Wednesday, February 08, 2017

பாஞ்சால இளவரசர்களின் தோல்வி! - கர்ண பர்வம் பகுதி – 26

The defeat of the Panchala Princes! | Karna-Parva-Section-26 | Mahabharata In Tamil


பதிவின் சுருக்கம் : கிருபருக்கும் திருஷ்டத்யும்னனுக்கும் இடையில் நேரந்த போர்; பீமனை நோக்கி ஓடிய திருஷ்டத்யும்னன்; திருஷ்டத்யும்னனை வென்ற கிருபர்; சிகண்டியின் வில்லை வெட்டிய கிருதவர்மன்; கிருதவர்மனின் வில்லை வெட்டிய சிகண்டி; சிகண்டியை மயக்கமடையச் செய்த கிருதவர்மன்...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “செருக்குமிக்கச் சிங்கமொன்றைக் காட்டில் தடுக்கும் ஒரு சரபத்தைப் போல, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் கிருபர், திருஷ்டத்யும்னனைத் தடுத்தார்.(1) கௌதமரின் வலிமைமிக்க மகனால் {கிருபரால்} தடுக்கப்பட்ட பிருஷதன் மகனால் {திருஷ்டத்யும்னனால்}, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, ஒரேயொரு எட்டு {நடையடி} கூட முன்னேற முடியவில்லை.(2) கௌதமரின {கிருபரின்} தேரானது திருஷ்டத்யும்னனின் தேருக்கும் முன்பு இருப்பதைக் கண்ட உயிரினங்கள் அனைத்தும் அச்சமடைந்து, பின்னவன் {திருஷ்டத்யும்னன்} அழியும் சமயம் வந்துவிட்டதெனக் கருதின.(3)


உற்சாகமிழந்தவர்களான தேர்வீரர்கள் மற்றும் குதிரைவீரர்கள், “வலிமை, சக்தி, பெரும் நுண்ணறிவு ஆகியவற்றைக் கொண்டவரும், தெய்வீக ஆயுதங்களை அறிந்தவரும், மனிதர்களில் முதன்மையானவருமான சரத்வான் மகன் {கிருபர்}, துரோணரின் மரணத்தால் சினத்தால் நிறைந்திருக்கிறார். இன்று திருஷ்டத்யும்னன், கௌதமரின் {கிருபரின்} கைகளில் இருந்து தப்ப முடியுமா?(4,5) இந்தப் பரந்த படை இன்று இந்தப் பேராபத்துக்குத் தப்புமா? இந்தப் பிராமணர் {கிருபர்} நம் அனைவரையும் மொத்தமாகக் கொன்றுவிடமாட்டாரா?(6) இன்று அவர் ஏற்றிருக்கும் வடிவும் அந்தகனைப் போலவே இருப்பதும், இன்று அவர் {கிருபர்} துரோணரைப் போலவே செயல்படுவார் என்பதையே காட்டுகிறது.(7) பெரும் கரநளினம் கொண்ட ஆசான் கௌதமர் {கிருபர்} போரில் எப்போதும் வெல்பவராவார். ஆயுதங்களின் அறிவையும், பெரும் சக்தியையும் கொண்ட அவர் {கிருபர்}, சினத்தால் நிறைந்திருக்கிறார்” என்றனர்.(8) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, இருபடை போர்வீரர்களாலும் பேசப்படும் இது போன்ற பல்வேறு பேச்சுக்களைக் கேட்டபடியே அந்த இருவீரர்களும் ஒருவரோடொருவர் மோதிக் கொண்டனர்.(9)

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சினத்தால் மூச்சை ஆழமாக இழுத்துவிட்டவரும், சரத்வான் மகனுமான கிருபர், செயல்படாமல் நின்றிருந்த பிருஷதன் மகனின் {திருஷ்டத்யும்னனின்} முக்கிய அங்கங்கள் அனைத்தையும் பீடிக்கத் தொடங்கினார்.(10) அந்தப் போரில் சிறப்புமிக்கக் கௌதமரால் {கிருபரால்} தாக்கப்பட்டுப் பெரிதும் கலக்கமடைந்த திருஷ்டத்யும்னன் என்ன செய்வது என்பதை அறியாதிருந்தான்.(11) அப்போது அவனிடம் {திருஷ்டத்யும்னனிடம்} அவனது சாரதி, “ஓ! பிருஷதன் மகனே {திருஷ்டத்யும்னா}, நலமாக இருக்கிறாயா? போரில் இதற்கு முன்னர் இதுபோன்ற பேரிடரில் நீ சிக்குவதை நான் கண்டதில்லை.(12) உன் முக்கிய அங்கங்களைக் குறிபார்த்து அந்தப் பிராமணர்களில் முதன்மையானவரால் {கிருபரால்} ஏவப்படுபவையும், முக்கிய அங்கங்களை ஊடுருவவல்லவையுமான இந்தக் கணைகள் உன்னைத் தாக்காமல் இருப்பது நல்லூழ் தரும் ஒரு வாய்ப்பாலேயே.(13) கடலால் திருப்பப்படும் ஓர் ஆற்றின் ஓட்டத்தைப் போல, இப்போது நான் இந்தத் தேரைத் திருப்பப்போகிறேன். உன் ஆற்றலை அழிக்கும் அந்தப் பிராமணர் {கிருபர்}, உன்னால் கொல்லப்பட முடியாதவர் என்றே நான் நினைக்கிறேன்” என்றான் {திருஷ்டத்யும்னனின் சாரதி}.(14)

