Sunday, March 24, 2013

உபரிசரன் (எ) வசு! | ஆதிபர்வம் - பகுதி 63அ

Uparichara (a) Vasu! | Adi Parva - Section 63a | Mahabharata In Tamil

(ஆதிவம்சாவதரணப் பர்வம் - 5)

பதிவின் சுருக்கம் : கடுந்தவம் இருந்த உபரிசரனைச் சமாதானப்படுத்திய இந்திரன் சேதி நாட்டைக் கவனமாக ஆளச் சொல்வது...

வானத்தில் பறக்கும் உபரிசரன்
வைசம்பாயனர் சொன்னார், "உபரிசரன் என்ற பெயர் கொண்ட ஒரு மன்னன் இருந்தான். அறத்துக்குத் தன்னை அர்ப்பணித்தவனாக இருந்தான். வேட்டைக்கும் அவன் அடிமையாக இருந்தான்.(1)

வசு என்றும் அழைக்கப்பட்ட அந்தப் பௌரவகுல மன்னன் {உபரிசரன்}, இந்திரனின் ஆலோசனையின்படி அருமையானதும், இன்பத்தை அளிப்பதுமான சேதி நாட்டை அடக்கி ஆண்டான்.(2) சில காலங்களுக்குப் பிறகு, ஆயுதங்களை விடுத்து, தனிமையான இடத்தில் இருந்து, கடுந்தவம் செய்தான். அந்தக் காலத்தில், அவன் {உபரிசரன்} தேவர்களின் தலைமைப் பதவியை வேண்டிக் கடுந்தவம் இருக்கிறான் என்று எண்ணிய தேவர்கள், இந்திரனின் தலைமையில் வந்து அந்த ஏகாதிபதியை {உபரிசரனை} அணுகினர்.(3) தேவர்கள், அவன் {உபரிசரன்} முன் தோன்றி, மென்மையாகப் பேசி அவனைத் தவத்தைக் கைவிடவைத்து வெற்றி பெற்றனர்.(4)  தேவர்கள், "ஓ பூமியின் தலைவா! {உபரிசரனே} பூமியில் அறம் குறையாதபடி நீ பார்த்துக் கொள்ள வேண்டும். உன்னால் காக்கப்பட்ட அந்த அறம், பதிலுக்கு இந்த அண்டத்தையே காக்கும்" என்றனர்.(5)



அதன்பிறகு இந்திரன், "ஓ மன்னா! {உபரிசரா} கவனமாகவும், உறுதியாகவும் இருந்து பூமியில் அறத்தைக் காப்பாற்றுவாயாக. அறம் சார்ந்து வாழ்வதாலேயே, (மறுமையில்) பல புனிதமான பகுதிகளை நீ நித்தியமாய்க் காண்பாயாக.(6) நான் தேவலோகத்தைச் சார்ந்தவனாகவும், நீ பூலோகத்தைச் சார்ந்தவனாகவும் இருப்பினும், நீ எனக்கு நண்பனாகவும், அன்புக்குரியவனாகவும் இருக்கிறாய். ஓ மனிதர்களின் மன்னா! {உபரிசரா} இன்பந்தருவதும், விலங்குகள் நிறைந்ததும், புனிதமானதும், செல்வமும் {தனமும்}, சோளமும் {தானியங்களும்} நிறைந்ததும், சொர்க்கத்தைப் போல் பாதுகாக்கப்பட்டதும், உவப்பான தட்பவெப்ப நிலை கொண்டதும் {சீதோஷ்ணமுள்ளதும்}, இன்பத்திற்குரிய அனைத்து பொருள்களாலும் அருளப்பட்டதும், செழிப்பானதுமான பூமியின் இந்தப் பகுதியிலேயே வாழ்வாயாக.(7,8) ஓ சேதியின் ஏகாதிபதியே! {உபரிசரனே} உனது ஆளுகைக்குட்பட்ட இந்த இடம் வளங்களால் நிறைந்துள்ளது. ரத்தினங்கள், விலைமதிப்பில்லாக் கற்கள், வளமான தாதுக்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது.(9) இந்தப் பகுதியில் உள்ள நகரமும், அதைச் சுற்றியுள்ள கிராமங்களும் அறம் சார்ந்து {அர்ப்பணிப்புடன்} இருக்கின்றன. மக்களும் நேர்மையாகவும், மனநிறைவுடனும் இருக்கின்றனர். அவர்கள் கேலிக்காகக் கூடப் பொய் பேசுவதில்லை.(10)

