Tuesday, October 31, 2017

திரௌபதியுடைய குழலின் நிலை! - சாந்திபர்வம் பகுதி – 16

The condition of Draupadi's locks! | Shanti-Parva-Section-16 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 16)


பதிவின் சுருக்கம் : கடந்த கால அவமதிப்புகளை யுதிஷ்டிரனுக்கு நினைவூட்டிய பீமன்; உடல், மனம் ஆகியவற்றின் தன்மைகளையும், நோய்களையும் விவரிப்பது; உடலுக்கு மனமும், மனத்திற்கு உடலும் தீர்வாக இருப்பதைச் சொல்லி பழைய அவமதிப்புகளை நினைத்துப்பார்த்தால் செய்யப்பட்ட படுகொலைகள் அனைத்தும் நியாயமானவையே எனச் சொன்னது...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "அர்ஜுனன் பேசி முடித்ததும், பெரும் கோபமும் சக்தியும் கொண்டவனான பீமசேனன், தன் பொறுமை அனைத்தையும் திரட்டிக் கொண்டு, தன் அண்ணனிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னான்:(1) "ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, நீர் கடமைகள் அனைத்தையும் அறிந்தவராவீர். நீர் அறியாதது ஏதுமில்லை. நாங்கள் எப்போதும் உமது நடத்தையையே பின்பற்றி நடக்கவே விரும்புகிறோம், ஆனால், ஐயோ, எங்களால் இதைச் செய்ய முடியாது.(2) "நான் எதுவும் சொல்ல மாட்டேன். நான் எதுவும் சொல்லமாட்டேன்" என்பதே எனது மனத்தின் விருப்பம். எனினும், பெருந்துயரால் உந்தப்பட்டு எதையாவது சொல்லும் கட்டாய நிலையை நான் அடைந்திருக்கிறேன். ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே {யுதிஷ்டிரரே}, என் வார்த்தைகளைக் கேட்பீராக. உமது அறிவு மயக்கத்தால், அனைத்தும் ஆபத்துக்குள்ளாகியிருக்கிறது, நாங்களும் உற்சாகமற்றவர்களாவும், பலவீனர்களாகவும் ஆக்கப்படுகிறோம்.(4) உலகின் ஆட்சியாளராக, ஞானத்தின் அனைத்துக் கிளைகளையும் அறிந்தவராக இருக்கும் நீர் உற்சாகமற்றதன் விளைவால் எவ்வாறு ஒரு கோழையைப் போல அறிவு மயக்கத்தை அடைந்தீர்?(5)


உலகத்தின் நேர்மையான வழியையும், நேர்மையற்ற வழிகளையும் நீர் அறிந்திருக்கிறீர். ஓ! பலமிக்கவரே, தற்காலத்திற்கோ, எதிர்காலத்திற்கோ சொந்தமானது ஏதுமில்லை என்பதையும் நீர் அறிந்திருக்கிறீர்.(6) ஓ! ஏகாதிபதி, ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே, அரசுரிமையை நீர் ஏற்க வேண்டிய காரணங்களை உமக்குச் சொல்கிறேன். சிதறாத கவனத்தோடு கேட்பீராக.(7) உடல் சார்ந்த, மனம் சார்ந்த இரண்டு வகை நோய்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் மற்றதிலிருந்தே உதிக்கிறது. அவற்றில் ஏதும் தனித்திருப்பதைக் காண முடியாது. மனநோய்கள் உடல் சார்ந்தவற்றில் இருந்தே உதிக்கின்றன என்பதில் ஐயமில்லை. அதேபோல உடல் நோய்களும் மனம் சார்ந்தவற்றில் இருந்தே உதிக்கின்றன. இதுவே உண்மை.(9) கடந்த கால உடல் துயரம் அல்லதும் மனத்துயரின் காரணமாக வருந்துபவன், அந்தத் துயரத்தால் துயரத்தையே அறுவடை செய்து, இரு மடங்கு துயரை அடைகிறான்.(10)

