Monday, September 11, 2017

முதிர்கன்னியும், சிருங்கவானும்! - சல்லிய பர்வம் பகுதி – 52

The old maiden and Sringavat! | Shalya-Parva-Section-52 | Mahabharata In Tamil

(கதாயுத்த பர்வம் - 21)


பதிவின் சுருக்கம் : குணிகர்க்கர் உண்டாக்கிய மகள்; திருமணத்தில் விருப்பமில்லாமல் கடுந்தவம் செய்து முதிர் கன்னியாகியது; திருமணம் செய்யாததால் அருள் உலகங்கள் கிடைக்காது என்று அவளிடம் சொன்ன நாரதர்; ஓர் ஒப்பந்தத்தின் பேரில் அவளைத் திருமணம் செய்து கொண்ட சிருங்கவான்; விருத்தகன்யாஸ்ரமத் தீர்த்தத்திற்குண்டான பலன்; சல்லியனின் மறைவை அறிந்த பலராமன்...


ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! மறுபிறப்பாளரே {பிராமணரே}, பழங்காலத்தில் அந்தக் கன்னிகை ஏன் தவத்தில் ஈடுபட்டாள். என்ன காரணத்திற்காக அவள் தவத்தில் ஈடுபட்டாள்? அவளது நியமம் என்ன?(1) நான் ஏற்கனவே உம்மிடம் கேட்ட உரையானது ஒப்பற்றதாகவும், புதிர் நிறைந்ததாகவும் இருக்கிறது. (இப்போது) அந்தக் கன்னிகை எவ்வாறு தன்னைத் தவத்தில் ஈடுபடுத்திக் கொண்டாள் என்ற விபரங்கள் அனைத்தையும் எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(2)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “குணி-கர்க்கர் என்ற பெயரில் பெரும் சக்தியையும், பெரும் புகழையும் கொண்ட ஒரு முனிவர் இருந்தார். அந்தத் தவசிகளில் முதன்மையானவர், ஓ! மன்னா {ஜனமேஜயா}, கடுந்தவங்களைச் செய்து, தம் விருப்பத்தின் ஆணையால் அழகிய புருவங்களைக் கொண்ட ஒரு மகளை[1] உண்டாக்கினார். கொண்டாடப்பட்ட தவசியான அந்தக் குணிகர்க்கர் அவளைக் கண்டு மகிழ்ச்சியில் நிறைந்தார். பிறகு அவர், ஓ! மன்னா, தன் உடலைக் கைவிட்டு, சொர்க்கத்திற்குச் சென்றார்.(3,4) களங்கமற்றவளும், இனிமையானவளும், தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவளும், அழகிய புருவங்களைக் கொண்டவளுமான அந்தக் கன்னிகை, தொடர்ந்து மிகக் கடுமையான தவங்களைச் செய்துவந்தாள். அவள் தன் உண்ணாநோன்புகளால் பித்ருக்களையும், தேவர்களையும் வழிபட்டாள்.(5)


[1] எந்தப் பதிப்புகளிலும் இவளது பெயர் குறிப்பிடப்படவில்லை. விருத்தகன்யை என்பது முதிர்கன்னி என்ற பொருளைத் தருவதாகும். கும்பகோணம் பதிப்பில் இந்தப் பெயரிலேயே பின்னர் இவள் குறிப்பிடப்படுகிறாள்.

இத்தகு கடும் தவங்களைப் பயில்வதிலேயே நீண்ட காலம் கடந்து சென்றது. அவளது தந்தை {குணி-கர்க்கர்} அவளை ஒரு கணவனுக்குக் கொடுப்பதற்குத் தயாராக இருந்தாலும், தனக்குத் தகுந்த ஒரு கணவனை அவள் காணாததால் திருமணத்தில் அவள் விருப்பம் கொள்ளவில்லை.(6) கடுந்தவங்களால் தொடர்ந்து தன் உடலை மெலியச் செய்த அவள், அந்தத் தனிமையான காட்டில் பித்ருக்களையும், தேவர்களையும் வழிபடுவதில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டாள்.(7) ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, இவ்வளவு கடுமையான முயற்சியாலும், வயதாலும், தவங்களாலும் தன்னை மெலியச் செய்திருந்தாலும், அவள் தன்னை மகிழ்ச்சி நிறைந்தவளாகவே கருதினாள்.(8) இறுதியாக எந்த ஒருவரின் துணையுமின்றி ஓரடியும் நகர முடியாத (மிக முதிர்ந்த வயதான) நிலையை அவள் அடைந்ததும், அடுத்த உலகத்திற்குச் செல்வதில் தன் இதயத்தை நிலைநிறுத்தினாள்.(9)

