Monday, February 27, 2017

ஆரியர் பயிலா நடத்தைகள்! - கர்ண பர்வம் பகுதி – 35

Conducts not practised by Aryas! | Karna-Parva-Section-35 | Mahabharata In Tamil


பதிவின் சுருக்கம் : கர்ணனை விட மேன்மையானவனாகச் சல்லியனைச் சொன்ன துரியோதனன்; சாரத்ய நிலையை ஏற்ற சல்லியன்; சல்லியனை ஐயுற்ற கர்ணன்; மீண்டும் சல்லியனிடம் பேசிய துரியோதனன்; ஆரியர்கள் பயிலாத நான்கு வெவ்வேறு நடத்தைகளைக் குறித்துக் கர்ணனுக்கு எடுத்துரைத்த சல்லியன்...


துரியோதனன் {சல்லியனிடம்}, “இவ்வாறே சிறப்புமிக்கத் தேவனும், உலகங்கள் அனைத்தின் பெரும்பாட்டனுமான பிரம்மன் சாரதி நிலையையும், ருத்ரன் {சிவன்} போர்வீரன் நிலையையும் அந்தச் சந்தர்ப்பத்தில் ஏற்றனர்.(1) ஓ! வீரரே {சல்லியரே}, அத்தேரின் சாரதி, அதன் போர்வீரனைவிட மேன்மையானவனாக இருக்க வேண்டியிருந்தது. எனவே, ஓ! மனிதர்களில் புலியே, இந்தப் போரில் குதிரைகளின் கடிவாளங்களை நீர் பிடிப்பீராக.(2) ஓ! பெரும் மன்னா {சல்லியரே}, அந்தச் சந்தர்ப்பத்தில், தேவர்கள் அனைவராலும் கவனத்துடன் பெரும்பாட்டன் தேர்ந்தெடுக்கப்பட்டதைப் போல, உண்மையில், சங்கரனை விடப் பெரியவனாகத் தேவர்களால் அவன் {பிரம்மன்} தேர்ந்தெடுக்கப்பட்டதைப் போலவே, இப்போது கர்ணனை விட மேன்மையான உம்மை நாங்கள் கவனத்துடன் தேர்ந்தெடுத்திருக்கிறோம். ருத்திர குதிரைகளின் கடிவாளங்களைப் பெரும்பாட்டன் {பிரம்மன்} ஏந்தியதைப் போலவே, ஓ! பெரும் காந்தி கொண்டவரே {சல்லியரே}, இந்தப் போரில் கர்ண குதிரைகளின் கடிவாளங்களைத் தாமதமில்லாமல் நீர் ஏந்துவீராக” என்றான் {துரியோதனன்}.(3,4)


