Saturday, September 16, 2017

பீமனைக் கண்டித்த யுதிஷ்டிரன்! - சல்லிய பர்வம் பகுதி – 59

Yudhishthira rebuked Bhima! | Shalya-Parva-Section-59 | Mahabharata In Tamil

(கதாயுத்த பர்வம் - 28)


பதிவின் சுருக்கம் : தொடை முறிந்து கிடந்த துரியோதனன்; பழைய நிகழ்வுகளை நினைவுகூர்ந்து, துரியோதனனை நிந்தித்து, அவனது தலையைக் காலால் மிதித்த பீமன்; பீமனைக் கண்டித்து, துரியோதனனுக்கு ஆறுதல் சொன்ன யுதிஷ்டிரன்; யுதிஷ்டிரனின் புலம்பல்...


சஞ்சயன் சொன்னான், "(சூறாவளியால்) வேராடு முறிந்த விழுந்த பெரும் சால மரத்தைப் போலப் பூமியில் விழுந்து கிடந்த துரியோதனனைக் கண்ட பாண்டவர்கள் மகிழ்ச்சியால் நிறைந்தனர்.(1) மயிர்க்கூச்சத்தை அடைந்த சோமகர்களும், சிங்கத்தால் வீழ்த்தப்பட்ட மதங்கொண்ட யானையொன்றைப் போல வீழ்ந்து கிடக்கும் அந்தக் குரு மன்னனை {துரியோதனனைக்} கண்டனர்.(2) துரியோதனனைக் கீழே வீழ்த்திய வீர பீமசேனன், அந்தக் குரு தலைவனை {துரியோதனனை} அணுகி,(3) "ஓ இழிந்தவனே, முன்பு சபைக்கு மத்தியில் ஆடையிழந்திருந்த திரௌபதியைக் கண்டு சிரித்து, ஓ மூடா, எங்களை, "மாடு, மாடு" என்று நீ அழைத்தாய்.(4) அந்த அவமதிப்பின் கனியை {பலனை} இப்போது நீ தாங்கிக் கொள்வாயாக" என்றான். இவ்வார்த்தைகளைச் சொன்ன அவன், வீழ்ந்துவிட்ட தன் எதிரியின் தலையைத் தன் இடது காலால் தீண்டினான்.(5)


கோபத்தால் கண்கள் சிவந்திருந்தவனும், பகைவரின் படையைக் கலங்கடிப்பவனுமான பீமசேனன் மீண்டும் இவ்வார்த்தைகளைச் சொன்னான். ஓ ஏகாதிபதியே {திருதராஷ்டிரரே} அவற்றைக் கேட்பீராக,(6) "எங்களை அவமதிக்கும் வகையில் "மாடு, மாடு" என்று சொல்லி ஆடியவர்கள் எவரோ, அவர்களைக் கண்டு, "மாடு, மாடு" என்ற அதே வார்த்தைகளைச் சொல்லி இப்போது நாங்கள் ஆடுவோம்.(7) எங்களிடம் வஞ்சனையோ, நெருப்போ, பகடையாட்டமோ {சூதாட்டமோ} ஏதும் இல்லை. எங்கள் கரங்களின் வலிமையை நம்பியே நாங்கள் எங்கள் எதிரிகளைத் தடுத்துப் பீடிக்கிறோம்" என்றான்.(8) பகைமையின் மறுகரையை அடைந்தவனான விருகோதரன் மீண்டும் சிரித்துக் கொண்டே, யுதிஷ்டிரன், கேசவன் {கிருஷ்ணன்}, சிருஞ்சயர்கள், தனஞ்சயன் {அர்ஜுனன்}, மாத்ரியின் இரு மகன்கள் ஆகியோரிடம் மெதுவாக இந்த வார்த்தைகளைச் சொன்னான்.(9) {அவன்}, "திரௌபதி நோயுற்றிருந்தபோது, சபைக்கு இழுத்து வந்து அவளை ஆடையிழக்கச் செய்தவர்கள் எவரோ[1], அந்தத் தார்தராஷ்டிரர்கள், யக்ஞசேனன் மகளின் {திரௌபதியின்} தவத்தின் மூலம் பாண்டவர்களால் கொல்லப்பட்டதைக் காண்பீராக.(10) எங்களை எள்ளுப் பதர்கள் என்றழைத்த மன்னர் திருதராஷ்டிரரின் தீய இதயம் கொண்ட மகன்கள் அனைவரும், அவர்களது உறவினர்கள் மற்றும் தொண்டர்களுடன் எங்களால் கொல்லப்பட்டனர். (அச்செயல்களின் விளைவால்) ஒன்று நாம் சொர்க்கத்திற்குச் செல்வோமா, அல்லது நகரகத்தில் வீழ்வோமா என்பது சிறிய காரியமே[2]" என்றான்.(11)

