Friday, March 31, 2017

பாசறையை அடைந்த யுதிஷ்டிரன்! - கர்ண பர்வம் பகுதி – 63

Yudhishthira repaired to the Pandava camp! | Karna-Parva-Section-63 | Mahabharata In Tamil


பதிவின் சுருக்கம் : கணைகளால் சிதைக்கப்பட்டுப் பாண்டவப் பாசறையை நோக்கி சென்று கொண்டிருந்த யுதிஷ்டிரனைப் பின்தொடர்ந்து சென்று தாக்கிய கர்ணன்; யுதிஷ்டிரனின் குதிரைகளைக் கொன்று, அவனது தலைப்பாகையையும் வீழ்த்திய கர்ணன்; சகாதேவனின் தேரில் ஏறிக்கொண்ட நகுலனும், யுதிஷ்டிரனும்; யுதிஷ்டிரனைவிட்டு அர்ஜுனனைத் தாக்குமாறு கர்ணனிடம் சொன்ன சல்லியன்; யுதிஷ்டிரனையே தொடர்ந்து தாக்கிய கர்ணன்; பீமனிடம் துரியோதனன் சிக்கியிருப்பதைக் கர்ணனுக்கு உணர்த்திய சல்லியன்; யுதிஷ்டிரனை விட்டகன்று பீமனிடம் சென்ற கர்ணன்; யுதிஷ்டிரனைப் பாசறையில் விட்டுவிட்டுப் பீமனிடம் திரும்பிய நகுலனும், சகாதேவனும்...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அதேவேளையில் கர்ணன், தன் முன்னே நின்றவர்களும் வலிமைமிக்கத் தேர்வீரர்களும், பெரும் வில்லாளிகளுமான அந்தக் கைகேயர்களைத் தன் கணைமாரிகளால் பீடிக்கத் தொடங்கினான்.(1) உண்மையில், அந்த ராதையின் மகன் {கர்ணன்}, தன்னை அந்தப் போரில் தடுத்துக் கொண்டிருந்த அந்தப் போர்வீரர்களில் ஐநூறு பேரை யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பி வைத்தான்.(1) அந்தப் போரில் தடுக்கப்பட முடியாதவனாக இருக்கும் ராதையின் மகனைக் {கர்ணனைக்} கண்ட அந்தப் போர்வீரர்கள், தங்களைத் தாக்குபவனின் கணைகளால் பீடிக்கப்பட்டு, பீமசேனனின் முன்னிலையை வந்தடைந்தனர்.(3) அந்தத் தேர்ப்படையைத் தன் கணைகளால் பல பகுதிகளாகப் பிளந்த கர்ணன், ஒரே தேரில் தனியொருவனாகச் சென்று, கணைகளால் அதிகம் சிதைக்கப்பட்டவனும், கிட்டத்தட்ட உணர்வை இழந்திருந்தவனும், தன் இரு பக்கங்களிலும் நகுலன் மற்றும் சகாதேவனை நிறுத்திக் கொண்டு பாண்டவப் பாசறையை அடைவதற்காக மெதுவாகச் சென்று கொண்டிருந்தவனுமான யுதிஷ்டிரனைப் பின்தொடர்ந்தான்.(4,5)


மன்னனை {யுதிஷ்டிரனை} அணுகிய ராதையின் மகன் {கர்ணன்}, துரியோதனனுக்கு நன்மை செய்ய விரும்பி, உறுதிமிக்க மூன்று கணைகளால் அந்தப் பாண்டுவின் மகனை {யுதிஷ்டிரனைத்} துளைத்தான்.(6) பதிலுக்கு அந்த மன்னனும் {யுதிஷ்டிரனும்}, ராதை மகனின் நடு மார்பைத் துளைத்து, மூன்று கணைகளால் அவனது சாரதியையும் துளைத்தான்.(7) பிறகு, எதிரிகளை எரிப்பவர்களும், யுதிஷ்டிரனின் தேர்ச்சக்கரங்களைப் பாதுகாப்பவர்களுமான மாத்ரியின் இரட்டை மகன்கள் {நகுலனும், சகாதேவனும்}, மன்னனைக் {யுதிஷ்டிரனைக்} கொல்வதில் கர்ணன் வெல்லாத வகையில் பின்னவனை {கர்ணனை} நோக்கி விரைந்தனர்.(8) அப்போது, நகுலன் மற்றும் சகாதேவன் ஆகிய இருவரும், பெருங்கவனத்துடன் கணைமாரிகளை ஏவி, அவற்றைக் கொண்டு ராதையின் மகனை {கர்ணனை} மறைத்தனர்.(9) எனினும், வீரனான சூதன் மகன் {கர்ணன்}, உயர் ஆன்மா கொண்டவர்களும், எதிரிகளைத் தண்டிப்பவர்களுமான அந்த இருவரையும், பெரும் கூர்மை கொண்ட அகன்ற தலை கணைகளால் {பல்லங்களால்} துளைத்தான்.(10)