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இப்படிச் சொல்லப்பட்ட திருஷ்டத்யும்னன் மெதுவாக, “ஓ! ஐயா {சாரதியே}, என் மனம் கலங்குகிறது, என் அங்கங்கள் வியர்க்கின்றன. என் உடல் நடுங்குகிறது. எனக்கு மயிர்க்கூச்சமும் ஏற்படுகிறது. போரில் அந்தப் பிராமணரைத் தவிர்த்துவிட்டு, மெதுவாக அர்ஜுனர் இருக்கும் இடத்திற்குச் செல்வாயாக. ஓ! தேரோட்டியே, அர்ஜுனர், அல்லது பீமசேனர் ஆகியோரை அடைந்ததும், வளமை எனதாகும். இதுவே எனது உறுதியான நம்பிக்கை” என்றான்.(17) பிறகு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, குதிரைகளைத் தூண்டிய அந்தத் தேரோட்டி, உமது துருப்புகளுடன் போரிட்டுக் கொண்டிருந்தவனும், வலிமைமிக்க வில்லாளியுமான பீமசேனன் இருக்கும் இடத்திற்குச் சென்றான்.(18) ஓ! ஐயா, அவ்விடத்தில் இருந்து திருஷ்டத்யும்னனின் தேர் விலகிச் செல்வதைக் கண்ட கௌதமர் {கிருபர்}, நூற்றுக்கணக்கான கணைகளை ஏவியபடையே அதைப் பின்தொடர்ந்து சென்றார்.(19) அந்த எதிரிகளை அழிப்பவர், மீண்டும் மீண்டும் தன் சங்கையும் முழங்கினார். உண்மையில் அவர் {கிருபர்}, தானவன் நமுசியை {நமூச்சியை} முறியடித்த இந்திரனைப் போலவே, அந்தப் பிருஷதன் மகனை முறியடித்தார்.(20)

பீஷ்மரின் மரணத்திற்குக் காரணனும், வெல்லப்பட முடியாதவனுமான சிகண்டி, தன்னோடு சிரித்துக் கொண்டே போரிட்டுக் கொண்டிருந்த ஹிருதிகன் மகனால் {கிருதவர்மனால்} அந்தப் போரில் தடுக்கப்பட்டான்.(21) எனினும் சிகண்டி, வலிமைமிக்கத் தேர்வீரனான அந்த ஹிருதிகனோடு {கிருதவர்மனோடு} மோதி, ஐந்து கூரிய கணைகளாலும், அகன்ற தலை கணைகளாலும் {பல்லங்களாலும்} அவனது {கிருதவர்மனது} தோள்பூட்டைத் தாக்கினான்.(22) அப்போது, வலிமைமிக்கத் தேர்வீரனான கிருதவர்மன், சினத்தால் நிறைந்து, சிறகு படைத்த அறுபது கணைகளால் தன் எதிரியைத் துளைத்தான். பிறகு ஒற்றைக்கணையொன்றால் அவன் {கிருதவர்மன்}, சிரித்துக் கொண்டே அவனது {சிகண்டியின்} வில்லை வெட்டினான்.(23) அந்த வலிமைமிக்கத் துருபதன் மகனை {சிகண்டி}, கோபத்தால் நிறைந்து மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு ஹிருதிகன் மகனிடம் {கிருதவர்மனிடம்}, “நில், நிற்பாயாக” என்றான்.(24) பிறகு அந்தச் சிகண்டி, ஓ! ஏகாதிபதி, பெரும் வேகம் கொண்டவையும், தங்கச் சிறகுகளைக் கொண்டவையுமான தொண்ணூறு கணைகளைத் தன் எதிரியின் {கிருதவர்மனின்} மீது ஏவினான். எனினும் அந்தக் கணைகள் அனைத்தும் கிருதவர்மனின் கவசத்தில் இருந்து எதிர்விசை கொண்டு விழுந்தன.(25)