[1] திரௌபதியின் துகிலுரிப்பு குறித்து "சபாபர்வம் தவிர வேறு எங்கும் அத்தகவலில்லை. அதனால் அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்க வாய்ப்பில்லை" என்ற வாதம் இங்கும், இது போன்ற முந்தைய சில இடங்களிலும் {கர்ண பர்வம் 83:12 மற்றும் சல்லியபர்வம் 5:17} வலுவற்றதாகிறது.

[2] கும்பகோணம் பதிப்பில் இவ்வரி, "நாம் இஷ்டப்படி ஸ்வர்க்கத்தையோ, நரகத்தையோ அடைவோம்" என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், "நாம் சொர்க்கத்திற்குச் செல்வோமா, நரகத்திற்குச் செல்வோமா என்பது எவ்விளைவையும் ஏற்படுத்தாது" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "நாம் சொர்க்கத்திற்குச் செல்வதையோ, நரகத்திற்குச் செல்வதையோ அலட்சியமாகக் கருதுகிறோம்" என்றிருக்கிறது.

மீண்டும் தன் தோளில் கிடந்த கதாயுதத்தை உயர்த்திக் கொண்டு, பூமியில் நெடுஞ்சாண்கிடையாகக் கிடந்த அந்த ஏகாதிபதியின் தலையைத் தன் இடது காலால் தாக்கி, வஞ்சகம் நிறைந்த துரியோதனனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்.(12) நீதிமிக்க ஆன்மாக்களைக் கொண்ட சோமகர்களில் முதன்மையான வீரர்கள் பலரால், அந்தக் குரு குலத்தில் முதன்மையானவனின் தலையில், குறுகிய இதயத்தோடு இன்புற்றிருந்த பீமசேனனின் காலைக் கண்டு அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.(13) விருகோதரன் உமது மகனைத் தாக்கி வீழ்த்தி இவ்வாறு தற்பெருமை பேசி, வெறிகொண்டு கூத்தாடியபோது, மன்னன் யுதிஷ்டிரன் அவனிடம்,(14) "நீ உன் பகைமையைத் தீர்த்துக் கொண்டாய், நியாமாகவோ, அநியாயமாகவோ உன் சபதத்தையும் நிறைவேற்றிக் கொண்டாய். ஓ பீமா, இப்போது நிறுத்துவாயாக.(15)

உன் காலால் இவனது தலையை நசுக்காதே. பாவகரமாகச் செயல்படாதே. துரியோதனன் ஒரு மன்னனாவான். மேலும் இவன் உன் சொந்தக்காரனுமாவான். இவன் வீழ்ந்துவிட்டான். ஓ பாவமற்றவனே, இந்த உனது நடத்தை முறையானதில்லை.(16) துரியோதனன் பதினோரு அக்ஷௌஹிணிகளின் தலைவனாக இருந்தான். இவன் குருக்களின் மன்னனாகவும் இருந்தான். ஓ பீமா, மன்னனும், உறவினனுமான இவனை உன் காலால் தீண்டாதே.(17) இவனது உறவினர்கள் கொல்லப்பட்டுவிட்டனர். அவனது நண்பர்களும், அமைச்சர்களும் சென்றுவிட்டனர். இவனது துருப்புகளும் அழிக்கப்பட்டுவிட்டன. போரில் இவன் வீழ்த்தப்பட்டுவிட்டான். அனைத்து வகையிலும் இவன் அனுதாபத்திற்குரியவன். இவன் மன்னன் என்பதை நினைவுகூர்ந்தால், இவன் அவமதிக்கப்படத் தகுந்தவனில்லை.(18) இவன் நிர்மூலமாக்கப்பட்டுவிட்டான். இவனது நண்பர்களும், சொந்தங்களும் கொல்லப்பட்டுவிட்டனர். இவனது சகோதரர்களும், மகன்களும் கூடக் கொல்லப்பட்டுவிட்டனர். இவனது ஈமப்பிண்டம் எடுக்கப்பட்டுவிட்டது. இவன் நமது சகோதரனாவான். இதை அவனுக்கு நீ செய்வது முறையாகாது.(19) "பீமசேனன் நீதிமிக்க நடத்தை கொண்டவனாவான்" என்று முன்பு உன்னைக் குறித்து மக்கள் சொன்னார்கள். ஓ பீமசேனா, நீ ஏன் இம்மன்னனை இவ்வழியில் அவமதிக்கிறாய்?" என்று கேட்டான்.(20)

