Saturday, June 01, 2013

கற்புக்கரசி காந்தாரி! - ஆதிபர்வம் பகுதி 110

Chaste Gandhari! | Adi Parva - Section 110 | Mahabharata In Tamil

(சம்பவ பர்வம் - 46)

பதிவின் சுருக்கம் : விதுரனிடம் கலந்தாலோசித்த பீஷ்மர்; சிவனிடம் வரம்பெற்ற காந்தாரி; காந்தார மன்னன் சுபலனிடம் தூதர்களை அனுப்பிய பீஷ்மர்; ஆடம்பரமாக நடந்த திருதராஷ்டிரன் காந்தாரி திருமணம்; கற்புக்கரசியான காந்தாரி...

பீஷ்மர் விதுரனிடம், "இந்த நமது கொண்டாடப்படும் குலம் {குரு குலம்}, பெரும் சாதனைகளையும் அனைத்து அறங்களையும் உள்ளடக்கி இந்தப் பூமியின் அனைத்து ஏகாதிபதிகள் மீதும் ஆதிக்கத்தைக் கொண்டிருந்தது.(1) பல அறம் சார்ந்த, சிறப்புமிகுந்த ஏகாதிபதிகள் இந்த {குரு} குலத்தில் தோன்றியதால் அதன் புகழ் நிலைத்திருக்கிறது. நமது {குரு}குலம் அருகிப் போவதிலிருந்து காக்கச் சிறப்பு மிகுந்த கிருஷ்ணரும் (துவைபாயனரும் {வியாசரும்}), சத்தியவதியும், நானும் உங்கள் மூவரையும் {திருதராஷ்டிரன், பாண்டு, விதுரன்} வளர்த்தோம்.(2,3) இந்தக் {குரு} குலத்தை மறுபடியும் கடலென விரிவடையச் செய்வது உனக்கும் எனக்கும் கடமையாகும்.(4) நமது குலத்தோடு தொடர்பு கொள்ளக்கூடிய தகுதியுடன் மூன்று மங்கையர் இருப்பதாக நான் கேள்விப்படுகிறேன். ஒருத்தி யாதவக் குல மகள் (சூரசேனன் மகள்- {குந்தி}, இன்னொருத்தி சுபலன் மகள் {காந்தாரி}, மற்றொருத்தி மத்ர இளவரசி {மாத்ரி}.(5) ஓ மகனே {விதுரா}, இந்த மங்கையர் அனைவரும் நிச்சயமாக அரச இரத்தம் உடையவர்களே. அவர்கள் அழகும் சுத்தமான இரத்தமும் கொண்டு நமது குடும்பத்துடன் சம்பந்தம் வைத்துக் கொள்ளும் தகுதியுடன் உள்ளனர்.(6) ஓ புத்திசாலி மனிதர்களின் முதன்மையானவனே {விதுரனே}, நமது {குரு}குல வளர்ச்சிக்காக அவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நீ என்ன நினைக்கிறாய் என்பதைச் சொல்" என்றார் {பீஷ்மர்}.(7)


இப்படிக் கேட்கப்பட்ட விதுரன், "நீர் எங்கள் தந்தையும் தாயும் ஆவீர். நீரே எங்கள் ஆன்ம ஆசானுமாவீர். எனவே, உங்கள் பார்வையில் எங்களுக்கு எது சிறந்தது என்று படுகிறதோ. அதைச் செய்யும்" என்றான்.(8)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "விரைவில் பீஷ்மர், சுபலனின் இனிய மகள் காந்தாரி ஹரனிடம் {சிவனிடம்} இருந்து நூறு மகன்களைப் பெறுவதற்கான வரத்தைப் பெற்றாள் என்பதைப் பிராமணர்கள் மூலம் அறிந்தார். குருக்களின் பாட்டனானான பீஷ்மர் இதைக் கேட்டு, காந்தார மன்னனிடம் தனது தூதுவர்களை அனுப்பினார். முதலில் மன்னன் சுபலன் குருட்டு மாப்பிள்ளைக்குத் {திருதராஷ்டிரனுக்குத்} தன் மகளைக் {காந்தாரியைக்} கொடுக்கத் தயங்கினான். பின்பு, குருக்களின் புகழையும், நடத்தைகளையும், அவர்களது இரத்தத்தையும் உணர்ந்து, தனது அறம் சார்ந்த மகளைத் திருதராஷ்டிரனுக்குக் கொடுக்க முடிவு செய்தான்.(9-12)

