Thursday, April 04, 2013

மேனகையின் ஆயத்தம்! | ஆதிபர்வம் - பகுதி 71

Menaka made provisions! | Adi Parva - Section 71 | Mahabharata In Tamil

(சம்பவ பர்வம் - 7)

பதிவின் சுருக்கம் : சகுந்தலையைக் கண்ட துஷ்யந்தன்; தன் பிறப்பு முதலிய வரலாற்றைச் சொன்ன சகுந்தலை; மேனகைக்கும், இந்திரனுக்கும் இடையில் நடந்த உரையாடல்...

வைசம்பாயனர் சொன்னார், "அதன் பிறகு அந்த ஏகாதிபதி {துஷ்யந்தன்}, குறைக்கப்பட்டிருந்த தன் பரிவாரத்தையும் ஆசிரமத்தின் வாசலில் விட்டான். தனியாகவே {ஆசிரமத்தினுள்ளே} நுழைந்த அவன், கடும் நோன்புகளைக் கொண்ட முனிவரைக் {கண்வரைக்} காணவில்லை.(1) முனிவரைக் காணாமலும், வசிப்பிடம் வெறுமையாக இருப்பதைக் கண்டும் அவன் {துஷ்யந்தன்}, “ஓ இங்கே யார் இருப்பது?” என்று உரக்கக்கேட்டான். {அந்தக் காட்டில்} அவனது குரல் எதிரொலித்தது.(2) அவனது குரலைக் கேட்டு, ஒரு துறவியின் மகளைப் போல உடுத்தியிருந்தவளும், ஸ்ரீயை (லட்சுமியைப்) போன்ற அழகுடையவளுமான ஒரு கன்னிகை {சகுந்தலை}, அந்த முனிவரின் {கண்வரின்} வசிப்பிடத்தில் இருந்து வெளியே வந்தாள்.(3) கருங்கண்களைக் கொண்ட அந்த அழகி, மன்னன் துஷ்யந்தனைக் கண்டதும், அவனுக்கு நல்வரவு கூறி மரியாதையுடன் வரவேற்றாள்.(4) அவனுக்கு {துஷ்யந்தனுக்கு} ஆசனம் கொடுத்து, கால்களைக் கழுவ நீரும், அர்க்கியமும்[1] கொடுத்த அவள் {சகுந்தலை}, அந்த மன்னனின் உடல்நிலை மற்றும் மனநிலை குறித்து விசாரித்தாள்.(5)



[1]விருந்தினரை வரவேற்பதில் பதினாறு வரை உபச்சாரங்கள் உண்டு.
1.ஆசனம் கொடுத்தல், 2. கால்கழுவுதல், 3. கைகளைக் கழுவுதல், 4. அருந்த நீர் தருதல் 5. குளிப்பதற்கான வாசனைப் பொடிகளை பூசுதல் 6. குளிக்க வைத்தல் 7. உடைகள் தருதல் 8 ஆபரணங்கள் தருதல் 9. வாசனை திரவியங்கள் பூசுதல் 10. பூணூல் அளித்தல் 11. தூபங்கள் வாசனைப் புகைகளை பரவவிடல் 12. கவரி வீசுதல் 13.அவர்கள் மனம் குளிர உபசார வார்த்தைகள் பேசுதல் 14. உணவளித்தல் 15. தாம்பூலம் கொடுத்தல் 16. ஆரத்தி எடுத்தல்
1. ஆசனம், 2. பாத்யம் 3. அர்க்கியம் 4. ஆசமனம் 5. ஔஷபோகாராம் 6. ஸ்னானம் 7. வஸ்திரம் 8. ஆபரணம் 9 கந்தம் 10. உபவீதம் 11. தூபம் 12. வியாஜனம்  13. அர்ச்சனை 14. நைவேத்யம் 15. தாம்பூழம் 16. ஆரத்தி இவற்றில் கால்கழுவுதல் பாத்யம் எனப்படும். கைகளைக் கழுவுவது அர்க்கியம் எனப்படும்.