குளிர், வெப்பம், காற்று, ஆகிய மூன்றும் உடலின் தன்மைகளாகும்[1]. அவை இணக்கத்துடன் ஒத்திசைந்திருப்பது உடல் நலத்தின் அடையாளமாகும்.(11) இம்மூன்றில் ஒன்று மற்றவைகளுக்கு விஞ்சியிருந்தால், அதற்குத் தீர்வுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. குளிர் வெப்பத்தால் தடுக்கப்படுகிறது, வெப்பமும் குளிரால் தடுக்கப்படுகிறது.(12) நற்குணம், ஆசை, இருள் ஆகிய இம்மூன்றும் மனத்தின் தன்மைகளாகும். இம்மூன்றும் இணக்கத்துடன் ஒத்திசைந்திருப்பதே (மன) நலத்திற்கான அடையாளமாகும்.(13) இம்மூன்றில் ஒன்று மற்றவைகளுக்கு விஞ்சியிருந்தால், அதற்குத் தீர்வுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. துன்பம் இன்பத்தால் தடுக்கப்படுகிறது, இன்பமும் துன்பத்தால் தடுக்கப்படுகிறது.(14) தற்காலத்தில் இன்பமாக வாழும் ஒருவன், கடந்த காலத் துன்பங்களை நினைத்துப் பார்க்க விரும்புகிறான். தற்போது துன்பத்தில் வாழும் மற்றொருவன், தனது கடந்த கால அருளை நினைத்துப் பார்க்க விரும்புகிறான்.(15)

[1] "சளி, பித்தம் மற்றும் வாயு என்று வேறுபெயரிலும் சொல்லப்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "சீதம், உஷ்ணம், வாயுவென்னும் இம்மூன்று குணங்களும் சரீரத்திலுண்டானவைகள்" என்று இருக்கிறது.

எனினும், துயரத்தின் போது கவலையாகவோ, அருளின் போது மகிழ்ச்சியாகவோ நீர் ஒருபோதும் இருந்ததில்லை. எனவே, அருட்காலத்தில் கவலையடையவோ, துன்பகாலத்தில் மகிழ்ச்சியடையவோ நீர் உமது நினைவுத்திறனைப் பயன்படுத்தக் கூடாது. விதியே அனைத்திலும் வலிமைமிக்கதாகத் தெரிகிறது. அல்லது, இவ்வாறு பாதிப்படைந்திருப்பதன் விளைவால் உண்டான உமது இயல்பாக இஃது இருக்குமானால்,(16-17) சொற்ப ஆடையுடுத்தியிருந்த கிருஷ்ணை {திரௌபதி}, தனது மாதவிடாய் காலத்தில் சபைக்கு இழுத்து வரப்பட்டதைக் கண்டதை நினைக்க இயலாதவராக நீர் எவ்வாறு இருக்கிறீர்[2].(18) நாம் (குரு) நகரத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதையும், நாம் நாடு கடந்து, மான்தோலுடுத்தி (காட்டுக்குள்) இருந்ததையும், அந்த நமது காட்டு வாழ்வையும் நீர் ஏன் நினைக்கவில்லை.(19) ஜடாசுரன் ஏற்படுத்திய துன்பங்களையும், சித்திரசேனனுடனான போரையும், சிந்து மன்னனின் {ஜெயத்ரதனின்} கரங்களில் அடைந்த துயரத்தையும் நீர் ஏன் மறந்துவிட்டீர்?(20) தலைமறைவாக வாழ்ந்த காலத்தில் இளவரசி திரௌபதி கீசகனால் உதைக்கப்பட்டதை நீர் ஏன் மறந்தீர்?(21)

