Thursday, December 07, 2017

பீஷ்மரை நினைத்துக் கொண்டிருந்தேன்! - சாந்திபர்வம் பகுதி – 46

I was thinking of Bhishma! | Shanti-Parva-Section-46 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 46)


பதிவின் சுருக்கம் : கிருஷ்ணன் ஆழ்ந்த தியானத்தில் இருப்பதைக் கண்டு வியந்து, அவனைத் துதித்த யுதிஷ்டிரன்; பீஷ்மர் தன்னை நினைத்துக் கொண்டிருப்பதாகச் சொன்ன கிருஷ்ணன்; பீஷ்மர் மறைவதற்குள் அவரிடமிருக்கும் அறிவுக்களஞ்சியத்தை அவரிடம் கற்றுப் பெறுமாறு யுதிஷ்டிரனிடம் சொன்ன கிருஷ்ணன்; இருவரும் சேர்ந்து செல்லலாம் என்று சொன்ன யுதிஷ்டிரன்...


யுதிஷ்டிரன் {கிருஷ்ணனிடம்}, "ஓ! அளவிலா ஆற்றல் கொண்டோனே, நீ ஆழ்ந்த தியானத்தில் இருப்பது அற்புதம். ஓ! அண்டத்தின் பெரும்புகலிடமே, மூவுலகங்களும் நலமா?(1) ஓ! தேவா, ஓ! மனிதர்களில் காளையே, (இவ்வுலகில் இருந்து) நான்காம் நிலையைப் பின்பற்றி நீ உன்னை விலக்கிக் கொள்ளும்போது, என் மனம் ஆச்சரியத்தால் நிறைகிறது[1].(2) உடலுக்குள் செயல்படும் ஐந்து உயிர் மூச்சுகள் அசைவில்லாத உன்னால் கட்டுப்படுத்தப்படுகின்றன. இன்பத்தில் திளைத்திருக்கும் உன் புலன்கள் உன் மனத்திற்குள் உன்னால் குவிக்கப்படுகின்றன.(3) ஓ! கோவிந்தா {கிருஷ்ணா}, பேச்சும், மனமும் உன் புத்திக்குள் குவிக்கப்படுகின்றன. உண்மையில் உன் புலன்கள் அனைத்தும் உன் மனத்திற்குள் இழுக்கப்படுகின்றன[2].(4) உன் உடலில் உள்ள மயிர் சிலிர்த்திருக்கிறது. உன் மனமும், புத்தியும் அசைவற்றிருக்கின்றன. ஓ! மாதவா {கிருஷ்ணா}, ஒரு மரத்தைப் போலவோ, பாறையைப் போலவோ நீ அசைவற்றவனாக இருக்கிறாய்.(5)


[1] "சாதாரண மனிதர்களின் வழக்கில், அவர்களது விழிப்புணர்வில், விழிப்பு, கனவு மற்றும் உறக்கம் என்ற மூன்று நிலைகள் இருக்கின்றன. யோகியர் மட்டுமே உணரும் நான்காம் நிலையானது துரியம் என்றழைக்கப்படுகிறது. முற்றிலும் இவ்வுலகின் உணர்வற்ற நிலையில், ஆன்மாவானது தனக்குள்ளேயே சுருங்கி பரமாத்மாவிலோ, ஏதோ ஒரு பொருளிலோ என்று சொல்லப்படும் நிலையே இது {மனத்தின் நான்காம் நிலை}" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[2] "இந்து மெய்யியலில், மனமானது, புலன்களுக்கும், உணர்வுகளுக்கும் ஆசனமாகக் கொள்ளப்படுகிறது. புத்தம் என்பது புத்தி, அல்லது அறியும் தன்மையின் ஆற்றலாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "சரீரத்திலிருந்து கொண்டு ஐந்துவித வேலைகளைச் செய்யும் பிராணவாயு அடங்கியிருக்கிறது. உங்கள் இந்திரியங்கள் யாவும் மனத்தில் நிலைபெற்றிருக்கின்றன. வாக்கு முதலிய இந்திரியங்களும் மனமும் மகத்துவமென்ற ஸமஷ்டி புத்தியில் லயப்பட்டிருக்கின்றன" என்றிருக்கிறது.