இவ்வாறு மன்னனை வழிபட்டு, அவனது உடல்நிலை மற்றும் மனநிலையைக் கேட்ட அந்தக் கன்னிகை {சகுந்தலை}, “ஓ மன்னா, எது செய்யப்பட வேண்டும்? உமது உத்தரவுகளுக்காக நான் காத்திருக்கிறேன்” என்று மரியாதையாகக் கேட்டாள்.(6) அவளால் முறையாக வழிபடப்பட்ட மன்னன் {துஷ்யந்தன்}, களங்கமற்ற பண்புகளையும், இனிய பேச்சையும் கொண்ட அந்தக் கன்னிகையிடம்,(7) “பெரும் அருள் கொண்ட முனிவர் கண்வரை நான் வழிபட வந்திருக்கிறேன். ஓ இனிமையானவளே, அழகானவளே, சிறப்புமிக்க முனிவர் கண்வர் எங்கே சென்றிருக்கிறார் என்பதை எனக்குச் சொல்வாயாக" என்று கேட்டான்.(8) அதற்குச் சகுந்தலை, "சிறப்புமிக்க என் தந்தை {கண்வர்}, பழங்கள் கொணர்ந்து வர ஆசிரமத்தைவிட்டு வெளியே சென்றார். ஒருகணம் பொறுத்தால், அவர் வருகையில் நீர் அவரைக் காணலாம்" என்று சொன்னாள்.(9)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "முனிவரைக் {கண்வ முனிவரைக்} காணாது, அவளால் இப்படிச் சொல்லப்பட்ட மன்னன் {துஷ்யந்தன்}, அந்தக் கன்னிகை மிகுந்த அழகும், கச்சிதமான உடலமைப்பும் கொண்டவளாக இருப்பதைக் கண்டான். அவள் இனிமையான புன்னகையுடன் இருப்பதையும் கண்டான். (10) அவள் {சகுந்தலை}, தனது களங்கமற்ற பண்புகள், தவத்துறவுகள், பணிவு ஆகியவற்றின் அழகால் அலங்கரிக்கப்பட்டு நின்று கொண்டிருந்தாள். அவள் {சகுந்தலை} இளமையின் தொடக்கத்தில் {கன்னிப் பருவத்தில்} இருப்பதையும் மன்னன் {துஷ்யந்தன்} கண்டான்.(11)

எனவே அவன் {துஷ்யந்தன்}, அவளிடம் {சகுந்தலையிடம்}, "ஓ அழகியே! நீ யார்? எவருடைய மகள் நீ? மேலும் நீ ஏன் இந்தக் காட்டுக்கு வந்தாய்? ஓ எழில் வாய்ந்தவளே! இப்படிப்பட்ட பண்புகளுடனும், இவ்வளவு அழகுடனும் உள்ள நீ எங்கிருந்து வந்தாய்?(12) ஓ ஆழகானவளே! முதல் பார்வையிலேயே நீ என் இதயத்தைத் திருடிவிட்டாய்! நான் உன்னைப்பற்றி முழுவதும் அறிய விரும்புகிறேன். எனவே, அனைத்தையும் எனக்குச் சொல்வாயாக” என்றான்.(13) அந்த ஏகாதிபதியால் {துஷ்யந்தனால்} இப்படிக் கேட்கப்பட்ட அந்தக் கன்னிகை {சகுந்தலை} புன்னகையுடன் கூடிய இனிமையான வார்த்தைகளில்,(14) "ஓ துஷ்யந்தரே! நற்குணம், ஞானம், உயர்ந்த ஆன்மா ஆகியவற்றைக் கொண்ட சிறப்புமிக்க முனிவர் கண்வரின் மகள் நான் " என்று மறுமொழி கூறினாள் {சகுந்தலை}.(15)

துஷ்யந்தன், "உலகம் முழுவதும் வழிபடப்படுபவரும், உயர்ந்த அருளைக் கொண்டவருமான முனிவர் {கண்வ முனிவர்}, உயிர்வித்தை மேலெழுப்பியவராவார் {காம இச்சைக்களைக் கட்டுப்படுத்தியவர் ஆவார்}. தர்மன் கூடத் தன் பாதையில் தவறலாம், ஆனால் கடும் நோன்புகளைக் கொண்ட ஒரு தவசி தவறவே முடியாது.(16) எனவே, ஓ அழகான நிறம் கொண்டவளே! அவரது மகளாக நீ எப்படிப் பிறந்திருக்க முடியும்? எனது இந்தப் பெரும் ஐயப்பாட்டைக் களைவதே உனக்குத் தகும்" என்றான் {துஷ்யந்தன்}.(17) சகுந்தலை, "ஓ மன்னா! {துஷ்யந்தரே} பழங்காலத்தில் எனக்கு என்ன நேர்ந்தது, முனிவரின் மகளாக நான் எப்படி ஆனேன் என்பதை நான் அறிந்த வரை உமக்குச் சொல்கிறேன் கேட்பீராக.(18) முன்பொரு காலத்தில், ஒரு முனிவர் இங்கு வந்து எனது பிறப்பைக் குறித்துக் கேட்டார். ஓ மன்னா {துஷ்யந்தரே}, அவரிடம் அந்தச் சிறப்பு மிகுந்தவர் (கண்வர்) சொன்னது அனைத்தையும் என்னிடம் இருந்து இப்போது கேட்பீராக.(19)

