Saturday, June 08, 2013

அரசனே! துரியோதனனைக் கைவிடு!! - ஆதிபர்வம் பகுதி 115

O King! Cast off Duryodhana!! | Adi Parva - Section 115 | Mahabharata In Tamil

(சம்பவ பர்வம் - 51)

பதிவின் சுருக்கம் : காந்தாரிக்கு வரமருளிய வியாசர்; குந்தியின் மீது கொண்ட பொறாமையால் வயிற்றில் ஓங்கி அடித்துக் கொண்ட காந்தாரி; காந்தாரிக்குப் பிறந்த சதைப்பிண்டம்; அப்பிண்டத்தை நூறு பங்காகப் பிரித்து குடத்திலிட்ட வியாசர்; துரியோதனன் பிறந்ததும் தோன்றிய துர்நிமித்தங்கள்; துரியோதனனைக் கைவிடுமாறு திருதராஷ்டிரனிடம் சொன்ன விதுரன்; யுயுத்சுவின் பிறப்பு...

வைசம்பாயனர் சொன்னார், "ஓ ஜனமேஜயா! அதே சமயத்தில் திருதராஷ்டிரன் காந்தாரியிடம் நூறு மகன்களையும், வைசிய மனைவியிடம் {சௌபலையிடம்} ஒரு மகனையும் பெற்றான்.(1) பாண்டு, தனது இரு மனைவிகளான குந்தி மற்றும் மாத்ரி மூலம் ஐந்து மகன்களைப் பெற்றான். பின்னாட்களில் பெரும் தேர்வீரர்களாக இருந்த அந்த ஐவரும், தேவர்களால் குரு பரம்பரைத் தொடர்ச்சிக்காகப் பெறப்பட்டவர்கள்" {என்றார்}.(2)



ஜனமேஜயன், "ஓ பிராமணர்களில் சிறந்தவரே, காந்தாரி அந்த நூறு மகன்களையும் எவ்வாறு பெற்றாள்? எத்தனை வருடங்களில் பெற்றாள்? அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆயுள் எவ்வளவு நிர்ணயிக்கப்பட்டிருந்தது?(3) திருதராஷ்டிரன், வைசிய மனைவி மூலம் ஒரு மகனை எவ்வாறு பெற்றார்? அவர் தன்னிடம் கீழ்ப்படிந்து நடக்கும் தனது அறம்சார்ந்த மனைவி காந்தாரியிடம் எவ்வாறு நடந்து கொண்டார்?(4) பாண்டு ஒரு முனிவரைக் கொன்ற பாவத்தால் சபிக்கப்பட்டிருக்கும்போது, பெரும் தேர் வீரர்களான ஐந்து மகன்களும் அவருக்கு எவ்வாறு பிறந்தனர்?(5) இவை அனைத்தையும் குறித்து முழுமையாக எனக்குச் சொல்வீராக. எனது மூதாதையரைப் பற்றி அனைத்தும் அறிந்து கொள்ளும் தாகம் எனக்குத் தணியவில்லை" என்று கேட்டான் {ஜனமேஜயன்}.(6)

வைசம்பாயனர் சொன்னார், "ஒரு நாள் தனது வசிப்பிடத்திற்குப் பசியுடனும், தாகத்துடனும் களைப்பாக வந்த பெரும்  துவைபாயனரை {வியாசரை}, மிகுந்த மரியாதையுடனும் கவனத்துடனும் காந்தாரி கவனித்துக் கொண்டாள். காந்தாரியின் விருந்தோம்பலால் மகிழ்ந்த முனிவர், அவள் கேட்டவாறே அவளது தலைவனுக்கு {திருதராஷ்டிரனுக்கு} இணையான  பலமும், சாதனைகளும் கொண்ட நூறு பிள்ளைகளைப் பெறும் ஒரு வரத்தைக் கொடுத்தார்.(7, 8) சில காலம் கழித்துக் கருவுற்ற காந்தாரி, அந்தக் கருவை இரு முழு வருடங்களுக்குத் தனது கருவறையில் தாங்கினாள். ஆனால் பிள்ளை பிறக்கவில்லை. அவள் {காந்தாரி} அதனால் பெரும் துயரத்திற்கு ஆளானாள்.(9) அப்போது, குந்தி காலைக் கதிரவனைப் போன்ற பிரகாசத்துடன் ஒரு மகனைப் பெற்றெடுத்தாள் என்பதைக் கேள்வியுற்றாள். இவ்வளவு வருடங்கள் காத்திருந்ததால் பொறுமையிழந்தும், துயரத்தின் மிகுதியாலும், தனது கணவன் அறியாதவாறு தனது வயிற்றில் ஓங்கிப் பலமாக அடித்தாள்.(10,11) அதனால் இரு வருடங்கள் வளர்ச்சி கண்டிருந்ததும், இரும்புப் பந்து போன்றதுமான ஒரு சதைப்பிண்டம் வெளியே வந்து விழுந்தது.(12) அவள் அதை வெளியே தூக்கியெறிய முற்படும்போது, தமது ஆன்ம பலத்தால் நடப்பதை அறிந்த துவைபாயனர் {வியாசர்}, அங்கே வந்து, அந்தச் சதைப்பிண்டத்தைக் கண்டார்.(13) சுபலனின் மகளிடம் (காந்தாரியிடம்) "நீ என்ன செய்துவிட்டாய்?" என்று கேட்டார்.

