Sunday, April 22, 2018

நெருப்பில் விழுந்த ஆண் புறா! - சாந்திபர்வம் பகுதி – 146

The pigeon entered fire! | Shanti-Parva-Section-146 | Mahabharata In Tamil

(ஆபத்தர்மாநுசாஸன பர்வம் - 16)


பதிவின் சுருக்கம் : தன் மனைவியின் அறிவுரைப்படி விருந்தோம்பலில் ஈடுபட்ட ஆண்புறா, வேடன் குளிர்காய நெருப்பை மூட்டிக் கொடுத்தது; உணவு கேட்ட வேடனுக்கு ஒன்றும் கொடுக்க முடியாததால் தானே நெருப்புக்குள் புகுந்தது...


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "{பரசுராமர் முசுகுந்தனிடம் தொடர்ந்தார்}, தன் மனைவி பேசியவையும், நெறிகளும், அறிவும் நிறைந்தவையுமான இந்த வார்த்தைகளைக் கேட்டுப் பெரும் மகிழ்ச்சியடைந்த அந்தப் புறாவின் {ஆண்புறாவின்} கண்கள் கண்ணீரால் குளித்தன.(1) பறவைகளைக் கொல்வதையே தொழிலாகக் கொண்ட வேடனைக் கண்ட அந்தப் புறா, விதிப்படியான சடங்குகளின் அடிப்படையில் தயக்கமில்லாமல் அவனைக் கௌரவித்தது.(2)

அவனிடம் பேசிய அஃது {அந்த ஆண்புறா}, "உனக்கு நல்வரவு. நான் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை எனக்குச் சொல்வாயாக. நீ மனநிறைவற்றவனாக இருக்கக்கூடாது. இஃது உன் இல்லமாகும்.[1](3) நான் என்ன செய்ய வேண்டும்? உன் விருப்பம் யாது என்பதை விரைவாகச் சொல்வாயாக. எங்கள் கரங்களில் புகலிடத்தை நீ வேண்டியதால் கொண்ட அன்பின் காரணமாகவே நான் உன்னைக் கேட்கிறேன்.(4) ஒருவனுடைய வீட்டுக்கு அவனுடையே எதிரியே வந்தாலும், அவன் விருந்தோம்பலுடன் வரவேற்கப்பட வேண்டும். இந்த மரம், இதை வெட்டுபவன் மேல் விழும் தன் நிழலை விலக்கிக் கொள்வதில்லை.(5) உறைவிடத்திற்காக ஏங்குபவனுக்கு, ஒருவன் விருந்தோம்பலின் கடமைகளைத் தவறில்லாமல் கவனத்தோடு செய்ய வேண்டும். உண்மையில், ஐந்து வேள்விகளைக்[2] கொண்ட இல்லற {கிருஹஸ்த} வாழ்வை நோற்கும் ஒருவன் இவ்வாறே செயல்பட வேண்டும்.(6) இல்லற வாழ்வை நோற்றும் விவேகமில்லாமல் சாத்திரங்களின்படியான ஐந்து வேள்விகளைச் செய்யாதிருந்தால், இம்மை மற்றும் மறுமை ஆகிய இரண்டையும் அவன் இழப்பான்.(7) உன் விருப்பங்கள் என்ன என்று நம்பிக்கைநிறைந்த, புத்தியுடனும் கூடிய வார்த்தைகளால் சொல்வாயாக. உன் இதயத்தைத் துயரில் நிலைநிறுத்தாதே" என்றது {ஆண்புறா}.(8)

[1] "உண்மையில், நீ உன் வீட்டிலிருப்பதைப் போல நினைத்துக் கொள்வாயாக. இந்த இடத்தில் உன் வீட்டில் இருப்பதைப் போலவே வசதியுடன் இன்புற்றிருப்பாயாக. நான் உனக்கு எந்தத் தொந்தரவையும் செய்ய மாட்டேன் என்பது பொருள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[2] பிபேக்திப்ராயின் பதிப்பில், "தேவர்களுக்கான வேள்வி, மூதாதையருக்கான வேள்வி, விருந்தினர்களுக்கான வேள்வி, சார்ந்தவர்களுக்கான வேள்வி, தனக்கான {சுயத்துக்கான} வேள்வி ஆகியவையே இந்த ஐந்து வேள்விகள்" என்ற அடிக்குறிப்பிருக்கிறது.

