Monday, May 13, 2013

சந்தனு கங்கையைச் சந்தித்தான்! - ஆதிபர்வம் பகுதி 97

Santanu met Ganga! | Adi Parva - Section 97 | Mahabharata In Tamil

(சம்பவ பர்வம் - 33)

பதிவின் சுருக்கம் : கங்கைக்கும் பிரதீபனுக்கும் இடையில் நடந்த உரையாடல்; சந்தனுவின் பிறப்பு, சந்தனுவிடம் பழைய கதையைச் சொன்ன பிரதீபன்; தன் மனைவியாகும்படி கங்கையை வேண்டிய சந்தனு...

வைசம்பாயனர் சொன்னார், "அனைத்து உயிர்களிடமும் அன்பு பாராட்டுபவனாகப் பிரதீபன் என்றொரு மன்னன் இருந்தான். அவன், பல வருடங்களாகத் தனது தவத்துறவுகளைக் கங்கையின் பிறப்பிடத்தில் செய்து வந்தான்.(1) ஒரு நாள், அழகும், திறமையும் நிறைந்த கங்கை, சொக்கவைக்கும் வடிவில் பெண்ணுருக் கொண்டு, நீரிலிருந்து எழுந்து அந்த மன்னனை {பிரதீபனை} அணுகினாள்.(2) கவர்ச்சிமிக்க அழகைக் கொண்ட அந்தத் தெய்வீக மங்கை, தவத்துறவுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவனான அந்த அரசமுனியை {பிரதீபனை} அணுகி, அண்மையிலும், பலத்திலும் முழுமையான சால மரத்தைப் போன்ற அவனது வலது தொடையில் அமர்ந்தாள்.(3) அழகிய முகம் கொண்ட அந்த மங்கை தன் தொடையில் அமர்ந்ததும், அந்த ஏகாதிபதி அவளிடம், "ஓ இனிமையானவளே! நீ என்ன விரும்புகிறாய்? நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டான்.(4) அதற்கு அந்தக் காரிகை, "ஓ மன்னா! நீர் என் கணவராக வேண்டும் என விரும்புகிறேன். ஓ குருக்களில் முதன்மையானவரே! நீ என்னவராவீராக. தன்விருப்பத்துடன் வரும் ஒரு பெண்ணை மறுப்பதை  ஞானியர் ஒருபோதும் மெச்சுவதில்லை" என்று சொன்னாள்[1].(5)



[1] மன்மதநாததத்தரின் பதிப்பில், "ஓ மன்னா, நான் உம்மை அடைய விரும்புகிறேன். {உம்மிடம்} என்னையே அளிக்கிறேன். என்னை ஏற்பீராக. ஆசையில் நிறைந்திருக்கும் ஒரு பெண்ணை மறுப்பதை நல்லது என ஞானியர் ஒருபோதும் கருதுவதில்லை" என்றிருக்கிறது. கும்பகோணம் பதிப்பில், "ராஜாவே! நான் உன் மீது காதல் கொண்டிருக்கிறேன். உன்னையடைகின்ற என்னை நீயும் அடையக்கடவாய்; காதல் வைத்த பெண்களை விட்டுவிடுவதை ஸாதுக்கள் நிந்திக்கின்றனர்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "ஓ மன்னா, ஓ குருக்களில் சிறந்தவரே! நாம் உம்மை விரும்புகிறேன். என்னை நான் அளிக்கிறேன். பதிலுக்கு என்னை ஏற்று அன்பு செலுத்துவீராக. ஆசையில் நிறைந்திருக்கும் ஒரு பெண்ணை மறுக்கும் செயலை தீமையானது என்றே எப்போதும் ஞானியர் கருதுகின்றனர்" என்றிருக்கிறது.

