Saturday, April 13, 2013

துஷ்யந்தனிடம் சென்றாள் சகுந்தலை | ஆதிபர்வம் - பகுதி 74அ

Sakuntala went to Dushmanta! | Adi Parva - Section 74a | Mahabharata In Tamil

(சம்பவ பர்வம் - 10)

பதிவின் சுருக்கம் : ஆண்மகவைப் பெற்றெடுத்த சகுந்தலை; குழந்தையின் அழகு மற்றும் ஆற்றல்; கண்வர் ஆசிரம முனிவர்கள் அவனுக்குச் சர்வதமனன் என்ற பெயர்ச்சூட்டல்; துஷ்யந்தனிடம் சகுந்தலையை அனுப்பி வைத்த கண்வர்...

வைசம்பாயனர், "துஷ்யந்தன் சகுந்தலைக்குச் சத்தியங்களைச் செய்து கொடுத்து ஆசிரமத்தை விட்டு அகன்ற பின், {வாழைமரம் போன்று} வழவழப்பான தொடைகளைக் கொண்ட அவள் {சகுந்தலை} அளவிடமுடியா சக்தி கொண்ட ஓர் ஆண்பிள்ளையைப் பெற்றெடுத்தாள்.(1) அந்தக் குழந்தை மூன்று வயதை அடைந்ததும், எரியும் நெருப்பைப் போன்ற காந்தியைப் பெற்றான். ஓ ஜனமேஜயா! அவன் அழகையும், பெருந்தன்மையையும், நிபுணத்துவத்தையும் கொண்டவனாக இருந்தான்.(2) அறம் சார்ந்த மனிதர்களின் முதன்மையான கண்வர், தர்மத்தின்படியான சடங்குகளையெல்லாம் நாளுக்கு நாள் புத்திசாலியாகும் அந்தக் குழந்தைக்குச் செய்வித்தார்.(3) அந்த ஆண்பிள்ளை முத்துக்களைப் போன்ற பளபளப்பான பற்களைப் பெற்றிருந்தான். உள்ளங்கையில் அனைத்து அதிர்ஷ்ட ரேகைகளையும் பெற்று, சிங்கத்தை வீழ்த்தும் பலம் பெற்றிருந்தான். அகலமான நெற்றியுடன், அழகு வாய்ந்தவனாகவும், பலம் வாய்ந்தவனாகவும் வளர்ந்தான். அவன் தேவலோகக் குழந்தையைப் போன்ற காந்தியுடன் விளங்கி வேகமாக வளர்ந்தான்.(4) அவனுக்கு ஆறு வயதானபோது, பெரும் பலம் கொண்டு, சிங்கங்கள், புலிகள், கரடிகள், எருமைகள், யானைகள் ஆகியவற்றை அடக்கிக் கவர்ந்து, அந்த ஆசிரமத்தைச் சுற்றியுள்ள மரங்களில் கட்டி வைத்தான்.(5)



சில விலங்குகளின் மேல் அமர்ந்து சவாரி செய்து, சில விலங்குகளுடன் சண்டையிட்டு விளையாடி மகிழ்ந்தான். கண்வரின் ஆசிரமத்தில் வசிப்பவர்கள் அவனுக்கு ஒரு பெயரைச் சூட்டினர். {அவர்கள்} "இவன் எந்தப் பலம் மிகுந்த விலங்கையும் கட்டிப்போட்டு அடக்கி வைப்பதால் சர்வதமனன் (அனைத்தையும் அடக்கி கைப்பற்றுபவன்) என்று அழைக்கப்படுவான்" என்று சொன்னார்கள்.(6) இவ்வாறே வீரமும் சக்தியும் பலமும் கொண்டதால் அந்தப் பிள்ளைக்குச் சர்வதமனன் என்ற பெயர் சூட்டப்பட்டது.(7) முனிவர் {கண்வர்} அந்தப் பிள்ளையின் இயல்புக்கு அதீதமானச் செயல்களைக் கண்டு, சகுந்தலையிடம், "இவனை அனைவரும் அறிய, மரபுரிமை சார்ந்த வாரிசாக {இளவரசனாக} நிறுவப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது" என்று சொன்னார்.(8)

அந்தப் பிள்ளையின் பெரும்பலத்தைக் கண்டு, கண்வர் தனது சீடர்களிடம், "சகுந்தலையையும், அவள் மகனையும், அனைத்து அதிர்ஷ்டக் குறிகளையும் கொண்ட அவளது கணவனிடம் {துஷ்யந்தனிடம்} தாமதிக்காமல் கொண்டு செல்வீராக.(9) பெண்கள் தன் தந்தைவழி அல்லது தாய்வழி உறவினர்களிடம் வெகுகாலம் வாழக்கூடாது. அப்படித் தங்குவது, அவர்களது நற்பெயருக்கும், நன்னடத்தைக்கும், அறத்துக்கும் களங்கத்தை ஏற்படுத்தும். அதனால் தாமதிக்காமல் உடனே அவளை {சகுந்தலையை} தாங்கிச் செல்லுங்கள்'', என்றார்.(10)



