Thursday, April 04, 2013

விஷ்வாமித்திரரும் மேனகையும் | ஆதிபர்வம் - பகுதி 72

Viswamitra and Menaka! | Adi Parva - Section 72 | Mahabharata In Tamil

(சம்பவ பர்வம் - 8)

பதிவின் சுருக்கம் : விஷ்வாமித்ரரை மயக்கிய மேனகை; மேனகை பெற்றெடுத்த மகள்; சகுந்தலையைக் கண்ட கண்வர்; சகுந்தலையின் பெயர்க்காரணம்; துஷ்யந்தனிடம் தன் கதையைச் சொல்லி முடித்த சகுந்தலை...

கண்வர் தொடர்ந்தார், "அவளால் {மேனகையால்} இப்படிச் சொல்லப்பட்ட சக்ரன் {இந்திரன்}, அனைத்து இடங்களையும் அணுக வல்லவனிடம் (காற்று தேவன் வாயுவிடம்), முனிவரின் {விஷ்வாமித்திரரின்} முன் மேனகை இருக்கும் நேரத்தில், அவளோடு இருக்குமாறு ஆணையிட்டான்.(1) பிறகு, மருட்சியுடையவளும், அழகானவளுமான மேனகை, அந்த ஓய்வில்லத்தில் நுழைந்து, தன் தவங்களால் தன் பாவங்கள் அனைத்தையும் எரித்தவரான விஷ்வாமித்திரர் இன்னும் தவத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதை அங்கே கண்டாள்.(2) முனிவரை {விஷ்வாமித்திரரை} வணங்கிய அவள் {மேனகை}, அவர் முன்பாக விளையாடத் தொடங்கினாள். சரியாக அதே நேரத்தில் மாருதன் {வாயு தேவன்}, சந்திரனைப் போன்ற வெண்மையுடன் கூடிய அவளது {மேனகையினது} ஆடைகளைக் களவாடிச் சென்றான்.(3) அதன்பேரில் பெரும் நாணத்தில் நிறைந்த அவள் {மேனகை}, ஏதோ தான் மாருதனிடம் {வாயு தேவனிடம்} மிகவும் எரிச்சல் அடைந்ததைப் போலவும் தன் ஆடையைப் பிடிக்க ஓடினாள்.(4)



அவள், நெருப்பைப் போன்ற சக்தி கொண்ட விஷ்வாமித்திரரின் கண்களுக்கு முன்பாகவே இவையாவற்றையும் செய்தாள். விஷ்வாமித்திரரும் அவளை அதே மனோபாவத்துடனேயே கண்டார்.(5) ஆடைகள் விலகிய அவள் {மேனகை} களங்கமற்ற {நிறைவான} அழகு கொண்டவளாக இருப்பதையும் அவர் {விஷ்வாமித்திரர்} கண்டார். அந்த முனிவர்களில் சிறந்தவர் {விஷ்வாமித்திரர்}, மேனியில் வயதின் தடயம் ஏதும் இல்லாமால் மிக அழகானவளாக அவள் {மேனகை} இருப்பதைக் கண்டார்.(6) அவளது அழகையும், வித்தகத் தன்மையையும் கண்ட அந்த முனிவர்களில் காளை {விஷ்வாமித்திரர்}, காமங்கொண்டு, தான் அவளது தோழமையை விரும்புவதாகக் குறிப்பால் உணர்த்தினார்.(7) அதன்படியே அவர் அழைக்கவும் செய்தார், களங்கமில்லா அழகுடைய அவளும் அந்த அழைப்புக்கான ஏற்பை வெளிப்படுத்தினாள். பிறகு அவர்கள் ஒருவரோடு ஒருவர் துணையாக நீண்ட காலத்தை அங்கே கழித்தனர் [1].

