Sunday, April 22, 2018

பெண்புறா வழங்கிய ஆலோசனை! - சாந்திபர்வம் பகுதி – 145

The counsel of she-pigeon! | Shanti-Parva-Section-145 | Mahabharata In Tamil

(ஆபத்தர்மாநுசாஸன பர்வம் - 15)


பதிவின் சுருக்கம் : புலம்பிக் கொண்டிருந்த ஆண்புறாவைக் கண்ட பெண்புறா, சரணடைந்தவனைக் காப்பதே உயர்ந்த கடமை என்று அதற்குச் சொல்லி வேடனை விருந்தோம்பலுடன் உபசரிக்கும்படி அந்த ஆண்புறாவை அறிவுறுத்தியது...


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "{பரசுராமர் முசுகுந்தனிடம் தொடர்ந்தார்}, வேடனால் {வேடன் லூப்தகனால்} பிடிக்கப்பட்டிருந்த பெண்புறாவானது, மரத்திலுள்ள {ஆண்} புறாவின் பரிதாபகரமான புலம்பல்களைக்கேட்டு, தனக்குள்ளேயே பின்வருமாறு சொல்லத் தொடங்கியது[1].(1)


[1] பிபேக்திப்ராயின் பதிப்பில் இந்த இடத்தில் அந்த வேடனின் பெயர் லுப்தகன் என்றிருக்கிறது.

அந்தப் பெண்புறா, "எனக்குத் தகுதியேதும் இருக்கிறதோ, இல்லையோ, அன்புக்குரிய என் தலைவர் {கணவர்}, என்னைக் குறித்து இவ்வாறு பேசுகிறார் என்றால், என் நற்பேற்றுக்கு அளவே இல்லை என்பது உண்மையே.(2) எவளிடம் அவளது தலைவன் நிறைவடையவில்லையோ அவள் மனைவியே அல்ல. பெண்களின் வழக்கில், அவர்களது தலைவர்கள் அவர்களிடம் மனநிறைவுடன் இருந்தால், அவளிடம் தேவர்கள் அனைவரும் அவ்வாறே இருப்பார்கள்.(3) நெருப்பின் முன்னிலையில் திருமணச் சேர்க்கை நடைபெறுவதால், கணவனே, மனைவியின் உயர்ந்த தேவனாவான்.(4) எந்த மனைவியிடம் அவளது கணவன் நிறைவில்லாமல் இருக்கிறானோ, அவள் மலர்களுடன் பூத்துக் குலுங்கும் கொடியானது காட்டுத்தீயில் கருகுவதைப் போலச் சாம்பலாகவே ஆவாள்" {என்று நினைத்தது}.(5)

வேடனால் கூட்டுக்கள் அடைக்கப்பட்ட பெண்புறா, இவ்வாறு சிந்தித்து, துன்பத்தால் பீடிக்கப்பட்டு, துயரில் பீடிக்கப்பட்டிருக்கும் தன் தலைவனிடம்,(6) "உமக்கு நன்மையானதை இப்போது சொல்லப் போகிறேன். நான் சொல்வதைக் கேட்டு என் ஆலோசனையின்படி செயல்படுவீராக. ஓ! அன்புத் தலைவரே, சரணடைந்த ஒருவனைக் காப்பராவீராக.(7) இந்த வேடன், குளிராலும், பசியாலும் பீடிக்கப்பட்டு, இங்கே உமது வசிப்பிடத்தில் கிடக்கிறான். இவனுக்கு விருந்தோம்பல் கடமைகளைச் செய்வீராக.(8) (உதவி நாடி) சரணடைந்தவனை அழிய விடும் ஒருவன், ஒரு பிராமணனைக் கொன்ற பாவத்துக்கோ, உலகின் தாயான பசுவைக் கொன்ற பாவத்துக்கோ இணையான பாவத்தை இழைக்கிறான்.(9) நீர் தன்னறிவு கொண்டவராவீர். எனவே, பிறப்பின் வகையில் புறாக்களான நமக்கு விதிக்கப்பட்டிருக்கும் நடைமுறையைப் பின்பற்றுவதே உம்மைப் போன்ற ஒருவருக்குத் தகும்[2].(10)

[2] "நமது பலம் குறைவானதாகவே இருப்பினும், நம் வழியில் நமக்கான விருந்தோம்பல் கடமைகளைச் செய்வதே நமக்குத் தகும் என்பது பொருளாக இருக்க வேண்டும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "ஜாதியின் தர்மப்படி புறாக்களுக்குள்ள பிழைப்பு நமக்கு விதிக்கப்பட்டிருக்கிறது. உன்னைப் போன்ற புத்தியுள்ளவன் எப்பொழுதும் அஃதை அனுஸரிக்க வேண்டியது நியாயமாகும்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "பல்வேறு இனங்களின் தர்மத்தைப் பின்பற்றி, புறாக்களான நமக்கு விதிக்கப்பட்டிருக்கும் தர்மத்தைப் பின்பற்றுவோமாக" என்றிருக்கிறது.

எந்த இல்லறத்தான், தன்னால் இயன்ற அளவுக்கு அறம் பயில்கிறானோ, அவன் மறுமையில் வற்றாத அருள் உலகங்களை வெல்வான் என்று நாம் கேள்விப்படுகிறோம்.(11) உமக்கு மகன்கள் இருக்கிறார்கள். உமக்குப் பரம்பரையும் இருக்கிறது. எனவே, ஓ! பறவையானவரே, அறம் மற்றும் பொருள் ஈட்டுவதற்காக உமது உடலுக்கான விருப்பங்கள் அனைத்தையும் கைவிட்டு, இந்த வேடனின் இதயம் நிறைவுறுமாறு இவனை வழிபடுவீராக.(12) ஓ! பறவையானவரே, என்னைக் குறித்து வருந்தாதீர். (நான் முக்கியமில்லாதவள் என்பதைக் காண்பீராக), வேறு மனைவியரை ஏற்று நீர் தொடர்ந்து வாழ வேண்டும்"[3] {என்றது அந்தப் பெண்புறா}.(13)

[3] கும்பகோணம் பதிப்பில், "ஓ பக்ஷியே, நீ சரீரத்துக்கு வேண்டி (என் விஷயமாகத்) தாபத்தை அடையாதே. சரீரம் நடைபெறத்தக்க ஜீவனத்திற்கு வேண்டி வேறு தாரங்களை அடைவாய்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "அறம் மற்றும் பொருளைப் பின்பற்றி, உமது உடலுக்கான விருப்பம் அனைத்தையும் கைவிடுவீராக. இவனது மனம் உற்சாகமடையும் வகையில் இவனைக் கௌரவிப்பீராக" என்றிருக்கிறது.

அந்த இனிய பெண்புறா, தான் அடைபட்டிருந்த வேடனின் கூட்டிலிருந்து தன் தலைவனின் மீது  கண்களைச் செலுத்தி, கவலையால் உந்தப்பட்டு, அதனிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னது" {என்றார் பரசுராமர்}.(14)

சாந்திபர்வம் பகுதி – 145ல் உள்ள சுலோகங்கள் : 14

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்