பிறகு அந்த ராதையின் மகன் {கர்ணன்}, தந்தத்தைப் போன்ற வெண்மையானவையும், மனத்தைப் போன்று வேகமானவையும், வாலில் கருப்பு முடியைக் கொண்டவையுமான யுதிஷ்டிரனின் சிறந்த குதிரைகளைக் கொன்றான்.(11) அப்போது பெரும் வில்லாளியான அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, சிரித்துக் கொண்டே மற்றொரு அகன்ற தலை கணையால் {பல்லத்தால்} குந்தி மகனின் தலைப்பாகையை வீழ்த்தினான்,(12) அதே போல, நகுலனின் குதிரைகளையும் கொன்ற அந்த வீரக் கர்ணன், மாத்ரியின் அந்தப் புத்திசாலி மகனின் {நகுலனின்} தேருடைய ஏர்க்காலையும், வில்லையும் அறுத்தான்.(13) குதிரைகளற்றவர்களும், தேரற்றவர்களும், பாண்டுவின் மகன்களுமான அந்தச் சகோதர்கள் இருவரும் {யுதிஷ்டிரனும், நகுலனும்}, அதன்பேரில் சகாதேவனின் தேரில் ஏறிக் கொண்டனர்.(14)

அந்த இரு சகோதரர்களையும் தேரற்றவர்களாகக் கண்டவனும், பகைவீரர்களைக் கொல்பவனும், அவர்களது தாய்மாமனுமான மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, கருணையால் ராதையின் மகனிடம் {கர்ணனிடம்},(15) “நீ இன்று பிருதையின் மகனான பல்குனனுடன் {அர்ஜுனனுடன்} போரிட வேண்டும். தர்மனின் அரச மகனிடம் {யுதிஷ்டிரனிடம்} இந்த அளவுக்குச் சினம் தூண்டப்படும் வகையில் ஏன் நீ போரிடுகிறாய்?(16) உன் ஆயுதங்கள் தீர்ந்து பாதிப்படையும் நிலையில் நீ இருக்கிறாய். உன் கவசமும் பலவீனமடைந்துள்ளது. ஓ! ராதையின் மகனே {கர்ணனே}, பார்த்தனை {அர்ஜுனனை} நீ அடையும் போது, உன் கணைகளும் குறைந்து, அம்பறாத்தூணிகளும் இல்லாமல், உன் சாரதியும், குதிரைகளும் களைத்துப் போய், எதிரியின் ஆயுதங்களால் நீயும் சிதைந்திருந்தால், ஏளனத்திற்கும், கேலிக்கும் உரிய பொருளாக நீ ஆவாய்” என்றான் {சல்லியன்}.(17) மத்ரர்களின் ஆட்சியாளனால் இவ்வாறு சொல்லப்பட்டாலும், சினத்தால் நிறைந்திருந்த கர்ணன், அந்தப் போரில் யுதிஷ்டிரனைத் தாக்குவதைத் தொடரவே செய்தான்.(18) மேலும் அவன், பாண்டு மற்றும் மாத்ரியின் மகன்கள் இருவரையும் கூரிய கணைகள் பலவற்றால் துளைப்பதையும் தொடர்ந்தான். சிரித்துக் கொண்டே தன் கணைகளால் அவன் {கர்ணன்}, யுதிஷ்டிரனைப் போரில் இருந்து புறங்காட்ட வைத்தான்.(19)

அப்போது சல்லியன், யுதிஷ்டிரனை அழிக்கத் தீர்மானித்துப் பெருங்கோபத்தால் தன் தேரில் நின்று கொண்டிருந்த கர்ணனிடம், மீண்டும் சிரித்துக் கொண்டே, இவ்வார்த்தைகளைச் சொன்னான்,(20) “ஓ! ராதையின் மகனே, எவனுடைய நிமித்தமாகத் திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} உன்னை எப்போதும் கௌரவிக்கிறானோ, அந்தப் பார்த்தனை {அர்ஜுனனைக்} கொல்வாயாக.(21) இரு கிருஷ்ணர்களும் தங்கள் சங்குகளை உரக்க முழங்குவது கேட்கப்படுகிறது. மழைக்காலங்களில் கேட்கப்படும் மேகங்களின் முழக்கத்தைப்போல அர்ஜுனனின் நாணொலியும் கேட்கப்படுகிறது.(22) அர்ஜுனன், நமது தேர்வீரர்களில் முதன்மையானோரைத் தன் கணைப் பொழிவால் தாக்கி வீழ்த்தி நம் துருப்பினர் அனைவரையும் அதோ விழுங்கிக் கொண்டிருக்கிறான். ஓ கர்ணா, இந்தப் போரில் அவனைப் பார்.(23)

