Monday, February 26, 2018

வாமதேவரும், வசுமனஸும்! - சாந்திபர்வம் பகுதி – 92

Vamadeva and Vasumanas! | Shanti-Parva-Section-92 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 92)


பதிவின் சுருக்கம் : செங்கோலின் சிறப்பு மற்றும் கொடுங்கோலின் இழிவு ஆகியவை குறித்து வாமதேவர் வசுமனசுக்குச் சொன்னதை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "அறத்தின் பாதையைப் பின்பற்ற விரும்பும் ஒரு நீதிமிக்க மன்னன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? ஓ! மனிதர்களில் முதன்மையானவரே, ஓ! பாட்டா {பீஷ்மரே}, கேட்கும் எனக்குப் பதில் அளிப்பீராக" என்று கேட்டான்.(1)


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "இது தொடர்பாக, பெரும் நுண்ணறிவைக் கொடையாகக் கொண்டவரும், பழங்காலத்தில் பாடப்பட்ட அனைத்தின் உண்மையை அறிந்தவருமான வாமதேவர் என்ன சொன்னார் என்பது பழங்கதையில் குறிப்பிடப்படுகிறது.(2) ஒரு காலத்தில், அறிவு, மனோவுறுதி, தூய நடத்தை ஆகியவற்றைக் கொண்ட {கோசல நாட்டு} மன்னன் வாசுமனஸ், உயர்ந்த தவத்தகுதியை உடைய பெரும் முனிவர் வாமதேவரிடம்,(3) "ஓ! புனிதமானவரே, எந்த நடத்தையைப் பின்பற்றுவதால் நான் எனக்கு அளிக்கப்பட்ட கடமைகளில் இருந்து வீழாமல் இருப்பேன் என்பதை, முக்கியத்துவமும் அறமும் நிறைந்த வார்த்தைகளில் எனக்குக் கற்பிப்பீராக" என்று கேட்டான்.(4) தவசிகளில் முதன்மையானவரும், பெரும் சக்தி கொண்டவருமான வாமதேவர், நகுஷனின் மைந்தனான யயாதியைப் போலச் சுகமாக வீற்றிருந்த அந்தத் தங்க நிறத்தோனிடம் {வசுமனஸிடம்} பின்வருமாறு சொன்னார்.(5)

வாமதேவர் {வாசுமனஸ்}, "நீ நீதியுடன் நடந்து கொள்வாயாக. நீதிக்கும் {அறத்துக்கும்} மேன்மையானது ஏதும் இல்லை. அறம் நோற்கும் மன்னர்கள் மொத்த உலகையும் வெற்றி கொள்வதில் வெல்கிறார்கள்.(6) தன் நோக்கங்களைச் சாதிப்பதில் எதிர்பார்க்கும் விளைவைத் தரவல்ல வழிமுறைகளையே நீதியாகக் கருதி, நல்லோரின் ஆலோசனைகளின்படி செயல்படும் மன்னன், நீதியுடன் சுடர்விடுகிறான்.(7) அறத்தை அலட்சியம் செய்து, முரட்டு பலத்துடன் செயல்பட விரும்பும் மன்னன் விரைவில் அறத்திலிருந்து விழுந்து, அறம் மற்றும் பொருள் ஆகிய இரண்டையும் இழக்கிறான்.(8) குற்றமுள்ளவனும், பாவியுமான ஓர் அமைச்சனின் ஆலோசனைகளின்படி செயல்படும் மன்னன், அறத்தை அழிப்பவனாகி, தன் குடும்பம் அனைத்துடன் சேர்த்து, தன் குடிமக்களால் கொல்லப்படத் தகுந்தவனாகிறான். உண்மையில், அவன் மிக விரைவில் அழிவை அடைவான்.(9) அரசகலையின் கடமைகளை வெளிப்படுத்த இயலாதவனும், தன் செயல்பாடுகள் அனைத்திலும் உறுதியின்மையால் {சபலத்தால்} ஆளப்படுபவனும், தற்புகழ்ச்சியில் ஈடுபடுபவனுமான மன்னன் மொத்த பூமியின் ஆட்சியாளனாகவே இருந்தாலும், விரைவில் அழிவை அடைவான்.(10)

