Thursday, February 23, 2017

வரமளித்த சிவன்! - கர்ண பர்வம் பகுதி – 34இ

Siva gave boon! | Karna-Parva-Section-34c | Mahabharata In Tamil


பதிவின் சுருக்கம் : சல்லியனுக்குப் பரசுராமர் மற்றும் சிவனின் கதையைச் சொன்ன துரியோதனன்; தெய்வீக ஆயுதங்கள் வேண்டி தவமிருந்த பரசுராமர்; தூய்மையடையப் பணித்த சிவன்; தைத்தியர்களை வெல்ல முடியாத தேவர்கள் சிவனிடம் பணிந்து வேண்டியது; தைத்தியர்களை அழிக்க பரசுராமரை ஏவிய சிவன்; தைத்தியர்களை அழித்த பரசுராமர்; ஆயுதங்களை அளித்த சிவன்; பரசுராமரிடம் இருந்து அவ்வாயுதங்களைப் பெற்றான் கர்ணன் எனத் துரியோதனன் சொல்வது...


{துரியோதனன் சல்லியனிடம் தொடர்ந்தான்}, “நான் சொல்லப்போகும் மற்றுமொரு கதையைக்  கேட்பீராக. அறமொழுகும் அந்தணர் {பிராமணர்} ஒருவர் என் தந்தையிடம் என் முன்னிலையில் இதைச் சொன்னார்.(123) ஓ! சல்லியரே, செயல்களின் காரணங்களும், நோக்கங்களும் நிறைந்த அந்த இனிமையான வார்த்தைகளைக் கேட்ட பிறகு, எவ்வித ஐயுணர்வும் இன்றி நீர் தீர்மானிப்பதையே செய்வீராக.(124)


பிருகு குலத்தவரில் கடும் தவநோன்புகளைக் கொண்டவராக ஜமதக்னி இருந்தார். அவருக்கு, அனைத்து அறங்களையும், சக்தியையும் கொண்டவரும், ராமர் {பரசுராமர்} என்ற பெயரில் கொண்டாடப்படுபவருமான ஒரு மகன் இருந்தார்.(125) உற்சாகமிக்க ஆன்மாவுடன் மிகக் கடினமான தவத்தைப் பயின்று, நோன்புகளுக்கும், விரதங்களுக்கும் கட்டுப்பட்டு, தன் புலன்களைக் கட்டுப்படுத்திய அவர் {பரசுராமர்}, ஆயுதங்களை அடைவதற்காகத் பவதேவனை {சிவனை} நிறைவுறச் செய்தார்.(126) அவரது அர்ப்பணிப்பு மற்றும் இதயத்தின் அமைதிநிலை ஆகியவற்றின் விளைவால் மஹாதேவன் {சிவன்} அவரிடம் {பரசுராமரிடம்} மனநிறைவு கொண்டான். ராமரது {பரசுராமரின்} இதயத்தில் பேணப்பட்ட விருப்பத்தைப் புரிந்து கொண்ட சங்கரன் {சிவன்}, தன்னை அவரிடம் {பரசுராமரிடம்} வெளிக்காட்டினான்.(127) 

மஹாதேவன் {சிவன்}, “ஓ! ராமா {பரசுராமா}, நான் உன்னிடம் நிறைவைக் கொண்டேன். நீ அருளப்பட்டிருப்பாயாக, உன் விருப்பத்தை நான் அறிவேன். உன் ஆன்மாவைத் தூய்மையாக்குவாயாக. அப்போது உன் விருப்பங்கள் அனைத்தையும் நீ அடைவாய்.(128) நீ தூய்மையானதும் {பரிசுத்தமடைந்ததும்} ஆயுதங்கள் அனைத்தையும் நான் உனக்குத் தருவேன். ஓ! பிருகுவின் மகனே, திறனற்றவனையும், அவ்வாயுதங்களுக்குத் தகாதவனையும் அவை {அவ்வாயுதங்கள்} எரித்துவிடும்” என்றான் {சிவன்}.(129) தேவதேவனும், திரிசூலபாணியுமான அந்தத் தேவனால் {சிவனால்} இவ்வாறு சொல்லப்பட்ட அந்த ஜமதக்னி மகன் {பரசுராமர்}, பலம்வாய்ந்த அந்த உயர்ந்தவனிடம் {சிவனிடம்} சிரம் தாழ்த்தி,(130) “ஓ! தேவதேவா, அவற்றை ஏந்த நான் தகுந்தவன் என உண்மையில் எப்போது நீ கருதுகிறாயோ, எப்போதும் உன் பணியில் அர்ப்பணிப்புடன் இருக்கும் எனக்கு அவ்வாயுதங்களை அப்போது கொடுப்பதே உனக்குத் தகும்” என்றார்.(131)