அவனது பின்புறத்தை யுதாமன்யு மற்றும் உத்தமௌஜஸ் ஆகிய இருவரும் பாதுகாக்கின்றனர். துணிச்சல்மிக்கச் சாத்யகி அவனது இடது சக்கரத்தைப் பாதுகாக்கிறான்,(24) திருஷ்டத்யும்னன் அவனது வலது சக்கரத்தைப் பாதுகாக்கிறான். பீமசேனனோ திருதராஷ்டிரரின் அரச மகனுடன் {துரியோதனனுடன்} அதோ போரிடுகிறான்.(25) ஓ! ராதையின் மகனே, இன்று நாம் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே  அந்தப் பீமன் மன்னனைக் கொல்ல இயலாத வகையிலும், அவனிடம் இருந்து மன்னன் {துரியோதனன்} தப்புவிக்கும் வகையிலும் செயல்படுவாயாக.(26) போர்க்கள ரத்தினமான பீமசேனனின் ஆளுகையின் கீழ் துரியோதனன் கொண்டுவரப்படுவதைப் பார். அவனை அணுகி உன்னால் காக்க முடியுமென்றால், உண்மையில் அஃது அற்புதம் நிறைந்த ஓர் அருஞ்செயலாகவே இருக்கும். (27) மன்னனைப் பேராபத்து நெருங்குவதால் அங்கே சென்று அவனை மீட்பாயாக. மாத்ரியின் மகன்களையோ, மன்னன் யுதிஷ்டிரனையோ கொல்வதால் நீ என்ன ஆதாயத்தை அடையப் போகிறாய்?” என்றான்.(28) ஓ! பூமியின் தலைவரே {திருதராஷ்டிரரே}, சல்லியனின் வார்த்தைகளைக் கேட்டவனும், அந்தப் பயங்கரப்போரில் பீமனால் ஆட்கொள்ளப்படும் துரியோதனனைக் கண்டவனுமான ராதையின் வீர மகன் {கர்ணன்},(29) சல்லியனின் வார்த்தைகளால் இவ்வாறு தூண்டப்பட்டு, மன்னனைக் காக்க மிகவும் விரும்பி, அஜாதசத்ருவையும் {யுதிஷ்டிரனையும்}, பாண்டு மற்றும் மாத்ரியின் இரட்டை மகன்களையும் விடுவித்தான்.(30) பறவைகளைப் போன்ற வேகத்தைக் கொண்டவையும், மத்ரர்களின் ஆட்சியாளனால் {சல்லியனால்} தூண்டப்பட்டவையுமான தன் குதிரைகளால் அவன் {கர்ணன்} கொண்டு செல்லப்பட்டான்.(31)

கர்ணன் சென்றதும், குந்தியின் மகனான யுதிஷ்டிரன், ஓ! ஐயா, சகாதேவனின் வேகமான குதிரைகளால் சுமக்கப்பட்டுப் பின்வாங்கிச் சென்றான்.(32) தன் இரட்டைச் சகோதரர்களின் துணையுடன் சென்ற அந்த மனிதர்களின் ஆட்சியாளன் {யுதிஷ்டிரன்}, வெட்கத்துடன் (பாண்டவ) முகாமுக்கு வேகமாகத் திரும்பி, கணைகளால் மிகவும் சிதைக்கப்பட்ட தன் உடலுடன்,(33) தேரில் இருந்து கீழே இறங்கி, ஒரு சிறந்த படுக்கையில் வேகமாக அமர்ந்து கொண்டான்.
அப்போது அவனுடைய உடலில் இருந்து கணைகள் பிடுங்கப்பட்ட பாண்டுவின் அரச மகன் {யுதிஷ்டிரன்}, துன்பக்கணையால் தன் இதயம் அதிகமாகப் பீடிக்கப்பட்டவனாக,(34) வலிமைமிக்கத் தேர்வீரர்களும், மாத்ரியின் மகன்களுமான தன் இரு சகோதரர்களிடம், “பீமசேனனின் படைப்பிரிவுக்கு வேகமாகத் திரும்பிச் செல்வீராக.(35) மேகமென முழங்கிக் கொண்டே விருகோதரன் {பீமன்} போரிட்டுக் கொண்டிருக்கிறான்” என்றான். மற்றொரு தேரில் ஏறியவனும், தேர்வீரர்களில் காளையுமான நகுலன்,(36) பெரும் சக்தி கொண்ட சகாதேவன் ஆகிய பெரும் வலிமையைக் கொண்டவர்களும், எதிரிகளை நசுக்குபவர்களான அவ்விரு சகோதரர்களும், மிக வேகமான குதிரைகளால் சுமக்கப்பட்டு, பீமனை நோக்கிச் சென்றனர். உண்மையில், ஒன்றாகச் சேர்ந்து பீமசேனனின் படைப்பிரிவுக்குத் திரும்பிய அந்தச் சகோதரர்கள், அங்கே தங்களுக்குரிய இடங்களில் நிலைகொண்டனர்” {என்றான் சஞ்சயன்}.(37)
-------------------------------------------------------------------
கர்ண பர்வம் பகுதி -63ல் உள்ள சுலோகங்கள் : 37


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்