[1] கும்பகோணம் பதிப்பில் இதன் பிறகு இன்னும் அதிகம் இருக்கிறது. அது பின்வருமாறு, “எப்போதும் தவத்திலிருந்த ரிஷியானவர் இவ்வாறு காமக் குரோதங்களை அடக்காதவராகி அநேக ஆயிர வருஷங்கள் கடந்து போனதை நினைக்காமற்போனார். அந்த ரிஷி வெகுகாலமாகச் சம்பாதித்த தவத்துக்கு அழிவைச் செய்து கொண்டார். தவமிழந்ததனாலேயும் அம்முனிவர் மோகத்தை அடைந்தார். கோபமே இயல்பாகவுடையவரும், காய் கிழங்குகளைப் புசிப்பவருமாகிய முனிவர் பெண் மயக்கத்தில் அகப்பட்டுக் கொண்டு காலலம்புவதனால் ஜலத்தில் சப்தத்தைச் செய்துவிட்டு நதியின் உள் திட்டிலுள்ள ஆசிரமத்திற்குச் சென்றார். தானும் விட்டு நீங்குவதற்கு விரும்பின மேனகை ஜலத்தின் சப்தத்தைக் கேட்டாள். “தபஸினால் ஜ்வலித்த மகிமையுள்ள இவர் போவதும் வருவதும் ஆகாசமார்க்கத்தாலேதான். இப்போது இவர் தவம் குறைந்து போனதினுடைய அடையாளத்தை நான் அறிகிறேன். இப்போது நாம் போவது சரியன்று” என்று சொல்லி, மேனகை ருதுஸ்நானஞ்செய்து, காமத்தின் விருப்பத்தில் அகப்பட்டவராகிய அம்முனிவரின் அருகிற்சென்றாள்” என்றிருக்கிறது. கங்குலியிலும், மன்மதநாததத்தரின் பதிப்பிலும் மேற்கண்ட கதை இல்லை.

மிக நீண்ட காலத்தை ஏதோ அஃது ஒரு நாளை போல எண்ணி, தாங்கள் விரும்பியவாறெல்லாம் ஒருவரோடொருவர் விளையாடியதால், அந்த முனிவர், மேனகையிடம் சகுந்தலை என்ற பெயரில் ஒரு மகளைப் பெற்றார். (8,9) மேனகையும் (தான் கருத்தரித்ததும்) அழகிய இமய மலைகளின் பள்ளத்தாக்கில் ஓடும் மாலினி ஆற்றின் கரைக்குச் சென்றாள். அங்கே அவள் அந்த மகளை ஈன்றெடுத்தாள்[2]. அவள், புதிதாகப் பிறந்த பச்சிளங்குழந்தையை அந்த ஆற்றங்கரையிலேயே விட்டுவிட்டுச் சென்றுவிட்டாள்[3].(10) மனிதர்களற்றதும், சிங்கங்களும், புலிகளும் நிறைந்ததுமான அந்தக் காட்டில் கிடக்கும் புதிதாய்ப் பிறந்த பச்சிளங்குழந்தையைக் கண்ட எண்ணற்ற கழுகுகள் தீங்கிலிருந்து அதை {அந்தக் குழந்தையைப்} பாதுகாப்பதற்காகச் சுற்றிலும் அமர்ந்தன. எந்த ராட்சசனோ, ஊனுண்ணும் விலங்கோ அதன் உயிரை எடுக்கவில்லை.(11,12) அந்தக் கழுகுகள் மேனகையின் மகளைப் {சகுந்தலையைப்} பாதுகாத்தன. நான் அங்கே என் தூய்மையாகும் சடங்கை {நீராடலைச்} செய்யச் சென்று, கழுகுகள் சூழக் காட்டில் தனியாகக் கிடக்கும் அந்தப் பச்சிளம் குழந்தையைக் கண்டேன்[4]. அவளை {சகுந்தலையை} இங்கே கொண்டு வந்து, எனது மகளாக்கிக் கொண்டேன்.(13,14)

[2] கும்பகோணம் பதிப்பில் இதன் பிறகு இன்னும் அதிகம் இருக்கிறது. அது பின்வருமாறு, “தெய்வப் பெண்ணுக்கு ஒப்பானவளும், எல்லா ஆபரணங்களும் அணிந்து கொண்டு அழகிய சயனத்தில் படுத்திருப்பவளுமான அந்தப் பெணைப் பார்த்து, மேனகை, “பெண்ணரசியே! நீ உக்கிரமான தவமுள்ள மஹரிஷியின் வீரியமாக இருக்கிறாய். {அதாவது மானிடப் பெண்ணை ஸ்வர்க்கத்தில் எடுத்துக் கொண்டு போகக் கூடாது}. ஆதலால் தேவகாரியத்திற்காக வந்த நான் ஸ்வர்க்கம் செல்வன்” என்று சொன்னாள்” என்று இருக்கிறது. கங்குலியிலும், மன்மதநாததத்தரின் பதிப்பிலும் மேற்கண்ட கதை இல்லை.