முனிவரின் கேள்விக்குப் பதிலளிக்கும் வகையில் எனது தந்தை கண்வர், "பழங்காலத்தில் கடுந்தவத்தில் விஷ்வாமித்திரர்[2]  ஈடுபட்டதால் தேவர்களின் தலைவனான இந்திரன் அச்சுறுத்தலுக்கு ஆளானான். அவரது தவங்களால் சொர்க்கத்தின் உயர்ந்த ஆசனத்தில் இருந்து தன்னைத் தள்ளிவிடக் கூடும் என்று நினைத்து அஞ்சிய இந்திரன், மேனகையை அழைத்து, அவளிடம்,(20,21) “ஓ மேனகையே! நீயே அப்சரஸ்களில் முதன்மையானவள், எனவே, ஓ இனிமையானவளே {மேனகையே}, எனக்கு ஒரு சேவையைச் செய்வாயாக. நான் சொல்வதைக் கேட்பாயாக.(22) காந்தியில் சூரியனைப் போன்ற இந்தப் பெரும் தவசி விஷ்வாமித்திரர் தவங்களில் கடுமையானவற்றைச் செய்துவருகிறார். என் இதயம் அச்சத்தால் நடுங்குகிறது.(23) உண்மையில், ஓ கொடியிடை மேனகையே, இஃது உன் தொழிலே. ஆழ்ந்த தியானத்தில் மெய்மறந்த ஆன்மா கொண்டவரும், கடும் தவங்களில் ஈடுபடுபவருமான விஷ்வாமித்திரரால் என்னை என் ஆசனத்தில் {பதவியில்} இருந்து தள்ள முடியும் என்பதை நீ {எண்ணிப்} பார்க்க வேண்டும். நீ சென்று அவரை மயக்கி, அவர் தொடர்ந்து வரும் தவங்களைக் கலங்கடித்து என் நன்மையைச் சாதிப்பாயாக.(24,25) ஓ அழகானவளே! உன் அழகு, இளமை, ஏற்புடைமை, கலைகள், புன்னகை மற்றும் பேச்சால் அவரை மயக்கி, அவரது தவங்களில் இருந்து விலக்கி, அவரை வெல்வாயாக” என்றான் {இந்திரன்}.(26)

இவையாவற்றையும் கேட்ட மேனகை, "அந்தச் சிறப்புமிக்க விஷ்வாமித்திரர் பெரும் சக்தியைக் கொண்ட வலிமைமிக்கத் துறவியாவார். நீர் அறிந்தவாறே அவர் மிகவும் முன்கோபம் கொண்டவருமாவார்.(27) அந்த உயர் ஆன்மாவின் சக்தி, தவங்கள், கோபம் ஆகியவை உம்மையே கவலை கொள்ளச் செய்திருக்கின்றன. நானும் ஏன் கவலை கொள்ளலாகாது?(28) சிறப்புமிக்க வசிஷ்டரே கூடத் தன் பிள்ளைகளின் அகால மரணத்தைக் காணும் வேதனையை அடையச் செய்தவரும் அவரே. முதலில் க்ஷத்திரியராகப் பிறந்திருப்பினும், அடுத்து தன் தவத்துறவுகளின் அறத்தால் பிராமணரானவர் ஆவார்.(29) கடக்கக் கடினமானதும், கௌசிகி என்ற பெயரில் அறியப்படும் புனித ஓடையுமான ஓர் ஆழமான ஆற்றைத் தன் தூய்மைச் சடங்குகளுக்காக {புனித நீராடலுக்காக} உண்டாக்கியவர் அவரே.(30)

தந்தையின் சாபத்தால் வேடுவனாக வாழ்ந்த வந்த அரசமுனி மதங்கன் (திரிசங்கு), கொடும் காலத்தில் {பஞ்ச காலத்தில்} இருந்த விஷ்வாமித்திரரின் மனைவியை ஆதரித்தான்.(31) பஞ்சம் தீர்ந்ததும், திரும்பிக் கொண்டிருந்த விஷ்வாமித்திரர், தனது ஆசிரமம் எங்கிருந்ததோ அந்த ஓடையின் {நதியின்} பெயரை கௌசிகி என்பதிலிருந்து பாரை என்று மாற்றினார்.(32) மதங்கனின் சேவைகளுக்குப் பதிலாக {நன்றிக்கடனாக}, வேள்விகளில் பின்னவனின் {மதங்கனின்} புரோகிதராக ஆனார். {அந்த வேள்விகளில்} தேவர்களின் தலைவரே அச்சத்தால் சோமச்சாற்றை அருந்த சென்றார் {அச்சத்தால் நீரே சென்றீர்}.(33) சிரவணத்தை {திரவோணம் நட்சத்திரத்தை} முதலாகக் கொண்ட எண்ணற்ற நட்சத்திங்களுடன் கூடிய இரண்டாம் உலகத்தைக் கோபத்தால் உண்டாக்கியவர் விஷ்வாமித்திரரே. மேன்மையானவரின் {ஆசான் வசிஷ்டரின்} சாபத்தில் கெட்டிருந்த திரிசங்குவுக்குப் பாதுகாப்பளித்தவர் அவரே.(34) இத்தகு செயல்களைச் செய்த அவரை அணுக நான் அஞ்சுகிறேன். ஓ இந்திரரே, அவரது கோபத்தால் நான் எரிந்துவிடாதவாறு, என்ன வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதை எனக்குச் சொல்வீராக.(35)

