Saturday, June 01, 2013

பிறந்தான் கர்ணன்! - ஆதிபர்வம் பகுதி 111

The birth of Karna! | Adi Parva - Section 111 | Mahabharata In Tamil

(சம்பவ பர்வம் - 47)

பதிவின் சுருக்கம் : குந்திபோஜனின் இல்லத்தில் வசித்து வந்த குந்தி; துர்வாசரை மரியாதையுடன் கவனித்துக் கொண்ட குந்தி; குந்திக்கு வரமளித்த துர்வாசர்; மந்திரத்தைச் சோதித்தப் பார்த்த குந்தி; சூரியன் வந்தான்; கர்ணன் பிறந்தான்; கர்ணனை ஆற்றில் மிதக்கவிட்ட குந்தி; ராதையிடம் வளர்ந்த கர்ணன்; இந்திரனின் சக்தி ஆயுதத்தைப் பெற்ற கர்ணன்...

வைசம்பாயனர் தொடர்ந்தார், "யாதவர்களுக்குள் அவர்களது தலைவனாகச் சூரன் {சூரசேனன்} என்று ஒருவன் இருந்தான். அவன் வசுதேவரின் {கிருஷ்ணனின் தந்தையான வசுதேவரின்} தந்தையாவான். அவனுக்குப் {சூரசேனனுக்கு} பிருதை என்று அழைக்கப்பட்ட மகள் ஒருத்தியும் இருந்தாள். அவள் {பிருதை} இந்தப் பூமியில் உள்ளவர்களுடன் ஒப்பிடமுடியாத அளவு அழகுடையவளாக இருந்தாள்.(1) ஓ பாரதக் குலத்தோனே {ஜனமேஜயனே}, சூரன் எப்போதும் உண்மை பேசுபவனாக இருந்தான். அவன், தான் முன்பே வாக்குக் கொடுத்திருந்தபடி, பிள்ளையற்றிருந்த தனது நண்பனும், தன் அத்தையின் மகனுமான {மைத்துனனுமான = தந்தையுடைய சகோதரியின் மகனான} குந்திபோஜனுக்குத் தனது மகளைத் தத்துக் {சுவீகாரமாகக்} கொடுத்தான்.(2,3) பிருதை {குந்தி}[1] தனது வளர்ப்புத் தந்தையின் {குந்திபோஜனின்} இல்லத்தில் தங்கியிருந்து விருந்தினர்களையும், பிராமணர்களையும் நன்கு கவனித்துக் கொண்டாள். அறத்தின் மறைந்த உண்மைகளைத் தெளிவாக உணர்ந்து கடும் தவமிருந்த பயங்கரமான பிராமணரான துர்வாசர் ஒருமுறை அங்கு வந்திருந்தார். அப்போது அவள் {குந்தி} அவரை {துர்வாசரை} மரியாதையுடன் கவனித்துக் கொண்டள்.(4,5)



[1] இந்தப் பிருதை. குந்திபோஜனின் மகளாக வளர்ந்ததால் குந்தி என்றே அழைக்கப்பட்டாள்.

அவளது மரியாதைமிக்கக் கவனிப்பால் மனம்நிறைந்த அம்முனிவர் {துர்வாசர்}, (தன் இணையுடன் கலந்திருக்கும் ஒரு மானைக் கொன்ற அறமற்ற செயலுக்காகப் பாண்டு சாபம் பெற்றதன் விளைவால் வரப்போகும்) எதிர்காலத் துயரங்களைத் தனது ஆன்ம பலத்தால் கண்டு, அவளுக்கு {குந்திக்கு}, அவள் விரும்பிய தேவர்களை அவளுக்குப் பிள்ளை வரம் கொடுக்க வேண்டக்கூடிய, ஓர் அழைப்புச் சூத்திரத்தை {மந்திரத்தை} உபதேசித்தார்.(6) அம்முனிவர் {துர்வாசர்}"இந்த மந்திரத்தால் நீ அழைக்கும் தேவர்கள், நிச்சயம் உன்னை அணுகி, உனக்குப் பிள்ளைகளைக் கொடுப்பார்கள்" என்றார்.(7) இப்படி அந்தப் பிராமணரால் {துர்வாசரால்} சொல்லப்பட்ட அந்த இனிமையான குந்தி (பிருதை), ஆர்வத்தால் உந்தப்பட்டு, ஆர்க்க தேவனை (சூரியனை) அழைத்தாள்.(8) அந்த மந்திரங்களை உச்சரித்தவுடனேயே, அந்தப் பிரகாசமான தேவன் தன்னை அணுகுவதை அவள் {குந்தி} கண்டாள். அந்த இயல்புக்குமீறிய காட்சியைக் கண்ட குற்றங்குறையற்ற அந்த மங்கை {குந்தி} ஆச்சரியங்கூடிய அதிர்ச்சியடைந்தாள்.(9) ஆனால் விவஸ்வான் (சூரியன்) அவளை {குந்தியை} அணுகி, "இதோ நான் இங்கிருக்கிறேன். ஓ கருங்கண் பெண்ணே, நான் உனக்கு என்ன செய்ய வேண்டும்? சொல்வாயாக" என்றான்.(10)

