Sunday, September 10, 2017

தீர்த்தங்களில் புனிதநீராடல்! - சல்லிய பர்வம் பகுதி – 49

Sacred bath in tirthas! | Shalya-Parva-Section-49 | Mahabharata In Tamil

(கதாயுத்த பர்வம் - 18)


பதிவின் சுருக்கம் : இந்திர, ராம, யமுனா, ஆதித்திய தீர்த்தங்களுக்குச் சென்ற பலராமன்; இந்திரன், பரசுராமர், வருணன், சூரியன் ஆகியோர் செய்த வேள்விகள்; மதுகைடபர்களைக் கொன்று ஆதித்தியத் தீர்த்தத்தில் நீராடிய விஷ்ணு; யோகசக்திகளை அடைந்த வியாசர் மற்றும் அசிததேவலர்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “'அந்த யதுக்களின் வலிமைமிக்கத் தலைவன் {பலராமன்}, இந்திரனின் தீர்த்தத்திற்குச் சென்று, அங்கே உரிய சடங்குகளுடன் நீராடி, பிராமணர்களுக்குச் செல்வத்தையும், ரத்தினங்களையும் கொடுத்தான்.(1) தேவர்களின் தலைவன் {இந்திரன்} அங்கே நூறு வேள்விகளைச் செய்து, பிருஹஸ்பதிக்கு அபரிமிதமான செல்வத்தைத் தானமளித்தான்.(2) உண்மையில், அந்தச் சக்ரன் {இந்திரன்}, வேதங்களை அறிந்தோரான பிராமணர்களின் உதவியுடனும், (சாத்திரங்களில்) விதிக்கப்பட்டுள்ள சடங்குகளுடனும் அவ்வேள்விகள் அனைத்தையும் செய்தான். அந்த வேள்விகளில் அனைத்தும் தடங்கலற்றவையாக இருந்தன. அனைத்து வகைக் குதிரைகளும் அங்கே கொண்டுவரப்பட்டன. பிராமணர்களுக்குக் கொடுக்கப்பட்ட தானங்கள் அபரிமிதமாக இருந்தன.(3) ஓ! பாரதர்களின் தலைவா, பெரும் காந்தியைக் கொண்ட சக்ரன் அந்த நூறு வேள்விகளையும் முறையாக முடித்ததும், சதக்ரது என்ற பெயரில் அழைக்கப்பட்டான்.(4) அனைத்துப் பாவங்களையும் துடைக்கவல்லதும், மங்கலமானதுமான அந்தப் புனிதத் தீர்த்தம், இதன் காரணமாகவே இந்திரத் தீர்த்தம் என்று அவன் பெயரால் அழைக்கப்பட்டது.(5)


அங்கே முறையாக நீராடிய பலதேவன், சிறந்த உணவும் மற்றும் ஆடைகளைத் தானமளித்துப் பிராமணர்களை வழிபட்டான். பிறகு அவன், ராமரின் {பரசுராமரின்} பெயரால் அழைக்கப்பட்டதும், மங்கலமானதுமான முதன்மையான தீர்த்தத்திற்குச் சென்றான்.(6) உயர்ந்த அருளையும், பெரும் தவத் தகுதியையும் கொண்ட பிருகு குலத்தின் ராமர் {பரசுராமர்}, மீண்டும் மீண்டும் பூமியைப் பணியச் செய்து, க்ஷத்திரியர்களில் முதன்மையானோர் அனைவரையும் கொன்றார்.(7) (அத்தகு அருஞ்செயல்களைச் செய்த) ராமர், முனிவர்களில் சிறந்தவரும், தன் ஆசானுமான கசியபரின் துணையுடன் ஒரு வாஜபேய வேள்வியையும், நூறு குதிரை வேள்விகளையும் அந்தத் தீர்த்தத்தில்தான் செய்தார். அங்கே ராமர் {பரசுராமர்}, தன் ஆசானுக்குக் கடல்களுடன் கூடிய மொத்த பூமியையும் வேள்விக்கூலியாகக் கொடுத்தார்.(8) ஓ! ஜனமேஜயா, அந்தப் பெரும் ராமர் {பரசுராமர்}, அங்கே முறையாக நீராடி, பிராமணர்களுக்குத் தானமளித்து அவர்களை வழிபட்டார்.(9) அவர், பல்வேறு வகை ரத்தினங்கள், பசுக்கள், யானைகள், பெண் பணியாட்கள், செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள் ஆகிய பல்வேறு தானங்களை அளித்த பிறகு காட்டுக்குள் ஓய்ந்து சென்றார்.(10)