துரியோதனன் {சல்லியனிடம்} தொடர்ந்தான், “பிறகு அந்த ராமர், தவங்கள், புலன்களில் தற்கட்டுப்பாடு, நோன்புகள் நோற்பு, வழிபாடு, காணிக்கைகள், மந்திரங்களுடன் கூடிய வேள்விகள் மற்றும் ஹோமங்கள் ஆகியவற்றால் நீண்ட பல ஆண்டுகளாக சர்வனை {சிவனைத்} துதித்தார்.(132) இறுதியாக அந்த உயர் ஆன்ம பிருகு குல மகனிடம் {பரசுராமரிடம்} மனம் நிறைவடைந்த மகாதேவன், அறங்கள் பலவற்றைக் கொண்ட தன் தெய்வீகத் துணைவியின் {உமாதேவியின்} முன்னிலையில்:(133) “நோன்புகளில் உறுதியான இந்த ராமன் {பரசுராமன்}, என்னிடம் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவனாவான்” என்று சொன்னான். அவனிடம் மனம் நிறைந்த அந்தத் தலைவன் சங்கரன், ஓ! எதிரிகளைக் கொல்பவரே {சல்லியரே}, தேவர்கள் மற்றும் முனிவர்களின் முன்னிலையில் அவரது நற்பண்புகளை மீண்டும் மீண்டும் அறிவித்தார்.(134)

அதே வேளையில் தைத்தியர்கள் மிகவும் வலிமைமிக்கவர்களாக ஆகிவிட்டார்கள். செருக்கு மற்றும் மடமையால் குருடான அவர்கள் {தைத்தியர்கள்}, சொர்க்கவாசிகளைப் பீடிக்கத் தொடங்கினர். அப்போது தேவர்கள் ஒன்றுகூடி, அவர்களைக் கொல்ல உறுதியாகத் தீர்மானித்து, தங்கள் எதிரிகளின் அழிவுக்காக மிக ஊக்கமாக முயன்றனர். எனினும், அவர்களை வெல்லத் தவறினர்.(136) பிறகு தேவர்கள், உமையின் தலைவனான மஹேஸ்வரனிடம் சென்று, “எங்கள் எதிரிகளைக் கொல்வீராக” என்று சொல்லி அர்ப்பணிப்புடன் அவனை நிறைவு கொள்ளச் செய்யத் தொடங்கினர்.(137) தேவர்களின் எதிரிகளை அழிப்பதாக அவர்களிடம் உறுதியளித்த அந்தத் தேவன், பிருகுவின் வழித்தோன்றலான ராமரை அழைத்தான். ராமரிடம் {பரசுராமரிடம்} அந்த சங்கரன்,(138) “ஓ! பிருகுவின் வழித்தோன்றலே {பரசுராமா}, உலகம் அனைத்திற்கும் நன்மை செய்யவும், என்னை நிறைவு கொள்ளச்செய்யவும் விரும்பி, கூடியிருக்கும் தேவஎதிரிகள் அனைவரையும் கொல்வாயாக” என்றான்.(139)

இப்படிச் சொல்லப்பட்ட ராமர் {பரசுராமர்}, முக்கண்களைக் கொண்ட அந்த வரமளிக்கும் தேவனிடம் {சிவனிடம்}, “ஓ! தேவர்களின் தலைவா, ஆயுதங்களற்றவனாக நான் இருக்கிறேன், போரில் வெல்லப்பட முடியாதவர்களும், ஆயுதங்களில் சாதித்தவர்களுமான தானவர்கள் கூட்டத்தைக் கொல்ல என்னிடம் என்ன பலத்தைக்கொண்டிருக்கிறேன்?” என்று கேட்டார்.(140) அதற்கு அந்த மஹேஸ்வரன், “என் ஆணையின் படி சென்று அந்த எதிரிகளை நீ கொல்வாயாக. அந்த எதிரிகள் அனைவரையும் வென்ற பிறகு, எண்ணிலா தகுதிகளை நீ அடைவாய்” என்றான்.(141) இவ்வார்த்தைகளைக் கேட்டு அவை அனைத்தையும் ஏற்ற ராமர் {பரசுராமர்}, தமது வெற்றிக்காக தீர்திற {பரிகாரச்} சடங்குகளைச் செய்யச் செய்து, தானவர்களை எதிர்த்துச் சென்றார்.(142)

