Tuesday, March 26, 2013

சாபம் விலகிய மீன்! | ஆதிபர்வம் - பகுதி 63ஆ

Fish, freed from curse! | Adi Parva - Section 63b | Mahabharata In Tamil

(ஆதிவம்சாவதரணப் பர்வம் - 5)

பதிவின் சுருக்கம்: உபரிசரனின் உயிர்வித்தை விழுங்கிய மீன்; மீனுக்கு இரட்டைக் குழந்தை பிறந்தது; ஆண் {சத்யவதியின் சகோதரன்} மத்ஸ்ய நாட்டு மன்னனாக வளர்ந்தது...

மன்னன் வசு {உபரிசரன்}, இந்திரனால் பரிசாக அளிக்கப்பட்ட தனது தெய்வீக தேரில் அமர்ந்து வானத்தினூடே செல்லும்போது, கந்தர்வர்களும், அப்சரஸ்களும் (தேவலோக பாடகர்களும், ஆடல் கலைஞர்களும்) அவனை {உபரிசரனை} அணுகினர். அப்படி அவன் {உபரிசரன்} மேலுகங்களில் உலவியதால் {மேலே சஞ்சரிப்பவன் என்ற பொருள்பட} உபரிசரன் என்று அழைக்கப்பட்டான்.(33,34)



அவனது தலைநகரத்தின் அருகிலே சுக்திமதி என்ற ஆறு ஓடியது. அந்த ஆறானது, ஒரு காலத்தில், காமத்தால் பித்துப்பிடித்ததும், உயிரையுடையதுமான கோலாஹல மலையால் தாக்கப்பட்டது.(35) மலையின் தவறான முயற்சியைக் கண்ட வசு {உபரிசரன்}, தனது காலால் அந்த {கோலாஹல} மலையை ஓங்கி உதைத்தான். வசு உதைத்ததனால் கோலாஹல மலையிலிருந்து (அந்த மலையின் அணைப்பிலிருந்து) ஆறு வெளியே வந்தது.(36) ஆனால் அந்த {கோலாஹல} மலை, அந்த {சுக்திமதி} நதியிடம் இரட்டையரான இரு மக்களைப் பெற்றெடுத்தது. கோலாஹலத்தின் அணைப்பிலிருந்து தன்னை விடுவித்த வசுவுக்கு {உபரிசரனுக்கு} நன்றிக்கடனாக, தன் பிள்ளைகளை அந்த {சுக்திமதி} ஆறு அவனுக்கே {உபரிசரனுக்கே} கொடுத்தது.(37) அரசமுனிகளில் சிறந்தவனும், பொருளளிக்கும் வள்ளலும், எதிரிகளைத் தண்டிப்பவனுமான வசு {உபரிசரன்}, அந்த {சுக்திமதி} ஆற்றின் மகனைத் தனது படைகளுக்குத் தலைவனாக நியமித்தான்.(38) கிரிகை என்ற அந்த {சுக்திமதி} நதியின் மகள், வசுவால் {உபரிசரனால்} மணந்து கொள்ளப்பட்டாள். வசுவின் மனைவி கிரிகை, தனது தீட்டுக்காலம் முடிந்து, குளித்துத் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டு, தனது நிலையைத் தனது தலைவனிடம் {உபரிசரனிடம்} தெரிவித்தாள். ஆனால், அதே நாளில் பித்ருக்கள், ஏகாதிபதிகளில் சிறந்தவனும், விவேகிகளில் முன்னவனுமான அந்த வசுவிடம் {உபரிசரனிடம்} வந்து,(39-40) தங்கள் சிரார்த்தத்திற்காக ஒரு மானைக் கொன்று கொடுக்கச் சொன்னார்கள். மன்னனும் {உபரிசரனும்}, பித்ருக்களின் கட்டளையை மதிக்காமல் இருக்கக்கூடாது என்று எண்ணி,(41) பெரும் அழகைக் கொடையாகக் கொண்ட, மற்றுமொரு ஸ்ரீயாக (லட்சுமியாக) இருந்த கிரிகையை நினைத்துக் கொண்டே தனியாக வேட்டைக்குக் கிளம்பிப் போனான்.(42)

அது வசந்த காலமாகையால், மன்னன் {உபரிசரன்} சென்ற கானகம், கந்தர்வ மன்னனின் தோட்டத்தைப் போல அழகாக இருந்தது. அங்கே அசோகங்களும், சம்பகங்களும் {செண்பகங்களும்}, சுதங்களும் {மாமரங்களும்}, அதிமுக்தங்களும் {தினிசமரங்களும்} நிறைந்திருந்தன. அங்கே புன்னாகம் {புன்னை}, கர்ணீகரம் {கொன்றை}, வாகுலம் {மகிழம்}, திவ்யபாதாளம் {பாதிரிமரங்கள்},(43) பாதாளம் {பலா}, நாரிகேளம் {தென்னை}, சந்தனம், அர்ஜுனம் {மருதமரம்} போன்ற அழகான புனிதமான மரங்கள் பெரும் நறுமணத்தோடும், சுவை நிறைந்த கனிகளோடும் காட்சியளித்தன.(44)