அக்கணைகள் எதிர்விசை கொண்டு பூமியின் பரப்பில் இறைந்து கிடப்பதைக் கண்ட சிகண்டி, ஒரு கத்தி தலைக் கணையால் கிருதவர்மனின் வில்லை அறுத்தான்.(26) கோபத்தால் நிறைந்த அவன் {சிகண்டி}, கொம்புகளற்ற காளைக்கு ஒப்பாக வில்லற்றவனாக இருந்த ஹிருதிகன் மகனின் {கிருதவர்மனின்} கரங்களையும், மார்பையும் எண்பது கணைகளால் தாக்கினான்.(27) நீரால் நிரம்பிய கொள்கலனொன்று நீரைக் கொப்பளிப்பதைப் போலக் கணைகளால் கிழித்துச் சிதைக்கப்பட்டிருந்த கிருதவர்மன், சினத்தால் நிறைந்திருந்தாலும், தன் அங்கங்களின் ஊடாகக் குருதியைக் கக்கினான்.(28) குருதியில் குளித்த அந்தப் போஜ மன்னன் {கிருதவர்மன்}, மழைக்குப் பிறகு செஞ்சுண்ண நீரோடையைக் கீற்றுகளாக வெளியிடும் மலையொன்றைப் போல மிக அழகாகத் தெரிந்தான்.(29)

அப்போது, நாணேற்றப்பட்டதும், கணையொன்று பொருத்தப்பட்டதுமான மற்றொரு வில்லை எடுத்துக் கொண்ட அந்தப் பலமிக்கக் கிருதவர்மன், சிகண்டியின் தோள்ப்பூட்டைத் தாக்கினான்.(30) தோள்ப்பூட்டில் இக்கணைகளால் தைக்கப்பட்டிருந்த சிகண்டி, கிளைகளும், கொப்புகளும் பரப்பிய பெரிய மரம் ஒன்றைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்.(31) ஒருவரையொருவர் துளைத்துக்கொண்டே குருதியில் குளித்து அவ்விரு போராளிகளும், கொம்புகளால் ஒன்றையொன்று குத்திக் கொள்ளும் இரண்டு காளைகளுக்கு ஒப்பாக இருந்தனர்.(32) கவனமாக ஒருவரையொருவர் கொல்ல முயன்ற அவ்வரு வலிமைமிக்கத் தேர்வீரர்களும், அந்த அரங்கத்தில் ஓராயிரம் வளையங்களில் நகர்ந்து சென்றனர்.(33)

அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரனிடம்}, அம்மோதலில் கிருதவர்மன், தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையுமான எழுபது கணைகளால் பிருஷதன் மகனை {சிகண்டியைத்} துளைத்தான்.(34) பிறகு தாக்குபவர்களில் சிறந்தவனான அந்தப் போஜர்களின் ஆட்சியாளன் {கிருதவர்மன்}, பெரும் சுறுசுறுப்புடன் பயங்கரமான ஒரு மரணக் கணையைத் தன் எதிரியின் {சிகண்டியின்} மீது ஏவினான்.(35) அதனால் தாக்கப்பட்ட சிகண்டி, விரைவில் மயக்கமடைந்தான். மலைப்புக்கு ஆட்பட்ட அவன் {சிகண்டி}, தன் கொடிக்கம்பத்தைப் பிடித்துக் கொண்டே தன்னைத் தாங்கிக் கொண்டான்.(36) அந்தத் தேர்வீரர்களில் முதன்மையானவனுடைய சாரதி, விரைவாக அவனைப் {சிகண்டியைப்} போரில் இருந்து கொண்டு சென்றான். ஹிருதிகன் மகனின் கணையால் எரிக்கப்பட்ட அவன் {சிகண்டி},மீண்டும் மீண்டும் பெருமூச்சை விட்டான்.(37) துருபதனின் வீரமகன் {சிகண்டி} தோற்ற பிறகு, ஓ! தலைவா, அனைத்துப் பக்கங்களிலும் கொல்லப்பட்ட பாண்டவப் படையானது, களத்தில் இருந்து வெளியே ஓடியது” {என்றான் சஞ்சயன்}.(38)
----------------------------------------------------------------------------
கர்ண பர்வம் பகுதி 26-ல் உள்ள சுலோகங்கள் : 38

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்