அந்தப் பறவையின் வார்த்தைகளைக் கேட்ட அந்த வேடன், அதனிடம், "நான் குளிரால் விறைத்துப் போயிருக்கிறேன். நான் குளிர்காய்வதற்கு வெப்பம் வேண்டும்" என்றான்.(9)

இவ்வாறு சொல்லப்பட்ட அந்தப் பறவை தரையில் இருந்து எண்ணற்ற காய்ந்த இலைகளைத் திரட்டி, நெருப்பைக் கொண்டு வர ஒரேயோர் இலையை மட்டும் தன் அலகில் எடுத்துச் சென்றது.(10) நெருப்பு இருக்கும் இடத்திற்குச் சென்ற அது,[3] சிறிது நெருப்பை எடுத்துக் கொண்டு திரும்பி வந்தது. பிறகு அந்தக் காய்ந்த இலைகளைக் கொண்டு நெருப்பை மூட்டியது,(11) அது பெரும் நெருப்பாகச் சுடர்விட்டெரிந்த போது, தன் விருந்தாளியிடம் அது, "நம்பிக்கையுடனும், அச்சமில்லாமலும் உன் அங்கங்களுக்கு வெப்பமூட்டுவாயாக {குளிர்காய்வாயாக}" என்றது.(12)

[3] கும்பகோணம் பதிப்பில், "அது கம்மாளன் வீட்டினருகிற் சென்று தீயை எடுத்துக் கொண்டு உடனே வந்தது" என்றிருக்கிறது.

இவ்வாறு சொல்லப்பட்ட அந்த வேடன், "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி விறைத்துப் போன தன் அங்கங்களுக்கு வெப்பமூட்டினான். (ஏற்கனவே இருந்ததுபோல்) தன் உயிர் மூச்சை மீண்டும் அடைந்த அந்த வேடன், தனக்கு விருந்துபசரிப்பதும், இறகு படைத்ததுமான அதனிடம் {அந்தப் பறவையிடம்},(13) "பசி என்னை வாட்டுகிறது. நீ எனக்கு உணவு ஏதாவது கொடுக்க வேண்டுமென விரும்புகிறேன்" என்றான்.

அவனது வார்த்தைகளைக் கேட்ட அந்தப் பறவை,(14) "உன் பசியைப் போக்குவதற்குரிய கிடங்குகள் ஏதும் என்னிடம் இல்லை. காட்டுவாசிகளாகிய நாங்கள், எப்போதும் தினமும் கிடைப்பதைக் கொண்டே வாழ்கிறோம்.(15) காட்டின் தவசிகளைப் போலவே நாங்களும் நாளைக்கென ஒருபோதும் சேகரித்து வைப்பதில்லை" என்றது. இந்த வார்த்தைகளைச் சொன்ன அந்தப் பறவைக்கு (வெட்கத்தால்) முகம் வெளிறிப்போனது. பிறகு தான் என்ன செய்ய வேண்டும் என்று அமைதியாக ஆலோசித்த அது, விருப்பத்திற்குரியதாக இல்லாத தன் வாழ்வு முறையை மனத்தில் நினைத்துப் பார்க்கத் தொடங்கியது.(17) எனினும் விரைவில் அதன் மனம் தெளிவடைந்தது. பிறகு அந்தப் பறவை, தன் இனத்தைக் கொல்பவனான அவனிடம் {வேடனிடம்}, "நான் உன்னை நிறைவு செய்கிறேன். ஒரு கணம் பொறுப்பாயாக" என்றது.(18)

இதைச் சொன்ன அது, சில காய்ந்த இலைகளைக் கொண்டு நெருப்பை மூட்டி, மகிழ்ச்சியால் நிறைந்து,(19) "பழங்காலத்தின் உயர் ஆன்ம முனிவர்கள், தேவர்கள் மற்றும் பித்ருக்களிடம் இருந்து ஒரு விருந்தினரை உபசரிப்பதில் பெரும் தகுதி {புண்ணியம்} உண்டு என்பதை அறிந்து கொண்டேன்.(20) ஓ! இனியவனே, என்னிடம் கருணை கொள்வாயாக. என் விருந்தினராக இருக்கும் உன்னை உபசரிப்பதிலேயே என் இதயம் நிலைத்திருக்கிறது என்ற உண்மையை உனக்குச் சொல்கிறேன்" என்றது.(21) இந்தத் தீர்மானத்தை அடைந்த அந்த உயர் ஆன்மப் பறவை, சிரித்த முகத்துடன் அந்நெருப்பை மூன்று முறை வலம் வந்து, அதன் தழல்களுக்குள் நுழைந்தது.(22)

அந்தப் பறவை நெருப்புக்குள் நுழைவதைக் கண்ட அந்த வேடன் தனக்குள்ளேயே, "நான் என்ன செய்துவிட்டேன்.(23) ஐயோ, என் செயல்களின் விளைவால் வந்த இந்தப் பாவம் இருள் நிறைந்ததும், பயங்கரமானதுமாகும் என்பதில் ஐயமில்லை. நான் மிகக் கொடூரனும், புறக்கணிக்கப்படத் தகுந்தவனுமாவேன்" என்று நினைக்கத் தொடங்கினான்.(24) உண்மையில், அந்தப் பறவை தன் உயிரையே விட்டதைக் கண்ட அந்த வேடன், தன் செயல்களில் விருப்பமில்லாதவனாக இது போல {பின்வருமாறு} பெரும் புலம்பலில் ஈடுபடத் தொடங்கினான்" {என்றார் பரசுராமர்}.(25)

சாந்திபர்வம் பகுதி – 146ல் உள்ள சுலோகங்கள் : 25

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்