அந்த முழுக் கானகமே கோகிலப் பறவைகளின் {குயில்களின்} இனிய நாதத்தால் பித்துப்பிடித்தது போல இருந்தது. போதையுடனிருந்த வண்டுகளின் ஹூங்காரத்தை அந்தக் கானகம் எதிரொலித்துக் கொண்டிருந்தது.(45) மன்னன் {உபரிசரன்} மனம் நிறைந்த ஆசையுடன் இருந்தான், ஆனால் தனது மனைவியை {கிரிகையை} தன் முன்னால் காணவில்லை. ஆசையால் பித்துப்பிடித்து, அந்தக் கானகம் முழுதும் அங்குமிங்கும் அலைந்தான். அடர்ந்த இலைகளைக் கொண்டதும், அழகான மலர்களால் மூடப்பட்ட கிளைகளை உடையதுமான அசோக மரத்தைக் கண்டு,(46,47) அதன் நிழலில் அமர்ந்தான். அந்தக் காலத்தின் இனிமையாலும், சுற்றியிருந்த மலர்களின் நறுமணத்தாலும், இதமான தென்றலாலும், அவனால் {உபரிசரனால்} அவன் மனதை அழகான கிரிகையை நினைக்காமல் கட்டுப்படுத்த முடியவில்லை.(48,49) [2]

[2] வெளிப்படையான காரணத்தினால், சுலோகம் 50 முதல் 52 வரை மொழிபெயர்க்கவில்லை என்று மன்மதநாததத்தர் குறிப்பிடுகிறார். கங்குலியிலும் அவ்வரிகள் இல்லை. கும்பகோணம் பதிப்பில், "தற்செயலாகப் புஷ்பங்களால் கிளைகளின் நுனிகள் மறைக்கப்பட்டதும், தளிர்களினால் சோபிக்கின்றதும், அழகானதும், பூங்கொத்துக்களால் மறைக்கப்பட்டதுமாகிய ஓர் அசோக மரத்தைக் கண்டான். அதன் கீழ் நிழலில் ஸுகமாக வீற்றிருந்த ராஜன் காற்றினால் கொண்டுவரப்பட்டதும், தேன்மணமுள்ளதுமாகிய அந்த இனிய புஷ்பவாஸனையை மோந்து ஸந்தோஷமடைந்தான். மனைவியை நினைக்கும்போது அந்த ராஜாவுக்கு காமமென்னும் அக்னி விருத்தியாயிற்று. அவன் இருண்ட காட்டில் ஸஞ்சரிக்கும்போது அவனுடைய வீரியம் வெளிப்பட்டது. வெளிப்பட்ட மாத்திரத்தில், அந்த அரசன், "என்னுடைய வீரியம் வீணாகக் கூடாது" என்று நினைத்து, உடனே அதனை இலையில் ஏந்தினான். ராஜா அந்த வீரியத்தில் தன் மோதிரத்தினால் முத்திரை வைத்துச் சிவந்த அசோக புஷ்பங்களாலும், தளிர்களினாலும் மூடிக் கட்டினான். "இந்த என் வீரியம் வீணாக விழுந்ததாகாமலும், அந்த என் பத்தினியின் ருது காலம் வீணாகமலும் எவ்வாறிருக்கும்" என்று அறம், பொருள் இவைகளின் நுட்பமான உண்மையை அறிந்திருந்த அந்த ஸமர்த்தனாகிய ராஜஸ்ரேஷ்டன் சிந்தித்துப் பலமுறை ஆராய்ந்து பார்த்து, தன் வீரியம் வீணாவதில்லையென்பதை நிச்சயித்து, அதைத் தன் பத்தினிக்கு அனுப்புவதற்கு, "இது காலம்: என்று நினைத்து, அதற்குக் கர்ப்பாதான மந்திரத்தை ஜபித்தான்" என்றிருக்கிறது. இவையே 50 முதல் 52 வரையுள்ள ஸ்லோகங்களாக இருக்க வேண்டும். பிபேகத் திப்ராயின் பதிப்பில் மேற்கண்ட வரிகள் மிகச் சுருக்கமாக இருக்கின்றன.

