Sunday, November 12, 2017

செல்வத்தின் களங்கங்கள்! - சாந்திபர்வம் பகுதி – 26

The faults of wealth! | Shanti-Parva-Section-26 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 26)


பதிவின் சுருக்கம் : தேவர்களால் பிராமணர்களாகக் கருதப்படுபவர்கள் யார்? அறவோர் யார்? சூரியனின் தென் பாதை மற்றும் வட பாதை; வடபாதையின் சிறப்பு; மனநிறைவின் உயர்வு; பிரம்மம் மற்றும் பிரம்ம நிலை; செல்வத்தின் தூண்டல்; செல்வத்தின் பயனற்ற நிலை; ஈகையறம் ஏன் கடினமானது? செல்வத்தின் களங்கங்கள் ஆகியவற்றை அர்ஜுனனுக்குச் சொல்லும் யுதிஷ்டிரன்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "இது தொடர்பாக உயர் ஆன்ம யுதிஷ்டிரன், அறிவு நிறைந்த வார்த்தைகளை அர்ஜுனனிடம் சொன்னான்:(1) {அவன்}, "ஓ! பார்த்தா {அர்ஜுனா}, செல்வத்தைவிட மேன்மையானது ஏதுமில்லை என்றும், ஓர் ஏழையால் சொர்க்கத்தையோ, மகிழ்ச்சியையோ, தனது விருப்பங்களையோ அடைய முடியாது என்றும் நீ நினைக்கிறாய்.(2) எனினும், இஃது உண்மையல்ல. வேத கல்வியின் வடிவிலான வேள்வியின் மூலமாக வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட மனிதர்கள் பலர் உண்மையில் காணப்படுகிறார்கள். தவத்தில் அர்ப்பணிப்புக் கொண்ட பல முனிவர்கள் அழிவில்லா (அருள்) உலகங்களை அடைவதும் காணப்படுகிறது.(3) ஓ! தனஞ்சயா, முனிவர்களின் நடைமுறையை எப்போதும் நோற்று, பிரம்மச்சரியத்தைக் கைக்கொண்டு, அனைத்துக் கடமைகளை அறிவோரே தேவர்களால் பிராமணர்களாகக் கருதப்படுகிறார்கள்.(4) ஓ! தனஞ்சயா, வேத கல்வியில் அர்ப்பணிப்புடன் இருக்கும் முனிவர்களையும், உண்மை ஞானத்தை அடைவதில் அர்ப்பணிப்புடன் இருப்போரையும் உண்மையில் அறவோராக எப்போதும் நீ கருதவேண்டும்.(5)


ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, உண்மை ஞானத்தை அடைவதில் அர்ப்பணிப்பு கொண்டோரைச் சார்ந்தே நமது செயல்கள் அனைத்தும் இருக்கின்றன[1]. ஓ! பலமிக்கவனே, இதுவே வைகானஸர்களின் {வானப்ரஸ்தர்களின்} கருத்து என்று நாம் அறிகிறோம்.(6) ஓ! பாரதா, அஜர்கள், பிருஸ்னிகள், ஸிகதர்கள், அருணர்கள், கேதவர்கள் ஆகியோர் அனைவரும் வேதகல்வியின் தகுதியின் மூலம் சொர்க்கத்திற்குச் சென்றுவிட்டனர்.(7) ஓ! தனஞ்சயா, வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள போர், வேத கல்வி, வேள்விகள், புலனடக்கம் போன்ற கடுமையான செயல்களைச் செய்வதால்,(8) ஒருவன் சூரியனின் தென் பாதையின் மூலமாகச் சொர்க்கத்துக்குச் செல்கிறான். (வேதத்தின் படியான) செயல்களைச் செய்வோர் அந்தப் பகுதிகளுக்கே செல்வார்கள் என்று நான் முன்பு சொல்லியிருக்கிறேன்.(9) எனினும், வடபாதையில், யோக தவங்களில் அர்ப்பணிப்புடையோர் பயணிப்பதை நீ காண்பாய். அழிவில்லாத பிரகாசமான அந்த உலகங்களுக்குச் செல்லும் அந்தப் பாதையே யோகம் செய்யும் மனிதர்களுக்குச் சொந்தமானதாகும்.(10)

[1] "உண்மை ஞானம் என்பது பிரம்மத்தைக் குறித்த அறிவாகும். அத்தகு அறிவைக் கொண்டோரின் கருத்தின்படியே நமது நடத்தை (செயல்கள்) அமைய வேண்டும் என இங்கே சொல்லப்படுகிறது" என விளக்குகிறார் கங்குலி.

