Sunday, October 22, 2017

பானுமதியின் சுயம்வரம்! - சாந்திபர்வம் பகுதி – 04

The swayamvara of Bhanumati! | Shanti-Parva-Section-04 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 04)


பதிவின் சுருக்கம் : சுயம்வரத்திற்காகக் கலிங்கத் தலைநகர் ராஜபுரத்திற்குச் சென்ற துரியோதனன்; துரியோதனனைக் கடந்து சென்ற இளவரசி பானுமதி; பலவந்தமாக அந்த இளவரசியைத் தூக்கிச் சென்ற துரியோதனன்; எதிர்த்த மன்னர்கள்; துரியோதனனுக்குத் துணையாக நின்ற கர்ணன்; வெற்றியுடன் ஹஸ்தினாபுரம் திரும்பிய துரியோதனனும், கர்ணனும்..


நாரதர் {யுதிஷ்டிரனிடம்}, "இவ்வாறு பிருகு குலத்தைச் சேர்ந்த அவரிடம் {பரசுராமரிடம்} ஆயுதங்களை அடைந்த கர்ணன், ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, துரியோதனன் துணையுடன் தன் நாட்களை மகிழ்ச்சியாகக் கழிக்கத் தொடங்கினான்.(1) ஓ! ஏகாதிபதி, ஒரு சமயத்தில், கலிங்க நாட்டை ஆண்ட சித்திராங்கதனின் தலைநகரத்தில்[1] நடந்த சுயம்வரத்திற்குப் பல மன்னர்கள் சென்றனர்.(2) ஓ! பாரதரா, பெருஞ்செல்வச் செழிப்பில் திளைத்த அந்நகரம் ராஜபுரம் என்ற பெயரில் அறியப்பட்டிருந்தது. அந்தக் கன்னிகையின்[2] கரத்தை அடைவதற்காக நூற்றுக்கணக்கான ஆட்சியாளர்கள் அங்கே சென்றனர்.(3) பல்வேறு மன்னர்கள் அங்குக் கூடுவதைக் கேட்ட துரியோதனனும், கர்ணனின் துணையுடன் தனது தங்கத்தேரில் அங்கே சென்றான்.(4)


[1] கலிங்கத்திற்கு இரு தலைநகர்கள் இருந்ததாக மஹாபாரதத்தில் தகவல்கள் கிடைக்கின்றன. ஒன்று தண்டபுரம், இரண்டாவது ராஜபுரம். காம்போஜத்தின் தலைநகரும் ராஜபுரம் என்றே அழைக்கப்படுகிறது. இங்கே சுட்டப்படுவது கலிங்க நாட்டின் தலைநகரம் ராஜபுரம். இது வட கலிங்கத்தின் தலைநகராக இருக்க வேண்டும். குருக்ஷேத்திரப் போரில் இறந்த கலிங்க மன்னன் சுருதாயுஷ் ஆவான். பீமனால் அவன் கொல்லப்பட்டான். சுருதாயுஷ் தென் கலிங்கத்தின் மன்னனாகவும், இந்தத் சித்திராங்கதன் வட கலிங்கத்தின் மன்னனாகவும் இருந்திருக்கலாம். பீஷ்ம பர்வம் பகுதி 54அல் கலிங்க இளவரசன் பானுமான் பீமனால் கொல்லப்படுகிறான்.

[2] கலிங்க இளவரசி பானுமதி. கங்குலியின் பதிப்பில் இவளது பெயர் நேரடியாகவோ மறைமுகமாகவோ குறிப்பிடப்படவில்லை. மன்மதநாததத்தர், கும்பகோணம் மற்றுப் பிபேகத் திப்ராயின் பதிப்புகளிலும் இவளது பெயர் நேரடியாகவோ மறைமுகமாகவோ குறிப்பிடப்படவில்லை.

ஓ! மன்னர்களில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, சுயம்வரவிழா தொடங்கியபோது, அந்தக் கன்னிகையின் {பானுமதியின்} கரத்திற்காகப் பல்வேறு ஆட்சியாளர்கள் அங்கே வந்திருந்தனர். அவர்களில் சிசுபாலன், ஜராசந்தன்[3], பீஷ்மகன், வக்ரன், கபோதரோமன், நீலன், உறுதியும் ஆற்றலும் கொண்டவனான ருக்மி,(6) பெண்களின் நாட்டை ஆட்சி செய்த ஸ்ருகாலன்[4], அசோகன் {விசோகன்}, சததந்வன், போஜர்களின் வீர ஆட்சியாளன்[5] ஆகியோரும் இருந்தனர்.(7) இவர்களைத் தவிர்த்து, ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, தெற்கு நாடுகளில் வசித்த பலர், மிலேச்ச இனக்குழுக்களைச் சேர்ந்த (ஆயுத) ஆசான்கள் பலர், கிழக்கு மற்றும் வடக்கைச் சேர்ந்த பல ஆட்சியாளர்கள் ஆகியோரும் அங்கே வந்திருந்தனர்.(8) அவர்கள் அனைவரும் பசும்பொன்னின் காந்தியைக் கொண்ட தங்க அங்கதங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தனர். பிரகாசமான உடல்களைக் கொண்ட அவர்கள் கடும் வலிமையைக் கொண்ட புலிகளைப் போல இருந்தனர்.(9)

[3] ஜராசந்தன், யுதிஷ்டிரன் செய்த ராஜசூய வேள்விக்கு வெகு காலத்திற்கு முன்பே கொல்லப்பட்டவன், சிசுபாலன் ராஜசூய வேள்வியின் போது கொல்லப்பட்டவன். ஆக இச்சம்பவம் பாண்டவர்களுக்குப் பங்கு பிரித்துக் கொடுப்பதற்கு முன், அல்லது பாண்டவர்கள் வாரணாவதத்திலுள்ள அரக்கு மாளிகைக்குச் செல்வதற்கும் முன் நடந்திருக்க வேண்டும்.