துரிதமாகச் செல்லக்கூடிய ஒரு பருந்து, தனக்கு மிக அருகே ஓய்வெடுத்துக் கொண்டிருப்பதை மன்னன் {உபரிசரன்} கண்டான். தர்மம் (அறம்) மற்றும் அர்த்தம் (பொருள்) குறித்த நுட்பமான உண்மைகளை அறிந்த அவன் {மன்னன் உபரிசரன்} அதனிடம் {பருந்திடம்} சென்று,(53) "இனிமையானவனே, இந்த எனது வித்தை {உயிரணுவை} எனது மனைவி கிரிகைக்காக எடுத்துச் சென்று, அவளிடம் {கிரிகையிடம்} இதைக் கொடுப்பாயாக. அவளது பருவம் வந்துவிட்டது" என்றான் {சேதி நாட்டின் மன்னன் உபரிசரன்}.(54) அந்தத் துரிதமானப் பருந்து, மன்னனிடம் {உபரிசரனிடம்} அதைப் பெற்றுக் கொண்டு, வானத்தில் வேகமாகப் பறந்தது.(55) அப்படிப் பறந்து செல்கையில், மற்றொரு பருந்தால் இது பார்க்கப்பட்டது. முதலில் சென்ற பருந்து இறைச்சியையெடுத்துச் செல்கிறது என்று நினைத்து, இரண்டாம் பருந்து அதை நோக்கிப் பறந்தது.(56) இரு பருந்துகளும் வானத்தில் தங்கள் அலகால் சண்டையிட்டுக் கொண்டன. அப்படி அவை சண்டையிட்டுக் கொண்டிருக்கும்போது, அந்த வித்து யமுனையின் நீரில் விழுந்தது.(57)

உயர்ந்த அந்தஸ்து கொண்ட அத்ரிகை என்ற பெயர் கொண்ட அப்சரஸ் ஒருத்தி ஒரு பிராமணனின் சாபத்தால் மீனாகப் பிறந்து அந்த நீரில் வசித்து வந்தாள்.(58) வசுவின் {உபரிசரனின்} வித்து பருந்தின் பிடியில் இருந்து நீரில் விழுந்ததும், அத்ரிகை விரைவாக அதை எடுத்து, உடனே விழுங்கிவிட்டாள்.(59) சில காலங்களுக்குப் பிறகு, அந்த மீன், மீனவர்களால் பிடிக்கப்பட்டது. அப்பொழுது அந்த {அப்சரஸ் அத்ரிகை} மீன் வித்தை விழுங்கிப் பத்து மாதங்கள் ஆகியிருந்தன.(60) அந்த மீனின் வயிற்றிலிருந்து, ஓர் ஆணும், ஒரு பெண்ணுமாக மனித வடிவில் குழந்தைகள் வெளியே வந்தன. இதைக் கண்ட மீனவர்கள் ஆச்சரியமடைந்து, (அவர்கள் அந்த மன்னனின் குடிகளாக இருப்பதால்) மன்னன் உபரிசரனிடம் வந்து நடந்ததைக் கூறினர்.(61) அவர்கள் {மீனவர்கள்}, "ஓ மன்னா {உபரிசரா}, மனித உருவத்தில் இருக்கும் இந்தக் குழந்தைகளை மீனின் வயிற்றிலிருந்து கண்டெடுத்தோம்" என்றனர். ஆண் குழந்தை உபரிசரனால் எடுத்துக் கொள்ளப்பட்டான்.(62) அந்தக் குழந்தை பிற்காலத்தில் அறம் சார்ந்து நடக்கும் உண்மை நிறைந்த ஏகாதிபதியான மத்ஸ்யனாக ஆனான். அந்த இரட்டையர்களின் பிறப்புக்குப் பிறகு, அந்த அப்சரஸ் {அத்ரிகை} தனது சாபத்தில் இருந்து விடுபட்டாள்.(63)

அவள் {அப்சரஸ் அத்ரிகை} முன்னமே அந்தச் சிறப்பு வாய்ந்தவரால் (சபித்தவரால்), தான் மீனாக இருக்கும்போது மனித உருவில் இரு குழந்தைகளைப் பெற்றெடுத்ததும் தனது சாபத்திலிருந்து விடுபடுவாள் என்று சொல்லப்பட்டிருந்தாள்.(64) அந்த வார்த்தைகளுக்கிணங்க, இரு குழந்தைகள் பிறந்ததும், மீனவர்களால் கொல்லப்பட்டுத் தனது மீன் உடலைத் துறந்து, சுய உருவம் கொண்டாள்.(65) அதன்பிறகு, அந்த அப்சரஸ் {அத்ரிகை} எழுந்து, சித்தர்களும், முனிவர்களும், சாரணர்களும் செல்லும் பாதையில் சென்றாள்.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்