மகன்கள் தங்கள் தந்தைகளிடம் இருந்து சொத்தைப் பிரித்துக் கொள்வதில்லை. அதுபோக, தங்கள் பெற்றோரின் நன்மையிலேயே எப்போதும் விருப்பங்கொண்டுள்ளனர். உழுவதற்காக ஏரில் பூட்டப்படவோ, வண்டியில் பாரம் சுமக்க வைக்கவோ உள்ள மாடுகள் மெலிந்தவையாக இல்லை. (11) மாறாக அவை நன்றாகப் பேணப்பட்டுத் பருத்தவைகளாக இருக்கின்றன. சேதியில், நான்கு வகையை {வர்ணத்தைச்} சேர்ந்தவர்களும் அவரவர்களுக்கான தொழில்களையே செய்கின்றனர். மூவுலகங்களில் நடக்கும் காரியங்கள் அனைத்தையும் நீ அறிந்திருப்பாயாக. (12) ஆகாயத்தில் தேவர்கள் மட்டுமே பயணிக்கும் ஸ்படிகமயமான தேர் ஒன்றை நான் உனக்குத் தருகிறேன்.(13) உலக மனிதர்களிலேயே நீ ஒருவன் மட்டுமே, தேர்களிலேயே சிறந்ததான இந்தத் தேரில், உடல் கொண்ட தேவனைப் போலப் பறந்து செல்வாய்.(14) வாடாத தாமரைகளைக் கொண்ட வெற்றி மாலை {வைஜயந்தி மாலை} ஒன்றை உனக்கு நான் தருகிறேன். போர்க்களங்களில் நீ அதை அணிந்திருந்தால், ஆயுதங்களால் காயமடையமாட்டாய்.(15) ஓ மன்னா {உபரிசரா}, ஒப்பற்றதும், அருளப்பட்டதுமான இந்த மாலை, பூமியில் இந்திரனின் மாலை {வைஜயந்தி மாலை} என்று அறியப்படும். {அணிந்து கொள்ளும்} உனக்கு இது தனி அடையாளமாகட்டும்" என்றான் {இந்திரன்}.(16)

விருத்திரனைக் கொன்றவன் (இந்திரன்), அந்த மன்னனுக்கு {உபரிசரனுக்கு}, நேர்மையானவர்களையும், சாதுக்களையும் காப்பதற்காக ஒரு மூங்கில் தடியைக் {கோலைக்} கொடுத்தான்.(17) ஒரு வருடம் சென்ற பிறகு, அந்த மன்னன், அந்தக் கோலை நிலத்திலே நாட்டி அதைக் கொடுத்தவனான சக்ரனை {இந்திரனை} வழிபட்டான்.(18) அப்போதிலிருந்து, ஓ ஏகாதிபதியே {ஜனமேஜயனே}, மன்னர்கள் அனைவரும், வசுவின் {உபரிசரனின்} உதாரணத்தைத் தொடர்ந்து, தரையில் மூங்கில் தடியை நட்டு இந்திரனை வழிபட்டு, {இந்திரவிழாவைக் [இந்திரோத்ஸவத்தைக்]} கொண்டாடி வருகின்றனர்[1].(19) அந்தத் தடியை நட்டு வைத்துவிட்டு, அதைத் தங்கமயமான துணியாலும், நறுமணத் தைலங்களாலும், மலர் மாலைகளாலும் மற்ற பல அணிகலன்களாலும் அலங்கரிக்கின்றனர்.(20)

