Saturday, April 27, 2013

யயாதியை ஏற்கவைத்த சர்மிஷ்டை! | ஆதிபர்வம் - பகுதி 82

Sarmishtha made Yayati to accept! | Adi Parva - Section 82 | Mahabharata In Tamil

(சம்பவ பர்வம் - 18)

பதிவின் சுருக்கம் : சர்மிஷ்டை யயாதி சந்திப்பு; யயாதியை வேண்டிய சர்மிஷ்டை; சுக்கிராச்சாரியார் தனக்கிட்ட கட்டளையை சர்மிஷ்டையிடம் நினைவுகூர்ந்த யயாதி; சர்மிஷ்டைக்கும், யயாதிக்கும் இடையில் நடந்த உரையாடல்; சர்மிஷ்டையை ஏற்றுக் கொண்ட யயாதி; கருத்தரித்த சர்மிஷ்டை...

வைசம்பாயனர் சொன்னார், "அதன் பிறகு யயாதி, இந்திரனின் நகரத்தைப் போன்ற தனது நகரத்திற்குத் திரும்பி, தனது அந்தப்புரத்திற்குள் நுழைந்து, தனது மனைவி தேவயானியை அங்கு அமர்த்தினான்.(1) பிறகு அந்த ஏகாதிபதி, தேவயானியின் வழிகாட்டுதலின்படி செயற்கை வனமான அசோக மரங்களைக் கொண்ட நந்தவனத்திற்கு அருகில் ஒரு மாளிகையைக் கட்டி விருஷபர்வனின் மகள் சர்மிஷ்டையை அமர்த்தினான்.(2) ஆயிரக்கணக்கான மங்கையர்சூழ இருந்த சர்மிஷ்டைக்குத் தகுந்த மரியாதைகளைச் செய்து, அவளுக்கான உணவுக்கும், ஆபரணங்களுக்கும் ஏற்பாடு செய்தான்.(3)

அந்த நகுஷனின் மைந்தன் பல ஆண்டுகள் அருள்நிறைந்த சூழ்நிலையில் தேவயானியுடனே தேவனைப்போல இன்பமாகக் கழித்தான்.(4) அவளது கனிதரும் காலம் வந்தபோது, அந்த அழகான தேவயானி கருவுற்றாள். அவள் தனது முதல் பிள்ளையாக ஒரு அழகான ஆண்பிள்ளையை ஈன்றெடுத்தாள்.(5) அதன்பிறகு ஆயிரம் வருடம் கழிந்த பிறகு, விருஷபர்வனின் மகள் சர்மிஷ்டை பூப்பெய்தி, தனது கனி தரும் காலம் வந்ததை அறிந்து ஆவல்கொண்டு தனக்குள்ளேயே,(6) "எனது பருவகாலம் வந்துவிட்டது. ஆனால் நான் இன்னும் எனது மணாளனைத் தேர்ந்தெடுக்கவில்லை. என்ன நடந்துவிட்டது? நான் என்ன செய்ய வேண்டும்? எனது ஆசையின் கனிகளை நான் பெறுவது எப்படி?(7) தேவயானி தாயாகிவிட்டாள். எனது இளமை இப்படியே வீணாகக் கழியப்போகிறது. தேவயானி தேர்ந்தெடுத்தவரையே நானும் கணவராகத் தேர்ந்தெடுக்கலாமா?(8) நிச்சயமாக அதுதான் எனது தீர்மானம். அந்த ஏகாதிபதியே எனக்கு மகனைத் தர வேண்டும். அந்த அறம் சார்ந்தவர் என்னைத் தனிமையில் சந்திக்க மாட்டாரா?" என்று நினைத்துக் கொண்டிருந்தாள்.(9)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "சர்மிஷ்டை இப்படித் தனது சிந்தனையில் மூழ்கியிருந்தபோது, எதிர்பாராமல் அசோகவனத்திற்கு வந்த மன்னன், சர்மிஷ்டையைக் கண்டு அமைதியாக நின்றான்.(10) எந்தச் சாட்சியும் இல்லாத இடத்தில் அந்த ஏகாதிபதியைக் கண்டவளும், இனிய புன்னகை கொண்டவளுமான சர்மிஷ்டை, அவனை அணுகித் தனது கரங்களைக் கூப்பி,(11) "ஓ நகுஷ மைந்தரே! சோமன், இந்திரன், விஷ்ணு, யமன், வருணன் மற்றும் உமது அந்தப்புரங்களில் உள்ள மகளிரை யாராலும் காண முடியாது.(12)  ஓ மன்னா! நான் அழகானவள் என்பதையும், நல்ல குலத்தில் பிறந்தவள் என்பதையும் நீர் அறிவீர். ஓ மன்னா! நான் உம்மை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். கனிதரும் {பருவ} காலம் எனக்கு வந்துவிட்டது. அது வீணாகாமல் பார்த்துக் கொள்வீராக" என்றாள்.(13)