தேவர்களும், மறுபிறப்பாள {பிராமண} முனிவர்களும் வந்து போகும் இடமானதும், புனிதமானதுமான அந்த முதன்மையான தீர்த்தத்தில் நீராடிய பிறகு, பலதேவன் {பலராமன்}, அங்கே இருந்த தவசிகளை முறையாக வழிபட்டு, யமுனா என்றழைக்கப்பட்ட தீர்த்தத்திற்குச் சென்றான்.(11) ஓ! பூமியின் தலைவா {ஜனமேஜயா}, பழங்காலத்தில், பெரும்பிரகாசத்தைக் கொண்டவனும், உயர்ந்த அருளைக் கொண்டவனும், அதிதியின் மகனுமான வருணன், அந்தத் தீர்த்தத்தில்தான் ராஜசூய வேள்வியைச் செய்தான்.(13) ஓ!மன்னா {ஜனமேஜயா}, போரில் மனிதர்கள், தேவர்கள், கந்தர்வர்கள் மற்றும் ராட்சசர்களை அடக்கியவனும், பகைவீரர்களைக் கொல்பவனுமான வருணன், அந்தத் தீர்த்தத்தில்தான் தன் மகத்தான வேள்வியைச் செய்தான். அந்த முதன்மையான வேள்வி தொடங்கியதும், மூவுலகங்களையும் அச்சத்தில் ஆழ்த்தும் வகையில் தேவர்களுக்கும், தானவர்களுக்கும் இடையில் போர் மூண்டது.(14) வேள்விகளில் முதன்மையான (வருணனின்) ராஜசூயம் நிறைவடைந்ததும், ஓ! ஜனமேஜயா, க்ஷத்திரியர்களுக்கிடையில் ஒரு பயங்கரமான போர் தொடங்கியது.(15)

எப்போதும் தயாளமாக இருப்பவனும், பலமிக்கவனுமான பலதேவன், அங்கே முனிவர்களை வழிபட்டு, தானத்தை விரும்பியோருக்கு பல தானங்களை அளித்தான்.(16) மகிழ்ச்சியால் நிறைந்தவனும், பெரும் முனிவர்களால் புகழப்பட்டவனும், காட்டு மலர் மாலைகளால் எப்போதும் அலங்கரிக்கப்பட்ட வீரனுமான அந்தப் பலதேவன் அடுத்ததாக ஆதித்தியம் என்றழைக்கப்பட்ட தீர்த்தத்திற்குச் சென்றான்.(17) ஓ! மன்னர்களில் சிறந்தவனே, போற்றுதலுக்குரியவனும், பெருங்காந்தியைக் கொண்டவனுமான சூரியன் அங்கே ஒரு வேள்வியைச் செய்து, (அண்டத்தின்) ஒளிக்கோள்கள் அனைத்தின் மீதான அரசுரிமையையும், தனக்கான பெரும் சக்தியையும் அடைந்தான்.(18)

அந்த ஆற்றின் {சரஸ்வதி ஆற்றின்} கரையில் அமைந்துள்ள அந்தத் தீர்த்தத்தில், வாசவனை {இந்திரனைத்} தலைமையாகக் கொண்ட தேவர்கள், விஸ்வதேவர்கள், மருத்துக்கள், கந்தர்வர்கள், அப்சரர்கள்,(19) தீவில் பிறந்தவர் (வியாசர்), சுகர், மதுசூதனனான கிருஷ்ணன், யக்ஷர்கள், ராட்சசர்கள், பிசாசங்கள், ஓ! மன்னா {ஜனமேஜயா},(20) ஆயிரக்கணக்கான பலர் மற்றும் தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்கள் ஆகியோர் எப்போதும் வசிக்கின்றனர். உண்மையில், பழங்காலத்தில் விஷ்ணுவானவன், மது, கைடபன் என்ற அசுரர்கள் இருவரைக் கொன்று, மங்கலமானதும், புனிதமானதுமான அந்தச் சரஸ்வதியின் தீர்த்தத்தில் நீராடி {பாவம் விலகுவதற்காகத்} தனக்கான தூய்மைச் சடங்குகளைச் செய்தான்.(21,22) அற ஆன்மா கொண்டவரான தீவில் பிறந்தவரும் ((துவைபாயனரான} வியாசரும்) அந்தத் தீர்த்தத்தில் நீராடி, பெரும் யோக சக்திகளையும், உயர்ந்த வெற்றியையும் அடைந்தான்.(23) பெரும் தவத் தகுதியை உடையவரான முனிவர் அசித தேவலரும், உயர்ந்த யோகத் தியானத்தில் தன் ஆன்மாவை நிலைக்கச் செய்து அந்தத் தீர்த்தத்தில் நீராடியே பெரும் யோக சக்திகளை அடைந்தார்" {என்றார் வைசம்பாயனர்}.(24)
----------------------------------------------------------------------------------------------------
சல்லிய பர்வம் பகுதி – 49 ல் உள்ள சுலோகங்கள் : 24

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்