சல்லியன் {துரியோதனனிடம்}, “ஓ! மனிதர்களில் முதன்மையானவனே {துரியோதனா}, அந்த இரண்டு தேவ சிங்கங்களைக் குறித்து நீ சொன்ன சிறப்புமிக்க இந்தத் தெய்வீக வரலாற்றை நான் பலமுறை கேட்டிருக்கிறேன்.(5) உண்மையில், பெரும்பாட்டன் எவ்வாறு பவனின் {சிவனின்} சாரதியாகச் செயல்பட்டான் என்பதையும், ஓ! பாரதா {துரியோதனா}, ஒரே கணையால் அசுரர்கள் எவ்வாறு அழிக்கப்பட்டனர் என்பதையும் நான் கேட்டிருக்கிறேன்.(6) பழங்காலத்தில் எவ்வாறு அந்தச் சிறப்புமிக்கப் பெரும்பாட்டன் சாரதியாகச் செயல்பட்டான் என்ற அறிவனைத்தையும் ஏற்கனவே கிருஷ்ணனும் அறிந்திருக்கிறான். உண்மையில் கடந்த காலம், எதிர்காலம் மற்றும் அவற்றின் விபரங்கள் அனைத்தையும் கிருஷ்ணன் அறிவான்.(7) இவ்வுண்மையை அறிந்தே அவன் {கிருஷ்ணன்}, ருத்ரனின் {சிவனின்} சாரதியான தான்தோன்றியை {பிரம்மனைப்} போலப் பார்த்தனின் {அர்ஜுனனின்} சாரதியானான்.(8) எவ்வழியிலாவது குந்தியின் மகனை {அர்ஜுனனைக்} கொல்வதில் இந்தச் சூதன் மகன் {கர்ணன்} வென்றால், அந்தப் பார்த்தன் {அர்ஜுனன்} கொல்லப்பட்டதைக் கண்டு கேசவனே {கிருஷ்ணனே} போரில் ஈடுபடுவான். அப்போது அந்தச் சங்கு சக்கரக் கதாதாரி {கிருஷ்ணன்}, உன் படையையே எரித்துவிடுவான்.(9) அந்தச் சிறப்புமிக்க விருஷ்ணி குலத்தோனின் {கிருஷ்ணனின்} கோபம் தூண்டப்படும்போது, அவனை எதிர்த்து நிற்க {நமது} படையணிகளின் முன்னணியில் எந்த மன்னனும் இங்கே இல்லை” என்றான் {சல்லியன்}.(10)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “இவ்வாறு பேசிக்கொண்டிருந்த மத்ர ஆட்சியாளனிடம் {சல்லியனிடம்} எதிரிகளைத் தண்டிப்பவனும், உற்சாக ஆத்மா கொண்டவனுமான உமது வலிமைமிக்க மகன் {துரியோதனன்},(11) “ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, வைகர்த்தனன்[1] என்று வேறு பெயரில் அழைக்கப்படுபவனும், ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையானவனும், நமது சாத்திரங்கள் அனைத்தின் பொருளை உணர்ந்தவனுமான கர்ணனைக் குறித்துப் போரில் இழிவாக எண்ண வேண்டாம்.(12) அவனது வில்லின் நாணொலி, மற்றும் அவனது உள்ளங்கையொலி ஆகிய பயங்கரப் பேரொலிகளைக் கேட்டே பாண்டவத் துருப்புகள் அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடும்.(13) ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே, நூற்றுக்கணக்கான மாயைகளை வெளிப்படுத்திய கடோத்கசன் அவ்விரவில் (கர்ணனால்) எவ்வாறு கொல்லப்பட்டான் என்பதை உமது கண்களாலேயே நீர் கண்டீர்.(14) இவ்வளவு நாட்களும் பெரும் அச்சத்தை உணர்ந்த பீபத்சுவால் {அர்ஜுனனால்} கர்ணனை எதிர்த்து நிற்க முடியவில்லை.(15) வலிமைமிக்கப் பீமசேனனும் கூட, கர்ணனுடைய வில்லின் நுனியால் இங்கேயும் அங்கேயும் இழுக்கப்பட்டு, “மூடன், பெருந்தீனிக்காரன்” என்ற பல்வேறு விதமாகக் கடிந்துரைக்கப்பட்டான்.(16) மாத்ரியின் துணிச்சல்மிக்க மகன்கள் இருவரும் பெரும்போரில் கர்ணனால் வீழ்த்தப்பட்டிருப்பினும், ஓ! ஐயா, ஏதோ ஒரு காரணத்தால் இவன் {கர்ணன்}  அவர்களைக் கொல்லவில்லை.(17)

[1] உடன் பிறந்த கவசகுண்டலங்களை அறுத்துக் எடுத்தவன் என்பதாலும் கர்ணனுக்கு வைகர்த்தனன் என்ற பெயர் உண்டு. சூரியனின் {விகர்த்தனன்} மகன் என்பதாலும் அந்தப் பெயர் உண்டு.