அதற்கு யயாதி, "நீ நல்ல குலத்தில் பிறந்தவள் என்பதை நான் நன்கறிவேன். நீ பெருமை மிக்கத் தானவர்களின் குலத்தில் பிறந்தவளாவாய். நீ அழகைக் கொடையாகக் கொண்டிருக்கிறாய். நிச்சயமாக, நான் உனது குணத்தில் எந்தக் களங்கத்தையும் காணவில்லை.(14) நான் தேவயானியுடன் இணைந்த போது, உசானஸ் {சுக்ரன்}, விருஷபர்வனின் மகளை நீ உனது படுக்கைக்கு அழைக்கக்கூடாது என்று எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார்" என்று பதிலுரைத்தான்.(15)

சர்மிஷ்டை, "ஓ மன்னா! கேலிக்காவும், மாதரிடம் கலவிக்காகவும், திருமணத்திற்காகவும், தன் சொல்லால் ஒருவருக்கு மரணமேற்படக்ககூடிய நிலையிலும், தன் செல்வத்தையெல்லாம் இழக்கும்போதும் ஒருவன் பொய்யுரைப்பது பாவமன்று என்று சொல்லப்படுகிறது. பொய்யுரைப்பது இந்த ஐந்து சமயங்களில் மன்னிக்கப்படுகிறது.(16) ஓ மன்னா! கேட்கப்படும் போது, ஒருவன் உண்மையை உரைக்கவில்லை என்பதால் அவன் பாவமிழைக்கிறான் என்பது உண்மையாகாது. ஒரே காரியத்திற்குச் சேவை செய்யவே தேவயானியும், நானும் இங்குத் தோழிகளாக அனுப்பப்பட்டோம். எனவே, நீர் எங்களுள் ஒருவரின் எல்லைக்குள் மட்டும் சுருங்கி இருப்பேன் என்று சொல்வது பொய்மையே ஆகும்" என்றாள்.(17)

யயாதி, "ஒரு மன்னன் என்பவன் தனது குடிமக்களின் கண்களுக்குச் சிறந்த உதாரணமாக இருக்க வேண்டும். பொய்மை பேசும் ஏகாதிபதி நிச்சயமாக அழிவையே சந்திப்பான். என்னைப் பொறுத்தவரை, பேரிழப்பு என்னை அச்சுறுத்தினாலும் கூட நான் பொய்யுரைக்கத் துணிய மாட்டேன்" என்றான்.(18)

சர்மிஷ்டை, "ஓ ஏகாதிபதி! ஒருத்தி தனது தோழியின் கணவரைத் தனது கணவராகவே பார்க்கலாம். ஒருத்தியுடைய தோழியின் திருமணம் என்பது தன்னுடைய திருமணமே ஆகும். நீர் எனது தோழியால் கணவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டீர். எனவே, அதேபோல நீர் எனக்கும் கணவரே ஆவீர்" என்றாள்.(19)

யயாதி, "கேட்பவருக்குக் கேட்பதைக் கொடுப்பது நிச்சயமாக நான் நோற்கும் நோன்பாகும். நீ கேட்பது போலவே, நான் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்வாயாக" என்றான்.(20)

சர்மிஷ்டை, "ஓ மன்னா! பாவத்திலிருந்து என்னைக் காப்பீராக. எனது அறத்தைக் காப்பீராக. உம்மால் தாயாகி, என்னை உலகத்தின் சிறந்த அறத்தைப் பயிலச் செய்வீராக.(21) ஓ மன்னா! மனைவி, அடிமை, மகன் ஆகியோர் சுயமாகச் செல்வம் ஈட்டக்கக்கூடாது என்று சொல்லப்படுகிறது. அவர்கள் ஈட்டுவது அனைத்தும் கொண்டவனுக்கே (தலைவனுக்கே) சொந்தம்.(22) உண்மையில் நான் தேவயானியின் அடிமை. நீர் தேவயானிக்கு தலைவனாகவும், குருவாகவும் இருக்கிறீர். எனவே, தேவயானிக்குப் போலவே, நீரே எனது தலைவனும், குருவும் ஆவீர். எனது விருப்பத்தை நிறைவேற்றுமாறு நான் உம்மைக் கேட்டுக் கொள்கிறேன்" என்றாள்.(23)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "இப்படிச் சர்மிஷ்டையால் சொல்லப்பட்ட யயாதி அவளது பேச்சில் இருந்த உண்மையை எண்ணிப் பார்த்தான். எனவே அவன் சர்மிஷ்டையின் அறத்தைக் காப்பாற்றி அவளைக் கௌரவப்படுத்தினான்.(24) அவர்கள் சிறிது காலத்தைச் சேர்ந்தே கழித்தனர். அதன்பிறகு ஒருவருக்கு ஒருவர் பிரியாவிடை பெற்று எங்கிருந்து வந்தனரோ அங்கேயே தனித்தனியாகப் பிரிந்து சென்றனர்.(25) சில காலம் கழிந்ததும், அந்த இனிய புன்னகைக்கும், அழகான புருவங்களுக்கும் சொந்தக்காரியான சர்மிஷ்டை, அந்த ஏகாதிபதிகளில் சிறந்தவனுடன் ஏற்பட்ட தொடர்பால் கருவுற்றாள்.(26) ஓ மன்னா! {ஜனமேஜயா}! அந்தத் தாமரைக்கண் மங்கை உரிய காலத்தில் தேவர்களைப் போன்ற காந்தியுடனும், தாமரை இதழ்களைப் போன்ற கண்களுடனும் அழகான மகனைப் பெற்றெடுத்தாள்."(27)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்