Tuesday, October 31, 2017

அனைத்தும் அறிவில் நிலைத்திருக்கின்றன! - சாந்திபர்வம் பகுதி – 17

Everything rests on understanding! | Shanti-Parva-Section-17 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 17)


பதிவின் சுருக்கம் : துறவே சிறந்ததெனப் பீமனுக்குச் சொன்ன யுதிஷ்டிரன்; பசியை வெல்ல வேண்டும்; ஆசை மற்றும் இன்பங்களைத் துறக்க வேண்டும் என்று சொன்னது; பண்பட்ட அறிவிலேயே அனைத்தும் நிலைத்திருக்கின்றன என்று சொன்ன யுதிஷ்டிரன்...


யுதிஷ்டிரன் {பீமனிடம்}, "ஓ! பீமா, நிறைவின்மை, அலட்சியம், பூமிசார்ந்த பொருட்களில் பற்று, அமைதியின்மை, வலிமை, மடமை, போலிச் செருக்கு {வறட்டு பெருமை}, கவலை ஆகிய இந்தப் பாவங்களால் பீடிக்கப்பட்டு, நீ அரசுரிமையில் நாட்டங்கொள்கிறாய். ஆசையில் இருந்து விடுபட்டு, இன்பம் மற்றும் துன்பம் ஆகியவற்றைக் கடந்து, அமைதியை அடைந்து, மகிழ்ச்சியடைய {சுகமாக இருக்க} முயல்வாயாக.(1,2)  கட்டற்ற இந்தப் பூமியை எந்த ஒப்பற்ற ஏகாதிபதி ஆட்சி செய்வானோ, அவனும் ஒரே வயிற்றைத் தான் கொண்டிருப்பான். பிறகு ஏன் நீ இந்த வாழ்வுமுறையைப் புகழ்கிறாய்?(3) ஓ! பாரதர்களில் காளையே {பீமா}, ஒருவனுடைய ஆசைகள் ஒரு நாளிலோ, பல மாதங்களிலோ நிறைவடையாது. உண்மையில், நிறைவடைய இயலா ஆசையானது, ஒருவனுடைய மொத்த வாழ்நாளிலும் கூட நிறைவையடையாது.(4) நெருப்பில் விறகு ஊட்டப்படும்போது அது சுடர்விட்டு எரிகிறது; ஊட்டப்படாதபோதோ அணைந்துவிடுகிறது. எனவே, உன் வயிற்றில் நெருப்பு எரியும்போது {பசிக்கும்போது}, சொற்ப உணவே  அளித்து {உணவைக் குறைத்து} அஃதை அணைப்பாயாக.(5) ஞானமற்றவனே தன் வயிற்றுக்கு அதிக உணவைத் தேடுகிறான். முதலில் உனது வயிற்றை வெல்வாயாக. (பிறகு உன்னால் இந்தப் பூமியையே வெல்ல இயலும்). உனது நிரந்தர நன்மைக்கான பூமியை, அப்போது உன்னால் வெல்ல முடியும்[1].(6)


[1] கும்பகோணம் பதிப்பில், "எரியத் தொடங்கும் வயிற்றிலுள்ள அக்கினியை ஆகாரத்தைக் குறைத்து நீ சாந்தமாகச் செய். புத்தியில்லாதவன் தன் வயிற்றினிமித்தம் பல ஹிம்ஸையைச் செய்கிறான். வயிற்றை ஜயித்தால் அதனாலுண்டாகும் நற்கதியால் இந்தப் பூமியும் உனக்கு ஜயிக்கப்பட்டதாகும்.

உலகம் சார்ந்த ஆசைகள், இன்பங்கள் மற்றும் செழிப்பை நீ புகழ்கிறாய். எனினும், அனைத்து இன்பங்களையும் துறந்தவர்கள், தவங்களால் தங்கள் உடல்களைக் குறைத்துக் கொண்டு பேரின்பம் நிறந்த உலகங்களை அடைகின்றனர்.(7) நாட்டை அடைந்து அதைப் பராமரிப்பதில் நியாயமான மற்றும் நியாயமில்லா இரண்டு வழிகளும் பின்பற்றப்படுகின்றன. அவற்றிற்கான ஆசை உன்னுள் இருக்கிறது[2]. எனினும், உன் பெருஞ்சுமைகளில் இருந்து உன்னை விடுவித்துக் கொண்டு நீ துறவை பின்பற்றுவாயாக.(8) ஒரு புலியானது, தன் வயிற்றை நிரப்புவதற்காகப் பல விலங்குகளைக் கொல்கிறது. பலமற்ற பிற விலங்குகள், உயிர்வாழும் ஆசையால் உந்தப்பட்டு, புலியின் இரையாக வாழ்கின்றன.(9) உலகம் சார்ந்த பொருட்களை ஏற்கும் மன்னர்கள் துறவை பயின்றால், அவர்களால் ஒருபோதும் மனநிறைவை அடைய முடியாது. அவர்களின் புத்தியின்மையைப் பார்.(10) எனினும், மரத்தின் இலைகளை உண்டு வாழ்பவர்களோ, தானியங்களில் உமி நீக்க இரு கற்களை மட்டுமே, அல்லது தங்கள் பற்களை மட்டுமே பயன்படுத்துபவர்களோ, நீரை மட்டுமே உட்கொண்டு வாழ்பவர்களோ, காற்றை மட்டுமே உட்கொண்டு வாழ்பவர்களோ, நரகத்தை வெல்கிறார்கள் {நரகை அடையாமல் சொர்க்கத்திற்குச் செல்கிறார்கள்} என்பது உண்மைச் செய்தியாகும்.(11) கட்டற்ற இந்தப் பரந்த உலகை ஆள்பவனான மன்னனும், தங்கத்தையும், கூழாங்கற்களையும் சமமாகக் கருதும் ஒரு மனிதனு ஆகிய இவர்கள் இருவருக்குள், பின்னவனே {துறவியே} தன் வாழ்வின் நோக்கத்தையடைந்ததாகச் சொல்லப்படுகிறானேயன்றி முன்னவன் {மன்னன்} அல்ல.(12)