ஓ! சிறப்புமிக்கத் தேவா {கிருஷ்ணா}, காற்றில்லாத இடத்தில் எரிந்து கொண்டிருக்கும் விளக்கின் தழலைப் போல நீ அசைவற்றவனாக இருக்கிறாய். ஒரு பாறைக்குவியலைப் போல நீ அசைவற்றவனாக இருக்கிறாய்.(6) ஓ! தேவா, இதன் காரணத்தைக் கேட்க நான் தகுந்தவனென்றால், இதில் உன் இரகசியமேதும் இல்லையென்றால், என் ஐயத்தை விலக்க வேண்டும் என்ற உதவியை நான் உன்னிடம் இரந்து கேட்கிறேன்.(7) படைப்பவனும், அழிப்பவனும் நீயே. அழியக்கூடியனவும், அழிவற்றனவும் நீயே. தோற்றமும் {ஆதியும்}, மறைவும் {அந்தமும்} அற்றவன் நீயே. உயிரினங்களில் முதல்வனும், முதன்மையானவனும் நீயே.(8) ஓ! நீதியாளர்களில் முதன்மையானவனே, இந்த நுண்மமயத்தின் (யோகத்தின்) காரணத்தை நீ எனக்குச் சொல்வாயாக. நான் உன் உதவியை நாடுபவனும், உனக்கு அர்ப்பணிப்புள்ள வழிபாட்டினனும், சிரம் தாழ்த்தி உன்னை வணங்குபவனும் ஆவேன்" என்றான் {யுதிஷ்டிரன்}.(9) இவ்வாறு சொல்லப்பட்ட வாசவனின் {இந்திரனின்} சிறப்புமிக்கத் தம்பி {கிருஷ்ணன்}, தன் மனத்தையும், புத்தியையும், புலன்களையும் மீண்டும் தங்கள் வழக்கமான செயற்களத்திற்கு அழைத்து, மெல்லிய புன்னகையுடன் இந்த வார்த்தைகளைச் சொன்னான்.(10)

வாசுதேவன் {கிருஷ்ணன் யுதிஷ்டிரனிடம்}, "இப்போது கணைப்படுக்கையில் கிடப்பவரும், அணையப்போகும் நெருப்பைப் போல இருப்பவரும், மனிதர்களில் புலியுமான பீஷ்மர் என்னை நினைத்துக் கொண்டிருக்கிறார். எனவே, என் மனமும் அவரிடம் குவிந்திருந்தது.(11) எவருடைய நாண்கயிற்றின் நாணொலியையும், உள்ளங்கைகளின் ஒலிகளையும் இந்திரனாலேயே தாங்கிக் கொள்ள முடியாதோ அவரிடமே நான் என் மனத்தைக் குவித்திருந்தேன்.(12) (ஒரு சுயம்வரத்தின்போது, காசி மன்னனின் மகள்களான) மூன்று இளவரசிகளைத் தன் தம்பி விசித்திரவீரியனின் திருமணத்திற்காகக் கடத்தி, அங்கே கூடியிருந்த மன்னர்கள் அனைவரையும் வென்றவர் எவரோ, அவரைக் குறித்து நான் நினைத்துக் கொண்டிருந்தேன்.(13) பிருகு குல ராமரிடம் {பரசுராமரிடம்} இருபத்து மூன்று {23} நாட்கள் தொடர்ந்து போரிட்டவர் எவரோ, எவரை ராமராலேயே வெல்ல இயலவில்லையோ, அவரைக் {பீஷ்மரைக்} குறித்து நான் நினைத்துக் கொண்டிருந்தேன்.(14) தம் புலன்கள் அனைத்தையும் திரட்டி, புத்தியின் உதவியுடன் தம் மனத்தைக் குவித்து (என்னைக் குறித்துச் சிந்திப்பதால்) அவர் {பீஷ்மர்} என்னிடம் புகலிடத்தை நாடுகிறார். அதன் காரணமாகவே நான் என் மனத்தை அவரிடம் மையம் கொள்ளச் செய்தேன்.(15)