அந்தக் கற்புக்கரசியான காந்தாரி, திருதராஷ்டிரன் குருடன் என்பதைக் கேள்விப்பட்டாள். தனக்கு அவனை {திருதராஷ்டிரனை} மணமுடிக்கத் தனது பெற்றோர் முடிவு செய்துள்ளனர் என்பதையறிந்து, தனது எதிர்காலக் கணவன் மீதிருந்த அன்பு மற்றும் மரியாதையால் தனது கண்களைக் கட்டிக் கொண்டாள். சுபலனின் மகன் சகுனி, இளமையுடனும் அழகுடனும் இருந்த தனது தங்கையைக் {காந்தாரியை} குருக்களிடம் அழைத்து வந்து, முறைப்படித் திருதராஷ்டிரனுக்குக் கொடுத்தான்.(13-16)

காந்தாரி பெரும் மதிப்புடன் வரவேற்கப்பட்டாள். அவர்களது திருமணம் பீஷ்மரின் வழிகாட்டுதல்படி பெரும் ஆடம்பரத்தோடு நடத்தப்பட்டது. வீரனான அந்தச் சகுனி, பல மதிப்புமிக்கப் பொருட்களுடன் தனது தங்கையை {காந்தாரியை} அளித்துப் பீஷ்மரின் வாழ்த்துகளைப் பெற்றுத் தனது நகருக்குத் திரும்பிச் சென்றான்.(17) ஓ பாரதக் குலத்தோனே {ஜனமேஜயனே}, அந்த அழகான காந்தாரி தனது நடத்தையாலும், அன்பான கவனிப்பாலும் எல்லாக் குருக்களையும் மனநிறைவு கொள்ளச் செய்தாள்.(18) காந்தாரி, தனது கணவனுக்குத் {திருதராஷ்டிரனுக்குத்} தன்னை முழுமையாக அர்ப்பணித்து அவனைக் கவனித்துக் கொண்டு, அவளது நன்னடத்தையால் பெரியவர்களை மனநிறைவு கொள்ளச் செய்தாள். அவள் {காந்தாரி} கற்புக்கரசியாதலால், தனது கணவனைத் {திருதராஷ்டிரனைத்} தவிர யாதொரு ஆடவனையோ, பெரியவரையோ குறிப்பிட்டு ஒரு வார்த்தையும் பேசாதிருந்தாள்" {என்றார் வைசம்பாயனர்}[1].(19)

[1] கும்பகோணம் பதிப்பில் இதற்குப் பின்னும் அதிக செய்தி சொல்லப்படுகிறது. அது பின்வருமாறு: "பீஷமரால் அப்போதே வரிக்கப்பட்டு, காந்தாரராஜனாகிய ஸுபலன், அந்தக் காந்தாரியின் ஸஹோதரிகளாகிய பத்துக் கன்னிகைகளைப் பின்னும் திருதராஷ்டிரனுக்குக் கொடுத்தான்; ஸத்யவ்ரதை, ஸத்யஸேனை, ஸுதேஷ்ணை, ஸம்ஹிதை, தேஜஸ்ரவை, ஸுஷ்ரவை, நிக்ருதி, சுபை, சம்படை, தசார்ணை என்று பெயர்பெற்ற காந்தார ராஜாவின் பெண்கள் பதின்மரையும் ஒரே தினத்தில் திருதராஷ்டிரன் பாணிக்ரகணஞ் செய்து கொண்டான். அதன்பின், சிறந்த வில்லாளியும், சந்தனுபுத்திரருமான பீஷ்மர் ஆங்காங்கிருந்து நூற்றுக்கு மேற்பட்ட ராஜபுத்திரிகளைத் தருவித்துத் திருதராஷ்டிரனுக்குக் கொடுப்பித்தார்" என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பிலும், பிபேக்திப்ராயின் பதிப்பிலும் இந்த் தகவல் சொல்லப்படவில்லை.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்