Wednesday, December 06, 2017

ஆழ்தியானத்தில் கிருஷ்ணன்! - சாந்திபர்வம் பகுதி – 45

Krishna in rapt meditation! | Shanti-Parva-Section-45 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 45)


பதிவின் சுருக்கம் : பிராமணர்களுக்கும், குடிமக்களுக்கும் பெரும் தானங்களைச் செய்த யுதிஷ்டிரன்; கிருஷ்ணன் இருந்த இடத்திற்குச் சென்று அவனைத் துதித்தது; ஆழ்ந்த தியானத்தில் இருந்த கிருஷ்ணன்...


ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! கற்ற பிராமணரே, தர்மனின் மகனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான யுதிஷ்டிரன் தன் நாட்டை மீட்ட பிறகு என்ன செய்தான் என்பதைச் சொல்வதே உமக்குத் தகும்.(1) ஓ! முனிவரே {வைசம்பாயனரே}, மூவுலகங்களின் உயர்ந்த தலைவனான வீர ரிஷிகேசன் {கிருஷ்ணன்} இதன் பிறகு என்ன செய்தான் என்பதையும் எனக்கு நீர் சொல்ல வேண்டும்" என்று கேட்டான்.(2)


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ! மன்னா {ஜனமேஜயா}, ஓ! பாவமற்றவனே, வாசுதேவனின் தலைமையிலான பாண்டவர்கள், இதன்பிறகு என்ன செய்தனர் என்பதைச் சொல்லப் போகிறேன் கேட்பாயாக.(3) ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, குந்தியின் மகனான யுதிஷ்டிரன் தன் நாட்டை அடைந்ததும், நால்வகை மனிதர்களுள் ஒவ்வொருவரையும் அவரவர்களுக்குரிய கடமைகளில் நியமித்தான்.(4) அந்தப் பாண்டுவின் (மூத்த) மகன் {யுதிஷ்டிரன்}, ஸ்நாதக வகையைச் சேர்ந்த ஆயிரம் உயர் ஆன்ம பிராமணர்களில் ஒவ்வொருவருக்கும் ஓராயிரம் நிஷ்கங்களைக் கொடுத்தான்.(5) பிறகு அவன் தன்னை நம்பியிருந்த பணியாட்களுக்கும், தன்னிடம் வந்த தகாதோர் மற்றும் வழக்கத்திற்கு மாறான கொள்கைகளை உடையோர் உள்ளிட்ட விருந்தினர்களின் விருப்பங்களை நிறைவேற்றி அவர்களை மனம் நிறையச் செய்தான்.(6)

அவன், தனது புரோகிதரான தௌமியருக்கு, ஆயிரக்கணக்கான பசுக்களையும், அதிகமான செல்வம், தங்கம், வெள்ளி மற்றும் பல்வேறு வகையான ஆடைகளையும் கொடுத்தான்.(7) ஓ! ஏகாதிபதி, கிருபரிடம் அவன் ஓர் ஆசானிடம் ஒருவன் நடந்து கொள்ள வேண்டிய வழியில் நடந்து கொண்டான். நோன்புகளை நோற்பவனான அம்மன்னன், விதுரனைப் பெரிதும் கௌரவிப்பதைத் தொடர்ந்தான்.(8) ஈகையாளர்களில் முதன்மையானவனான அவன் {யுதிஷ்டிரன்}, உணவு, பானம், பல்வேறு வகையான ஆடைகள், படுக்கைகள் மற்றும் இருக்கைகள் ஆகியவற்றால் அனைத்து மனிதர்களையும் நிறைவு செய்தான்.(9) ஓ! ஏகாதிபதிகளில் சிறந்தவனே, தன் நாட்டில் அமைதியை நிலைநாட்டியவனும், பெரும்புகழைக் கொண்டவனுமான அம்மன்னன், யுயுத்சு மற்றும் திருதராஷ்டிரனுக்கு உரிய கௌரவங்களை அளித்தான்.(10) திருதராஷ்டிரன், காந்தாரி மற்றும் விதுரனின் உத்தரவிற்குக் கீழ் தன் நாட்டை வைத்த மன்னன் யுதிஷ்டிரன் தன் நாட்களை மகிழ்ச்சியாகக் கழிக்கத் தொடங்கினான்.(11)

ஓ! பாரதக் குலத்தின் காளையே, குடிமக்கள் உள்ளிட்ட அனைவரையும் இவ்வழியில் நிறைவு செய்த யுதிஷ்டிரன், கூப்பிய கரங்களுடன் உயர் ஆன்ம வாசுதேவனின் {கிருஷ்ணனின்} முன்னிலைக்குச் சென்றான்.(12) நீலமேக வண்ணனான கிருஷ்ணன், தங்கம் மற்றும் ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட பெரிய இருக்கையில் அமர்ந்திருப்பதை அவன் கண்டான்.(13) மஞ்சள் பட்டாடையுடுத்தி, தெய்வீக ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட அவனது மேனி, தங்கத்தின் காந்தியுடன் பிரகாசித்தது.(14) கௌஸ்துப ரத்தினத்தால் அலங்கரிக்கப்பட்ட மார்புடைய அவன், உதயச் சூரியனால் அலங்கரிக்கப்பட்ட உதய மலையைப் போலத் தெரிந்தான்.(15) மூவுலகங்களிலும் தனக்கு நிகரில்லாதவன் போல அவன் மிக அழகாக இருந்தான். விஷ்ணுவின் அவதார வடிவமான அந்த உயர் ஆன்மாவை அணுகிய மன்னன் யுதிஷ்டிரன், சிரித்துக் கொண்டே இனிமையாக, "ஓ! நுண்ணறிவு கொண்டோரில் முதன்மையானவனே, இரவை மகிழ்ச்சியாகக் கடத்தினாயா?(16,17) ஓ! மங்கா மகிமை கொண்டவனே, உன் புலன்கள் அனைத்தும் முழு வீரியத்துடன் இருக்கின்றனவா? ஓ! நுண்ணறிவு கொண்டோரில் முதன்மையானவனே, உன் புத்தி சரியாக {தெளிவாக} இருக்கிறதா?(18) ஓ! தெய்வீகத் தலைவா ஓ! மூவுலகங்களின் புகலிடமே, ஓ! மூன்று {நடை} அடிகளைக் கொண்டவனே, உன் அருளின் காரணமாகவே நாங்கள் எங்கள் நாட்டை மீண்டும் அடைந்து, இந்த மொத்த பூமியும் எங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்தோம். உன் அருளால் நாங்கள் வெற்றியையும், பெரும் புகழையும் அடைந்து, எங்கள் வகைக்கான கடமைகளில் இருந்து வழுவாமல் இருக்கிறோம்" என்றான் {யுதிஷ்டிரன்}.(19)

எதிரிகளைத் தண்டிப்பவனான தெய்வீகக் கிருஷ்ணனிடம், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் இவ்வாறு பேசிக் கொண்டிருந்தபோது, அவன் {கிருஷ்ணன்} ஆழ்ந்த தியானத்தில் இருந்ததால் ஒரு வார்த்தையும் பேசாதிருந்தான்" {என்றார் வைசம்பாயனர்}.(20)

சாந்திபர்வம் பகுதி – 45ல் உள்ள சுலோகங்கள் : 20

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்