பிரதீபன், "ஓ அழகிய நிறம் கொண்டவளே, காமவசப்பட்டு அடுத்தவரின் மனைவியரிடமோ, என்வகையைச் சாராத பெண்களிடமோ ஒரு போதும் நான் செல்வதில்லை. உண்மையில் இதுவே என் அறநோன்பாகும்" என்று பதிலுரைத்தான்.(6)

அதற்கு அந்தக் கன்னிகை, "நான் மங்கலமற்றவளோ, அழகற்றவளோ அல்ல. அனைத்து வழிகளிலும் நான் அனுபவிக்கத் தகுந்தவளே.  அரிய அழகுடைய தெய்வீகக் கன்னிகையான {தேவகன்னியான} நான் உம்மைக் கணவராக அடைய விரும்புகிறேன். ஓ மன்னா, என்னை மறுக்காதீர்"என்றாள்.(7)

பிரதீபன், "ஓ காரிகையே, நீ தூண்டும் வழியில் நான் செல்வதைத் தவிர்க்கிறேன். நான் எனது நோன்பை முறித்தால், பாவத்தில் மூழ்கி நான் கொல்லப்படுவேன்.(8) ஓ அழகான நிறமுடையவளே, எனது வலது தொடையில் அமர்ந்தே நீ என்னைத் தழுவினாய். ஆனால், ஓ மருட்சியுடையவளே, அஃது எனது மகள்களும், மருமகள்களும் அமரும் தொடையாகும் என்பதை அறிந்து கொள்வாயாக.(9) இடது தொடையே மனைவிக்குரியது. ஆனால் நீ அதை ஏற்கவில்லை. எனவே, ஓ மங்கையரில் சிறந்தவளே, ஆசைக்குகந்த ஒரு பொருளாக நான் உன்னை அனுபவிக்க முடியாது. நீ என் மருமகளாவாயாக. நான் உன்னை என் மகனுக்காக ஏற்கிறேன்" என்றான்.(10,11)

அதற்கு அந்த மங்கை, "ஓ அறம் சார்ந்தவரே, நீர் சொல்வது போலவே ஆகட்டும். நான் உமது மகனோடு சேர்ந்திருக்கச் செய்வீராக. உம்மீது நான் கொண்டிருக்கும் மரியாதையால், கொண்டாடப்படும் பரதக் குலத்தில் ஒரு மனைவியாக இருப்பேன்.(12) (பாரதக் குலத்தைச் சேர்ந்த) நீரே பூமியில் உள்ள ஏகாதிபதிகள் அனைவருக்கும் புகலிடமாக இருக்கிறீர். நூறு வருடங்களுக்குள் இந்தக் குலம் செய்திருக்கும் அறங்களைக் கூட எண்ண முடியாதவளாக நான் இருக்கிறேன்.(13) இந்தக் குலத்தில் உதித்த கொண்டாடப்பட்ட ஏகாதிபதிகளின் பலரின் மேன்மையும், நற்பண்புகளும் அளவில்லாதவையாகும். ஓ அனைவரின் தலைவரே {பிரதீபரே}, நான் உமது மருமகளாகும்போது, என் செயல்களின் முறைமையை உமது மகனால் புரிந்து கொள்ள இயலாது.(14) இவ்வாறு உமது மகனுடன் வாழும் நான், அவரது நன்மையையும், மகிழ்ச்சியையும் அதிகரிக்கச் செய்வேன். இறுதியாக அவர், நான் அவருக்கு ஈன்று கொடுக்கும் மகன்களின் விளைவாலும், அவரது அறங்கள் மற்றும் நற்பண்புகளாலும் சொர்க்கத்தை அடைவார்" என்றாள்.(15)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "ஓ மன்னா! அப்படிச் சொன்ன அந்தத் தெய்வீகக் காரிகை, அங்கேயே, அப்போதே மறைந்தாள். மன்னனும், தன் உறுதிமொழி நிறைவேறுவதற்காக தன் மகனின் பிறப்புக்காகக் காத்திருந்தான்.(16)  குருக்கள் குலத்தின் ஒளியும், க்ஷத்திரியக் காளையுமான அந்தப் பிரதீபன் புத்திரப் பேறுக்கான விருப்பத்தால் தனது மனைவியுடன் சேர்ந்து தவத்தில் ஈடுபட்டான்.(17) அப்படியே காலம் கடந்து வயதான பிறகு, அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான். அவன் மஹாபிஷனைத் தவிர வேறு எவனும் இல்லை.  தந்தை தவத்துறவுகள் மூலம் தமது ஆசைகளைக் கட்டுப்படுத்தி இருந்த போது பிறந்ததால், அந்தக் குழந்தை சந்தனு என்று அழைக்கப்பட்டான்.(18)