[3] மன்மதநாததத்தரின் பதிப்பிலும், கும்பகோணம் பதிப்பிலும் இங்கே இதன் பிறகு, “தான் வந்த காரியம் வெற்றிகரமாக முடிந்ததும் அவள் விரைவில் இந்திரனிடம் திரும்பினாள்” என்றிருக்கிறது. இவ்வரி கங்குலியில் இல்லை. இது தவறுதலாகவே விடுபட்டிருக்க வேண்டும்.

[4] கும்பகோணம் பதிப்பில் இதன் பிறகு இன்னும் அதிகம் இருக்கிறது. அது பின்வருமாறு, “அழகாகக் கூவுகின்ற பக்ஷியெல்லாம் என்னைப் பார்த்துக் கிட்ட வந்து என் கால்களில் விழுந்து, “பிராமணரே, இந்த விசுமாத்திரருடைய பெண்ணை அடைக்கலம் போல் வைத்துக் காப்பாற்றக் கடவீர். உமது சினேகிதர் காமக் குரோதங்களை அடக்காமல் கௌசிகி நதிக்குச் சென்றார். ஆதலால் தயையோடு அவருடைய பெண்ணை வளர்க்கக்கடவீர்” என்று இனிமையாகவும் தெளிவில்லாமலும் சொல்லின. பிராணிகளின் பாஷைகளையெல்லாம் தெரிந்தவனும், எல்லாப் பிராணிகளிடத்தும் தயையுள்ளவனுமாகிய நான் உடனே அவளைக் கொண்டு வந்து பெண்ணாக வைத்துக் கொண்டேன்” என்று இருக்கிறது. கங்குலியிலும், மன்மதநாததத்தரின் பதிப்பிலும் மேற்கண்ட கதை இல்லை.

உண்மையில், உடலைப் படைப்பவன், உயிரைக் காப்பவன், உணவு கொடுப்பவன் ஆகிய மூவரும், சாத்திரங்களின் படி தரத்தில் தந்தைளாகின்றனர்.(15) காட்டில் தனியாக அவள் சகுந்தங்களால் {பறவைகளால்} சூழப்பட்டிருந்த காரணத்தால், அவள் சகுந்தலை[5] (பறவைகளால் காக்கப்பட்டவள்} என என்னால் பெயரிடப்பட்டாள்.(16) ஓ பிராமணரே, இப்படியே சகுந்தலை எனது மகளானாள் என்பதை அறிவீராக. அந்தக் களங்கமற்ற சகுந்தலையும் என்னைத் தந்தையாகவே கருதுகிறாள்" என்றார் {கண்வ முனிவர்}.(17)

[5] சகுந்த – பறவைகளினால், லா – கிருஹிக்கப்பட்டவள் என்று கும்பகோணம் பதிப்பில் விளக்கம் இருக்கிறது.

அந்த முனிவரால் கேட்கப்பட்டதும், எனது தந்தை {கண்வ முனிவர்} அவரிடம் இதையே சொன்னார். ஓ மனிதர்களின் மன்னா {துஷ்யந்தரா}, இப்படியே நான் கண்வரின் மகளாவேன் என்பதை அறிந்து கொள்வீராக.(18) எனது உண்மை தந்தையை {விஷ்வாமித்திரரை} அறியாத நான் கண்வரையே எனது தந்தையாகக் கருதுகிறேன். இப்படியே, ஓ மன்னா {துஷ்யந்தரே}, எனது பிறப்பைக் குறித்து நான் கேள்விப்பட்டது அனைத்தையும் உமக்குச் சொல்லிவிட்டேன்" என்றாள் {சகுந்தலை}.(19)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்