[1] கும்பகோணம் பதிப்பில் இன்னும் அதிகமாக, "அப்போது பூமியில் இந்திரனைப் பூஜிப்பதற்காக அந்த அரசன் அந்தக் கோலுக்கு எல்லா உத்ஸவங்களிலும் சிறந்த நகரப்ரவேசம் என்கிற உத்ஸவத்தைச் செய்வித்தான். அதுமுதல் இன்னமும் அந்த ராஜா நடத்தினபடி எல்லா ராஜஸ்ரேஷ்டர்களும் மார்கழி மாதம் சுக்கிலபக்ஷத்தில் கோலுக்கு நகரப்ரவேசத்தைப் பெரிய யாகமாகச் செய்கின்றனர். அதற்கு மறுதினம் அந்தக் கோலைப் பொற்கிங்கிணிகளாலும், சந்தனங்களாலும், புஷ்பமாலைகளாலும், ஆபரணங்களாலும் அலங்காரஞ்செய்து, அரசர்கள் எடுத்து நாட்டுகின்றனர். புஷ்பமாலைகளாற் சுற்றப்பட்டதும், முப்பத்திரண்டு சாண் அளவுள்ளதுமாகிய அந்தக் கோலைத் தூக்கி ஸுவர்ணமயமான வஸ்திரங்களை அந்தக் கோலுக்குச் சுற்றி, வஸ்திரங்களினாலும், அன்னபானங்களினாலும் பிராமண ஸ்ரேஷ்டர்களைத் திருப்தி செய்வித்து அவர்களால் புண்ணியாஹவாசனம் செய்வித்து ஆறுகஜம் உயரமிருக்கும் பள்ளத்தில் {ஆறு கஜம் = 18 அடி; ஒரு அடி =1-1/3 சாண்; ஆக 6 கஜம் என்பது 24 சாண். 24 சாண் வெளியே தெரியும்படி நடவேண்டும் என்பதே வழக்கம். ஆறுகஜ உயரம் வெளியே தெரியும்படி இருக்க எட்டு சாண் பள்ளத்தில் நடவேண்டும் என்றிருக்க வேண்டும். 24 சாண் என்பது 24 தத்துவங்களைக் குறிக்கும். (பூதங்கள் - 5 (நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு), ஞானேந்திரியங்கள் -5 (மெய், வாய், கண், மூக்கு, செவி), கர்மேந்திரியங்கள் -5 (வாய், கை, கால், மலவாய், கருவாய்), தன்மாத்திரைகள் -5 (சுவை,ஒளி,ஊறு,ஓசை,நாற்றம்), அந்தக்கரணங்கள் -4 ((மனம், அறிவு, நினைவு, முனைப்பு) எட்டு சாண் என்பது உடலைக் குறிக்கும். 24 தத்துவங்கள் எண்சாண் உடலில் நிலைபெறுவதை இது அடையாளப்படுத்துகிறது.}  அந்தத்துவஜத்தை நாட்டுகின்றனர். அந்தக் காலத்தில் சங்கங்களும், பேரிகைகளும், மிருதங்கங்களும் வாசிக்கப்படும். மஹாத்துமாவான உபரிசரவஸுவினிடம் அன்பினால் தானே கோல் வடிவமெடுத்துக் கொண்டு வந்த பகவனாகிய இந்திரன் அந்தக் கோலில் பூஜிக்கப்படுகிறான். மணிபத்திரன் முதலிய யக்ஷர்களும், தேவர்களுடன் பூஜிக்கப்படுகின்றனர். வேண்டுகிறவர்களுக்கு அனேகவிதமான தானங்களைக் கொடுத்து இஷ்டமித்திரர்களுடன் புஷ்பமாலைகளாலும், பலவித ஆடைகளாலும் அலங்காரஞ்செய்து கொண்டு, ராஜாவின் ஆக்ஞையினால் ஜலம் நிரம்பிய அநேகம் தோல் துருத்திகளைக் கொண்டு விளையாடி, ராஜாவைக் கண்டு வேடிக்கையான பேச்சுகளைப் பேசி, நகரத்து ஜனங்களும், கிராமத்து ஜனங்களும் விளையாடுகின்றனர். ஸூதர்களெனப்பட்ட பௌராணிகர்களும் {சூதர்கள் மட்டுமே புராணம் சொல்பவர்களாகவும் இருந்திருப்பார்களோ என இந்த வாசகம் சிந்திக்க வைக்கிறது}, அரசனைப் பற்றிய ஸ்தோத்திரங்களைப் பாடுகிற மாகதர்களும், நாடகம் ஆடுகிறவர்களும், நர்த்தனஞ்செய்கிறவர்களும் ஸந்தோஷிக்கின்றனர். ராஜஸ்ரேஷ்டரே! அந்த உபரிசரராஜன் காலத்தில் எல்லாரும் ஸந்தோஷமாகப் பெரிய உத்சவத்தைச் செய்தனர்" என்றிருக்கிறது. இந்தக் குறிப்பு, கங்குலியிலோ, மன்மதநாததத்தரின் பதிப்பிலோ, பிபேக்திப்ராயின் பதிப்பிலோ இல்லை. இன்றும் எந்த விழா எடுப்பதாக இருந்தாலும் மூங்கிலால் முகூர்த்தக் கால் நடுவது என்னும் உற்சவம் இதைப் போலவே கொண்டாடப்படுகிறது. இன்று பதினாறு கணுக்கள் கொண்ட மூங்கிலை, நான்கு கணுக்கள் நிலத்தில் பதியுமாறு நட்டு, முகூர்த்தக்கால் நடப்படுகிறத்ய். சங்ககாலத்தில் இந்திரவிழா, வசந்தவிழா போன்றவை தமிழ்நாட்டில் கொண்டாடப்பட்டன.

