Wednesday, January 01, 2014

நளனைத் தேர்ந்தெடுத்த தமயந்தி! - வனபர்வம் பகுதி 57

Damayanti chose Nala! | Vana Parva - Section 57 | Mahabharata In Tamil

(நளோபாக்யான பர்வத் தொடர்ச்சி)

தமயந்தியின் சுயம்வரம் நடப்பது; நளனைப் போன்ற உருவத்துடன் லோகபாலர்கள் நால்வரும் நளனுடன் சேர்ந்து நிற்பது; யார் நளன் என்று தமயந்தி குழம்புவது; நளனை வெளிக்காட்டும்படி தேவர்களிடம் தமயந்தி மானசீகமாக வேண்டுவது; சில குறிப்புகளைக் கொண்டு உண்மையான நளனை தமயந்தி தேர்ந்தெடுப்பது...

பிருகதஸ்வர் தொடர்ந்தார், "புனிதமான சந்திர நாளில், புண்ணியமான காலத்தில், நன்மை தரும் நேரம் வந்த போது, மன்னன் பீமன், மன்னர்களை சுயம்வரத்திற்கு அழைத்தான். இதைக் கேள்விப்பட்ட அனைத்து பூமியின் தலைவர்களும் காதலால் தாக்குண்டு, தமயந்தியை (அடைய) விரும்பி அங்கே விரைவாக வந்தனர். அந்த ஏகாதிபதிகள் அனைவரும், தங்கத் தூண்களாலும், உயர்ந்த நுழைவு வாயில் கொண்ட அந்த அரைவட்டமான சபைக்குள் கடும் மலைகளில் நுழையும் பெரும் பலம் வாய்ந்த சிங்கங்கள் போல நுழைந்தார்கள். வாசனையான மாலைகளாலும், பளபளப்பாக்கப்பட்ட காது வளையங்களாலும், நகைகளாலும் நன்கு தங்களை அலங்கரித்துக் கொண்ட அந்த பூமியின் தலைவர்கள் அங்கிருந்த பல இருக்கைகளில் தங்கள்  தங்களுக்குரிய இருக்கையில் அமர்ந்து கொண்டார்கள்.


புனிதமான அந்த மன்னர்களின் சபை, மனிதர்களில் புலிகளால் நிரம்பி, நாகர்களால் மொய்க்கப்பட்ட போகவதி {நகரத்தைப்} போல அல்லது புலிகளால் நிரம்பிய பெரும் மலைக்குகை போல இருந்தது. அவர்களது கரங்கள் பலமானவையாக இரும்பு கதாயுதம் போல நல்ல உருவத்தில், அருளுடன் ஐந்து தலை நாகங்களைப் போல காட்சி அளித்தது. அழகான கேசம், அழகான நாசி, விழி, புருவம் ஆகிய அருளுடன் இருந்த அந்த மன்னர்கள் வானத்தில் இருக்கும் நட்சத்திரங்களைப் போல மின்னினர்.

பிறகு, (நேரம் வந்ததும்), அழகான முகத்தைக் கொண்ட தமயந்தி, தனது பிரகாசத்தால் அங்கிருந்த இளவரசர்களின் இதயங்களையும் கண்களையும் கொள்ளை கொண்டு சபைக்குள் நுழைந்தாள். அவளைப் பார்த்த அந்த சிறப்புவாய்ந்த ஏகாதிபதிகளின் பார்வை, அவளது எந்த அங்கத்தில் முதலில் விழுந்ததோ, அந்த அங்கத்திலேயே {பார்வை} நிலைத்து, சற்றும் அசையாமல் இருந்தனர். ஓ பாரதா {யுதிஷ்டிரா}, அந்த ஏகாதிபதிகளின் பெயர்கள் சொல்லப்பட்டபோது, பீமனின் மகள் {தமயந்தி} ஒரே தோற்றம் கொண்ட ஐந்து பேரைக் கண்டாள். உருவத்தில் எந்த வித்தியாசமும் இன்றி அங்கு அமர்ந்திருந்த அவர்களைக் கண்டு, மனதில் சந்தேகம் கொண்டாள். அவளால் {தமயந்தியால்} அவர்களில் யார் மன்னன் நளன் என்பதை உறுதி செய்ய முடியவில்லை. (அவர்களில்) அவள் யாரைக் கண்டாலும், அவனை நிஷாத மன்னன் {நளன்} என்றே கருதினாள். இதனால் துயரம் கொண்ட அந்த அழகானவள் தனக்குள், "ஓ, எப்படி நான் தேவர்களை வேறுபடுத்திப் பார்ப்பேன்? எப்படி அரசன் நளனைக் கண்டுகொள்வேன்?" என்று நினைத்தாள்.