இவ்வார்த்தைகளைப் பீமசேனனிடம் சொன்ன யுதிஷ்டிரன், கண்ணீரால் தடைபட்ட குரலுடனும், துன்பத்தால் பீடிக்கப்பட்டும், எதிரிகளைத் தண்டிப்பவனான துரியோதனனை அணுகி, அவனிடம்,(21) "ஓ ஐயா, நீ கோபப்படவோ, உனக்காகத் துன்பப்படவோ கூடாது. உனது முந்தைய செயல்களின் பயங்கர விளைவுகளையே நீ சுமக்கிறாய் என்பதில் ஐயமில்லை.(22) ஓ குரு குலத்தில் முதன்மையானவனே, நாங்கள் உன்னைக் காயப்படுத்த வேண்டும், நீ எங்களைக் காயப்படுத்த வேண்டும் என்ற இந்தச் சோகமான தீய முடிவு படைப்பாளனாலேயே விதிக்கப்பட்டிருக்கிறது என்பதிலும் ஐயமில்லை.(23) ஓ பாரதா, பேராசை, செருக்கு, மடைமை ஆகிய உன் குற்றங்களாலேயே இந்தப் பேரிடர் உனக்கு நேர்ந்திருக்கிறது.(24) உன் தோழர்கள், சகோதரர்கள், தந்தைமார்கள், மகன்கள், பேரர்கள் மற்றும் அனைவரையும் கொல்லச் செய்து, இப்போது நீ உன் மரணத்தை நெருங்கியிருக்கிறாய்.(25)

உன் குற்றத்தின் விளைவாலேயே, வலிமைமிக்கத் தேர்வீரர்களான உன் சகோதரர்கள் மற்றும் சொந்தங்கள் அனைவரும் எங்களால் கொல்லப்பட்டனர். இவை யாவும் தடுக்கப்பட முடியாத விதியின் செயல்பாடு என்றே நான் நினைக்கிறேன்.(26) நீ பரிதாபத்திற்குரியவன் அல்ல. மறுபுறம், ஓ பாவமற்றவனே, உன் மரணம் பொறாமை கொள்ளத்தக்கதாகும். ஓ கௌரவா, அனைத்து வகையிலும் நாங்களே பரிதாபத்திற்குரியவர்கள். எங்கள் அன்புக்குரிய நண்பர்களும், சொந்தங்களும் இல்லாமல் நாங்கள் பரிதாபகரமான வாழ்வை இழுக்கப் போகிறோம்.(27) ஐயோ, என் சகோதரர்கள், மகன்கள் மற்றும் பேரர்களைக் குறித்த சோகத்தில் உணர்வுகளை இழந்து துக்கத்தில் மூழ்கியிருக்கும் கைம்பெண்களை நான் எவ்வாறு காணப் போகிறேன்.(28) ஓ மன்னா, நீ இந்த உலகத்தில் இருந்து செல்லப் போகிறாய். நீ சொர்க்கத்தில் நிச்சயம் வசிப்பிடத்தைக் கொள்ளப் போகிறாய். மறுபுறம் நாங்களோ, நரகில் வாழும் உயிரினங்களாகக் கருதப்பட்டு, கடுந்துக்கத்தைத் தொடர்ந்து அனுபவிக்கப் போகிறோம்.(29) திருதராஷ்டிரர் மகன்கள் மற்றும் பேரர்களின் மனைவியர் துன்பத்தால் பீடிக்கப்பட்டிருக்கின்றனர். சோகத்தால் நொறுங்கியிருக்கும் அந்தக் கைம்பெண்டிர், எங்கள் அனைவரையும் சபிப்பார்கள் என்பதில் ஐயமில்லை" என்றான்.(30)

இவ்வார்த்தைகளைச் சொன்ன தர்மனின் அரச மகன் {யுதிஷ்டிரன்}, துயரால் ஆழமாகப் பீடிக்கப்பட்டு, கடும் மூச்சு விடத் தொடங்கி, புலம்பல்களில் ஈடுபட்டான்" {என்றான் சஞ்சயன்}.(31)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்