காந்தாரி, தனது உணர்ச்சிகளை மறைக்க முயலாமல், அம்முனிவரிடம்,(14) "குந்தி சூரியனைப் போன்ற பிரகாசத்துடன் மகனைப் பெற்றெடுத்தாள் என்பதைக் கேள்விப்பட்டுத் துயரத்தால் எனது வயிற்றில் ஓங்கி அடித்தேன்.(15) ஓ முனிவரே {வியாசரே}, நீர் எனக்கு நூறு மகன்கள் பிறப்பார்கள் என்று வரமளித்திருக்கிறீர். ஆனால் நூறு மகன்களுக்குப் பதில் பெரும் சதைப் பிண்டமே வந்திருக்கிறது!" என்றாள்.(16)

வியாசர், "சுபலனின் மகளே, நிலை அப்படித்தான் இருக்கிறது. ஆனால் எனது வார்த்தைகள் பொய்த்துப் போகாது. நான் கேலிக்காகக் கூடப் பொய் பேசியதில்லை. மற்ற நேரங்களிலும் அப்படிப் பேச எனக்கு அவசியமில்லை.(17) தூய்மையாக்கப்பட்ட நெய்யானது நூறு குடங்களில் ஊற்றப்பட்டு இங்கே உடனே கொண்டு வரப்படட்டும். அவை ஒரு மறைவான இடத்தில் வைக்கப்படட்டும். அதே நேரத்தில், இந்தச் சதைப் பிண்டத்தில் குளிர்ந்த நீர் தெளிக்கப்படட்டும்" என்றார்".(18)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "அந்தச் சதைப் பிண்டத்தில் நீர் தெளிக்கப்பட்டு, ஒவ்வொரு துண்டும் ஒரு கட்டைவிரலளவு இருக்கும்படி நூற்றொரு கூறுகளாகப் பிரிக்கப்பட்டன.(19,20) பிறகு அவை தூய்மையாக்கப்பட்ட நெய் இருந்த பானைகளில் இடப்பட்டு மறைவான இடத்தில் வைக்கப்பட்டுக் காத்துவரப்பட்டன.(21) அந்தச் சிறப்புமிகுந்த வியாசர், சுபலனின் மகளிடம் (காந்தாரியிடம்) இரு முழு வருடங்கள் கழிந்த பின்னர் அப்பானைகளைத் திறந்து பார்க்கச் சொன்னார்.(22) ஞானியான துவைபாயனர் (வியாசர்) இந்த ஏற்பாடுகளைச் செய்துவிட்டு, ஆன்மிகத்திற்குத் தன்னை அர்ப்பணிக்க இமயத்திலிருக்கும் மலைகளுக்குச் சென்றுவிட்டார்.(23)

துண்டுகளாக்கப்பட்டு அடைத்து வைக்கப்பட்ட பானையிலிருந்து குறித்த நேரத்தில், மன்னன் துரியோதனன் பிறந்தான். பிறப்பின் அடிப்படையில் மன்னன் யுதிஷ்டிரனே மூத்தவனாக இருந்தான்.(24) துரியோதனன் பிறந்த செய்தி பீஷ்மருக்கும், ஞானியான விதுரனுக்கும் தெரிவிக்கப்பட்டது. துரியோதனன் பிறந்த அதே நாள், பெரும் கரம் கொண்ட பெரும் வீரன் பீமனுக்கும் பிறந்த நாளாக இருந்தது.(25)

துரியோதனன் பிறந்ததும், கழுதை போல கத்த்திக் கொண்டே அழத் தொடங்கினான்.(26) அவ்வொலியைக் கேட்ட கழுதைகளும், கழுகுகளும், ஓநாய்களும், காகங்களும் தங்கள் தங்கள் அலறல்களைத் தொடர்ச்சியாக எழுப்பின. கடும் காற்று வீசத் தொடங்கியது. பல இடங்களில் தீப்பற்றி எரிந்தன.(27)