அந்தச் சீடர்களும் முனிவரிடம் {கண்வரிடம்}, "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி, யானையின் பெயரைக் கொண்ட (ஹஸ்தினாபுரம்) நகரத்திற்குச் சகுந்தலையையும், அவளது மகனையும் {சர்வதமனனையும்} அழைத்துச் சென்றார்கள்.(11) அந்த அழகான புருவங்களைக் கொண்டவள் {சகுந்தலை}, தேவலோக அழகுடன் கூடியவனும், தாமரை இதழ்களைப் போன்ற கண்களை உடையவனுமான அந்தப் பிள்ளையை {சர்வதமனனை} அழைத்துக் கொண்டு, தான் துஷ்யந்தனை முதலில் சந்தித்த அந்த வனத்தைவிட்டு அகன்றாள்.(12)

மன்னனிடம் {துஷ்யந்தனிடம்} சென்ற பிறகு, அவளும் {சகுந்தலையும்}, உதயசூரியனின் காந்தியைக் கொண்ட அவளது பிள்ளையும் {சர்வதமனனும்}, அவனுக்கு {துஷ்யந்தனுக்கு} அறிமுகப்படுத்தப்பட்டார்கள்(13). முனிவரின் {கண்வ முனிவரின்} சீடர்கள் அவளை {சகுந்தலையை} மன்னனிடம் அறிமுகப்படுத்திவிட்டு, ஆசிரமத்திற்குத் திரும்பிச் சென்றார்கள்.

சகுந்தலை, மன்னனை {துஷ்யந்தனை} சரியான முறையில் துதித்து,(14) "இவன் உமது மகனாவான். ஓ மன்னா {துஷ்யந்தரே}, இவன் உமது வாரிசாக நியமிக்கப்படட்டும். ஓ மன்னா! {துஷ்யந்தரே}, தேவர்களைப் போன்ற இந்தப் பிள்ளையை {சர்வதமனனை}, நீர் என்னிடம் பெற்றீர். எனவே, ஓ மனிதர்களில் சிறந்தவரே! {துஷ்யந்தரே}, நீர் எனக்கு அளித்த உறுதிமொழியை நிறைவேற்றுவீராக.(15) ஓ பெரும் நற்பேறு பெற்றவரே! {துஷ்யந்தரே}, என்னுடன் கூடுவதற்கு முன்பு கண்வரின் ஆசிரமத்தில் ஏற்பட்ட நமது ஒப்பந்தத்தை நினைத்துப் பார்ப்பீராக" என்றாள் {சகுந்தலை}.(16)

மன்னன் {துஷ்யந்தன்}, அவளது {சகுந்தலையின்} வார்த்தைகளைக் கேட்டு, அனைத்தையும் நினைத்துப் பார்த்து, "எனக்கு எதுவும் நினைவுக்கு வரவில்லை. ஓ துறவுக் கோலத்தில் இருக்கும் தீய பெண்ணே! நீ யார்?(17) தர்மம் {அறம்}, காமம் {இன்பம்}, அர்த்தம் {பொருள்} ஆகிய செய்கைகளில் எதிலும் உன்னுடனான தொடர்பு எனக்கு இருப்பதாக நினைவில்லையே. செல், அல்லது இரு, அல்லது நீ என்ன விருப்பப்படுகிறாயோ அதைச் செய்வாயாக" என்றான்.(18)

அவனால் {துஷ்யந்தனால்} இப்படிச் சொல்லப்பட்டதும், அந்த அழகான நிறம் கொண்ட அப்பாவி {சகுந்தலை} அதிர்ச்சியடைந்தாள். துன்பம் அவளின் {சகுந்தலையின்} நினைவை இழக்க வைத்தது. சிறிது நேரம் அவள் ஒரு மரக்கட்டை போல் நின்றாள்.(19) இருப்பினும், விரைவாக அவளின் {சகுந்தலையின்} கண்கள் தாமிரத்தைப் போன்று சிவந்தன, உதடுகள் துடிக்கத் தொடங்கின. அவ்வப்போது மன்னனின் {துஷ்யந்தனின்} மேல் படும் அவளின் {சகுந்தலையின்} பார்வை, அவனை {துஷ்யந்தனை} எரிப்பதாகத் தெரிந்தது.(20) தன்னுள் எழும் கோபத்தையும், துறவின் நெருப்பையும், இயல்புக்ககுமீறிய முயற்சியால் தனக்குள்ளேயே கட்டுப்படுத்தினாள்.(21) சிறிது நேரம் தனது நினைவுகளைக் கூர்மைப் படுத்தினாள்.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்