Showing posts with label துவாபரன். Show all posts
Showing posts with label துவாபரன். Show all posts

Friday, January 03, 2014

சூதாடிய நளனும் புஷ்கரனும் - வனபர்வம் பகுதி 59

Nala and Pushkara gambled | Vana Parva - Section 59 | Mahabharata In Tamil

(நளோபாக்யான பர்வத் தொடர்ச்சி)

கலியால் உபதேசிக்கப்பட்ட புஷ்கரன், தமயந்தியின் முன்னிலையில் நளனைச் சூதாட அழைத்தல்; நளனும் புஷ்கரனும் பல மாதங்களுக்குச் சூதாடியது...

பிருகதஸ்வர் சொன்னார், "இப்படி துவாபரனுடன் {துவாபர யுகத்துடன்} உடன்பாடு செய்து கொண்ட கலி {கலியுகம்} நிஷாத மன்னன் {நளன்} இருந்த அரண்மனைக்கு வந்தான். அவனிடம் ஏதாவது ஓட்டையைக் {குறையைக்} கண்டுபிடிப்பதற்காக, அந்த நிஷாதர்களின் நாட்டில் பல காலம் தொடர்ந்து வசித்தான். இப்படி காத்திருந்த கலி, பனிரெண்டாவது {12} வருடத்தில்தான் ஒரு ஓட்டையைக் கண்டுபிடித்தான். ஒருநாள், இயற்கையின் அழைப்புக்கு பதில் சொல்லிவிட்டு {ஜலமோஜனம் = சிறுநீர் கழித்துவிட்டு}, காலைக்கழுவாமல், நீரை மட்டும் தொட்டுவிட்டு, தனது சந்தி கால வழிபாட்டைச் செய்தான்.


இதனால் {இந்தப் புறக்கணிப்பால்}, கலி அவனது உடலுக்குள் புகுந்தான். நளனைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பிறகு, புஷ்கரன் முன்பு தோன்றி, அவனிடம், "வா வந்து நளனுடன் பகடை விளையாடு. எனது உதவியின் பேரில் நீ நிச்சயம் வெல்வாய். மன்னன் நளனை வீழ்த்தி, அவனது நாட்டை அடைந்து, நிஷாதர்களை நீ ஆட்சி செய்வாய்" என்றான் {கலி}.

கலியால் இப்படி உபதேசிக்கப்பட்ட புஷ்கரன் நளனிடம் சென்றான். முக்கியமான பகடைக்காயாகி, விருஷன் {காளை} என்ற பெயரோடு புஷ்கரனை அணுகினான் துவாபரன். எதிரிவீரர்களைக் கொல்லும் போர்க்குணமுள்ள நளன் முன்பாக புஷ்கரன் தோன்றி, திரும்பத் திரும்ப அவனிடம் {நளனிடம்}, "நாம் இருவரும் சேர்ந்து பகடை விளையாடுவோம்" என்று கேட்டான். தமயந்தியின் முன்னால் இப்படி சவால்விடப்பட்ட அந்த உயர்ந்த எண்ணம் கொண்ட மன்னனால் {நளனால்} அதை நிராகரிக்க முடியவில்லை. அதன் தொடர்ச்சியாக அவன் ஆட்டத்துக்கான நேரத்தைக் குறித்தான்.

தனது பந்தயப் பொருட்களான தங்கம், வெள்ளி, தேர்கள், ஆடைகள் ஆகிவற்றை கலியினால் பீடிக்கப்பட்ட நளன் இழக்க ஆரம்பித்தான். பகடையில் வெறிபிடித்த அந்த எதிரிகளை ஒடுக்குபவனை {நளனை}, அவனது நண்பர்களால் கூட அந்த விளையாட்டில் இருந்து விலக்க முடியவில்லை. ஓ பாரதா {யுதிஷ்டிரா}, துயரத்தில் இருந்த அந்த ஏகாதிபதியைப் {நளனைப்} பார்ப்பதற்கும், அவனை விளையாட்டில் இருந்து தடுப்பதற்காகவும், குடிமக்கள் அனைவரும் முதலமைச்சர்களுடன் சேர்ந்து அங்கே வந்தனர். ஒரு தேரோட்டி தமயந்தியிடம், "ஓ மங்கையே, குடிமக்களும், நாட்டின் அதிகாரிகளும் வாயிலில் காத்திருக்கின்றனர். அறத்தையும் செல்வத்தையும் கொண்ட தங்கள் மன்னன் பேரிடரில் வீழ்ந்ததைத் தாங்கிக் கொள்ள இயலாத குடிமக்கள் இங்கே வந்திருக்கின்றனர் என்று நிஷாதர்களின் மன்னனிடம் {நளனிடம்} தெரிவிப்பாயாக" என்றான் {தேரோட்டி}.

அதனால் பீமனின் மகள் {தமயந்தி}, துயரத்தில் மூழ்கி, கிட்டத்தட்ட தனது நினைவை இழக்கும் நிலையில், தடைபட்ட சொற்களுடன் நளனிடம், "ஓ மன்னா, குடிமக்களும் நாட்டின் முதலமைச்சர்களும் உம்மீது கொண்ட விசுவாசத்தால், உம்மைக் காணவிரும்பி வாயிலில் நிற்கின்றனர். அவர்களுக்கு உம்மைக் காணும் வாய்ப்பை அருளும்" என்றாள். ஆனால் கலியால் பீடிக்கப்பட்ட மன்னன் {நளன்}, இப்படிப் புலம்பிக் கொண்டிருந்த அருள்நிறைந்த பார்வை கொண்ட தனது ராணிக்கு {தமயந்திக்கு} ஒரு வார்த்தையும் மறுமொழி கூறாதிருந்தான். இதனால், நாட்டின் அமைச்சர்களும், குடிமக்களும் துயரமும் அவமானமும் அடைந்து "இவன் வாழ மாட்டான்" என்று சொல்லி தங்கள் இல்லங்களுக்குத் திரும்பினர்.யுதிஷ்டிரா, இப்படியே அறம்சார்ந்தவனான நளன் முழுவதும் மோசம்போகும்வரை அவனும் {நளனும்} புஷ்கரனும் பல மாதங்களுக்கு ஒன்றாகச் சூதாடினர்.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