இப்படிச் சிந்தித்த விதரப்பனின் {மன்னன் பீமனின்} மகள் {தமயந்தி}, துயரத்தால் நிறைந்தாள். ஓ பாரதா {யுதிஷ்டிரா}, தேவர்களின் அடையாளங்களைத் தான் கேள்விப்பட்டவாறு நினைத்துப் பார்த்து, தனக்குள், "முதியவர்களிடம் இருந்து நாம் கேள்விப்பட்ட தேவர்களின் குணங்கள் இப்போது இந்தப் பூமியில் இங்கே இருக்கும் எந்த தெய்வத்துக்கும் பொருந்தவில்லையே" என்று நினைத்தாள். இந்தக் காரியத்தைக் குறித்து தனது மனதில் குழப்பிக் கொண்டு, திரும்பத் திரும்ப நினைத்துப் பார்த்து, அந்தத் தேவர்களின் பாதுகாப்பையே நாடுவது என்று தீர்மானித்தாள். மனதாலும் சொல்லாலும் அவர்களை வணங்கி, கரங்கள் கூப்பி, நடுக்கத்துடன் அவர்களிடம், "அன்னங்களின் பேச்சைக் கேட்டதில் இருந்து, நான் நிஷாதர்களின் மன்னனை {நளனை} எனது தலைவனாகத் தேர்ந்தெடுத்தேன். ஓ, உண்மையின் பொருட்டு, தேவர்கள் அவரை {நளரை} எனக்கு வெளிப்படுத்தட்டும். மனதாலோ சொல்லாலோ நான் அவரை விட்டு நான் வழி தவறியதில்லை. ஓ, உண்மையின் பொருட்டு, தேவர்கள் அவரை {நளரை} எனக்கு வெளிப்படுத்தட்டும். தேவர்களே நிஷாதர்களின் ஆட்சியாளரை {நளரை} எனக்கு தலைவராக விதித்திருப்பதால், ஓ, உண்மையின் பொருட்டு, அவர்கள் {தேவர்கள்{ அவரை {நளரை} எனக்கு வெளிப்படுத்தட்டும். நளருக்கு மரியாதை செலுத்தும் பொருட்டும்,  உண்மையின் பொருட்டும், நான் இந்த நோன்பை மேற்கொள்வதால், ஓ, தேவர்கள் அவரை {நளரை} எனக்கு வெளிப்படுத்தட்டும். ஓ, உலகங்களின் அந்த மேன்மையான பாதுகாவலர்கள், அந்த நீதிமானான மன்னனை நான் அறிந்து கொள்ளும் பொருட்டு, தங்கள் உண்மை உருவை அடையட்டும்" என்றாள் {தமயந்தி}.

தமயந்தியின் பரிதாபகரமான வார்த்தைகளைக் கேட்டும், நிஷாதர்களின் மன்னன் {நளனின்} மேல் தீவிர காதல் கொண்ட அவளது நிலைத்த தீர்மானத்தை உறுதி செய்து கொண்டும்,  அவளது இதயசுத்தத்தையும், நளன் மீது கொண்ட பாசத்தையும் கருதிப் பார்த்து, தங்கள் தங்கள் பண்புகளைத் தங்களால் இயன்ற வரை ஏற்ற அந்த தேவர்கள் தாங்கள் நினைத்ததைச் செய்தனர். அதன் பிறகு, அவள் {தமயந்தி}, தேவர்கள் வியர்வையற்றவர்களாக, கண் சிமிட்டாதவர்களாக, வாடா மாலைகள் தரித்தவர்களாக, தூசு கறை படியாதவர்களாக, தரையைத் தொடாமல் நிற்பதைக் கண்டாள். நிஷாதன் {நளன்}, தனது நிழல் தெரியும்படி, வாடிய மாலையுடன், தூசால் கறைபட்டு, வேர்வையுடன், பூமியில் கால் பதித்து, கண்களைச் சிமிட்டிக் கொண்டு நின்றான்.

