Tuesday, September 12, 2017

குருக்ஷேத்திரமே உயர்ந்த புண்ணியத்தலம்! - சல்லிய பர்வம் பகுதி – 53

Highly sacred Kurukshetra! | Shalya-Parva-Section-53 | Mahabharata In Tamil

(கதாயுத்த பர்வம் - 22)


பதிவின் சுருக்கம் : பலராமனுக்குக் குருக்ஷேத்திரத்தின் வரலாற்றைச் சொன்ன முனிவர்கள்; மண்ணை உழுது கொண்டிருந்த குரு மன்னன்; குரு மன்னனை மீண்டும் மீண்டும் கேலி செய்த இந்திரன்; விடாமுயற்சியுடன் களத்தை உழுத குரு; குருக்ஷேத்திரத்தில் இறப்பவர்கள் பாவிகளாயிருப்பினும் சொர்க்கத்தை அடைவார்கள் என்ற வரத்தை அளித்த இந்திரன்; அவ்வரத்தை அங்கீகரித்த பிரம்மன், விஷ்ணு மற்றும் சிவன்...


அம்முனிவர்கள், "ஓ! ராமா {பலராமா}, உயிரினங்கள் அனைத்தின் தலைவனான பிரம்மனின் அழிவிலா வடவேள்விப்பீடம் {உத்தரவேதி} என்று சமந்தபஞ்சகம் சொல்லப்படுகிறது. பெரும் வரங்களை அளிப்பவர்களான சொர்க்கவாசிகள் பழங்காலத்தில் அங்கே பெரும் வேள்வி ஒன்றைச் செய்தனர்.(1) அரசமுனிகளில் முதன்மையானவனும், பெரும் நுண்ணறிவும், அளவிலா சக்தியும் கொண்டவனான உயர் ஆன்ம குரு, இந்தக் களத்தில் பல வருடங்கள் உழுதான் {களத்தைச் சமப்படுத்தினான்}. எனவே இது குருக்ஷேத்திரம் (குருவின் களம்) என்று அழைக்கப்படுகிறது" என்றனர்.(2)


ராமன் {பலராமன்}, "அந்த உயர் ஆன்ம குரு இந்தக் களத்தை என்ன காரணத்திற்காக உழுதான்? தவத்தைச் செல்வமாகக் கொண்ட முனிவர்களே இஃது உங்களால் உரைக்கப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்று கேட்டான்.(3)

அதற்கு அம்முனிவர்கள் {பலராமனிடம்}, "பழங்காலத்தில், ஓ! ராமா {பலராமா}, குருவானவன் இந்தக் களத்தின் மண்ணை விடாமுயற்சியுடன் உழுதுகொண்டிருந்தான். சொர்க்கத்தில் இருந்து கீழே இறங்கி வந்த சக்ரன், அவனிடம் அதன் காரணத்தைக் கேட்கும் வகையில்,(4) "ஓ! மன்னா {குருவே}, இத்தகு விடாமுயற்சியில் நீ ஏன் ஈடுபடுகிறாய்? ஓ! அரசமுனியே, எதை அடையும் நோக்கிற்காக நீ மண்ணை உழுதுகொண்டிருக்கிறாய்?" என்று கேட்டான்.(5) அதற்குக் குரு, "ஓ! நூறு வேள்விகளைச் செய்தவனே, இந்தச் சமவெளியில் இறப்பவர்கள் தங்கள் பாவங்களில் இருந்து தூய்மையடைந்தவர்களாக அருள் உலகங்களை அடைய வேண்டும்" என்று மறுமொழி கூறினான்.(6) தலைவன் சக்ரனோ, அதைக் கேலி செய்து விட்டுச் சொர்க்கத்திற்குச் சென்றுவிட்டான். எனினும், அரசமுனியான குரு, எந்தத் தளர்வையும் அடையாமல், தொடர்ந்து மண்ணை உழுது கொண்டிருந்தான்.(7)

அவனிடம் மீண்டும் திரும்பி வந்த சக்ரன், மீண்டும் மீண்டும் அவனைக் கேலி செய்துவிட்டுச் சென்றான். எனினும் குரு அக்காரியத்தில் எந்தத் தளர்ச்சியையும் உணரவில்லை.(8) தளராத விடாமுயற்சியுடன் மன்னன் {குரு} மண்ணை உழுவதைக் கண்ட சக்ரன் {இந்திரன்}, தேவர்களை அழைத்து, அவர்களிடம் அந்த ஏகாதிபதியின் தொழிலைக் குறித்துச் சொன்னான். இந்திரனின் வார்த்தைகளைக் கேட்ட தேவர்கள், ஆயிரங்கண்களைக் கொண்ட தங்கள் தலைவனிடம், "ஓ! சக்ரா, உன்னால் முடியுமாகையால் அந்த அரசமுனி கேட்கும் வரத்தை அளித்து அவனை நிறுத்துவாயாக.(10) நமக்கான வேள்விகளைச் செய்யாமல், அங்கே இறப்பதால் மட்டுமே மனிதர்கள் சொர்க்கத்தை அடையமுடியுமென்றால், நம் இருப்பே ஆபத்துக்குள்ளாக நேரிடும்" என்றனர்.(11)