விருஷ்ணி குலத்தில் முதன்மையானவனும், சாத்வத குலத்தின் தலைவனுமான வீரச் சாத்யகியும், கர்ணனால் வெல்லப்பட்டு, தேரற்றவனாகச் செய்யப்பட்டான்.(18) திருஷ்டத்யும்னன் தலைமையிலான சிருஞ்சயர்கள் அனைவரும் இந்தப் போரில் கர்ணனால் மிக எளிமையாக வீழ்த்தப்பட்டனர்.(19) உண்மையில், வஜ்ரதாரியான புரந்தரனையே கொல்லத் தகுந்தவன் எவனோ, {இந்த அருஞ்செயல்கள் அனைத்தையும் செய்தவனான} அந்தப் பெரும் வீரன் {கர்ணன்} கோபத்தால் தூண்டப்படும்போது, பாண்டவர்களால் எவ்வாறு வெல்ல அவனை முடியும்?(20) ஓ! வீரரே {சல்லியரே}, நீரும் ஆயுதங்கள் அனைத்தையும் அறிந்தவரே. நீர் கல்வியின் அனைத்துக் கிளைகளிலும் திறன் கொண்டவரே. ஆயுத வலிமையில் உமக்கு நிகராகப் பூமியில் வேறு எவரும் இல்லை.(21)

தடுக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டிருக்கும் நீர், உமது எதிரிகளுக்கு ஓர் ஈட்டியை {முளையைப்} போலிருக்கிறீர். இக்காரணத்திற்காகவே, ஓ! மன்னா {சல்லியரே}, ஓ! எதிரிகளைக் கொல்பவரே, சல்லியன் என்று நீர் அழைக்கப்படுகிறீர்(22). உமது கரங்களின் வலிமையை எதிர்கொண்ட சாத்வதர்கள் அனைவராலும், சிறந்த விளைவைப் பெற முடியவில்லை. ஓ! மன்னா {சல்லியரே}, கிருஷ்ணன் வலிமையில் உம்மை விட மேம்பட்டவனா? உண்மையில், பார்த்தன் கொல்லப்பட்ட பிறகு, எவ்வாறு கிருஷ்ணனால் பாண்டவத் துருப்புகளின் சுமை சுமக்கப்படுமோ, அவ்வாறே கர்ணன் உயிரைவிட்டால், இந்தப் பரந்த (கௌரவப்) படையின் சுமையைச் சுமக்கவல்லவராக நீர் இருக்கிறீர்.(24) ஓ! ஐயா, என் துருப்புகளைத் தடுக்கத்தக்கவனாக அவன் {கிருஷ்ணன்} ஏன் இருக்க வேண்டும்? பகைவரின் துருப்புகளைக் கொல்லத்தக்கவராக நீர் ஏன் இருக்கக்கூடாது?[2] (25) ஓ! ஐயா {சல்லியரே}, (கொல்லப்பட்ட) என் தம்பிகள் மற்றும் பூமியின் வீர மன்னர்கள் பிறரின் பாதச்சுவடுகளைப் பின்பற்றி உமக்காக நான் விருப்பத்துடன் செல்வேன் {உமக்காக இறக்கவும் துணிவேன்}“ என்று மறுமொழி கூறினான் {துரியோதனன்}.(26)

[2] வேறொரு பதிப்பில், “பல்குனன் கொல்லப்பட்டபிறகு, எவ்வாறு கிருஷ்ணனால் சேனை தரிக்கத்தக்கதோ அவ்வாறே கர்ணன் மாண்டுபோகுங்கால் உம்மால் பெரும்படையானது தரிக்கத்தக்கது. ஐயா, யுத்தத்தில் வாஸுதேவன் யாது காரணம் பற்றி நமது சேனையைத் தடுக்கப்போகிறான்? நீர் யாது காரணம் பற்றிச் சேனையை வதம் செய்யாமலிருப்பீர்?” என்று இருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், “உண்மையில், பல்குனனின் வீழ்ச்சிக்குப் பிறகு கிருஷ்ணனால் மொத்த படையும் ஆதரிக்கப்படப்போவதைப் போல் கர்ணனின் மரணத்திற்குப் பிறகு (குருக்களின்) இந்தப் பரந்த படையை நீரே ஆதரிக்க வேண்டும். ஓ ஐயா, போர்க்களத்தில் நமது படைகளை வாசுதேவன் எக்காரணத்தால் தடுப்பான்? பகைவரின் படையை நீர் எக்காரணத்தால் கொல்லாமலிருப்பீர்?” என்றிருக்கிறது.