எவரைக் கங்கையீன்று, சாதாரண மனித விதிகளின்படி வளர்த்தாளோ, எவரை வசிஷ்டர் தமது சீடராகக் கொண்டாரோ, அவரைக் குறித்து நான் நினைத்துக் கொண்டிருந்தேன்.(16) எவர் தெய்வீக ஆயுதங்கள் அனைத்தையும், நான்கு வேதங்களையும், அவற்றின் அங்கங்களையும் அறிந்தவரோ, வலிமை, சக்தி, பெரும் நுண்ணறிவு ஆகியவற்றைக் கொண்ட அந்த வீரரைக் குறித்து நான் நினைத்துக் கொண்டிருந்தேன்.(17) ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரரே}, ஜமதக்னியின் மகனான ராமருக்குப் {பரசுராமருக்கு} பிடித்தமான சீடர் எவரோ, அறிவியல்கள் அனைத்தின் கொள்ளிடம் எவரோ, அவரைக் குறித்து நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.(18) ஓ! பாரதக் குலத்தின் காளையே, கடந்த காலம், எதிர்காலம் மற்றும் நிகழ்காலம் ஆகியவற்றையும், அறநெறி மற்றும் கடமைகளையும் நன்கறிந்த அந்த மனிதர்களில் முதன்மையானவரைக் குறித்து நான் நினைத்துக் கொண்டிருந்தேன்.(19)

ஓ! பிருதையின் {குந்தியின்} மகனே {யுதிஷ்டிரரே}, அந்த மன்னர்களில் புலி சொர்க்கத்திற்குச் சென்றதும், பூமியானது, நிலவற்ற இரவைப் போலத் தெரியும்.(20) எனவே, ஓ! யுதிஷ்டிரரே, பயங்கர ஆற்றலைக் கொண்டவரும், கங்கையின் மைந்தருமான பீஷ்மரைப் பணிவுடன் அணுகி, நீர் கற்க விரும்பும் எதையும் கேட்பீராக.(21) ஓ! பூமியின் தலைவரே, (அறநெறி, பொருள் ஆதாயம், இன்பம் மற்றும் முக்தி ஆகியவற்றைப் பொருத்தவரையிலான) அறிவின் நான்கு கிளைகளையும, நான்கு வகையினருக்காக விதிக்கப்பட்ட வேள்விகள் மற்றும் சடங்குகள் குறித்தும், வாழ்வின் நான்கு வாழ்வுமுறைகள், மன்னர்களின் கடமைகள் ஆகியவற்றைக் குறித்து முழுமையாக அவரிடம் கேட்பீராக.(22) குரு குலத்தில் முதன்மையானவரான பீஷ்மர் இவ்வுலகில் இருந்து மறைந்துவிட்டால், அவருடன் சேர்ந்து அனைத்து வகை அறிவும் {ஞானமும்} மறைந்துவிடும். இதன் காரணமாகவே நான் (இப்போதே அவரிடம் செல்லுமாறு) உம்மைத் தூண்டுகிறேன்" என்றான் {கிருஷ்ணன்}.(23)