[4] கும்பகோணம் பதிப்பில், "ஸ்திரீ ராஜ்யத்திற்கதிபதியான ஸ்ருகாலன்" என்றிருக்கிறது.

[5]  இது கிருதவர்மனாகவும் இருக்கலாம்.

அந்த மன்னர்கள் அனைவரும் தங்கள் ஆசனங்களில் அமர்ந்ததும் அந்தக் கன்னிகை {பானுமதி}, தனது செவிலியின் துணையுடனும், அலிகளின் பாதுகாவலுடனும் அரங்கினுள் நுழைந்தாள்.(10) (அவ்வாறு, அவள் {அரங்கை} வலம் வருகையில்) அவளுக்கு மன்னர்களின் பெயர்கள் சொல்லப்பட்டபோது, அழகிய நிறம் கொண்டவளான அந்தக் கன்னிகை, பிறரைக் கடந்து வந்ததைப் போலவே திருதராஷ்டிரன் மகனையும் {துரியோதனனையும்} கடந்து சென்றாள்.(11) எனினும், குருகுலத்தின் துரியோதனனால் இந்தப் புறக்கணிப்பை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. மன்னர்கள் அனைவரையும் அவமதிக்கும் வகையில் அவன் {துரியோதனன்}, அந்தக் கன்னிகையை நிற்குமாறு ஆணையிட்டான்.(12) மன்னன் துரியோதனன், சக்தி எனும் செருக்கில் போதை கொண்டும், பீஷ்மர் மற்றும் துரோணர் ஆகியோரை நம்பியும், அந்தக் கன்னிகையைத் தன் தேரில் ஏற்றிக் கொண்டு {அங்கிருந்து} அவளைப் பலவந்தமாகக் கடத்திச் சென்றான்.(13) ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையான கர்ணன், வாளைத் தரித்துக் கொண்டும், கவசத்தைப் பூண்டு கொண்டும், தன் விரல்களில் தோலுரைகளைப் பூட்டிக் கொண்டும், துரியோதனனின் பின்புறத்தில் தன் தேரைச் செலுத்திக் கொண்டு சென்றான்.(14)

போரிடும் விருப்பத்தால் தூண்டப்பட்ட மன்னர்கள் அனைவருக்கும் மத்தியில் பேராரவாரம் எழுந்தது. "கவசத்தைப் பூட்டிக் கொள்வீராக", "தேர்களை ஆயத்தம் செய்வீராக" (இவையே அங்கே கேட்கப்பட்ட ஒலிகளாகும்).(15) கோபத்தால் நிறைந்த அவர்கள், இரண்டு மலைகளின் மீது மழையைப் பொழியும் மேகத்திரள்களைப் போலக் கர்ணன் மற்றும் துரியோதனன் மீது தங்கள் கணைமாரியைப் பொழிந்து, அவர்களைப் பின்தொடர்ந்து சென்றனர்.(16) இவ்வாறு அவர்கள் பின்தொடர்ந்து சென்றபோது, கர்ணன் அவர்களது விற்களையும், கணைகளையும் ஒரே கணையால் தரையில் வீழ்த்தினான்.(17) அவர்களில் சிலர் விற்களற்றவர்களாகவும், சிலர் கையில் வில்லுடனும் விரைந்தனர். சிலர் தங்கள் கணைகளை ஏவும் தருவாயிலும், சிலர் ஈட்டிகள் மற்றும் கதாயுதங்களைத் தரித்துக் கொண்டும் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றனர்.(18)

பெருங்கரநளினத்தைக் கொண்டவனும், தாக்குபவர்கள் அனைவரிலும் முதன்மையானவனுமான கர்ணன், அவர்கள் அனைவரையும் பீடித்தான். அவன், மன்னர்கள் பலரையும், தங்கள் சாரதிகளை இழக்கச் செய்தான். இவ்வாறே அந்தப் பூமியின் தலைவர்களை அவன் வென்றான்.(19) பிறகு அவர்கள், தங்கள் குதிரைகளின் கடிவாளங்களைத் தாங்களே எடுத்துக் கொண்டு, "ஓடு, ஓடு" என்று சொல்லி, உற்சாகமற்ற இதயங்களுடன் போரில் இருந்து திரும்பினார்கள்.(20) கர்ணனால் பாதுகாக்கப்பட்ட துரியோதனனும், மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன், யானையின் பெயரால் அழைக்கப்பட்ட நகரத்திற்கு {ஹஸ்தினாபுரத்திற்கு} அந்தக் கன்னிகையை {பானுமதியைக்} கொண்டு வந்தான்" என்றார் {நாரதர்}.(21)

சாந்திபர்வம் பகுதி – 04ல் உள்ள சுலோகங்கள் : 21

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்