இவை இரண்டிலும், வட பாதையே புராணங்களை அறிந்தோரால் மெச்சப்படுகிறது. மனநிறைவின் மூலமே ஒருவர் சொர்க்கத்தை அடைகிறான் என்பதை நீ அறிய வேண்டும். மனநிறைவிலிருந்தே பேரின்பம் உதிக்கிறது.(11) மனநிறைவைவிட உயர்ந்தது ஏதுமில்லை. கோபம் மற்றும் இன்பத்தைக் கட்டுப்படுத்திய ஒரு யோகிக்கு, மனநிறைவே உயர்ந்த புகழும், வெற்றியுமாகும்.(12) இது தொடர்பாக யயாதியின் பழைய உரையாடல் ஒன்று சொல்லப்படுகிறது. இந்த உரையைக் கேட்கும் ஒருவன், தன் அவையங்கள் அனைத்தையும் உள்ளிழுத்துக் கொள்ளும் ஓர் ஆமையைப் போலத் தன் விருப்பங்கள் அனைத்தையும் உள்ளிழுத்துக் கொள்வான்.(13) ஒருவன் எதனிடமும், எதனாலும் அச்சமடையாதபோதும், ஒருவன் எந்த ஆசையும், வெறுப்பும் கொள்ளாதபோதும், அவன் பிரம்ம நிலையை அடைந்ததாகச் சொல்லப்படுகிறான்.(14) ஒருவன் எந்த உயிரினத்திற்கும் செயலாலோ, சிந்தையாலோ, சொல்லாலோ தீங்கிழையாதிருக்கும்போது, அவன் பிரம்மத்தை அடைந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.(15)

ஒருவன் செருக்கையும், மடமையையும் கட்டுப்படுத்தி, பற்றுகள் அனைத்தில் இருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டால், ஒளிபொருந்திய ஆன்மா கொண்ட அந்தப் பக்திமான், தனி இருப்பை அழித்த நிலையான முக்தியை அடையத் தகுந்தவனாகிறான்.(16) ஓ! பிருதையின் மகனே {அர்ஜுனா}, இப்போது நான் உனக்குச் சொல்லப் போவதை, குவிந்த கவனத்துடன் கேட்பாயாக. சிலர் அறத்தையும், சிலர் நன்னடத்தையையும், சிலர் செல்வத்தையும் விரும்புகின்றனர்.(17) ஒருவன் (அறத்தை அடையும் வழிமுறையாக) செல்வத்தை விரும்பலாம். எனினும், அத்தகு விருப்பத்தையும் கைவிடுவதே அவனுக்குச் சிறந்ததாகும்[2]. செல்வத்துடன் பல களங்கங்கள் இணைந்திருக்கின்றன, அதன் விளைவாக அந்தச் செல்வத்தால் செய்யப்படும் அறச்செயல்களிலும் அவை இணைந்தேயிருக்கின்றன.(18) இதை நாம் கண்கூடாகக் கண்டிருக்கிறோம். இதை நீயும் காண்பதே உனக்குத் தகும். செல்வத்தை விரும்பும் ஒருவன், எந்த வழிமுறையிலேனும் கைவிட வேண்டியவற்றைக் கைவிடுவதற்கு மிகவும் கடினமானதாகக் காண்கிறான்.(19) வளங்களுக்கு மத்தியில் இருப்போர் நற்செயல் செய்வது அரிதே. பிறருக்குத் தீங்கிழைக்காமல் செல்வத்தை ஒருபோதும் அடைய முடியாது என்றும், அஃதை ஈட்டுபோது, அஃது எண்ணற்ற தொல்லைகளையே கொண்டு வருகிறது என்றும் சொல்லப்படுகிறது.(20)

[2] "இங்கே கவிஞன் சொல்ல விழைவதென்னவெனில்: வேள்விகளைச் செய்வதைவிட, வேள்விகள் செய்வதற்கான வழிமுறையாகச் செல்வத்தை விரும்புபவதைவிட, செல்வத்தை விரும்பாமல் இருப்பதே சிறந்தது. ஓர் ஏழையானவன், வழக்கமான வழிமுறைகளின் மூலம் அடையப்பட்ட செல்வத்தைக் கொண்டு வேள்விகளைச் செய்வதைவிட, அதைச் செய்யாமல் இருப்பதே சிறந்தது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