ஓ பாரதா {யுதிஷ்டிரா}, தேவர்களையும், அறம் சார்ந்த நளனையும் கடந்து வந்த பீமனின் மகள் {தமயந்தி}, தனக்கு உண்மையான நிஷாதனைத் {நளனைத்} தேர்ந்தெடுத்தாள். அந்த அகன்ற விழி கொண்டக் காரிகை. நாணத்துடன், அவனது ஆடையின் நுனியைப் பற்றி, மிதமிஞ்சிய அருள் கொண்ட அந்த மலர் மாலையை அவனது {நளனின்} கழுத்தில் அணிவித்தாள். அந்த அழகன நிறம் கொண்ட மங்கை {தமயந்தி} நளனைத் தனது கணவனாகத் தேர்ந்தெடுத்தபோது, தீடீரென வியப்புடன், "ஓ" என்றும் "ஐயோ!" என்றும் மன்னர்கள் வெடித்தனர். ஓ பாரதா {யுதிஷ்டிரா}, தேவர்களும் பெரும் முனிவர்களும் வியப்படைந்து, "அற்புதம்! அற்புதம்!" என்று மன்னனைப் {நளனைப்} பாராட்டினர்.

ஓ கௌரவனே {யுதிஷ்டிரா}, வீரசேனின் அரசமகன், மகிழ்ச்சியால் இதயம் நிறைந்து,  அழகான தமயந்தியிடம், "ஓ அருளப்பட்டவளே, தேவர்களின் முன்னிலையில் மனிதனான {இறந்து போகக்கூடிய mortal} என்னைத் தேர்ந்தெடுத்ததால், நான் உனது உத்தரவுக்குக் கீழ்ப்படியும் கணவனாக இருப்பேன் என்பதை அறிந்து கொள். ஓ இனிய புன்னகை கொண்டவளே, என்னுடலில் எனது உயிர் உள்ள வரை, நான் உனதாகவே, உனக்கு மட்டுமே ஆனவனாக இருப்பேன் என்று உண்மையாகச் சொல்கிறேன்." என்று சொல்லி ஆறுதலளித்தான். தமயந்தியும், குவிந்த கரங்களுடன், அதே போன்ற வார்த்தைகளில் மரியாதை செலுத்தினாள்.

அக்னியையும், மற்ற தேவர்களையும் கண்ட அந்த மகிழ்ச்சி நிறைந்த ஜோடி, மானசீகமாக அவர்களின் பாதுகாப்பை வேண்டினர். பீமனின் மகள் {தமயந்தி}, நிஷாதனைத் {நளனைத்} தனது கணவனாகத் தேர்ந்தெடுத்த பின்னர், பெரும் பிரகாசம் கொண்ட லோகபாலர்கள் திருப்தியான இதயத்துடன், நளனுக்கு எட்டு {8} வரங்களை அளித்தனர். சச்சியின் தலைவனான சக்ரன் {இந்திரன்}, நளனுக்கு வேள்விகளில் தனது {இந்திரனின்} தேவ தன்மையைக் காணவும், அருள் உலகங்களை அடையவும் வரங்களைக் கொடுத்தான். ஹுதாசனன் {அக்னி}, அந்த நிஷாதன் {நளன்} விரும்பியபோதெல்லாம் தான் {அக்னி} அவனுக்குக் காட்சியளிக்கவும், தன்னைப் போன்ற பிரகாசத்தை உடைய உலகங்களை அடையவும் வரங்களைக் கொடுத்தான். யமன், அவனுக்கு உணவில் நுட்பமான சுவையையும் {நளன் நல்ல சமையற்கலைஞன்}, மேலான அறநிலையையும் வரங்களாக அளித்தான். நீர்த்தலைவன் {வருணன்}, நளனுக்கு, விரும்பிய போது தன்னைக் காணவும், தெய்வீக நறுமணம் கொண்ட மலர்மாலைகளையும் வரங்களாகக் கொடுத்தான். இப்படியே அவர்களில் {லோகபாலர்களில்} ஒவ்வொருவரும் இரு வரங்களை அளித்தனர். இந்த வரங்களை அளித்த தேவர்கள் சொர்க்கத்திற்குத் திரும்பினர். தமயந்தி நளனைத் தேர்ந்தெடுப்பதைச் சாட்சியாகக் கண்ட மன்னர்களும், மகிழ்ச்சியுடன் தாங்கள் எங்கிருந்து வந்தனரோ அங்கேயே திரும்பிச் சென்றனர்.

