால் {பல்லங்களால்} சுதசோமனின் வில்லையும், அவனது {சுதசோமனது} அம்பறாத்தூணிகள் அனைத்தையும் வெட்டினான்.(26) வில்லற்றவனாகத் தேரற்றவனாக ஆன சுதசோமன் கருநெய்தலின் வண்ணம் கொண்டதும், தந்தக் கைப்பிடி கொண்டதுமான வாள் ஒன்றை உருவியுயர்த்தி உரத்த முழக்கம் செய்தான்.(27) தெளிந்த வானின் வண்ணத்தைக் கொண்ட புத்திசாலி சுதசோமனின் அந்த வாள் சுழற்றப்பட்ட போது, அது யமதண்டத்தைப் போல மிக ஆபத்தானதாகச் சகுனியால் கருதப்பட்டது.(28) அந்த வாளைத் தரித்தவனும், திறனும், வலிமையும் கொண்டவனுமான அவன் {சுதசோமன்}, பதினான்கு {14} வகையான உத்திகளை வெளிக்காட்டியபடியே திடீரென அந்த அரங்கில் வட்டமாக {மண்டலகரமாகத்} திரியத் தொடங்கினான்[2].(29) உண்மையில் அவன் {பீமன் மகன் சுதசோமன்} அந்தப் போரில் உயரமாகச் சுழன்றும், பக்கங்களில் உந்தித் தள்ளியும், முன்னோக்கிக் குதித்தும், உயரமாக எம்பிக் குதித்தும், வேகமாக ஓடியும், முன்னோக்கி விரைந்தும், மேல்நோக்கி விரைந்தும் என இப்படித் திரிந்து கொண்டே அந்த அசைவுகள் {உத்திகள்} அனைத்தையும் வெளிக்காட்டினான்.(30) அப்போது, சுபலனின் அந்த வீரமகன் {சகுனி} தன் எதிரியின் மீது எண்ணற்ற கணைகளை ஏவினாலும், அவை அனைத்தும் தன்னை நோக்கி வந்த போதே அவற்றை அந்தச் சிறந்த வாளால் பின்னவன் {எதிரி சுதசோமன்} வெட்டினான்.(31)

[2] வேறுபதிப்பில் இந்த நிலைகள் பின்வருமாறு சொல்லப்படுகிறது: வட்டமாகச் சுழல்தல் {பிராந்தம்}, நாற்புறத்திலும் வீசுதல் {ஆவித்தம்}, மேலாகச் சுழல்தல் {உத்பிராந்தம்}, நாற்புறத்திலும் மேலாகச் சுழல்தல் {ஆப்லுதம்}, நேராக நீட்டல் {பிரஸ்ருதம்}, துள்ளுதல் {பிலுதம்}, இலக்குகளை அடித்தால் {சம்பாதம்}, நேராக வீசுதல் {சமுதீர்ணம்}, விப்லுதம், ஸ்ருதம் எனப் பல்வேறு விதமான வாள்வீச்சுகளை வெளிப்படுத்தினான் என்று இருக்கிறது.

(இதனால்) சினத்தால் நிறந்த சுபலனின் மகன் {சகுனி}, ஓ! மன்னா, கடும் நஞ்சுகொண்ட பாம்புகளுக்கு ஒப்பான எண்ணற்ற கணைகளை மீண்டும் சுதசோமன் மீது ஏவினான்.(32) கருடனுக்கு நிகரான ஆற்றலைக் கொண்டவனும், தனது திறன் மற்றும் வலிமையின் துணை கொண்டவனுமான சுதசோமன், பெரும் சுறுசுறுப்பை வெளிக்காட்டியபடியே இவற்றையும் வெட்டினான்.(33) அப்போது சகுனி, தன் முன் மண்டலகாரமாகத் திரிந்து கொண்டிருந்தவனும், தன் எதிராளியுமான பின்னவனின் {சுதசோமனின்} அந்தப் பிரகாசமான வாளைப் பெரும் கூர்மை கொண்ட கத்தித் தலை கணை {க்ஷுரப்ரம்} ஒன்றால் வெட்டினான்.(34) இவ்வாறு வெட்டப்பட்ட அந்தப் பெரிய வாளானது (அதன் பாதித் துண்டு) பூமியில் விழுந்தது, அதே வேளையில், ஓ! பாரதரே, பாதிவாளானது சுதசோமனின் பிடியிலேயே இருந்தது.(35)

தன் வாள் வெட்டப்பட்டதைக் கண்டவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான சுதசோமன் ஆறு எட்டுகள் {நடையடிகள்} பின்வாங்கித் தன் பிடியில் இருந்த பாதி வாளைத் தன் எதிரியின் {சகுனியின்} மீது வீசினான்.(36) தங்கத்தாலும், ரத்தினங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்தத் துண்டு, நாண்கயிற்றுடன் கூடிய சிறப்புமிக்கச் சகுனியின் வில்லை வெட்டி, விரைவாகப் பூமியில் விழுந்தது. அப்போது சுதசோமன் சுருதகீர்த்தியின் பெரிய தேருக்குச் சென்றான். (37,38) உறுதிமிக்கதும், வெல்லப்பட முடியாததுமான மற்றொரு வில்லை எடுத்துக் கொண்ட சுபலனின் மகனும் {சகுனியும்}, (வழியில்) பெரும் எண்ணிக்கையிலான எதிரிகளைக் கொன்றபடியே பாண்டவப் படையை நோக்கிச் சென்றான்.(39) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சுபலனின் மகன் {சகுனி} அச்சமற்ற வகையில் அந்தப் போரில் திரிவதைக் கண்டு, பாண்டவர்கள் படையின் அந்தப் பகுதியில் உரத்த ஆரவாரம் எழுந்தது.(40) பெரியதும், மயிர்ச்சிலிர்ப்புடன் கூடியதும், ஆயுதங்களுடன் கூடியதுமான அந்தப் படைப்பிரிவுகள், சிறப்புமிக்கச் சுபலன் மகனால் {சகுனியால்} முறியடிக்கப்படுவதை மக்கள் கண்டனர்.(41) தேவர்களின் தலைவன் {இந்திரன்} தைத்திய படையை நசுக்குவதைப் போலவே சுபலனின் மகனும் {சகுனியும்} அந்தப் பாண்டவப் படையை அழித்தான்” {என்றான் சஞ்சயன்}.(42)
---------------------------------------------------------------------------
கர்ண பர்வம் பகுதி 25-ல் உள்ள சுலோகங்கள் : 42

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்