சல்லியன் {துரியோதனனிடம்}, “ஓ! காந்தாரியின் மகனே, ஓ! கௌரவங்களை அளிப்பவனே, தேவகியின் மகனைவிட {கிருஷ்ணனைவிட} நான் மேம்பட்டவன் என்று உன் துருப்புகளுக்கு முன்பு நீ சொல்வதால், உன்னிடம் நான் பெரிதும் மனநிறைவு கொண்டேன்.(27) நீ விரும்புவது போலவே, அந்தப் பாண்டு மகன்களில் முதன்மையானவனோடு ராதையின் கொண்டாடப்படும் மகன் {கர்ணன்} போரிடும்போது, அவனது சாரதி நிலையை {சாரத்யத்தை} நான் ஏற்பேன்.(28) எனினும், ஓ! வீரா {துரியோதனா}, நான் வைகர்த்தனுடன் {கர்ணனுடன்} ஒரு சிறு கட்டுவரம்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். ’இவனது {கர்ணனது} முன்னிலையில் நான் விரும்பும் எவ்வார்த்தையையும் நான் சொல்வேன்’ என்பதே அஃது” என்றான்.(29)

சஞ்சயன் தொடர்ந்தான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது மகன் {துரியோதனன்} கர்ணனுடன் சேர்ந்து, “அப்படியே ஆகட்டும்” என்று க்ஷத்திரியர்கள் அனைவரின் முன்னிலையும் மத்ரர்களின் ஆட்சியாளனுக்கு மறுமொழி கூறினான்.(30) சல்லியன் ஏற்றுக் கொண்ட சாரதி நிலையால் (சாரத்யத்தால்) உறுதி கொண்ட துரியோதனன், மகிழ்ச்சியால் நிறைந்து, கர்ணனைத் தழுவிக் கொண்டான்.(31) (சுற்றிலும் இருந்த பாணர்களாலும், துதிபாடிகளாலும்) துதிக்கப்பட்ட உமது மகன் {துரியோதனன்}, மீண்டும் கர்ணனிடம், “தானவர்களைக் கொன்ற பெரும் இந்திரனைப் போலப் போரில் பார்த்தர்கள் அனைவரையும் கொல்வாயாக” என்றான். தன் குதிரைகளின் கடிவாளங்களை ஏந்தும் அலுவலைச் சல்லியன் ஏற்றதும், கர்ணன், மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் மீண்டும் துரியோதனனிடம், “மத்ரர்களின் ஆட்சியாளர் தாம் சொல்வதை உற்சாகமாகச் சொல்லவில்லை. ஓ! மன்னா {துரியோதனா}, மீண்டும் அவரிடம் இனிய சொற்களால் வேண்டிக் கொள்வாயாக” என்றான்.(34)

இப்படிச் சொல்லப்பட்டவனும், பெரும் ஞானத்தைக் கொண்டவனும், அனைத்தையும் சாதித்தவனுமான அந்த வலிமைமிக்க மன்னன் துரியோதனன், பூமியின் தலைவனும், மத்ரர்களின் ஆட்சியாளனுமான அந்தச் சல்லியனிடம், அந்தப் பகுதி முழுவதையும் மேகங்களைப் போன்ற ஆழ்ந்த குரலில் நிறைத்தபடி, “ஓ! சல்லியரே, இன்று அர்ஜுனனோட போரிட வேண்டும் என்று கர்ணன் நினைக்கிறான். ஓ! மனிதர்களில் புலியே, போரில் கர்ணனுடைய குதிரைகளின் கடிவாளங்களை ஏந்துவீராக.(36) பிற போர்வீரர்கள் அனைவரையும் கொன்ற இந்தக் கர்ணன், பல்குனனை {அர்ஜுனனைக்} கொல்ல விரும்புகிறான். ஓ! மன்னா, இவனது குதிரைகளின் கடிவாளங்களை ஏந்தும் காரியத்தில் மீண்டும் மீண்டும் நான் உம்மை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.(37) சாரதிகள் அனைவரிலும் முதன்மையான அந்தக் கிருஷ்ணன், பார்த்தனுக்கு ஆலோசகனாக இருப்பதைப் போலவே, அனைத்து ஆபத்துகளில் இருந்தும் இன்று கர்ணனை நீர் பாதுகாப்பீராக” என்றான் {துரியோதனன்}[3].(38)