தன் காந்தியால் மூவுலகங்களை எரிக்கவும், (தன் பாதத்தின்) ஒரு மிதியால் பூமியை நடுங்கவும் செய்ய இயன்றவர் அவர் {விஷ்வாமித்திரர்}. பெரும் மேருவை {மகாமேருவை} பூமியில் இருந்து பெயர்த்தெடுத்து, எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் வீச இயன்றவர் அவர். ஒருக்கணத்தில் பூமியின் பத்து {திசைப்} புள்ளிகளையும் சுற்றி வர இயன்றவர் அவர்.(36) சுடர்மிக்க நெருப்பைப் போலத் தவ அறங்கள் நிறைந்தவரும், தன் ஆசைகளை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டவருமான ஒருவரை என்னைப் போன்ற ஒரு பெண்ணால் எவ்வாறு தீண்டவும் முடியும்?(37) அவரது வாய் சுடர்மிக்க நெருப்பைப் போன்றது; அவரது கண்களின் கருவிழிகள் சூரியனையும், சந்திரனையும் போன்றன; அவரது நாக்கு யமனையே போன்றது. ஓ தேவர்களின் தலைவரே! {இந்திரரே} என்னைப் போன்ற ஒரு பெண்ணால், எவ்வாறு அவரைத் தீண்டவும் முடியும்?(38) யமன், சோமன், பெரும் முனிவர்கள், சத்யஸ்யர்கள், விஸ்வர்கள், வாஹில்யர்கள் ஆகியோரும் அவரது ஆற்றலை நினைத்தால் அஞ்சுவர். என்னைப் போன்ற ஒரு பெண்ணால் எவ்வாறு அஞ்சாமல் அவரைக் காணவும் முடியும்? (39)

எனினும், ஓ தேவர்களின் மன்னா {இந்திரரே}, உம்மால் ஆணையிடப்படும் நான் எவ்வாறேனும் அம்முனிவரை அணுக வேண்டும். ஆனால், ஓ தேவர்களின் தலைவரே {இந்திரரே}, உம்மால் பாதுகாக்கப்படும் நான் அந்த முனிவரிடம் பாதுகாப்பாக இருக்கும் வகையில் ஏதாவது திட்டத்தைத் தீட்டுவீராக.(40) அந்த முனிவரின் {விஷ்வாமித்திரரின்} முன்னிலையில் நான் விளையாடத் தொடங்குகையில் மாருதன் (காற்று தேவன் {வாயு}) அங்கு வந்து, என் ஆடைகளைக் களவாடுவது நன்று என்றும், உமது ஆணையின் பேரில் மன்மதனும் (காமதேவன்} எனக்கு உதவுவது நன்று என்றும் நான் நினைக்கிறேன்.(41) அந்தச் சந்தர்ப்பத்தில் மாருதன், காட்டில் இருந்து நறுமணத்தை அங்கே கொண்டு வந்து அம்முனிவரை {விஷ்வாமித்திரரை} மயக்கட்டும்” என்று மறுமொழி கூறினாள் {மேனகை}. இதைச் சொல்லியும், தான் கேட்ட அனைத்தும் முறையாகக் கிடைத்ததைக் கண்டும் மேனகை, அந்தப் பெரும் கௌசிகரின் ஓய்வில்லத்திற்குச் சென்றாள்" {என்றார் கண்வர்}.(42)

[2] கௌசிகர் {விஷ்வாமித்திரர்}, மன்னன் குசநாபனின் மகனாவார். வசிஷ்ட முனிவரோடு ஏற்பட்ட போட்டியின் காரணமாக, கடுமையான தவங்களைச் செய்து பிரம்ம ரிஷியானவர். தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டத்தில் உள்ள விஜயாபதி (Vijayapathi) என்னும் ஊரில் விஷ்வாமித்திரருக்குக் கோயில் உள்ளது. இவ்வூரின் அண்மையிலுள்ள ஊர்கள்: இடிந்தகரை, கூடன்குளம் ஆகியனவாகும். 


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்