குருக்களில் சிறந்தவனான அந்தச் சந்தனு, அழியாத அருளுலகை ஒருவன் தனது செயல்களால் மட்டுமே அடைய முடியும் என்பதை அறிந்து, அறத்திற்குத் தன்னை அர்ப்பணித்தான்.(19) சந்தனு வளர்ந்து இளமையை அடைந்தவுடன், பிரதீபன் அவனிடம், "ஓ சந்தனு, சில காலத்திற்கு முன்பு, ஒரு தெய்வீகக் காரிகை {தேவ கன்னி}, உனது நன்மைக்காக என்னிடம் வந்தாள்.(20)  அந்த அழகிய நிறம் கொண்டவள் ரகசியமாக உன்னைச் சந்தித்து, பிள்ளைகளை வேண்டிக் கேட்டால், அவளை உன் மனைவியாக ஏற்றுக் கொள்வாயாக.(21) ஓ பாவமற்றவனே, அவளது செயல்பாடுகளின் முறைமையையும், முறையின்மையையும் தீர்மானிக்காதே. மேலும், யாரவள், அல்லது எவருடையவள், அல்லது எங்கிருப்பவள் என்பனவற்றைக் கேட்காமல், என் ஆணையின் பேரால் அவளை உன் மனைவியாக ஏற்பாயாக" என்றான் {பிரதீபன்}.(22)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "பிரதீபன், தனது மகன் சந்தனுவுக்கு இவ்வாறு ஆணையிட்டு, அவனை அரியணையில் அமர்த்தியும்விட்டுக் கானகமேகினான்.(23) மன்னன் சந்தனு பெரும் நுண்ணறிவையும், இந்திரனுக்கு நிகரான பிரகாசத்தையும் கொண்டிருந்தான். வேட்டைக்கு அடிமையாகிக் கானகத்திலேயே தனது பெரும்பங்குப் பொழுதைக் கழித்தான் சந்தனு.(24) அந்த ஏகாதிபதிகளில் சிறந்தவன் எப்போதும் மான்களையும், எருமைகளையும் கொன்று கொண்டு இருந்தான். ஒரு நாள், அவன் கங்கைக் கரையோரமாக அலைந்து கொண்டிருக்கையில், சித்தர்களும், சாரணர்களும் நிறைந்து இருக்கும் ஒரு பகுதிக்கு வந்தான்.(25) அங்கே, ஸ்ரீயைப் போன்ற ஜொலிக்கும் அழகுடனும், வனப்புடனும் கூடிய ஒரு பெண்ணைக் கண்டான்.(26)

அவள் களங்கமற்றவளாக, முத்துப் பல் வரிசையுடன், தெய்வீக ஆபரணங்கள் பூண்டு, மிருதுவான ஆடையை அணிந்து, தாமரை இதழ்களின் இழைகளைப் போலப் பிரகாசத்துடன் இருந்தாள்.(27) அந்த ஏகாதிபதி! அந்த மங்கையைக் கண்டு ஆச்சரியமடைந்தான். ஆனந்தத்தால் அவனுக்கு மயிர்க்கூச்சம் ஏற்பட்டது. அவனது உறுதியான பார்வை, அவளது அழகைக் குடித்துக் கொண்டிருந்தது. ஆனால் திரும்பத் திரும்பக் குடித்தும் அவனுக்குத் தாகம் அடங்கவில்லை.(28) அவளும் அந்தப் பிரகாசமிக்க ஏகாதிபதியைக் கண்டு பெரும் கிளர்ச்சியடைந்து, அவன் மீது பரிவு ஏற்பட்டு, அவன் மீது ஏற்படும் பாசத்தை உணர்ந்தாள். அவள் பார்த்தாள், பார்த்தாள் பார்த்துக் கொண்டேயிருந்து இன்னும் அதிகமாகப் பார்த்தாள்.(29)

அந்த ஏகாதிபதி அவளிடம் மெலிதான வார்த்தைகளால், "ஓ கொடியிடையாளே, நீ தேவியாக இருந்தாலும், தானவனின் மகளாக இருந்தாலும், கந்தர்வ குலத்தைச் சேர்ந்தவளாக இருந்தாலும், அப்ஸரசாக இருந்தாலும், யக்ஷப் பெண்ணாக இருந்தாலும், நாகப்பெண்ணாக இருந்தாலும், அல்லது மனிதப்பெண்ணாகவே இருந்தாலும், ஓ தெய்வீக அழகுடையவளே, நீ எனது மனைவியாகும்படி உன்னிடம் வேண்டுகிறேன்" என்றான்.(30,31)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்