மறுபுறம், செழிப்பை விரும்புபவனும், வன்மமற்றவனும், புலன்களைக் கட்டுப்படுத்தியவனும், நுண்ணறிவைக் கொடையாகக் கொண்டவனுமான மன்னன், நூற்றுக்கணக்கான ஆறுகளால் நிரப்பப்பட்டுப் பெருகும் பெருங்கடலைப் போல வளமையில் தழைத்தோங்குவான்.(11) அவன் அறம், இன்பம், செல்வம், நுண்ணறிவு மற்றும் நண்பர்கள் ஆகியவற்றில் நிறைவு {போதுமான அளவுக்குக்} கொண்டவனாகத் தன்னை ஒருபோதும் கருதக்கூடாது[1].(12) உலகின் ஒழுக்கம் இவற்றைச் சார்ந்தே இருக்கிறது. இந்த ஆலோசனைகளைக் கேட்பதால் ஒரு மன்னன், புகழ், சாதனைகள், செழிப்பு மற்றும் குடிமக்களை அடைகிறான்.(13) அறத்திற்குத் தன்னை அற்பணித்துக் கொண்டு, இத்தகு வழிமுறைகளின் மூலம் அறம் மற்றும் செல்வத்தை அடைய முனைபவனும், தன் திட்டங்கள் அனைத்திலும் அவற்றின் நோக்கங்கள் குறித்துச் சிந்தித்தபிறகு தொடங்குபவனுமான மன்னன், பெருஞ்செழிப்பை அடைவதில் வெல்கிறான்.(14)

[1] கும்பகோணம் பதிப்பில், "பூபதியே, எப்பொழுதும், ‘தர்மத்தாலும், காமத்தாலும், பொருளாலும், புத்தியாலும், ஆலோசனையாலும் பூர்ணமாயிருக்கிறேன்’ என்றெண்ணக்கூடாது" என்றிருக்கிறது.

கஞ்சனும், பற்றில்லாதவனும், முறையற்ற தண்டனைகளால் தன் குடிமக்களைப் பீடிப்பவனும், தன் செயல்பாடுகளில் முரடனுமாம மன்னன் விரைவில் அழிவை அடைகிறான்.(15) நுண்ணறிவைக் கொடையாகக் கொள்ளாத மன்னன், தன் குற்றங்களைக் காணத் தவறுகிறான். அவன் இம்மையில் புகழ்க்கேட்டிலும், மறுமையில் நரகிலும் மூழ்குகிறான்.(16) மன்னன், கௌரவிக்கத் தகுந்தவர்களுக்கு அஃதை அளித்து, இனிமையான பேச்சின் மதிப்பை உணர்ந்து அனைத்து சந்தர்ப்பங்களிலும் அப்படியே பேசினால், அவனுக்கு ஏற்படும் பேரிடரைத் குடிமக்கள் தங்களுக்கே ஏற்பட்டதாகக் கருதி, அதிலிருந்து அவனை விடுவிப்பார்கள்.(17) அறவழிகள் போதிப்பவர் எவரும் இல்லாதவனும், பிறரின் ஆலோசனைகளை ஒருபோதும் கேளாதவனும், உறுதியற்ற வழிமுறைகளின் மூலம் செல்வத்தை அடைய முனைபவனுமான மன்னன், நீடித்த மகிழ்ச்சியை அனுபவிப்பதில் ஒருபோதும் வெல்வதில்லை.(18) மறுபுறம், அறம் தொடர்புடைய காரியங்களில் தன் ஆசானின் அறிவுரைகளைக் கேட்பவனும், தன் நாட்டில் நடக்கும் நிகழ்வுகளைத் தானே கண்காணிப்பவனும், அனைத்தையும் அடைவதில் அறக்கருத்துகளால் வழிநடத்தப்படுபவனுமான மன்னன், நீண்டகால மகிழ்ச்சியை அனுபவிப்பதில் வெல்கிறான்" என்றார் {வாமதேவர்}.

சாந்திபர்வம் பகுதி – 92ல் உள்ள சுலோகங்கள் : 19

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்