உயர்ந்தவையும், முக்கியமானவையுமான வாசுதேவனின் {கிருஷ்ணனின்} இந்த நல்ல வார்த்தைளைக் கேட்டவனும், நீதிமானுமான யுதிஷ்டிரன், கண்ணீரால் தடைப்பட்ட குரலுடன் ஜனார்த்தனனிடம் {கிருஷ்ணனிடம்} பதிலுரைத்தான்.(24) {அவன்}, "ஓ! மாதவா பீஷ்மரின் சிறப்பைக் குறித்து நீ சொன்னதனைத்தும் முற்றிலும் உண்மையே. அதில் நான் சிறு ஐயமும் கொள்ளவில்லை.(25) உண்மையில், உயர் ஆன்ம பிராமணர்கள், சிறப்புமிக்கப் பீஷ்மரின் உயர்ந்த அருளையும், பெருமையையும் குறித்துப் பேசும்போது அவற்றை நான் கேட்டிருக்கிறேன்.(26) ஓ! எதிரிகளைக் கொல்பவனே, உலகங்கள் அனைத்தின் படைப்பாளன் நீயே. எனவே, ஓ! யாதவர்களைத் திளைக்கச் செய்பவனே, நீ சொல்வதில் சிறு ஐயத்தையும் கொள்ள மடியாது.(27) ஓ! மாதவா, உன் இதயம் அருளுமென்றால், உன் தலைமையில் நாம் பீஷ்மரிடம் செல்வோம்.(28) தெய்வீகமான சூரியன் வடக்குத் திரும்பினால், பீஷ்மர் (இவ்வுலகை விட்டு) தான் வென்றிருக்கும் அருள் உலகங்களுக்குச் சென்றுவிடுவார். எனவே, ஓ! வலிய கரங்களைக் கொண்டோனே, அந்தக் குருகுலத்தின் கொழுந்து உன் காட்சியைப் பெறத் தகுந்தவராவார்.(29) (நீ என் வேண்டுதலை அருளினால்), அழியக்கூடியவையாகவும், அழிவற்றவையாகவும் இருப்பவனும், தேவர்களில் முதல்வனுமான உன்னுடைய காட்சியைப் பீஷ்மர் பெறுவார். ஓ! தலைவா, உண்மையில் பிரம்மத்தின் பரந்த கொள்ளிடம் நீயே" என்றான் {யுதிஷ்டிரன்}".(30)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட மதுசூதனன் {கிருஷ்ணன்}, தன்னருகே அமர்ந்திருந்த சாத்யகியிடம், "என் தேர் ஆயத்தமாகட்டும் {தேரில் குதிரைகள் பூட்டப்படட்டும்}" என்றான்.(31) இதைக் கேட்ட சாத்யகி, விரைவாகக் கேசவனின் முன்னிலையை விட்டகன்று வெளியே சென்று தாருகனிடம், "கிருஷ்ணனின் தேர் ஆயத்தமாகட்டும்" என்று உத்தரவிட்டான்.(32) சாத்யகியின் வார்த்தைகளைக் கேட்ட தாருகன், விரைவாகக் கிருஷ்ணனின் தேரை ஆயத்தம் செய்தான். தங்கத்தாலானதும், வைடூரியங்கள், சந்திரகாந்தங்கள் மற்றும் சூரிய காந்தங்களால் அலங்கரிக்கப்பட்டதும், தங்கத்தால் மறைக்கப்பட்ட சக்கரங்களைக் கொண்டதும், பிரகாசமுடையதும், மனோவேகமுடையதும், சாரதிக்கு மத்தியில் வேறு பிற ரத்தினங்கள் நிறுவப்பட்டதும், காலைச் சூரியனைப் போல அழகானதும், உச்சியில் கருடனைக் கொண்ட அழகிய கொடிமரத்தைக் கொண்டதும், எண்ணற்ற கொடிகளைக் கொண்டதுமான தேரில், தங்க இழைகளைக் கொண்டவையும், மனோ வேகம் கொண்டவையும், குதிரைகளில் முதன்மையானவையுமான சுக்ரீவம், சைவியம் மற்றும் இன்னும் இரண்டு குதிரைகளும் பூட்டப்பட்டன. ஓ! மன்னர்களில் புலியே, அவற்றை ஆயத்தம் செய்த தாருகன், கூப்பிய கரங்களுடன் சென்று, இந்தச் செய்தியை கிருஷ்ணனிடம் தெரிவித்தான்" {என்றார் வைசம்பாயனர்}.(33-36)

சாந்திபர்வம் பகுதி – 46ல் உள்ள சுலோகங்கள் : 36

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்