இதைக் கேட்ட குந்தி, "ஓ எதிரிகளை அழிப்பவனே {சூரியனே}, ஒரு பிராமணர் எனக்கு இந்த மந்திரத்தை அருளினார். ஓ தலைவா, அதன் வலிமையைச் சோதிக்கவே நான் உன்னை அழைத்தேன்.(11) உன்னிடம் இந்தக் குற்றத்திற்காக நான் தலை வணங்குகிறேன். ஒரு பெண் எக்குற்றம் செய்தாலும், அவள் மன்னிப்பைப் பெறத் தகுதியானவளே" என்றாள்.(12)

அதற்குச் சூரியன், "துர்வாசர் உனக்கு இந்த வரத்தை அளித்தார் என்பதை நான் அறிவேன். ஓ மருட்சியுடைய மங்கையே {குந்தியே}, உனது அச்சத்தை விடு, உனது அணைப்பை எனக்குக் கொடு.(13) இனிமையானவளே என் வருகை பலனற்றதாக முடியாது. அது கனி கொடுக்க வேண்டும். நீயே என்னை அழைத்தாய். அஃது ஒன்றுக்குமில்லையென்றால், உனது வரம்புமீறிய செயலாகவே அது கருதப்படும்" என்றான்.(14)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "இப்படிப் பேசிய விவஸ்வான் {சூரியன்}, அவளது {குந்தியின்} அச்சத்தை அகற்ற மேலும் பலவற்றைச் சொன்னான். ஆனால், ஓ பாரதா, அந்த இனிமையான மங்கை, பண்புடைமை மற்றும் தனது உறவினர்களிடம் உள்ள பயத்தால், அவனது கோரிக்கையை ஏற்கத் துணியவில்லை. ஓ பாரதகுலத்தின் காளையே {ஜனமேஜயனே}, ஆர்க்கன் {சூரியன்} அவளிடம் {குந்தியிடம்} மறுபடியும்,(15,16) "ஓ இளவரசி, இந்தக் காரியம் உனக்குப் பாவத்தைக் கொடுக்காது, எனக்காக, இந்த எனது விருப்பத்தை நிறைவேற்றுவாயாக" என்றான். குந்திபோஜனின் மகளிடம் இப்படிச் சொல்லி உலகத்தை ஒளியூட்டும் அந்தச் சிறப்புமிக்கத் தபனன், அவனது விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டான். இந்தத் தொடர்பால், உடனடியாக ஒரு மகன் பிறந்தான். அந்தக் குழந்தை இயற்கையான கவசத்துடனும், முகத்தைப் பிரகாசிக்க வைக்கும் காது குண்டலங்களுடனும் இருந்தது. அந்த மகனே பின்னாட்களில் கர்ணன் என்று உலகம் முழுவதும் அறியப்பட்டான். அந்த வீரன் கர்ணன் ஆயுதம் பயன்படுத்துபவர்களில் முதன்மையானவனாக இருந்து, நற்பேறு அருளப்பட்டு, தேவலோகக் குழந்தை போல அழகுடன் இருந்தான்.(17-19)