இதனால் பேரச்சம் அடைந்த மன்னன் திருதராஷ்டிரன், பீஷ்மர், விதுரன், குருக்களின் நலனை விரும்புபவர்கள் மற்றும் கணக்கிலடங்கா பிராமணர்கள் ஆகியோரையும் அழைத்து, "இந்த இளவரசர்களில் யுதிஷ்டிரனே மூத்தவனும், நமது குலத்தைத் தொடரச் செய்பவனும் ஆவான். தனது பிறப்புத் தகுதியின் அறத்தைக் கொண்டே அவன் இந்நாட்டை அடைந்துவிட்டான். அதில் நாம் கருத்து கூற எதுவுமில்லை.(28,29) ஆனால், அவனுக்குப் பிறகு, எனது இந்த மகன் மன்னனாக முடியுமா? சட்டப்படி சரியானதும், சூழ்நிலைக்குகந்ததும் எதுவோ, அஃதை எனக்குச் சொல்லுங்கள்" என்று கேட்டான்.(30)

இந்த வார்த்தைகள் வெளிப்பட்டதும், ஓ பாரதா {ஜனமேஜயா}, நரிகளும் ஊனுண்ணிகளும் {மாமிசம் உண்ணும் விலங்குகளும்} அனைத்துப் பக்கங்களில் இருந்தும் தொடர்ந்து ஊளையிடத் தொடங்கின.(31) அந்தத் தீய சகுனங்களைக் கண்ட பிராமணர்களும், ஞானியான விதுரனும்,(32) "ஓ மன்னா! ஓ மனிதர்களில் காளையே, உமது மூத்த மகனின் பிறப்பையொட்டி, அச்சத்தையேற்படுத்தும் பல தீய சகுணங்களைக் காண முடிகிறது.(33) இவன் நமது குலத்தை அழிக்கப் பிறந்தவன் என்பது இதனால் உறுதியாகிறது. இவனைக் கைவிடுவதில்தான் அனைவரின் {நமது குலத்தின்} செழிப்பு அடங்கியுள்ளது. இவனை வைத்துக் கொண்டால் பேராபத்து விளையும்.(34) ஓ மன்னா! நீர் இவனை மட்டும் கைவிட்டால் கூட, மீதம் தொண்ணூற்று ஒன்பது மகன்கள் இருக்கின்றனர். நீர் உமது குலத்திற்கு நன்மை செய்ய விரும்பினால் இவனைக் கைவிடுவீராக. ஓ பாரதா, ஓ மன்னா! இந்த உமது ஒரு குழந்தையைக் கைவிட்டு உலகத்திற்கும், உமது குலத்திற்கும் நன்மையைச் செய்வீராக.(35) ஒரு குடும்பத்திற்காக, தனி மனிதன் ஒருவன் கைவிடப்படலாம். ஒரு கிராமத்திற்காக ஒரு குடும்பம் கைவிடப்படலாம். மொத்த நாட்டிற்காகவும் ஒரு கிராமம் கைவிடப்படலாம். தனது ஆன்ம நலத்திற்காக ஒருவன் மொத்த உலகத்தையும் கைவிடலாம் எனச் சொல்லப்படுகிறது" என்று சொன்னார்கள்.(36)

விதுரரும், பிராமணர்களும் இப்படிச் சொல்லியும், மன்னன் திருதராஷ்டிரனின் இதயம் மகனுக்கான பாசத்தினால் அந்த அறிவுரையை ஏற்கவில்லை.(37) ஓ மன்னா! அதன் பிறகு, ஒரு மாத காலத்திற்குள், மொத்தம் நூறு மகன்களும், மற்றும் ஒரு மகளும் திருதராஷ்டிரனுக்குப் பிறந்தார்கள்.(38) காந்தாரி கருவுற்று அதிக காலம் பீடிக்கப்பட்டிருந்தபோது, ஒரு வைசியப் பணிப்பெண் திருதராஷ்டிரனைக் கவனித்து வந்தாள்.(39) ஓ மன்னா! அந்த வருடத்தில், அவளிடம் (பணிப்பெண்ணிடம்) சிறப்பு மிகுந்த திருதராஷ்டிரன், பெரும் புத்திக்கூர்மையுடைய மகன் ஒருவனைப் பெற்றான். அவன் பின்னாட்களில் யுயுத்சு என்று பெயரிடப்பட்டான். ஒரு க்ஷத்திரியனால், ஒரு வைசியப் பெண்மணிக்குப் பிறந்ததனால் அவன் கர்ணன் {கரணன்} {குந்தியின் மகன் அல்லன்} என்றும் அழைக்கப்பட்டான்.(40) இவ்வாறே அந்த ஞானி திருதராஷ்டிரனுக்கு, வீரர்களாகப் பெரும் தேர்வீரர்களாக நூறு மகன்களும், ஒரு மகளும், வைசியப் பெண்மணியிடம் பெற்ற மற்றுமொரு மகனான பெரும் சக்தியும் வீரமும் கொண்ட யுயுத்சுவும் பிறந்தனர்" {என்றார் வைசம்பாயனர்}.(41)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்