அந்தப் பலம் வாய்ந்த ஏகாதிபதிகள் சென்றதும், உயர் ஆன்ம பீமன், மிகவும் திருப்தியடைந்து, நளன் மற்றும் தமயந்தியின் திருமணத்தைக் கொண்டாடினான். தான் விரும்பிய காலம் வரை அங்கு தங்கிய மனிதர்களில் சிறந்த அந்த நிஷாதன் {நளன்}, பீமனின் அனுமதியைப் பெற்று தனது சொந்த நகரத்திற்குத் திரும்பினான். பெண்களில் முத்தை {தமயந்தியை} அடைந்த அந்த அறம்சார்ந்த மன்னன், ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, பலனையும் விரித்திரனையும் கொன்றவன் {இந்திரன்} சச்சியுடன் இருப்பது போல, தனது நாட்களை மகிழ்ச்சிகரமாகக் கடத்தினான். சூரியனைப் போன்ற புகழுடன் இருந்த அந்த மன்னன் {நளன்}, மகிழ்ச்சியால் நிறைந்து, தனது குடிமக்களை நீதியுடன் ஆண்டு, அவர்களுக்கு பெரும் திருப்தியை அளித்தான். *நகுஷனின் மகனான யயாதியைப் போன்ற அந்த புத்திசாலி ஏகாதிபதி {நளன்}, அந்தணர்களுக்கு ஏராளமான பரிசுகளுடன் குதிரை வேள்வியையும், மற்ற பல வேள்விகளையும் கொண்டாடினான்.

தமயந்தியுடன் காதலுடன் கானகங்களிலும், தோப்புகளிலும் தேவர்களைப் போல விளையாடினான். அந்த உயர்ந்த மனம் கொண்ட மன்னன் {நளன்}, தமயந்தியிடம் இந்திரசேனன் என்ற மகனையும், இந்திரசேனை என்ற மகளையும் பெற்றான். வேள்விகள் கொண்டாடி, (தமயந்தியுடன்) விளையாடி, இருந்த அந்த மன்னன், செல்வங்களுடன் கூடிய பூமியை ஆண்டான்.

*************************************************************************

*நகுஷனின் மகனான யயாதியைப்..............

மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகளைச் சொடுக்கவும்....
தக்ஷன், புருரவஸ், நகுஷன் மற்றும் யயாதி வரலாறு | ஆதிபர்வம் - பகுதி 75 
உயிர்மீட்பு ஞானத்தை அடைந்த கசன் | ஆதிபர்வம் - பகுதி 76
தேவயானியை ஏற்க மறுத்த கசன் - பகுதி 77
தேவயானியின் கோபம் | ஆதிபர்வம் - பகுதி 78
சுக்ரன் தேவயானி உரையாடல் | ஆதிபர்வம் - பகுதி 79
தேவயானியின் அடிமையானாள் சர்மிஷ்டை | ஆதிபர்வம் - பகுதி 80
யயாதியின் திருமணம் | ஆதிபர்வம் - பகுதி 81
யயாதியை ஏற்கவைத்த சர்மிஷ்டை | ஆதிபர்வம் - பகுதி 82
யயாதியைத் தாக்கிய பலவீனம் | ஆதிபர்வம் - பகுதி 83
யயாதியின் முதுமையை ஏற்ற புரு | ஆதிபர்வம் - பகுதி 84
தந்தைக்குக் கீழ்ப்படியும் மகனே வாரிசு | ஆதிபர்வம் - பகுதி 85
யயாதியின் கடுந்தவம் | ஆதிபர்வம் - பகுதி 86
இந்திரன் யயாதி பேச்சு | ஆதிபர்வம் - பகுதி 87
அஷ்டகனை அடைந்த யயாதி | ஆதிபர்வம் - பகுதி 88
யயாதி கண்ட உலகங்கள்| ஆதிபர்வம் - பகுதி 89
மனிதன் இறந்த பிறகும், பிறக்கும் முன்பும் என்ன நடக்கிறது?| ஆதிபர்வம் - பகுதி 90
வாழ்வின் நான்கு நிலைகள்| ஆதிபர்வம் - பகுதி 91
பரிசுகளை ஏன் ஏற்கக்கூடாது? | ஆதிபர்வம் - பகுதி 92
மீண்டும் சொர்க்கத்தை அடைந்தான் யயாதி | ஆதிபர்வம் - பகுதி 93

................வைசம்பாயனர் தொடர்ந்தார், "இப்படியே தனது சாதனைகளுக்காக சிறப்புவாய்ந்த அந்த மன்னன் யயாதி, தனது இணை வழித்தோன்றல்களால் மீட்கப்பட்டு, பூமியை விட்டு, தான் செய்த செயல்களின் புகழால் மூன்று உலகங்களையும் மறைத்து சொர்க்கத்திற்கு உயர்ந்தான்.



இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்