குழந்தை பிறந்த பிறகு, அந்தச் சிறப்பு மிகுந்த தபனன் பிருதைக்கு {குந்திக்கு} அவளது கன்னித்தன்மையைத் திரும்பக் கொடுத்து விண்ணேகினான்.(20) விருஷ்ணி குலத்தின் அந்த இளவரசி தனக்குப் பிறந்த மகனைக் கண்டு துயரடைந்து, எது சிறந்ததோ அதைச் செய்ய நினைத்தாள்.(21) தனது உறவினர்களிடம் கொண்ட பயத்தால், தனது குற்றத்திற்கான சாட்சியை மறைக்க முடிவெடுத்தாள். பெரும் பலம் கொண்ட தனது வாரிசை நீரில் விட்டாள்.(22) நீரில் விடப்பட்ட அந்தக் குழந்தையைச் சூத சாதியில் பிறந்தவனும், அனைவராலும் அறியப்பட்டவனுமான ராதையின் கணவன் {அதிரதன்}, அந்த நீரிலிருந்து எடுத்து, அவனும் அவனது மனைவியும் சேர்ந்து அக்குழந்தையைத் தங்கள் மகனாகவே வளர்த்தனர்.(23) இயற்கையான கவசமும், காது குண்டலங்களும் கொண்டிருந்ததால், ராதையும் அவளது கணவனும் {அதிரதனும்} அக்குழந்தைக்கு வசுசேனன்[2] என்று பெயர் வைத்தனர்.(24) அவன் பெரும் பலத்துடன் வளர்ந்து, எல்லா ஆயுதங்களிலும் நிபுணத்துவம் பெற்றான். அவன் பெரும் சக்தியைத் தன்னிடம் கொண்டு, முதுகில் வெப்பக்கதிர்கள் சுடும் வரை (அதிகாலை துவங்கி மதியம் வரை) சூரியனை வழிபட்டான்.(25)அப்படி அவன் {கர்ணன்} சூரியனை வழிபடும் நேரத்தில் யாசித்து வரும் பிராமணர்களுக்குக் கொடுக்க முடியாது என்று சொல்ல அவனுக்குப் பூமியில் யாதொரு பொருளும் இருக்கவில்லை.(26)

[2] சம்ஸ்க்ருதத்தில் "செல்வத்துடன் பிறந்தவன்" என்று பொருள் தரும் பெயர்.

இந்திரன் தனது மகன் அர்ஜுனனுக்கு நன்மை செய்ய விரும்பி, பிராமண உருக் கொண்டு, வசுசேனனை {கர்ணனை} அணுகி அவனது இயற்கைக் கவசத்தை யாசகமாகக் கேட்டான்.(27) இப்படிக் கேட்டுக் கொள்ளப்பட்ட கர்ணன், உடனே தனது இயற்கை கவசத்தை அறுத்து, பிராமண உருவில் இருந்த இந்திரனிடம் மரியாதையுடன் கைக்கூப்பிக் கொடுத்தான்.(28) தேவர்களின் தலைவன் {இந்திரன்} அந்தப் பரிசை ஏற்றுக் கர்ணனின் ஈகையால் மனநிறைவு கொண்டான். எனவே, அவன் வசுசேனனுக்கு அருமையான கணையொன்றைக் கொடுத்து,(29) "எந்த ஒருவனை (ஒருவனை மட்டுமே), அவன் தேவனாக இருக்கட்டும், அசுரனாக இருக்கட்டும், மனிதனாக இருக்கட்டும், கந்தர்வனாக இருக்கட்டும், நாகனாக இருக்கட்டும், ராட்சதனாக இருக்கட்டும், வேறு யாராகவும் இருக்கட்டும், அவனை நீ வெற்றிக் கொள்ள நினைத்தால், அவன் இக்கணையால் நிச்சயம் அழிவான்" என்று அவனிடம் {கர்ணனிடம்} சொன்னான்.(30) இந்தக் காரியம் நடப்பதற்கு முன்னர் அந்தச் சூரியனின் மகன் வசுசேனன் என்ற பெயராலேயே அறியப்பட்டான். ஆனால், தனது இயற்கைக் கவசத்தை அறுத்துக் கொடுத்ததனால் அது முதல், அவன் கர்ணன்[3] என்ற பெயரால் அழைக்கப்பட்டான்" {என்றார் வைசம்பாயனர்}.(31)

[3] சம்ஸ்க்ருதத்தில் "அறுப்பவன்" என்று பொருள் தரும் பெயர்.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்