பகடைக்குள் நுழைந்த துவாபரன் - வனபர்வம் பகுதி 58

Entrance of Dwapara into dice | Vana Parva - Section 58 | Mahabharata In Tamil

(நளோபாக்யான பர்வத் தொடர்ச்சி)

லோகபாலர்கள் கலியையும் துவாபரனையும் செல்லும் வழியில் கண்டது; தமயந்தி நளனைத் தேர்ந்தெடுத்ததை அறிந்த கலி துவாபரனின் துணையுடன் நளனை அவமதிப்பதாக உறுதி கூறுவது...

பிருகதஸ்வர் சொன்னார், "பீமன் மகள் {தமயந்தியின்} அந்த நிஷாதனை {நளனை}த் தேர்ந்தெடுத்தபிறகு, உலகங்களின் அந்தப் பிரகாசமிக்க பாதுகாவலர்கள் {லோகபாலர்கள்} திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது, அவர்களின் {தேவர்களின்} வழியில் தங்களை நோக்கி வந்த துவாபரனையும் {துவாபர யுகம்}, கலியையும் {கலியுகம்} சந்தித்தனர்.

அதன்பிறகு கலி சக்ரனிடம் {இந்திரனிடம்}, "தமயந்தியின் சுயம்வரத்திற்கு சென்று, அந்த மங்கையை {மனைவியாக} அடையப்போகிறேன். எனது இதயம் அந்த மங்கை மீதே நிலைத்திருக்கிறது" என்றான். இதைக் கேட்ட இந்திரன் புன்னகையுடன், "சுயம்வரம் முடிந்துவிட்டது. எங்கள் கண் முன்பாகவே அவள் {தமயந்தி} நளனைக் கணவனாக வரித்தாள்" என்றான் {இந்திரன்}.

சக்ரனால் {இந்திரனால்} இப்படிச் சொல்லப்பட்ட தேவர்களில் தீயவனான கலி, கோபத்தால் நிறைந்து, அந்த தேவர்களிடம், "தேவர்களின் முன்னிலையில் ஒரு மனிதனை {இறந்து போகும் உயிரை - Mortal-ஐ} அவள் தனது தலைவனாகத் தேர்ந்தெடுத்ததால், அவள் கடும் வேதனையைச் சந்திப்பது உறுதி" என்றான். கலியின் இந்த வார்த்தைகளைக் கேட்ட தேவர்கள், "எங்களுடைய அனுமதியின் பேரிலேயே தமயந்தி நளனை வரித்தாள். அனைத்து அறங்களும் கொண்ட மன்னன் நளனை எந்த மங்கைதான் தேர்ந்தெடுக்கமாட்டாள்? கடமைகள் அனைத்தையும் அறிந்து, நேர்மையுடன் இருக்கும் நளன், அவன் புராணங்களை ஐந்தாவது வேதமாகக் கருதி நான்கு வேதங்களையும் படித்திருக்கிறான்.

அனைத்து உயிரினங்களுக்கும் தீங்கற்றவனாகவும், உறுதியான நோன்புகளுடன் உண்மை பேசுபவனாகவும், தனது வீட்டில் விதிப்படி செய்ய வேண்டிய வேள்விகளைச் செய்து எப்போதும் தேவர்களைக் கொண்டாடுபவனாகவும் வாழ்கிறான் {நளன்}. லோகபாலர்களைப் பிரதிபலிக்கும் அந்த மனிதர்களில் புலி, உண்மை, பொறுமை, அறிவு, சுத்தம், சுயக்கட்டுப்பாடு ஆகியவற்றைக் கொண்டு முழுமையான அமைதியடைந்த ஆன்மாவைக் கொண்டவனாக இருக்கிறான். ஓ கலியே, இத்தகு குணங்களைக் கொண்ட நளனைச் சபிக்க நினைக்கும் முட்டாள், தனது அச்செயலால் தன்னையே சபித்துக் கொண்டு அழித்துக் கொள்கிறான். மேலும், ஓ கலியே, இத்தகு அறங்களை முடிசூடிக்கொண்டிருக்கும் நளனைச் சபிக்க முயல்பவன், வேதனைகள் நிறைந்த அடியற்ற பரந்த நரகக்குழியில் மூழ்குவான்" என்றனர். இப்படி கலியிடமும் துவாபரனிடமும் சொல்லிவிட்டு, தேவர்கள் சொர்க்கத்திற்குச் சென்றனர்.

தேவர்கள் சென்றவுடன், கலி துவாபரனிடம், "ஓ துவாபரா, நான் எனது கோபத்தை அடக்க முடியாதவனாக இருக்கிறேன். நான் நளனைப் பீடித்து, அவனது நாட்டைப் பிடுங்கப் போகிறேன். அவன் இனிமேலும் பீமனின் மகளுடன் {தமயந்தியுடன்} விளையாட முடியாது. பகடைக்குள் நுழைந்து, நீ எனக்கு உதவுவாயாக" என்றான் {கலி-கலி யுகன்}.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்