இப்படியே தேவனான வாசவன் {இந்திரன்} மலர்மாலைகளாலும், அணிகலன்களாலும் உரிய முறையில் வழிபடப்படுகிறான். இந்திரனும் அம்மன்னனை வாழ்த்துவதற்காக, அன்னத்தின் உருவைக் கொண்டு, அம்மன்னனின் {உபரிசரனின்} வழிபாட்டை ஏற்றான். அப்படி வந்த இந்திரன், வசுவினால் செய்யப்பட்ட வழிபாட்டைக் கண்டு, ஏகாதிபதிகளில் முதன்மையான மன்னன் வசுவிடம் {உபரிசரனிடம்}, "சேதி நாட்டின் மன்னனைப் போல இப்படி என்னை மகிழ்ச்சியுடன் வணங்கி, இந்த விழாவைக் கொண்டாடும் மன்னர்களும், பிற மனிதர்களும், பெரும்புகழையும், வெற்றியையும் தனது நாட்டிற்காகவும், அரசுக்காகவும் அடைவர்.(21-24) அவர்களது நகரங்களும் விரிந்து எப்போதும் மகிழ்ச்சிகரமாக இருக்கும்" என்றான் {இந்திரன்}. மன்னன் வசு மனநிறைவு கொண்ட அந்தத் தேவர்களின் தலைவனான உயர் ஆன்ம மகவத்தின் {இந்திரனின்} இந்த வார்த்தைகளால் மகிழ்ந்தான். எந்த மனிதர்கள், நிலங்களையும், ரத்தினங்களையும், விலைமதிப்பில்லா கற்களையும் பரிசாகக் கொடுத்து இந்திரனுடைய விழாவை கொண்டாடினரோ, அவர்கள் உண்மையிலேயே உலகத்தோரால் மதிக்கப்பட்டனர்.(25-27) சேதி நாட்டின் தலைவனான வசு, இந்திரனால் வரங்கள் அருளப்பட்டு, பெரிய வேள்விகளைச்செய்தும், இந்திர விழாவைக் கொண்டாடினான். சேதி நாட்டில் இருந்து கொண்டு அவன் உலகத்தை ஆண்டான். இந்திரனை மனநிறைவு கொள்ளச் செய்ய வசு இந்திர விழாவைக் {இந்திரோத்சவத்தை ஒவ்வொரு ஆண்டும்} கொண்டாடினான். வசுவுக்கு {உபரிசரனுக்கு} பெரும்பலமும் சக்தியும், அளவிடமுடியா வீரமும் கொண்ட ஐந்து புதல்வர்கள் இருந்தனர்.(28,29)


தன் மகன்கள் ஒவ்வொருவரையும், தனது அரசாங்கத்தின் ஒவ்வொரு பகுதிக்குப் பிரதிநிதியாக அமர்த்தினான் அந்த மன்னன். அவனது மகன் பிருஹத்ரதன் மகதத்துக்கு மன்னனாக நியமிக்கப்பட்டு மஹாரதன் என்று அழைக்கப்பட்டான்{மஹாரதனாக விளங்கினான்}.(30) பிராத்யக்ரஹாவும், மணிவாகனன் என்று அழைக்கப்பட்ட குசாம்பனும், மாவெலனும் {மத்சில்லனும்}, பெரும் வீரம் கொண்டவனும், போரில் தோல்வியடையச் செய்யமுடியாதவனுமான யதுவும் அம்மன்னனின் மற்ற மகன்களாவர்.(31) ஓ ஏகாதிபதியே {ஜனமேஜயா}, இவர்களே அந்த அரசமுனியின் {உபரிசரனின்} பெரும் சக்தி கொண்ட புதல்வர்களாவர். அந்த ஐந்து மகன்களும் அரசுகளையும், நகரங்களையும் தங்கள் பெயரில் உருவாக்கிக் கொண்டு,(32) பல காலங்களுக்கு நீடித்த தனிப்பரம்பரைகளை நிறுவினர்.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்