[2] கும்பகோணம் பதிப்பில், "தன்னிடத்தில் இல்லாத திரவியத்தை அடைவதும், அடைந்ததைப் பரிபாலிப்பதுமான ராஜ்யத்தின் யோகக்ஷேமமும், புண்ணியப் பாபங்களும் உன்னிடத்திலிருக்கின்றன" என்றிருக்கிறது.

எனவே, நீ இம்மையிலும், மறுமையிலும் இன்பத்தைத் தரும் நிரந்தர புகலிடத்தைச் சார்ந்தவனாகி, செயலை நிறுத்தி, ஆசைகளில் கொண்டுள்ள பற்றைத் துறப்பாயாக.(13) ஆசையையும், இன்பத்தையும் கைவிட்டவர்கள் ஒருபோதும் வருந்த வேண்டியதில்லை[3]. எனினும், நீ இன்பங்களுக்காக வருந்துகிறாய். ஆசையையும், இன்பத்தையும் விலக்கினால், பொய் பேச்சில் இருந்து விடுபடுவதில் நீ வெல்லலாம்[4].(14) பித்ருக்களின் பாதை மற்றும் தேவர்களின் பாதை என நன்கறியப்பட்ட இருபாதைகள் (நமக்காக) இருக்கின்றன. வேள்விகளைச் செய்வோர் பித்ரு பாதையில் செல்கின்றனர், அதே வேளையில், விடுதலை {முக்தியை} வேண்டுவோர், தேவ பாதையில் செல்கின்றனர்[5].(15) தவங்கள், பிரம்மச்சரியம், (வேத) கல்வி, ஆகியவற்றின் மூலம் தங்கள் உடல்களைத் துறக்கும் பெரும் முனிவர்கள், காலனின் சக்திக்கும் மேலான உலகங்களுக்குச் செல்கின்றனர்.(16)

[3] "அதாவது, நீ ஆசையிலிருந்து விடுபடவில்லை" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[4] "இவ்விடத்தில், பொய்ப்பேச்சென்பது, ஒருவன் செல்வத்தையும், அதிகாரத்தையும் அனுபவித்துக் கொண்டே அவற்றில் பற்றில்லாதவன் போலப் பேசுவது. அஃதாவது, ஆடம்பரங்களுக்கு மத்தியில் பயிலப்படும் போலித் துறவு. யுதிஷ்டிரனால் ஏற்கனவே சொல்லப்பட்டதைப் போல அத்தகு துறவு பயிலத்தகாததாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[5] "வேத சடங்குகளின் மூலம் மறுமையில் ஒருவனை அருளை அடையச் செய்வது பித்ருக்களின் பாதையாகும். தேவர்களின் பாதை என்பது, ஆழ்ந்த தியானம் மற்றும் பக்திக்காகச் செய்யப்படும் அறச்சடங்குகளைக் கைவிடுவதாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

உலகம் சார்ந்த இன்பங்கள் கட்டுகளின் {பற்றின்} தன்மையைக் கொண்டனவாகும். அவை செயல்பாடு என்றும் அழைக்கப்படுகின்றன. (பற்று மற்றும் செயல்பாடு ஆகிய) அவ்விரு பாவங்களில் இருந்து விடுபடும் ஒருவனே உயர்ந்த கதியை அடைகிறான்[6].(17) முரண்பட்ட இரட்டைகளிலிருந்து {த்வந்துவங்களில் இருந்து} விடுபட்டவனும், ஆசை மற்றும் இன்பங்களில் இருந்து விடுபட்டவனும், மோக்ஷதர்மத்தை நோற்பவனுமான ஜனகனால் (பழங்காலத்தில்) பாடப்பட்ட ஒரு வரியில் இக்குறிப்பிருக்கிறது.(18) (அவ்வாறு இவ்வாறு அமைந்திருக்கிறது:) "என் செல்வங்கள் ஏராளம், இருப்பினும் என்னிடம் ஒன்றுமில்லை. மேலும், மொத்த மிதிலையும் எரித்துச் சாம்பாலக்கப்பட்டாலும், என்னுடையது ஏதும் எரிக்கப்படவில்லை" {என்றிருக்கிறது}.(19)