இவ்வாறு உற்சாகமளிக்கப்பட்ட சக்ரன், அந்த அரசமுனியிடம் திரும்பி வந்து, "மேலும் உழாதே. என் வார்த்தைகளின்படி செயல்படுவாயாக. ஓ! மன்னா {குரு மன்னா}, தங்கள் புலன்கள் அனைத்தும் விழிப்புடன் இருக்கையில் உணவைத் துறந்து இங்கே இறப்பவர்களும், இங்கே போரில் அழிவடைவோரும் சொர்க்கத்திற்குச் செல்வார்கள். ஓ! பேரான்மா கொண்டவனே, ஓ! ஏகாதிபதி, அவர்கள் சொர்க்கத்தின் அருளை அனுபவிப்பார்கள்" என்றான். இவ்வாறு சொல்லப்பட்ட மன்னன் குரு, "அப்படியே ஆகட்டும்" என்று சக்ரனுக்குப் பதிலளித்தான்.(14) பலனைக் கொன்றவனான சக்ரன், குருவிடம் விடைபெற்றுக் கொண்டு இதயம்நிறைந்த மகிழ்ச்சியுடன் மீண்டும் விரைவாகச் சொர்க்கத்திற்குச் சென்றான்.(15)

ஓ! யது குலத்தில் முதன்மையானவனே {பலராமா}, இவ்வாறே அந்த அரசமுனியானவன் {குரு} பழங்காலத்தில் நிலத்தை உழுததால், இங்கே தங்கள் உயிர் மூச்சை விடுபவர்களுக்குச் சக்ரன் பெரும் தகுதியை {புண்ணியத்தை} உறுதியளித்தான்.(16) உண்மையில், பிரம்மனின் தலைமையிலான தேவர்களில் முதன்மையானோர் அனைவராலும், புனிதமான முனிவர்களாலும், பூமியில் இதைவிடப் புண்ணியத்தலம் வேறில்லை என்று {குருக்ஷேத்திரம்} அங்கீகரிக்கப்பட்டது.(17) இங்கே கடுந்தவங்களைச் செய்வோர், தங்கள் உடல்களைக் கைவிட்ட பிறகு பிரம்மனின் வசிப்பிடத்திற்குச் செல்கின்றனர்.(18) மேலும் இங்கே தங்கள் செல்வத்தைத் தானமளிக்கும் தகுதிவாய்ந்த மனிதர்கள் {புண்ணியவான்கள்}, விரைவில் தங்கள் செல்வத்தை இரட்டிப்பாக்கிக் கொள்வார்கள்.(19) மேலும் நன்மையை எதிர்பார்த்து இங்கேயே நிரந்தரமாக வசிப்போர் யமலோகத்தை எப்போதும் காணமாட்டார்கள்.(20)

இங்கே பெரும் வேள்விகளைச் செய்யும் மன்னர்கள், இந்தப் பூமி நீடித்திருக்கும் வரை சொர்க்கத்தில் வசித்திருப்பார்கள்.(21) தேவர்களின் தலைவனான சக்ரனே இது குறித்து ஒரு வரியை இங்கே தொகுத்துப் பாடியிருக்கிறான். ஓ! பலதேவா, அதைக் கேட்பாயாக. {இந்திரன்},(22) "குருக்ஷேத்திரத்தில் இருந்து காற்றால் சுமந்து செல்லப்படும் புழுதியும் கூடத் தீச்செயல் புரிவோரையும் பாவங்களில் இருந்து தூய்மையடையச் செய்து, அவர்களைச் சொர்க்கத்திற்குச் சுமந்து செல்லும்" {என்று பாடியுள்ளான்}.(23) தேவர்களில் முதன்மையானோரும், பிராமணர்களில் முதன்மையானோரும், நிருகனைப் போன்ற பூமியின் மன்னர்களில் முதன்மையானோர் பலரும், பிறரும், விலைமதிப்புமிக்க வேள்விகளை இங்கே செய்து, தங்கள் உடல்களைக் கைவிட்டபிறகு சொர்க்கத்திற்குச் சென்றனர்.(24)

தரந்துகை, அரந்துகை {என்ற இரு நதிகள்}, {பரசு}ராமத் தடாகங்களுக்கும், சமசக்ரம் {மசக்ருக தீர்த்தம்} ஆகியவற்றுக்கு இடைப்பட்ட வெளியே குருக்ஷேத்திரம் என்றழைக்கப்படுகிறது. சமந்தபஞ்சகமானது, அனைத்துயிர்களின் தலைவனான பிரம்மனின் வட (வேள்விப்) பீடம் என்றழைக்கப்படுகிறது.(25) மங்கலமான, மிகப் புனிதமான, சொர்க்கவாசிகளாலும் மிகவும் மதிக்கப்பட்ட இந்த இடமானது {சொர்க்கத்திற்குரிய} அனைத்து குணநலன்களையும் கொண்டுள்ளது. இதன் காரணமாகவே இங்கே போரில் கொல்லப்படும் க்ஷத்திரியர்கள் அழிவிலா அருளைக் கொண்ட புனிதமான உலகங்களை அடைகின்றனர்.(26) குருக்ஷேத்திரத்தின் உயர்ந்த அருளைக் குறித்த இதுவும் சக்ரனாலேயே சொல்லப்பட்டது. சக்ரனால் சொல்லப்பட்டதனைத்தும், பிரம்மன், விஷ்ணு மற்றும் மஹேஸ்வரனாலும் அங்கீகரிக்கப்பட்டது" {என்றனர் அம்முனிவர்கள்}.(27)
-------------------------------------------------------------------------------------------
சல்லிய பர்வம் பகுதி – 53 ல் உள்ள சுலோகங்கள் : 27

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்