பாவங்களுக்கு வருந்தும் அச்சத்தைச் சிறிதளவும் கொள்ளாத குறுகிய இதயம் படைத்தவன், சிறு செல்வத்திலும் மயக்கமுற்று, தன் செயல்களின் மூலம் பிராமணனைக் கொன்ற பாவத்தை {பிரம்மஹத்தியை} இழைக்கிறோம் என்பதையும் முற்றிலும் அறியாமல் பிறருக்குத் தீங்கிழைக்கும் செயல்களைச் செய்கிறான்.(21) அடைவதற்கரிதான செல்வத்தை அடைந்த ஒருவன், அதில் ஒரு பகுதியைத் தனது பணியாட்களுக்குக் கொடுக்கும்போது, கொள்ளையர்களால் களவாடப்படுபவன் உணர்வதற்கு இணையான துன்பத்தை அடைகிறான். மறுபுறம், ஒருவன் தன் செல்வத்தை விட்டுக்கொடுக்காமல் இருப்பானானால், அவன் மக்களின் கண்டனத்தையே தன் பங்காகக் கொள்கிறான்.(22) எனினும், செல்வமில்லாத ஒருவனோ, ஒரு போதும் நிந்தனைக்கான பொருளாவதில்லை. பற்றுகள் அனைத்திலிருந்தும் விலகிய ஒருவன், பிச்சையெடுத்து அடையும் சிறிதளவைக் கொண்டு தன் உயிரைத் தாங்கிக் கொண்டு அனைத்து வகையிலும் அவன் மகிழ்ச்சியை அடைகிறான். செல்வத்தை அடைவதாலோ எவராலும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது.(23) பழங்காலச் சாத்திரங்களை அறிந்தோரால் இது தொடர்பாக வேள்விகளுக்குச் சம்பந்தமான குறிப்பிட்ட வரிகள் சொல்லப்படுகின்றன.(24) செல்வமானது படைப்பாளனால் வேள்விகளின் நிமித்தமாகப் படைக்கப்பட்டது, அந்தச் செல்வத்தைக் காக்கவும், வேள்விகளைச் செய்வதற்காகவும் தான் மனிதன் படைக்கப்பட்டான். இதன் காரணமாகச் செல்வமனைத்தும் வேள்விகளுக்கே செலவிடப்பட வேண்டும். ஒருவனுடைய இன்ப நிறைவுக்கான ஆசைக்காக அது செலவிடப்படுவது முறையாகாது.(25)

அவ்வாறெனில், படைப்பாளன் வேள்வியின் நிமித்தமாகவே மனிதர்களுக்குச் செல்வத்தைக் கொடுக்கிறான். ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, செல்வந்தர்கள் அனைவரிலும் நீயே முதன்மையானவன் என்பதை நீ அறிவாயாக.(26) செல்வமானது, இப்பூமியில் உள்ள யாருக்கும் சொந்தமானதல்ல என்று இதன் காரணமாகவே ஞானியர் சொல்கின்றனர். ஒருவன் அதைக் கொண்டு வேள்விகளைச் செய்து, நம்பிக்கை மிகுந்த இதயத்துடன் அதைக் கொடையாக அளிக்க வேண்டும்.(27) ஒருவன் தான் அடைந்ததை (தானமாகச்) செலவிடவேண்டுமேயொழிய, வீணாக்கவோ, தன் இன்ப நுகர்ச்சிக்காகவோ செலவிடக்கூடாது. எதில் செலவிட வேண்டும் என்ற இத்தகு முறையான பொருட்கள் இருக்கும்போது, செல்வத்தைக் குவிப்பதில் என்ன பயன் இருக்கிறது?(28) தங்கள் வகைக்கான கடமைகளில் இருந்து தவறிய மனிதர்களுக்கு, (செல்வத்தைக்) கொடையளிக்கும் சிறுமதியாளர்கள், அதன் பிறகு நூறாண்டுகள், கழிவுகளிலும் புழுதியிலும் உழல வேண்டியிருக்கும்.(29) மனிதர்கள், தகுந்தவர்களையும், தகாதவர்களையும் பகுத்தறியும் இயலாமையினாலேயே, தகாதவர்களுக்குக் கொடுத்துத் தகுந்தவர்களுக்குக் கொடுக்காமல் இருக்கிறார்கள். இதன் காரணமாக ஈகை எனும் அறமே கூடப் பயில்வதற்கு மிகக் கடினமானதாகிறது.(30) செல்வம் அடையப்பட்டாலும், தகாதவனுக்குக் கொடையளிப்பது, தகுந்தவருக்குக் கொடாமலிருப்பது ஆகிய இந்த இரு களங்கங்களைக் கொண்டதாகவே அஃது இருக்கிறது" என்றான் {யுதிஷ்டிரன்}[3].(31)

[3] சாந்திபர்வத்தின் இந்த 26ம் பகுதி முழுவதும் அதிகப் பாடம் என்று கும்பகோணம் பதிப்பில் சொல்லப்படுகிறது. சென்ற அத்தியாயத்திற்கும், இந்த அத்தியாயத்திற்கும் ஒரு தொடர்ச்சி இல்லாதிருப்பதை உணர முடிகிறது. ஆயினும் இதில் சொல்லப்பட்டுள்ள நீதிகள் முக்கியமானவையே.

சாந்திபர்வம் பகுதி – 26ல் உள்ள சுலோகங்கள் : 31

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்