வலிமை, மடமை, செருக்கு ஆகியவற்றைக் கொண்ட அந்தத் தேவ எதிரிகளிடம் பேசிய அவர், “போரில் மூர்க்கர்களான தைத்தியர்களே, போரை எனக்கு அளிப்பீராக {என்னுடன் போரிடுவீராக}.(143) உங்களை வெல்வதற்காகத் தேவதேவனால் நான் அனுப்பப்பட்டுள்ளேன்” என்றார். அப்போது, அந்தப் பிருகுவின் வழித்தோன்றலால் {பரசுராமரால்} இவ்வாறு சொல்லப்பட்ட அந்தத் தைத்தியர்கள் போரிடத் தொடங்கினர்.(144) எனினும், பார்கவர்களை இன்புறச் செய்யும் அவர் {பரசுராமர்}, இந்திரனின் வஜ்ரத்திற்கு ஒப்பான தீண்டலைக் கொண்ட வீச்சுகளால் போரில் தைத்தியர்களைக் கொன்று,(145) மஹாதேவனிடம் {சிவனிடம்} திரும்பி வந்தார். பிராமணர்களில் முதன்மையான அந்த ஜமதக்னி மகன் {பரசுராமர்}, தானவர்களால் தன் மேனியில் ஏற்பட்ட காயங்கள் பலவற்றுடனே திரும்பினார். எனினும், ஸ்தாணுவால் {சிவனால்} தீண்டப்பட்டதும் அவரது காயங்கள் குணமடைந்தன.(146) அவரது அந்த அருஞ்செயலால் நிறைவை அடைந்த அந்தச் சிறப்புமிக்க தேவன், அந்த உயர் ஆன்ம பிருகு மகனுக்கு {பரசுராமருக்கு} பல்வேறு வகைகளிலான வரங்களை அளித்தான்.(147) இதயம் நிறைந்தவனும், திரிசூலபாணியுமான அந்தத் தேவதேவன், “ஓ! பிருகு குலத்தவரை இன்புறச் செய்பவனே {பரசுராமா}, உன் உடலில் ஆயுதங்கள் பாய்ந்ததன் விளைவால் நீ அடைந்த துன்ப வலி, மனிதசக்திக்கு அப்பாற்பட்ட வகையில் நீ செய்த அருஞ்செயலுக்குச் சாட்சி பகர்கிறது. நீ விருப்பப்பட்டவாறே, இந்தத் தெய்வீக ஆயுதங்களை என்னிடம் இருந்து பெறுவாயாக” என்றான் {சிவன்}.(148,149)

துரியோதனன் தொடர்ந்தான், “பிறகு அந்த ராமர் {பரசுராமர்}, தெய்வீக ஆயுதங்களையும், தாம் விரும்பிய வரங்களையும் அடைந்து, சிவனுக்குத் தலைவணங்கினார்.(150) பிறகு அந்தப் பெரும் தவசி {பரசுராமர்}, தேவர்களின் தலைவனிடம் {சிவனிடம்} விடைபெற்றுச் சென்றார். அந்த முனிவர் சொன்ன அந்தப் பழங்கதை இதுவே.(151) அந்தப் பிருகுவின் வழித்தோன்றல் {பரசுராமர்}, ஓ! மன்னர்களில் புலியே {சல்லியரே}, மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன், உயர் ஆன்ம கர்ணனுக்குத் தமது ஆயுத அறிவியல் அனைத்தையும் கொடுத்தார்.(152) கர்ணனிடம் எக்களங்கமாவது இருந்திருப்பின், ஓ! பூமியின் தலைவா {சல்லியரே}, அந்தப் பிருகு குலத்தை இன்புறச் செய்வபவர் {பரசுராமர்}, தமது தெய்வீக ஆயுதங்களை அவனுக்கு ஒருபோதும் கொடுத்திருக்க மாட்டார்.(153)

கர்ணனைச் சூத குலத்தில் பிறந்தவன் என்று என்னால் நினைக்க முடியவில்லை. க்ஷத்திரிய வகையில் ஒரு தேவனுக்குப் பிறந்த மகனாகவே இவன் இருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன்.(154) இவன் பிறந்த குலத்தை உறுதி செய்ய முடியாத வகையில், (குழந்தை பருவத்திலேயே) அவன் கைவிடப்பட்டிருக்க வேண்டும் எனவும் நான் நினைக்கிறேன். இந்தக் கர்ணன், ஓ! சல்லியரே, சூத வகையில் எவ்வழியிலும் பிறந்திருக்க முடியாது.(155) பெண்மான் ஒன்றால் ஒருபோதும் ஒரு புலியைப் பெற முடியாததைப் போலத் தனது (இயற்கையான) காதுகுண்டலங்கள் மற்றும் (இயற்கையான) கவசம் ஆகியவற்றைக் கொண்டவனும், நீண்ட கரங்களையும் கொண்டவனும், சூரியனுக்கே ஒப்பானவனுமான இந்த வலிமைமிக்கத் தேர்வீரன் {கர்ணன்}, ஒரு சாதாரணப் பெண்ணுக்குப் பிறந்திருக்கவே முடியாது.(156) யானைகளின் இளவரசனுடைய துதிக்கைக்கு ஒப்பாக இவனது கரங்கள் ஒவ்வொன்றும் பருத்திருக்கின்றன. அனைத்து எதிரிகளையும் தடுக்க வல்ல இவனது இந்த அகன்ற மார்பைப் பார்ப்பீராக.(157) ஓ! மன்னா {சல்லியரே}, வைகர்த்தனன் {சூரியன் மகன்} என்றும் வேறு பெயரில் அழைக்கப்படும் இந்தக் கர்ணன், ஒரு சாதாரண மனிதனாக இருக்கவே முடியாது. பெரும் வீரத்தைக் கொண்ட இந்த ராமரின் {பரசுராமரின்} சீடன் {கர்ணன்}, ஓ! மன்னர்களின் மன்னா {சல்லியரே}, மிக உயர்ந்த ஆன்மாவைக் கொண்டவனாவான்” {என்றன் துரியோதனன்}.(158)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்