[6] கும்பகோணம் பதிப்பில், "இவ்வுலகில் ஆசையும், அப்படியே கர்மாவும் போகத்திற்குரிய பாபமென்று சொல்லப்படுகின்றன. அவ்விரண்டு பாபங்களிலிருந்தும் விடுபட்டவன் அந்தப் பெரிய பதவியை அடைகிறான்" என்றிருக்கிறது.

மலையின் உச்சியில் இருக்கும் ஒரு மனிதன், சமவெளியில் இருக்கும் மனிதர்களைக் கீழ் நோக்கிப் பார்ப்பதைப் போல, அறிவு மாளிகையின் உச்சத்தை அடைந்த ஒருவன், துன்பப்பட்ட சொல்லாத {துன்பப்படத்தகாத} பொருட்களுக்காக மக்கள் துன்புற்றுக் கொண்டிருப்பதைக் காண்கிறான்.(20) {கண்களுக்குப்} புலப்படும் பொருட்களில் தன் கண்களைச் செலுத்தி, அவற்றை உண்மையில் காணும் ஒருவனே கண்களையும், அறிவையும் கொண்டவன் என்று சொல்லப்படுகிறான்[7]. அறிவு என்றழைக்கப்படும் புலமானது, அறியப்படாத, புரிந்து கொள்ளமுடியாத பொருட்களைக் குறித்து அது கொடுக்கும் அறிவாலும், புரிதலாலுமே அவ்வாறு அழைக்கப்படுகிறது.(21) தூய்மையடைந்த ஆன்மாக்களைக் கொண்டவர்களும், பிரம்ம நிலையை அடைந்தவர்களுமான கல்விமான்களின் வார்த்தைகளை அறிந்த ஒருவன், உயர்ந்த பெருமைகளை அடைவதில் வெல்கிறான்.(22) ஒருவன், முடிவிலா வேற்றுமைகளைக் கொண்ட உயிரினங்கள் அனைத்தும் ஒன்றெனவும், ஒரே சாற்றின் பல்வேறு வெளிப்பாடுகளே அவை {அவ்வுயிரினங்கள்} எனவும் காணும்போது, அவன் பிரம்மத்தை அடைந்தவனாகச் சொல்லப்படுகிறான்[8].(23) இந்த உயர்ந்த பண்பட்ட நிலைய அடைபவர்களே, மிக உயர்ந்த, அருள்நிறைந்த கதியை அடைகிறார்களேயன்றி, அறிவற்றவர்களோ, குறுகிய ஆன்மா கொண்டவர்களோ, சிற்றறிவு கொண்டவர்களோ, தவங்களற்றவர்களோ அல்ல {அந்நிலையை அடைவதில்லை}. உண்மையில், அனைத்தும் (பண்பட்ட) அறிவிலேயே {புத்தியிலேயே} நிலைத்திருக்கின்றன" என்றான் {யுதிஷ்டிரன்}".(24)

[7] கும்பகோணம் பதிப்பில், "ஞானமென்னும் உப்பரிகையிலேறினவன், சோகப்படும் ஜனங்களைக் கண்டு, தான் சோகமடையான். மந்தபுத்தியுள்ளவன் பூமியிலிருந்தாலும் மலையின் மேலிருந்தாலும் (உண்மையைக்) காண மாட்டான். தெரிந்து கொள்ள வேண்டியதைத் தெரிந்து கொள்ளுகிறவன்தான் கண்ணுள்ளவனும் புத்தியுள்ளவனுமாவான்" என்றிருக்கிறது.

[8] "இந்த உண்மை, மஹாபரதத்தின் பல்வேறு வாக்கியங்களில், மொழியின் பல்வேறு வடிவங்களில் வெளிப்படுத்தப்படுகிறது. முடிவிலா வேற்றுமைகளின் ஒன்றிணைப்பை பரமாத்மாவின் அடையாளமாகக் காண்பதே பிரம்மத்தை அடைதல் என்பதே இங்கு செய்தி. எனவே, பிரம்மத்தை அடைந்த ஒருவன், அண்டத்தில் இருந்து தன்னைத் தனியாகக் கருதுவதை நிறுத்திக் கொள்கிறான். பாவம் மற்றும் தீங்கின் {ஹிம்சையின்} வேரான தன்னலம் அவனிடம் இருந்து மறைகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

சாந்திபர்வம் பகுதி – 17ல் உள்ள சுலோகங்கள் : 24

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்