[2] "அதாவது, ’இன்பத்திலும் துன்பத்தை நினைத்துப் பார்ப்பது உமது இயல்பென்றால், உமது மனைவி அவமதிக்கப்பட்டதை ஏன் நினைத்துப் பார்க்க மறுக்கிறீர்? அந்த அவமதிப்பை நினைத்தால் கோபத்தால் நிறையும் நீர், உமது மனைவியை அவமதித்தவர்களைக் கொன்றது மிகச் சரியே எனச் சமாதானமடைந்திருப்பீர்’ என்பதே இவ்வரியின் பொருளாகத் தெரிகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {யுதிஷ்டிரரே}, பீஷ்மருடனும், துரோணருடனும் நீர் போரிட்டதைப் போன்ற கடுமையான போரே இப்போது உம் முன்னிலையில் இருக்கிறது. இதனுடன் நீர் உமது மனத்தைக் கொண்டே போரிட வேண்டும்.(22) உண்மையில், இப்போது உம்முன்னிலையில் இருக்கும் போரில், கணைகள், நண்பர்கள், உறவினர்கள் சொந்தங்கள் ஆகியவற்றுக்கான தேவையில்லை, ஆனால் அதில் நீர் உமது மனத்தால் மட்டுமே போரிட வேண்டும்.(23) இந்தப் போரில் நீர் வெல்வதற்கு முன்பே உமது உயிர்மூச்சைவிட்டுவிட்டால், பிறகு மற்றொரு உடலை அடைந்து நீர் இதே எதிரிகளுடன் நீர் போரிட வேண்டியிருக்கும்[3].(24) எனவே, ஓ! பாரதரே, அந்தப் போரை இன்றே போரிட்டு, உடல் குறித்த அக்கறையில்லாமல் உமது செயல்பாடுகளின் மூலம் உமது மனத்தின் எதிரிகளை அடையாளம் கண்டு அவற்றை வெல்வீராக. அந்தப் போரை உம்மால் வெல்ல முடியவில்லையெனில், உமது நிலை என்னவாகும்? மறுபுறம், ஓ! ஏகாதிபதி, அதை நீர் வென்றால், வாழ்வில் உயர்ந்த கதியை அடைவீர்.(26)

[3] "செழிப்பு மற்றும் நாடு ஆகியவற்றை நீர் கைவிடுவதன் விளைவால், வேள்வி, கொடைகள் மற்றும் பிற பக்திச் செயல்பாடுகளின் மூலம் உமது விடுதலையை {முக்தியை} அடையும் வழிமுறைகளை இழப்பதால், நீர் மீண்டும் பிறந்து, உமது ஐயங்களுடன் இந்த மனப்போரைப் புதிதாகச் செய்ய வேண்டும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

இதில் உமது அறிவைச் செலுத்தி, உயிரினங்களின் சரியான மற்றும் தவறான பாதைகளை உறுதி செய்து கொண்டு, உமக்கு முன்னால் உமது தந்தையர் ஏற்று நடந்த பாதையைப் பின்பற்றி, உமது நாட்டை முறையாக ஆள்வீராக.(27) ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, பாவி துரியோதனனும், அவனது தொண்டர்கள் அனைவரும் கொல்லப்பட்டது நற்பேற்றாலேயே. திரௌபதியின் குழல்களின் நிலையை நீர் அடைந்ததும் நற்பேற்றினாலேயே[4].(28) முறையான சடங்குகளுடனும், அபரிமிதமான கொடைகளுடன் ஒரு குதிரை வேள்வியைச் செய்வீராக. ஓ! பிருதையின் {குந்தியின்} மகனே, நாங்களும், பெரும் சக்தி கொண்டவனான வாசுதேவனும் {கிருஷ்ணனும்} உமது பணியாட்களாவோம்" என்றான் {பீமன்}.(29)

[4] "திரௌபதியின் குழல்களின் நிலை: அதாவது, நீர் இயல்பான நிலைக்கு மீண்டிருக்கிறீர். துச்சாசனனால் பற்றி இழுக்கப்பட்ட நாளில் இருந்தே திரௌபதி தனது குழல்களை முடியாதிருந்தாள். குருக்கள் கொல்லப்பட்ட பிறகே, அந்தக் குழல்கள் முன்பு போல் கட்டப்பட்டன {பின்னப்பட்டன}, அல்லது அதன் இயல்பான நிலையை அடைந்தது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

சாந்திபர்வம் பகுதி – 16ல் உள்ள சுலோகங்கள் : 29

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்