[3] இந்தப் பகுதியின் சுலோகம் 1 முதல் 38 வரை பிபேக் திப்ராயின் பதிப்பில் இல்லை; அவை தவிர்க்கப்பட்டிருக்கின்றன.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “அப்போது உமது மகனைத் தழுவி கொண்ட மத்ரர்களின் ஆட்சியாளன் சல்லியன், எதிரிகளைக் கொல்பவனான அந்தத் துரியோதனனிடம்,(39) “ஓ! காந்தாரியின் அரசமகனே, ஓ! அழகிய குணங்களைக் கொண்டவனே, இதைத்தான் நீ நினைக்கிறாயென்றால், அதற்காக, உனக்கு ஏற்புடைய அனைத்தையும் நான் சாதிப்பேன்.(40) ஓ! பாரதர்களின் தலைவா, எச்செயல்களுக்கு நான் தகுந்தவனோ, அச்செயல்களில் என்னை முழு இதயத்துடன் ஈடுபடுத்திக் கொண்டு, உன் செயல்கள் எவற்றின் சுமையையும் நான் சுமப்பேன். எனினும், கர்ணனுக்கு நன்மை செய்யும் விருப்பத்தால் அவனிடம் நான் பேசும் ஏற்றுக் கொள்ளக்கூடிய, அல்லது ஏற்றுக் கொள்ளக்கூடாத எந்த வார்த்தைகளையும் கர்ணனும், நீயும் பொறுத்துக் கொள்வீராக” என்று மகிழ்ச்சியாக மறுமொழி கூறினான். (42)

கர்ணன் {சல்லியனிடம்}, “ஓ! மத்ரர்களின் ஆட்சியாளரே, பிரம்மன் ஈசானனுக்கும் {சிவனுக்கும்}, கேசவன் பார்த்தனுக்கும் எவ்வாறு நன்மை செய்தார்களோ, அவ்வாறே நீரும் எப்போதும் நமது நன்மையில் ஈடுபடுவீராக” என்றான்.(43)

சல்லியன், “தன்னொறுப்பு {சுயநிந்தனை}, தற்புகழ்ச்சி, பிறரை இகழ்வது, பிறரைப் புகழ்வது ஆகிய நான்கு வகை நடத்தைகளையும் மரியாதைக்குரிய நபர்கள் {ஆரியர்கள்}[4] எவரும் பயில்வதில்லை.(44) எனினும், ஓ! கல்விமானே, உன் நம்பிக்கையை ஈர்க்க நான் சொல்லப்போகும் எதுவும் தற்புகழ்ச்சி நிறைந்ததாகவே இருக்கும். அவை யாவற்றிற்காகவும், அதை முறையாகக் கேட்பாயாக.(45) ஓ! பலமானவனே, மாதலியைப் {இந்திரன் சாரதியைப்} போலவே விழிப்புணர்விலும், குதிரைகளைக் கட்டுப்படுத்துவதிலும், எதிர்வரும் ஆபத்தை அறிவதிலும், அதைத் தவிர்ப்பதிலும், நடைமுறையில் அதைத் தவிர்க்கும் தகுதியிலும் நான் இந்திரனுக்கே கூடச் சாரதி அலுவலை ஏற்கத் தகுந்தவனே.(46) பார்த்தனோடு நீ போரிடுகையில், உன் குதிரைகளின் கடிவாளங்களை நான் ஏந்துவேன். ஓ! சூதனின் மகனே, உன் கவலை அகலட்டும்” என்றான்{சல்லியன்}.(47)

[4] வேறொரு பதிப்பில், “இந்த நான்குவிதச் செய்கைகளும் ஆரியர்களால் அனுஷ்டிக்கப்பட்டவைகளல்ல” என்றிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பிலும் ஆரியர்கள் என்றே இருக்கிறது. கங்குலியிலும், மன்மதநாததத்தரின் பதிப்பிலும் மதிப்பிற்குரிய நபர்கள் என்று இருக்கிறது.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்