அவள், தன் உடலைக் கைவிடப்போவதைக் கண்ட நாரதர், அவளிடம், "ஓ! பாவமற்றவளே, திருமணச் சடங்கால் நீ தூய்மையடையாததன் விளைவால், உனக்கு எந்த அருள் உலகமும் கிடைக்காது.(10) ஓ! பெரும் நோன்புகளைக் கொண்டவளே, இதை நாங்கள் சொர்க்கத்தில் கேட்டிருக்கிறோம். உன் கடுந்தவங்கள் பெரியவாயினும், அருள் உலகங்களில் உனக்கு உரிமையேதும் கிடையாது" என்றார்.(11) நாரதரின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்த முதிர்ந்த மங்கை, முனிவர்களின் சபைக்குச் சென்று, "எவர் திருமணத்தில் என் கரங்களை ஏற்பாரோ, அவருக்கு என் தவத்தில் பாதியை நான் அளிப்பேன்" என்றாள்.(12) அவள் இவ்வார்த்தைகளைச் சொன்னதும், காலவரின் மகனும்[2], சிருங்கவான் என்ற பெயரைக் கொண்டவருமான ஒரு முனிவர், ஓர் ஒப்பந்ததை முன்மொழிந்து அவளது கரங்களை ஏற்றார். {அந்த சிருங்கவான்},(13) "ஓ! அழகிய பெண்ணே, நீ என்னுடன் ஓரிரவு மட்டுமே வாழ்வாய் என்ற இந்த ஒப்பந்தத்தின் மூலம், நான் உன் கரத்தை ஏற்கிறேன்" என்றார். இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்ட அவள், தனது கரத்தை அவரிடம் கொடுத்தாள்.(14) உண்மையில், அந்தக் காலவரின் மகன் {சிருங்கவான்}, விதிக்கப்பட்டிருந்த விதிகளின்படி நெருப்பில் முறையாக ஆகுதிகளை ஊற்றி அவளது கரத்தை ஏற்று, அவளைத் திருமணம் செய்து கொண்டார்.(15)

[2] இவர் உத்யோக பர்வம் பகவத்யாந உப பர்வத்தில் வரும் காலவராக இருக்க வேண்டும்.

அவ்விரவில் அவள், தெய்வீக ஆடையை உடுத்திக் கொண்டு, தெய்வீக ஆபரணங்கள் மற்றும் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு, தெய்வீக களிம்புகள் {சந்தனம்} மற்றும் நறுமணப் பொருட்களைப் பூசப்பட்ட, அழகிய நிறம் கொண்ட இளம்பெண்ணாக மாறினாள்.(16) சுடர்மிக்க அவளது அழகைக் கண்ட காலவரின் மகன் {சிருங்கவான்}, மிகவும் மகிழ்ச்சியடைந்து அவளது துணையுடன் ஓரிரவைக் கழித்தார். காலையில் அவள் அவரிடம்,(17) "ஓ! பிராமணரே, ஓ! தவசிகளில் முதன்மையானவரே, உம்மிடம் நான் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தம் நிறைவடைந்தது. நீர் அருளப்பட்டிருப்பீராக, நான் இப்போது உம்மைவிட்டுச் செல்கிறேன்" என்றாள்.(18) அவரது அனுமதியைப் பெற்றுக் கொண்ட அவள், மீண்டும், "நீர்க்காணிக்கைகளுடனும், ஆழ்ந்த கவனத்துடனும் சொர்க்கவாசிகளை {தேவர்களை} நிறைவுசெய்தபிறகு, இந்தத் தீர்த்தத்தில் {விருத்தகன்யாஸ்ரமத் தீர்த்தத்தில்} எவன் ஓரிரவைக் கழிப்பானோ, அவன், ஐம்பத்தெட்டு வருடங்கள் பிரம்மச்சரிய நோன்பை நோற்றதன் தகுதியை அடைவான்" என்றாள்.(20)

இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்தக் கற்புடைய மங்கை சொர்க்கத்திற்குச் சென்றாள். அவளது தலைவனான முனிவர் {சிருங்கவான்}, அவளது அழகை நினைத்து நினைத்து மிகவும் உற்சாகமற்றவராக ஆனார்.(21) அவர் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தின் விளைவால் அவர் அவளுடைய பாதித் தவத்தையும் சிரமத்துடன் ஏற்றுக் கொண்டார். ஓ! பாரதக் குலத்தின் தலைவா, அவளது அழகால் கவலையில் ஆழ்ந்த அவர் {சிருங்கவான்}, தன்னுடலைக் கைவிட்டு விரைவில் அவளைப் பின்தொடர்ந்து சென்றார்.(22) நான் உனக்குச் சொன்ன இதுவே அந்த முதிர்ந்த கன்னிகையின் {விருத்தகன்யையின்} மேன்மைபொருந்திய வரலாறாகும். இதுவே அவளது பிரம்மச்சரியம் மற்றும் சொர்க்கத்திற்கான அவளது மங்கலப் புறப்பாடு ஆகியவற்றைக் குறித்த விவரிப்பாகும்.(23) அங்கே இருந்தபோதுதான், சல்லியனின் படுகொலையைக் குறித்துப் பலதேவன் {பலராமன்} கேள்விப்பட்டான். அங்கே பிராமணர்களுக்குத் தானமளித்த அவன், ஓ! எதிரிகளை எரிப்பவனே, போரில் பாண்டவர்களால் கொல்லப்பட்ட சல்லியனின் நிமித்தமாகத் துயரத்தை அடைந்தான்.(24) பிறகு அந்த மதுகுலத்தோன் {பலராமன்}, சமந்தபஞ்சகத்தின் {வாயிலை விட்டு வெளியே} சுற்றுப்புறத்திற்கு வந்து, குருக்ஷேத்திரப் போரின் விளைவுகளைக் குறித்து முனிவர்களிடம் விசாரித்தான்.(25) குருக்ஷேத்திரப் போரின் விளைவுகள் குறித்து அந்த யதுகுலத்தின் சிங்கத்தால் கேட்கப்பட்ட அந்த உயர் ஆன்மாக்கள், நடந்தது அனைத்தையும் குறித்து அவனிடம் {பலராமனிடம்} சொன்னார்கள்".(26)
------------------------------------------------------------------------------------------
சல்லிய பர்வம் பகுதி – 52 ல் உள்ள சுலோகங்கள் : 26


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்